Tuesday 29 April 2014

ராசிசக்கரத்தில் குருவின் பலமும் பலஹீனமும் [பலநிர்ணயம் ]

ராசிகளில் குருவின் பலத்தை பலரும் பலவாறாக சொல்லி இருந்தாலும் பழைய மூல நூல்களின்படி சிறு ஆய்வை கொண்டு பலநிர்ணயம் செய்வதின் அவசியத்தை கொண்டு எம்மால் ஆன சிறுமுயற்சி இது!!

குரு தன் ராசியில் பலவான் ஆகிறார் .

குரு தன் அம்சத்தில் பலவான் ஆகிறார் .

குரு பலவான் திரேகாணத்தில் ஆகிறார் .

குரு கடகம்-விருட்சிக ராசிகளில் பலவான் ஆகிறார். 

குரு முற்பகலில் பலவான் ஆகிறார். 


குரு உத்ராயண காலத்தில்பலவான் ஆகிறார் .

குரு கடகம்-ரிஷபம்-சிம்மம்-விருட்சிகம்-தனுசு-மீனம் ஆகியவை லக்னமாகி லக்னத்தில் குரு- நான்கில் குரு- பத்தில் குரு  இருக்க பலம் பெற்றவர் ஆகிறார்.



குரு கிரஹ யுத்தத்தில் வெற்றியை அடைய மஹாபலம் பெற்றவர் ஆகிறார்.

குரு நீசம் அடையாமல் “வக்கிரகதியோடு” இருக்கும்போது அதிபலம் பெற்றவர் ஆகிறார்.

குரு ஒருராசியில் முதல் 10 டிகிரியில் மத்திமமான பலன் மட்டுமே தருபவர் ஆகிறார்.


குரு ஒருராசியில் 10 முதல் 20 டிகிரி வரை அதிகபலம் பெற்றவர் ஆகிறார்.

குரு ராசி-அம்சம்-திரேகாணம் மூன்றிலும் நீசம் அடைய அதமபலன் தருபவர் ஆகிறார்.


இவ்வாறாக ராசியின் ஆரம்ப பலனும் மத்தியபலனும் அந்திமபலனும்  “கிரஹங்களுக்கு கிரஹம் மாறுபாடு” வருவதை சற்று உன்னிப்புடன் கவனிக்க தப்பாது பலாபலன் பலிதம் ஆகும்.


இது போன்ற எண்ணற்ற ஜோதிட சூட்சுமங்கள் பழமையான மூல நூல்களில் பொதிந்து கிடக்கிறது!!!எமது அடுத்த பதிவில் வரிசை கிரமமாக அனைத்து நவநாயகர்களின்பல நிர்ணயம் குறித்து வரிசையாக தரவுள்ளேன்.இங்கே படிக்கும் நண்பர்கள் சற்று கருத்தை பதிவு செய்து சென்றால் சற்று ஆறுதலாக இருக்கும், 15,000 நபர்கள் பார்வையிட்டும் 150 கருத்துக்கள் கூட நண்பர்கள் பதியவில்லையே?? ஊக்கம் தருவதே எம்மை அதிகமாக எழுத வைக்கும்.நன்றி!!

என்றும் ஜோதிட பணியில்!!
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்.பெருந்துறை.
செல்:- +91 98427 69404
செல்;- +91 98434 69404

Sunday 27 April 2014

ராசிசக்ரத்தில் புதனின் பலமும் பலஹீனமும் [பலநிர்ணயம்]

புதன் பற்றிய பல குறிப்பை பலராலும் எழுதப்பட்ட விஷயம் தான் இருந்து ஜோதிட பலாபலனை கவனிக்க சற்று உன்னிப்பாக கவனித்து பலன் சொல்ல எம்மால் ஆன சிறு முயற்சி 

புதன் அஸ்தமனத்தில் இருந்து வெளிப்படும் போது பலவான் ஆகிறார்.

புதன் தனுசு ராசியில் பலவான் ஆகிறார்.

புதன் தன் சொந்த வீட்டில்  பலவான் ஆகிறார்.

புதன் சுய நவாம்சத்தில் பலவான் ஆகிறார்.

புதன் வக்கிரமாக இருக்கும் போதும் பலவான் ஆகிறார்.

புதன் பகல் இரவு பொழுது இரண்டிலும் பலவான் ஆகிறார்.

