Wednesday 1 April 2020

ஜோதிட பயணம் [ பகுதி-4 ]

சோதிட பயணம் பாகம் 4

கிரகங்களின் காரகத்துவம் 1 சூரியன்
ஜாதகரின் தந்தையின் இன்ப துன்பங்களையும் அவருடைய வாழ்க்கையையும் நிர்ணயிக்கக்கூடிய அவர் இவரை பித்ரு காரகன் என்று அழைப்பார்கள் மற்றும் ஜாதகருக்கு உடல் வலிமை மன வலிமை துணிவு அதிகாரம் ஆகியவற்றை கொடுக்கக் கூடியவர்

2 சந்திரன்
தாயாரின் நலனுக்கும் அவர் வாழ்நாளை நிர்ணயிக்கக்கூடிய அவர் இவரை மாத்ரு காரகன் என்பார் மற்றும் ஜாதகருக்கு அறிவு அழகு மதிநுட்பம் போன்றவற்றை இவர் ஜாதகருக்கு வழங்குவார்

3 செவ்வாய் பகவான்
சகோதரர்களின் அவர்களின் வாழ்நாள் முதலியவற்றை நினைக்க கூடியவர் இவரை சகோதர காரகன் என்று கூறுவார்கள் மற்றும் ஜாதகருக்கு நல்ல உடல் வலிமை துணிவு நிலபுலன்கள் வீரதீர செயல் ராணுவம் காவல்துறை போன்ற துறைகளில் சிறந்து விளங்க செவ்வாய் பகவானே காரகர் ஆவார்

4 புதபகவான்
தாய்வழி மாமன் முதலியோரின் உறவு நன்மை தீமைகள் முதலியவற்றை அமைத்துக் கொடுப்பவர் இவரை வித்யாகாரகன் என்று கூறுவர் மற்றும் சொல்வன்மை கல்வி நகைச்சுவை கணிதத் திறமை ஆகியவற்றை ஜாதகருக்கு கொடுப்பவர்

5 குருபகவான்
தர்ம கர்மாதிபதி புத்திரகாரகன் மக்கட்பெரு அறிவு நுட்பம் தெய்வபக்தி மத சம்பந்தமான விவகாரங்களில் ஈடுபடுத்துதல் முதலியவற்றை ஜாதகருக்கு அமைத்து கொடுப்பவர் இவருக்கு தனகாரகன் என்ற ஒரு செல்லப் பெயரும் உண்டு

6சுக்கிர பகவான்
வீடு இன்பம் வெற்றி சொகுசு வாகனம் மனமகிழ்ச்சி ஆபரணம் செல்வம் ஆகிய அனைத்துக்கும் இவரே காரணமாக இருக்கிறார் இவருக்கு களத்திர காரகன் என்றும் இவரை சிறப்புப் பெயர் கொண்டு அழைப்பார்கள்

7சனிபகவான்
வாழ்வு ஆயுள் இரண்டிற்கும் அதிபதியாக இருப்பவர் மற்றும் ஆய்ந்து உணர முடியாத தொல்லைகளுக்கும் காரணமாக இருப்பவர் இவர் ஆயுள் காரகன் என்றும் கூறுவர் நீதி தேவதையாகவும் இவரை போற்றப்படுகிறார்கள் இவர் ஒரு மனிதனின் ஆயுளை நிர்ணயிப்பது பெரும் பங்கு சனீஸ்வர பகவானுக்கு உண்டு மக்கள் இவரிடத்தில் மிகவும் பயமாக பக்தி ஆகத்தான் தான் பேசுவார்கள் இவர் ஒழுக்க நெறி கொண்ட எந்த ஒரு மனிதனையும் துன்பப்படுவது இல்லை என்பது ஒரு அனுபவ கருத்து

8 ராகு பகவான்
தந்தை வழி உறவு கடல் பிரயாணம் துன்பம் அவமானம் எந்த ஒரு விஷயத்தையும் மிக பிரம்மாண்டமாக அளிப்பவர் இவரை பிதா மாதுர் காரகன் என்றும் கூறுகிறார்கள் இவர் தான் நின்ற வீட்டின் அமைப்பை பொருத்து அந்த வீட்டின் தன்மையைப் பெற்று அந்த கிரகத்தின் தன்மையை பெற்று தன்னிடம் இருக்கின்ற கிரகத்தினுடைய சக்தியை இவர் பெற்று பிரம்மாண்டமான பலன்களை கொடுப்பார் அது நன்மை தீமை ஆனாலும் அது இவருடைய குணாதிசயத்தின் வழியாகவே கொடுப்பார்

9 கேது பகவான்
இவர் ஞான காரகன் என்றும் அழைக்கப்படுபவர் பிறவித் துன்பத்தை அகற்ற வழி செய்பவர் புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை போகுதல் மறைந்துள்ள புதயலை தெரியப்படுத்துதல் தாய் சம்பந்தப்பட்ட உறவினர்களின் மூதாதையர்களை இவரே வழிநடத்துபவர் ஒரு மனிதனின் மரணத்திற்குப் பின்பு மோட்சத்தை ஏற்படுத்தி கொடுப்பவர் கேதுபகவான்

