Friday 15 September 2017

ராகு கேது திருமணத்தடையா?????

ராகு கேது திருமண தடையா????

19ம் நூற்றாண்டின் ஜோதிட வல்லுனர்கள் துவக்கி வைத்ததே
7-8ல் ராகு கேது தோசம்...

அந்த
ஜோதிட பெருந்தகை
அனைவருக்கும் எனது ஒரே
கேள்வி...

2 அல்லது 7ல் இருக்கும்
சூர்யன்
அல்லது
8ல் மறைந்த சந்திரன் எல்லாம்
அந்த ஜாதகர்-ஜாதகி வாழ்க்கையில் பிரச்சினைகள் தரவில்லையா????

எம்மை பொறுத்தவரை இங்கே ஜோதிட உலகில்
ராகு-கேது ஜாதகம் என கூடி கும்மி
அடிப்பது எல்லாம் இடைப்பட்ட காலத்திலேயே வந்த
பட்டய படிப்புக்கு
மற்றும்
கல்லூரி  படிப்பிற்காக
வந்த
ஜோதிட மாணவர்கள் தானே தவிர

பாரம்பரிய வழியை சரியாக கடைப்பிடித்து வரும் எந்தவொரு குறிப்பிட்ட ஜோதிடரும்
ராகு கேது வை கிரங்கள் ஆகவே பார்ப்பதும் இல்லை...

ஏழில் எட்டில் ராகு கேது போன்ற இரு கிரகங்கள் அமையப்பெற்ற எந்தவொரு குறிப்பிட்ட ஜாதகர் ஆகினும்
அவர்கள்
ஏழில் எட்டில்
சூர்யன்
சந்திரன்
சனி
நபர்களை மணக்கலாம்..
இதை மறுத்து பேசும் யார் ஆகினும் அவர்கள் முகநூலில் பேசாமல்
நேரடியாக  எம் வாசல் வந்து பேசவும் உரிய பதில்கள் கொடுக்கப்படும்..

ராகு -கேது என்பது
தோசம் என்றாலும் ஏழு எட்டில் எது இருந்தாலும் அதற்கு அந்த ராகு-கேது வரனை இணைக்கலாம்...

பெருந்துறையில் இருந்து
Astro Senthil Kumar...

Thursday 14 September 2017

சுக்கிரன் ஜெயந்தி

கும்பத்தை குரு பார்க்கும் காலத்திலேயே வெள்ளி வாங்கவும் என்கிறது
கால ப்ரகாசிகை ஜோதிட சாஸ்திர நூல் சொல்கிறது...

தேய்பிறை தசமி திதியும்
பூசம் நட்சத்திரத்தில் சுக்கிர ஜெயந்தி விழா நடைபெறும்..

அந்த விழா ஆனது
15-08-2017ல்
ஆவணி 30ல்
வெள்ளிக்கிழமை அன்று
தசமி திதியில்
பூச நட்சத்திரத்தில்
சுக்கிரன் ஜெயந்தி விழா வருகிறது..

15-09-2017ல்
ஆவணி 30ல்
மாலை 5மணி முதல் 6மணிக்கு அல்லது
இரவு 8மணி முதல் 9மணிக்கு
அல்லது
மறுநாளில்
16-09-2017ல்
ஆவணி 31ல்
சனிக்கிழமை அன்று
காலை 10-30மணி முதல் மதியம் 1மணி வரை
இருக்கக்கூடிய சுப நேரத்தில்
சுக்கிரன் என சொல்லப்படும் வெள்ளி ஆபரணங்கள் வாங்கி அல்லது வெள்ளி நாணயங்கள் வாங்கி உங்கள் வீட்டில் பெட்டக அறையில் வைக்கும் போது உங்களுக்கு எதிர்காலத்தில் வளம் மிக்க ஒரு நிம்மதியான சொகுசுவான வாழ்க்கையை சுக்கிரன் பகவான் அருள்பாலிப்பார்...
மேலும் இந்நாளில்
நவக்கிரகக் கோயில்கள் அல்லது
சிவாலயங்களில் உள்ள நவகிரகங்கள் சென்று
சுக்கிரன் பகவானுக்கு வெள்ளை ஆடை அணிவித்து மற்றும்
மொச்சை தான்யம் வைத்து வெள்ளை மலர்கள் ஆகிய முல்லை மற்றும் மல்லிகை மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்ய சுக்கிரன் தோஷம் போக்கும் விலகி சகல செளபாக்யங்களை பெறலாம்
என சேலம் ஸ்ரீநிவாசன் பஞ்சாங்க வல்லுநர் திருவாளர் முராரி.V.நரநாராயாணன் அய்யா அவர்கள்
தன்னுடைய
பஞ்சாங்க ரஹஸ்யம் எனும்
நூலில்
குறிப்பிட்டுள்ளார்...
இதை
பொதுமக்கள் நலன் கருதி
வெளியீடு செய்வது
என்றும் ஜோதிட பணியில்
பெருந்துறையில் இருந்து
Astro Senthil Kumar
Wats App 9843469404