புதன் தன் புதன்கிழமையில் பலவான் ஆகிறார்.

புதன் தன் திரேகாணம் மற்றும் மிதுனத்தில் இருக்க பலவான் ஆகிறார்.

புதன் மகரம் -சிம்மம்-விருட்சிகம்- இவைகள் லக்னமாகி அதிலேயே புதன் இருக்க பலவான் ஆகிறார்.

புதன் தனுசு நான்காம் வீடு ஆகி அதிலேயே புதன் இருக்க பலவான் ஆகிறார்.

புதன் ரிஷபம் ஏழாம் இடம் ஆகி அதில் இருக்க பலவான் ஆகிறார்.

புதன் மீனம் பத்தாம் இடம் ஆகி அதிலே இருக்க  பலம் பெற்று பலவான் ஆகிறார்.

புதன் ஒருராசியின் ஆரம்பத்தில் 10 டிகிரிக்குள் சாதாரண பலம் உடையவர் ஆகிறார்.

புதன் ஒருராசியின் மத்தியில் 10 முதல் 20 டிகிரிவரை பூர்ண பலம் கொண்ட பலவான் ஆகிறார்.

புதன் ஒருராசியின் கடைசி பாகத்தில் 20 முதல் 30 டிகிரிவரை பலஹீனம் அடைகிறார்.
அஸ்தங்கமாக இருக்கும் காலகட்டத்தில் புதன் பலஹீனம் அடைகிறார்.


இது போன்ற எண்ணற்ற ஜோதிட சூட்சுமங்கள் பழமையான மூல நூல்களில் பொதிந்து கிடக்கிறது!!!எமது அடுத்த பதிவில் வரிசை கிரமமாக அனைத்து நவநாயகர்களின்பல நிர்ணயம் குறித்து வரிசையாக தரவுள்ளேன்.இங்கே படிக்கும் நண்பர்கள் சற்று கருத்தை பதிவு செய்து சென்றால் சற்று ஆறுதலாக இருக்கும், 15,000 நபர்கள் பார்வையிட்டும் 150 கருத்துக்கள் கூட நண்பர்கள் பதியவில்லையே?? ஊக்கம் தருவதே எம்மை அதிகமாக எழுத வைக்கும்.நன்றி!!

என்றும் ஜோதிட பணியில்!!
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்.பெருந்துறை.
செல்:- +91 98427 69404
செல்;- +91 98434 69404

Wednesday 23 April 2014

ராசிசக்ரத்தில் செவ்வாயின் பலமும் பலஹீனமும் [பலநிர்ணயம்]

செவ்வாயின் பலத்தை பற்றி பலரும் பலவிதமாக சொல்லி வந்தாலும் சில மூலநூல்களின் அடிப்படையில் “செவ்வாயின் பலத்தை” சற்று அறிந்து  கொள்வோம்.

செவ்வாய் தன் சொந்தவீட்டில்  பலவானாகிறார்.

செவ்வாய் யுத்தத்தில் ஜெயம் பெற பலவானாகிறார்.

செவ்வாய் வக்கிரமாக இருக்க பலவானாகிறார்.

செவ்வாய் வீஸ்தீரணமாக இருக்க பலவானாகிறார்.

செவ்வாய் மகரம்-கும்பம்-மீனம் ஆகியராசியில் இருக்க பலவானாகிறார்,

செவ்வாய் தட்சிணாயனத்தில்பலவானாகிறார்.

செவ்வாய் இரவில் பலவானாகிறார்.

செவ்வாய் தன் நவாம்சத்தில் பலவானாகிறார்.

செவ்வாய் தன் திரேகாணத்தில் பலவானாகிறார்.

செவ்வாய் தன் கிழமையில் பலவானாகிறார்.

செவ்வாய் பத்தாம்பாவம் எதுவாகிலும் அங்கு பலவானாகிறார்.

செவ்வாய் கும்பலக்னம் ஆகி அதில் இருக்க பலவானாகிறார்.

செவ்வாய் கடகம்-விருட்சிகம் ஏழாம்பாவம் ஆகி அதில் இருக்க பலவானாகிறார்.