நட்சத்திரங்களிகள் (பொதுகருத்து)
1 அஸ்வினி
நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பாக இருப்பார்கள் அழகாகவும் திறமைசாலியாகவும் திகழ்வார்கள் எல்லோரும் நேசிப்பவர்கள் ஆடை ஆபரணங்களில் அதிக நாட்டம் உடையவராக காணப்படுவார்

2 பரணி
ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள் செல்வந்தராகவும் திறமை மிக்கவராகவும் எதையும் செய்யும் ஆற்றல் படைத்தவராக ஆகவும் பலரால் கூடியவராகவும்
காணப்படுவார் தாய் தந்தையரை உயிரினும் மேலாக மதிப்பார்

3 கிருத்திகை
தெய்வ பக்தியில் சிறந்து விளங்குபவர் ஆகவும் சிறந்த ஞானியாகவும் கல்விமான்களாகவும் திகழ்வார்கள் நல்ல மனம் உடையவர்களாகவும் இரக்க சுபாவம் உடையவர்கள் வியாபாரத்தில் தலைசிறந்தவராக விளங்குவார்

4 ரோகினி
நேர்மையானவராக இருப்பார் உண்மையாக நடந்து கொள்வார் கடுமையாக உழைப்பார் அன்போடு பழகுவார் மனைவியிடம் அல்லது கணவரிடம் ஆதரவோடு அன்போடு பழகுவார் இனிமையாகப் பேசுவார் தான தர்மம் செய்வார் மிகுந்த செல்வம் உடையவராகத் திகழ்ந்தார்

5 மிருகசீரிஷம்
வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற வகையில் பேச்சு இருக்கும் வழவழ விவகாரம் பிடிக்காது திறமையானவர் ஆரோக்கியமாக இருப்பார் செல்வந்தராகவும் தொழிற்சாலை அதிபராகவும் இன்பமான வாழ்க்கை நடத்துபவராக இருப்பார் ரசிகராகவும் ஞாயிறுகளில் ஈடுபாடு உடையவராக திகழ்வார் இவர் சிறிது முன் கோபியாக இருப்பார்

6 திருவாதிரை
இவர் சிறந்தவராக விளங்க மாட்டார் நடத்தை நன்றாக இருக்காது பிறருக்கு மிகவும் தொல்லை கொடுக்கக் கூடியவராக இருப்பார் வாய்ஜாலம் செய்பவராகவும் பேச்சாற்றல் உடையவராகவும் காணப்படும் தன்னிடம் இருக்கக்கூடிய சில விஷயங்களை வெளி உலகத்திற்கு சூசகமாக வெளிப்படுத்துவார்

7 புனர்பூசம் நல்ல
குணம் படைத்தவராக இருப்பார் அனைவருடனும் நன்கு பழகுவார் ஆனால் அடிக்கடி நோயினால் அவதியுறும் சுறுசுறுப்பாக இருக்க மாட்டார் மந்தபுத்தி உடையவராகவும் இருப்பார் சில நேரங்களில் தன்னுடைய காரியத்திற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்வார்

8 பூசம்
நன்குகற்றவர் ஆகவும் செல்வந்தராகவும் அன்பு தயாள குணம் படைத்தவராகவும் அழகாகவும் இன் சொல்லை உடையவராகவும் இருப்பார்

9 ஆயில்யம்
அவ்வளவு சிறப்பானதாக கூறுவதற்கு இல்லை தீய பழக்கங்களை உடையவராகவும் ஆடல் பாடல்களில் நாட்டம் உடையவராகவும் இருப்பார் இவருக்கு இயற்கையான அழகை ரசிப்பதிலும் ஊர் பிரயாணம் செய்து பேசுவதிலும் இவருக்கு மிக விருப்பமான வராக இருப்பார்

10 மகம்
கருமமே கண்ணாக இருப்பார் ஆரோக்கியத்திலும் செல்வ செழிப்புடனும் திகழ்வார் யாருக்கும் நேசிக்க கூடியவராகவும் சுயநல வராகவும் இருப்பார்கள் தான தர்மங்களில் நாட்டம் இருக்கும்

11 பூரம்
மனதைக் கவரக் கூடியவராக அழகாக இருப்பார் இனிமையாகபேசுவார் அரசியல் புகழ் பெறுவார் எல்லோராலும் பாராட்டப்படும் சுவை விரும்பி

12 உத்திரம்
ஆரோக்கியமானதாகவும் செல்வம் படைத்தவராகவும் இருப்பார் உயர்ந்த கல்வி கட் பார் புகழ் பெறுவார் மன மகிழ்ச்சிக்காக ஆடல் பாடல்களை ரசிப்பார் அரசபோக வாழ்க்கை நடத்துவார்

