Wednesday 26 October 2016

பிரசன்ன ஜோதிட குறிப்புகள் குறித்த பதிவு ..

ஆருட பாவம் எனும் “நஷ்ட ப்ரச்னை”
நஷ்டப்பட்ட சொத்து இருக்கும் திசையை சந்திரனை கொண்டு காணும் வழி

அசுவினி முதலாக நட்சத்திரங்களை எண்ணி பிரசன்னம் கேட்கப்படும் அந்த நாளில் சந்திரன் நின்ற நட்சத்திரம் வரை எண்ணி கொண்டு அத்துடன் நிறுத்தி கொண்டு எட்டு கட்டம் வரும்படி கட்டம் அமைத்து ஒவ்வொன்றிலும் மூன்று நட்சத்திரம் வீதமாஅக் அசுவினி முதலாக எண்ணி அமைத்து வரும் போது எந்த திக்கில் நிற்கிறதோ அந்த திக்கில் கைவிட்டு போன பொருள் இருக்கும் என அர்த்தம் கொள்ள வேண்டும்..[ எட்டு கட்டமும் எட்டு திக்கு ஆக பாவிக்கப்பட வேண்டும் நடு கீழ் மத்தியில் இருந்து “கிழக்கு” திசையில் இருந்து தட்சிண வலமாக கணிக்கில் எடுத்து கொண்டு கவனிக்க வேண்டும் ]

இப்படி “கணிதம் கண்ட பிறகு
நஷ்டம் அடைந்த அதாவது காணாமல் போன கை விட்டு போன சொத்து கிடைக்குமா?? என அறிய காணும் வழிமுறை என்னவென இனி கவனிப்போம் …
பிரச்சனம் கேட்ட அந்தநாளில்
தற்போதைய

திதி
வாரம்
நட்சத்திரம்
லக்னம்
ஜாமம்திக்கு

ஆகிய இவைகளை கவனித்து
தனி தனியாக எண்ணி ஒன்றாக மொத்தமாக கூட்டின தொகையை எட்டினால் வகுத்து மீதம் வரும் எண் என்ன என்பதை பார்த்து கண்டுபிடித்த எண் ஆனது

ஒன்று அல்லது
ஐந்து ஆகிய இரண்டில் எது வந்தாலும் இழந்த சொத்து கைக்கு கிடைக்கும் என பொருள் ஆகும்.
இரண்டு அல்லது எட்டு என எண்களில் வரும் போது “கை விட்டு போன பொருள்” திரும்ப கைக்கு கிடைக்கவே கிடைக்காது ..
மூன்று அல்லது ஏழு ஆகிய எண்கள் இரண்டில் எது எட்டினால் வகுத்த மிச்சமாக வரும் எனில் நஷ்ட பொருள் ஒருவரால் பீடிக்கப்பட்டு இருக்கும்..
மேலே சொன்ன எட்டால் வகுத்து காணப்பட்ட மீதம் எண் ஆனது நான்கு அல்லது ஆறு ஆகிய எண் ஆக அமையும் எனில் “கைவிட்டு போன பொருள்” எது ஆகினும் அது திரும்ப “கைக்கு” வந்து சேரும்..

நட்சத்திரங்களை கொண்டு எந்த திக்கில் நஷ்டம் ஆன பொருள் இருக்கும் என்பதை கணிக்கும் முறை :-
கிருத்திகை
ரோஹிணி
மிருகசீரிடம்
திருவாதிரை
புனர்பூசம்பூசம்
ஆயில்யம் ஆகிய நட்சத்திர நாளில் நஷ்டம் ஆகினில்
நிச்சயமாக இந்த நஷ்ட சொத்து “கிழக்கு” திசையில் இருக்கும்.. 

மகம்
பூரம்
உத்திரம்ஹஸ்தம்சித்திரை
சுவாதி
விசாகம் ஆகிய நட்சத்திர நாளில் நஷ்டம் ஆகின் இழந்த பொருள் நிச்சயமாக “ தெற்கு” திசையில் இருக்கும்  


அனுஷம்
கேட்டைமூலம்
பூராடம்
உத்திராடம்திருவோணம் ஆகிய நட்சத்திர நாளில் எனில் “மேற்கு” திசையில் இருக்கும்..


அவிட்டம்சதயம்
பூரட்டாதிஉத்திரட்டாதிரேவதி ஆகிய நட்சத்திர நாளில் எனில் “வடக்கு” திசையில் நஷ்ட பொருள் இருக்கும் என கணிதம் ஆகும்.. 

“கைவிட்டு போன பொருளோ நபரோ உள்ளூரிலா??? வெளியூரிலா?? வெகுதூரத்திலா?? என கேள்வி எழும்போது அதை பற்றிய ஆருடம் கணிக்கும் போது
மகம்
பூரம்
உத்திரம்
ஆகிய மூன்று நட்சத்திர நாளில் பிரசன்னம் எனும் போது அந்த நஷ்ட பொருள் மிகமிக சமீபத்திலேயே உள்ளது என பொருள் ஆகும் விரைவில் கைக்கு வந்தும் சேரும்..


அஸ்தம்
சித்திரைசுவாதிவிசாகம்அனுஷம்
கேட்டை
மூலம்
பூராடம் ஆகிய நாளில் ப்ரசன்னம் கேட்பின் நஷ்டம் ஆன பொருள் அந்த ஊருக்குள்ளே தான் உள்ளது நஷ்ட சொத்து விரைவில் காணப்படும் .. 