செவ்வாய் மிதுனம்-மகரம் முற்ப்பாதி பத்தாம் இடமாகி ஆகி அதில் இருக்க [ 15 டிகிரிக்குள்]பலவானாகிறார்.இதை பாவாகச்சக்ரத்தில் கவனிக்கவும்.
செவ்வாய் தனுசு பிற்ப்பாதி நான்காம் இடமாகி அதில் பலவானாகிறார்`
இதை பாவகத்தில் கவனிக்கவும்.


செவ்வாய் ராசியின் ஆரம்பத்தில் 10 டிகிரிக்குள் அதிக பலவானாகிறார்.


செவ்வாய் ராசியின் மத்தியில் 11 முதல் 20 டிகிரிக்குள் பலஹீனமாகிறார்.


செவ்வாய் ராசியின் கடைசியில் 21 முதல் 30 டிகிரிக்குள் மத்திமபலனை தருபவர் ஆகிறார்.

கிரஹத்தின் வலுவில் சனிபகவானை விட இரண்டு  மடங்கு வலுவானவர்.



இது போன்ற எண்ணற்ற ஜோதிட சூட்சுமங்கள் பழமையான மூல நூல்களில் பொதிந்து கிடக்கிறது!!!எமது அடுத்த பதிவில் வரிசை கிரமமாக அனைத்து நவநாயகர்களின்பல நிர்ணயம் குறித்து வரிசையாக தரவுள்ளேன்.இங்கே படிக்கும் நண்பர்கள் சற்று கருத்தை பதிவு செய்து சென்றால் சற்று ஆறுதலாக இருக்கும், 15,000 நபர்கள் பார்வையிட்டும் 150 கருத்துக்கள் கூட நண்பர்கள் பதியவில்லையே?? ஊக்கம் தருவதே எம்மை அதிகமாக எழுத வைக்கும்.நன்றி!!

என்றும் ஜோதிட பணியில்!!
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்.பெருந்துறை.
செல்:- +91 98427 69404
செல்;- +91 98434 69404

Tuesday 22 April 2014

ராசிசக்ரத்தில் சந்திரனின் பலமும் பலஹீனமும் [பலநிர்ணயம்]

சந்திரனை பற்றிய பலரின் கருத்துக்கள் பலவிதமாக சொல்லப்பட்டு வந்தாலும் மிக நுட்பமாக ஆராயாமல் போனால் பலாபலன் குறைபட்டுப்போகும் கவனமாக பலன் அறிய இது உதவும்,


சந்திரன் ரிஷபராசியில் பலவான் ஆகிறார்.

சந்திரன் தட்சிணாயனத்தில் பலவான் ஆகிறார். 

சந்திரன் தன் சுயவீட்டில் பலவான் ஆகிறார்.

சந்திரன் தன் ஹோரையில் பலவான் ஆகிறார்.

சந்திரன் தன் திரேகாணத்தில் பலவான்  ஆகிறார்.


சந்திரன் தன் வாரத்தில் பலவான் ஆகிறார்.

சந்திரன் தன் இரவுப்பொழுதில் பலவான் ஆகிறார்.

சந்திரன் தன் நவாம்சத்தில் பலவான் ஆகிறார்.

சந்திரன் அனைத்து கிரஹங்களுக்கு வடக்கில் நிற்க பலவான்ஆகிறார்.

சந்திரன் கிரஹங்களை பிரதட்சிணமாக சுற்றிப்போயின் பலவான் ஆகிறார்.

சந்திரன் எல்லாகிரஹமும் பார்க்கப்பெற பலவான் ஆகிறார்.
சந்திரன் பூர்ணசந்திரனாக எல்லாவீட்டிலும் பலவான் ஆகிறார்.
சந்திரன் மிதுன தனுசு முதல்பாதியில் [முதல் 15 டிகிரிக்குள்]பலவான் ஆகிறார்.


சந்திரன் மிதுனம்- கன்னி-தனுசு-மீனம் ஆகிய ராசிகளில் ஒன்று லக்னமாகி ஏழில் சந்திரன் அமைய  பலவான் ஆகிறார்.சந்திரன் மிதுனம்-கன்னி லக்னம் ஆகி அதில் நிற்க  பலவான் ஆகிறார்.

சந்திரன் ரிஷபம்-தனுசு ஏழாம் இடமோ பத்தாம் இடமோ ஆகி பிற்ப்பாதி [ 15 டிகிரிக்கு மேல் ] பலவான் ஆகிறார்.சந்திரன் மிதுனம்-கடகம் நான்காம் இடமாகி நிற்க பலவான் ஆகிறார்

.