13 அஸ்தம்
இவரிடம் நல்ல குணங்களை அணுவளவும் காண முடியாது நட்புக்கு பாத்திரமானவர்கள் செல்வமும் செல்வாக்கும் உடையவராக திகழ்வார் இவர் மற்றவருடைய மனதைக் கவரக் கூடிய தன்மை இவரிடத்தில் அதிகம் உண்டு பேச்சாற்றலில்

14 சித்திரை
சாதாரண வாழ்க்கை வாழக் கூடியவராகவும் அழகாக இனிமையாக பேசக் கூடியவராக இருப்பார் இவர் பேச்சில் சில சமயம் கோபம் கலந்து இருக்கும்

15 சுவாதி
எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் வரை உணவு உட்கொள்ள மாட்டார் உறக்கம் கொள்ள மாட்டார் அனைவரிடத்திலும் நல்ல முறையிலும் நடந்து கொள்வார் தயாளகுணம் உள்ளவர் கடுமையாக உழைப்பவர் சிலநேரங்களில் உண்மைக்காக பிடிவாதமும் செய்வார்

16 விசாகம்
அழகாக இருப்பார் நடத்தை திருப்திகரமாக இருக்காது ஆனாலும் எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்று இருப்பார்

17 அனுஷம்
ஆரோக்கியமான வராகவும் செல்வந்தராகவும் அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல கூடியவராகவும் நம்பிக்கை உடையவராகவும் எடுத்த காரியத்தை முடிப்ப வராகவும் இருப்பார்

18 கேட்டை
அனைவருடனும் மனைவி உள்பட நல்ல முறையில் பழகக்கூடியவர் நண்பர்கள் சிலரே இருப்பார்கள் கோபம் அதிகமாக இருக்கும் யாரையும் எடுத்தெறிந்து பேசி விடுவார்கள்

19 மூலம்
அனைவரும் நல்லவராகவும் ஆரோக்கியத்துடன் செல்வம் படைத்தவராகவும் நிதானமாகவும் செம்மையாகவும் காரியத்தை செய்து வெற்றி பெற்றவராக இருப்பார் எல்லோரையும் நேசிப்பவரை நேசிப்பவராகவும் சுதந்திரமாக இருக்கவே விரும்புவார் கவலை என்பதே இவருக்கு இருக்காது

20 பூராடம்
அரசு போக வாழ்க்கை நடத்துவார் நல்லது குணமும் திடகாத்திரமான உடலும் பெற்றிருப்பார் இவருக்கு சுவையான உணவின் மீது சிறிது ஆசையிருக்கும்

21 உத்திராடம்
உண்மையானவர் நல்ல குணமும் தீமையற்ற பழக்க வழக்கம் உடையவர் கற்புநெறி மாறாதவர் அன்பாகவும் குணத்துடனும் இருப்பார் புகழ் பெறுவார் நண்பர்கள் இவருக்கு ஏராளமாக அமைவார்கள்

22 திருவோணம்
செல்வந்தராகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார் சிறந்த கல்விமானாக திகழ்வார் அழகிய மனைவியை பெற்றிருப்பார் எல்லோராலும் பாராட்ட கூடியவராக இருப்பார்

23 அவிட்டம்
சங்கீதம் கலைகள் முதலியவற்றில் ஆர்வமிக்கவர் துணிவு தைரியம் செய்து முடிக்கும் திறன் பெற்று இருப்பார் சஞ்சலமான மனம் உடையவராகவும் இருப்பார்

24 சதயம்

அவ்வளவுக்கு அதிர்ஷ்டக்கார தாக இல்லை குடும்ப கவலையும் தொல்லைகளும் நிரம்பியவராக இருப்பார் தான் சொன்ன சொல்லை காப்பாற்ற கூடியவராக இருப்பார்

25 பூரட்டாதி
செல்வந்தராகவும் ஆரோக்கியமான வராகவும் இருப்பார் திறமையானவராக திகழ்வார் எதிலும் முழு கவனத்தையும் செலுத்தி கூடியவராக இருப்பார்

26 உத்தரட்டாதி
மனைவிக்கு அடங்கி நபராக இருப்பார் அன்பு தயாள குணம் படைத்தவராக இருப்பார் ஆடம்பர வாழ்க்கையில் ஆர்வம் உடையவராகவும் மனைவி மக்களுடன் இன்பமாக வாழக் கூடியவராகவும் தன் குடும்பத்தில் பற்றோடு நடந்து கொள்ளக் கூடியவராக இருப்பார்

27 ரேவதி
செல்வம் செல்வாக்கு ஆரோக்கியம் அனைத்தும் இருக்கும் நேர்மையானவராக இருப்பார் தூய உள்ளம் படைத்தவர் இவர் பொதுமக்கள் இடத்திலேயே புகழ் பெறுவார் தன்னுடைய புத்தி சாமர்த்தியத்தால் இவர் வரும் முன் தன்னுடைய அறிவாற்றலில் முன்கூட்டியே உணர்பவர்

ஜோதிட பயணம் தொடரும்
என்றும் உங்கள் அன்புடன்

No comments:

Post a Comment