சந்திரன் சுக்கில பட்ச தசமி வரை மத்திம பலனை தான் தருவார்.

சந்திரன் கிருஷ்ணபட்ச சஷ்டி முதல் அமாவாஸை வரை பலஹீனமாகிறார்.
சந்திரன் ஒருராசியில் பிரவேஷிக்கும் காலகட்டத்தில் பலஹீனமாகிறார்.சந்திரன் கிரஹகண காலத்தில் பலஹீனமாகிறார்.  


இது போன்ற எண்ணற்ற ஜோதிட சூட்சுமங்கள் பழமையான மூல நூல்களில் பொதிந்து கிடக்கிறது!!!எமது அடுத்த பதிவில் வரிசை கிரமமாக அனைத்து நவநாயகர்களின்பல நிர்ணயம் குறித்து வரிசையாக தரவுள்ளேன்.இங்கே படிக்கும் நண்பர்கள் சற்று கருத்தை பதிவு செய்து சென்றால் சற்று ஆறுதலாக இருக்கும், 15,000 நபர்கள் பார்வையிட்டும் 150 கருத்துக்கள் கூட நண்பர்கள் பதியவில்லையே?? ஊக்கம் தருவதே எம்மை அதிகமாக எழுத வைக்கும்.நன்றி!!

என்றும் ஜோதிட பணியில்!!
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்.பெருந்துறை.



Sunday 20 April 2014

ராசி சக்ரத்தில் சூர்யனின் பலமும் பலஹீனமும் [பலநிர்ணயம்]

சூர்யன் ராசிகட்டத்தில் இருப்பதை சற்று கவனக்குறைவாக கவனித்தாலும் பலாபலன் குறைபட்டுப்போகும்.
அதன் பல நிர்ணயம் பற்றி இப்போது சற்று கவனிப்போம்,

சூர்யன் உத்ராயண காலத்தில் பலவான்.
சூர்யன் சொந்த வீட்டில் பலவான்.
சூர்யன் உச்ச வீட்டில் பலவான்.
சூர்யன் தன் சுய நவாம்ஷத்தில் பலவான்.
சூர்யன் தன் சுய திரேகாணத்தில் பலவான்`
சூர்யன் தன் ஹோரையில் பலவான்.
சூர்யன் தன் வாரத்தில் பலவான்`
சூர்யன் தன் பகல் பொழுதில் பலவான்.
சூர்யன் ஒரு ராசியில் ஆரம்பத்தில் (10 டிகிரிக்குள்)நிற்க பலவான்`
சூர்யன் சுபர்களின் சேர்க்கையும் பார்வையும் கிட்ட பலவான்.
சூர்யன் மேஷம்.சிம்மம்.தனுசு.மீனம் ஆகியவைகள் லக்னமாகவோ அல்லது பத்தாம் இடமாகவோ இருந்தால் சூர்யன் பலவான்.
இவை எல்லாம் சூர்யனின் பலம் மிகுந்த நிலைகள்.
இது  போன்ற நிலைகளில் இருக்கும் சூர்யனின் திசையோ புக்தியோ அந்திரமோ சூட்சுமமோ பிராணன் நடக்க சுபபாலபலன்கள் கிட்டும்.


மித்ரு வீட்டில் சூர்யன் இருக்க மத்திம பலன் தான்`
ராசியின் மத்திய பகுதியில்(11 முதல் 20 டிகிரிக்குள்) இருக்க மத்திம பலனே.
இது  போன்ற நிலைகளில் இருக்கும் சூர்யனின் திசையோ புக்தியோ அந்திரமோ சூட்சுமமோ பிராணன் நடக்க சுமாரான பாலபலன்கள் கிட்டும்.


சூர்யன் ராசிகட்டத்தில் கடைசி பாகத்தில் இருக்கும் போது
(21 டிகிரி முதல் 30 வரை)பலஹீனமும்
சூர்யன் சந்தியாகால வேலைகளில் பலஹீனமும்
சூர்யன் கிரஹண காலகட்டத்தில் பலஹீனமும்
அடைகிறார்  இது  போன்ற நிலைகளில் இருக்கும் சூர்யனின் திசையோ புக்தியோ அந்திரமோ சூட்சுமமோ பிராணன் நடக்க அசுபபலன்கள் அடைந்து ஜாதகர் அவஸ்தைகளை சந்திப்பார் என்பது பலனாம்..

இது போன்ற எண்ணற்ற ஜோதிட சூட்சுமங்கள் பழமையான மூல நூல்களில் பொதிந்து கிடக்கிறது!!!எமது அடுத்த பதிவில் வரிசை கிரமமாக அனைத்து நவநாயகர்களின்பல நிர்ணயம் குறித்து வரிசையாக தரவுள்ளேன்.இங்கே படிக்கும் நண்பர்கள் சற்று கருத்தை பதிவு செய்து சென்றால் சற்று ஆறுதலாக இருக்கும், 15,000 நபர்கள் பார்வையிட்டும் 150 கருத்துக்கள் கூட நண்பர்கள் பதியவில்லையே?? ஊக்கம் தருவதே எம்மை அதிகமாக எழுத வைக்கும்.நன்றி!!


என்றும் ஜோதிட பணியில் 
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம் பெருந்துறை.
செல் :- 98427 69404, 98434 69404  

ராசிகளில் கிரஹங்களின் பலமும் பலாபலனும் !!![திரேகாணம்]

சரராசியை விட ஸ்திர ராசி பலமுடையது!!

ஸ்திர ராசியை விட உபயராசி பலமுடையது!!

இந்த மூன்று ராசிகளில் மூன்று கிரஹம் இருந்தால் மூன்றாவது கிரஹத்தின் மேல்விழும் இரண்டு கிரஹங்களின் பார்வையானது!!

அதாவது மற்ற இரண்டு கிரஹங்க்கள் சாதகன் வேதகனாய் இருந்து அக்கிரஹங்கள் சரராசியில் இருப்பதை விட ஸ்திர ராசியில் அதிக பலமும்
ஸ்திர ராசியில் இருப்பதை விட உபயத்தில் இருந்தால் பார்வையில் அதிக பலமும்  அதிகரிக்கும். இந்த மூன்று வீட்டில் இருக்கும் கிரஹங்களின் பலன்களை அவ்வாறே கூற வேண்டும்
,

மூன்று கிரஹங்கள் சரராசியின் முதல்திரேகாணத்திலும் ஸ்திரராசியின்  மத்திய திரேகாணத்திலும் உபயராசியின் கடைசி திரேகாணத்திலும்  இருந்தால் பூர்ணபலனை தருவார்கள்!!

அவர்கள் சரராசியின் மத்திய திரேகாணத்திலும் அல்லது ஸ்திரராசியின் கடைசி திரேகாணத்திலும் அல்லது உபயராசியின் முதல் திரேகாணத்திலும் இருந்தால் மத்திமமான பலனை தருவார்கள்!!

இக்கிரஹங்கள் எல்லாமே சரராசியின் கடைசி திரேகாணமும் ஸ்திரராசியின் முதல் திரேகாணமும் உபயராசிகளில் மத்திய திரேகாணமும் அமையப்பெற்றால் “அதமமான பலாபலனையே தருவார்கள்..

இது எல்லாமே நடக்கும் திசையின் பலத்தை அறிய கோட்சார கிரஹங்களின்
நிலைபாட்டை கண்டு பலாபலனை அறிய பண்டைய காலத்தில் தொடுக்கப்பட்ட “ஜோதிடநுட்பங்கள்””     

என்றும் ஜோதிட துறையில்!!
ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம், பெருந்துறை

Monday 7 April 2014

வைரஸ் காய்ச்சல் நோய் தீர ஆகும் கால அளவு

இன்றைய சூழலில் மனிதனுக்கு தீரத்துன்பத்தை தருவது நோய் தான் அதிலும் தற்போதைய மாசுபட்ட கலியுகத்தில் “வைரஸ்காய்ச்சல்”அதிக அளவு பாதிப்பை தருகிறது இந்த நோய் குறித்து பண்டைய காலத்தில் “முனிவர் எழுதிய சூட்சும விஷயங்களை தான் இன்றுகவனிக்க போகிறோம்,


பரணி-திருவோணம்-சித்திரை-சதயம்- ஆகிய நட்சத்திரத்தில் ஜுரம் கண்டால் குணம் அடைய 11 நாட்களில் குணம் அடையும்,

மகம் நட்சத்திரத்தில் ஜுரம் கண்டால் 20 நாட்கள் வரை நீடிக்கும்
,

அசுவினி-கிருத்திகை-மூலம் நட்சத்திரத்தில் ஜுரம் காண நிவர்த்தி அடைய 2 மாதம் ஆகும், 

அனுஷம்,ரேவதி நட்சத்திரத்தில் ஜுரம் காண வெகுநாட்கள் நீடிக்கும், அவிட்டம்-விசாகம்-ஹஸ்தம் இவைகளில் காண 15 நாட்களும்ஆகும்


 மிருகசீர்சம்-உத்திராட இவைகளில் 1 மாதமும், ரோஹிணி-புனர்பூசம்-பூசம்-உத்திரம்-உத்திரட்டாதி ஆகியவைகளில் ஜுரம் காண 7 தினத்திற்க்கு தீராது,


திருவாதிரை-ஆயில்யம்-சுவாதி-கேட்டை மற்றும்[முப்பூரம்:- அதாவது பூரம்-பூராடம்-பூரட்டாதி-]& ஜென்ம நட்சத்திரத்தில் ஜுரம் காண தீர்வுக்கு ஒருமண்டலம் கூட ஆகலாம்,

ஜென்மவாரத்தில் [பிறந்த தினம்] ஜுரம்காண 24 நாட்கள் [அரைமண்டலம்]அல்லது ஒருமாதம் பீடித்திருக்கும்,

சித்திரைபரணியும் கூடி அது அமாவாஸையாக இருந்தால் 6 மாதம் ஜுரபீடை இருக்கும்

தேய்பிறை அஷ்டமியும் சனிக்கிழமையும் கூடிவந்தால் ஜுரநோய் நிவர்த்திக்கு 15 நாட்கள் ஆகும், 

கிருத்திகையும் ஞாயிறும் கூடி வந்தால் 22 நாட்கள் நீடிக்கும்.விபதாரை -வதைதாரையில் ஜுரம் காண ஏழுநாட்கள் நோய் பீடையாம்,

ராகு காலத்தில் ஜுரம்காண மூன்றுநாட்களும் பெளர்ணமியில் ஜுரம்காண எட்டு நாட்களும்,

இனி முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது::_

 ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து 23 ம் நட்சத்திரத்தில் ஜுரம்காண [விஷநாடி-விஷயோகம்] 23 மாதம் நோய் பீடை இருக்கும்,

சனி இருக்கும் நட்சத்திரத்தில் நோய் காண ஒரு ஆண்டிற்க்கும்
செவ்வாய் இருக்கும் நட்சத்திரத்தில் நோய் காண  1 1/2 மாதத்திற்க்கு நோய் பீடை ஆகும்

பரணி-ஆயில்யம்,திருவாதிரை,ஸ்வாதி,மூலம், சதயம்-கிருத்திகை,-பூசம் -விசாகம்-ஆகிய நட்சத்திரமும் ஞாயிறு செவ்வாய் சனி ஆகிய கிழமையும் சதுர்த்தி-சஷ்டி-நவமி-துவாதசி திதி மற்றும் பிரதமை அமாவாஸை மேஷ முதலிய கலந்து இருக்கும் காலகட்டத்தில் ஜுரம் பீடிக்க நோய்வாய்ப்பட்டவர் மீண்டு வருவது சந்தேகமே [அகால மரணத்தை தரும்]  


 பற்பலசூட்சுமங்களை தன்னுள் மறைத்து கொண்டு உலாவரும் ஜோதிடம் பல சித்தர்கள் வழியாக ஞானத்தை சிலமனிதனின் மனதில் போதித்து மனித குல வாழ்வை மேன்மைப்படுத்தி  செம்மையுடன் வாழவே “ஜோதிடமும் ஜோதிடனையும் இறைவன் படைத்து இருக்கிறான்.
“ஜோதிஸ்” எனும் வார்த்தைக்கு அர்த்தம் ஒளி என பொருள்
“உடல்நலம் பாதிப்பு அடையும் காலகட்டத்தில் நன்கு ஆராய்ந்து பலாபலனை அறிய தகுந்த ஜோதிட ஆலோசனைகளை பெற்று தகுந்த ஆலய வழிபாடு செய்து “நோய் அற்ற வாழ்வை” பெற வேண்டுகிறோம்.

என்றும் ஜோதிடப்பணியில் 

பெருந்துறைஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம் 
98434 69404
98427 69404