உத்திராடம்திருவோணம்
அவிட்டம்சதயம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரேவதிஅசுவினிபரணி ஆகிய நாளில் ப்ரசன்னம் கேட்பின் உள்ளூரில் இல்லாமல் அருகிலுள்ள வெளியூருக்கு சென்று இருக்கும் பிற ஊரில் கிடைக்கும் எனலாம்.


மீதம் இருக்கும்

கிருத்திகை
ரோஹிணிமிருகசீரிடம்திருவாதிரை
புனர்பூசம்
பூசம்
ஆயில்யம் ஆகிய நாளில் ப்ரசன்னம் கேட்பின் அந்த “நஷ்ட சொத்து” வெகுதூரத்திற்க்கு சென்று விட்டது என பொருள் ஆகும்.. 

“ஒரு களவாடிய பொருள் ஆனது யாரால் களவாடப்பட்டு இருக்கும் எனும் ப்ரசன்னம் காணும் விதம் ஆனது :- ப்ரசன்னம் கேட்கும் காலத்தில் ஏற்படும் “லக்னம்” கொண்டு இதை கணிக்கலாம்.. “மேஷலக்னம்” எனில் அந்த நஷ்ட சொத்தை களவு செய்தது “பிராமாணர்” என பொருள்..“ரிஷப லக்னம்” ப்ரசன்ன லக்னம் எனில் சொத்தை களவாடிய ஷத்திரியர் இனத்தால் எனவும் சொல்லலாம்.“மிதுன லக்னம்” ப்ரசன்ன காலத்தில் அது வைசியர் தான் அதை களவாடியது என அறியலாம்..

“கடக லக்னம்” ப்ரசன்ன காலத்தில் லக்னம் “சூத்திரரால்” களவாடப்பட்டது..“சிம்மம்” லக்னம் ப்ரசன்ன லக்னம் ஆகின் “சோரர்” தன் உறவுகளே “திருடி” இருக்கலாம் என அறியலாம்..“கன்னி” லக்னம் ஆகின் அவரோ அல்லது அவரது மனைவியோ கூட இருக்கலாம்…

 “துலாம் “ லக்னம் நஷ்ட ப்ரசன்ன நேர்ந்தால் அவரது தன் புத்திரர் அல்லது தாய் அல்லது தன் சகோதரர் இவர்களால் சோரம் ஆனது ..
 “விருட்சிகம்” லக்னத்தில் “நஷ்ட ப்ரசன்ன” நேர்ந்தால் “தன்னை” பற்றி சாராதவர் அன்னியர் திருட்டை செய்தவர்கள்..
“தனுசு” லக்னம் ப்ரசன்ன காலத்தில் லக்னம் ஆகில் நஷ்ட ஆன பொருள் “சொந்த எஜமானனே “ “கள்வர்” அதாவது தானே “அபகரித்தவர் எனலாம்..”மகரம்” லக்னம் ப்ரசன்ன நஷ்ட பிரச்சனை ஏற்பட்டால் “ பெருச்சாளி” பொருள் நஷ்டம் ஆனது என சொல்லலாம்..”கும்பம்” லக்னம் “நஷ்ட ப்ரசன்ன” செய்யப்பட்ட லக்னம் ஆகினில் “தாய் மாமன்” சொத்து களவாடப்பட்டது ….

“மீனம்” லக்னம் ப்ரசன்னம் ஆகினில் “நஷ்ட பொருள்” பூமியில் மறைந்து போனதென சொல்லலாம்..

கர்ப்ப துவார பாஹிய பிரச்சனை குறித்துமேஷம்கடகம்துலாம்மகரம்ஆகிய நான்கு ராசிகளும் துவார ராசிகள் எனும் சர ராசிகள் என நினைவில் கொள்ளவும்
 

ரிஷபம்
சிம்மம்
விருட்சிகம்கும்பம்
ஆகிய நான்கு ராசிகள் பாஹிய ராசி எனும் ஸ்திர ராசிகள் என நினைவில் கொள்ளவும்
மிதுனம்
கன்னிதனுசுமீனம்
ஆகிய நான்கு ராசிகளும் கர்ப்ப ராசி உபய ராசிகள் என நினைவில் கொள்ள வேண்டும்..

இந்த விதிப்படி அதாவது
துவார ராசி என்பது சரராசி
பாஹிய ராசி என்பது ஸ்திர ராசி
கர்ப்ப ராசி என்பது உபய ராசிஇதை எல்லாம் ஒரு ஆருட ராசியாக கொண்டு யோசிக்கும் போது  முதலில் சொல்லி இருக்கிற கர்ப்ப ராசி [ உபய ராசி ] எனும் எந்த ராசியில் நேர்ந்தாலும் பிரசன்னம் கவனிக்கப்படும் விஷயம் “ஜீவன்” சிந்தனையை கொண்டதாக இருக்கும்..

பாஹிய ராசி [ ஸ்திர ராசி ] எனும் ரிஷபம் , சிம்மம், விருட்சிகம், கும்பம் இவைகளில் பிரசன்னம் கேட்கப்படும் போது “ மூலசிந்தனை” பற்றியதாக இருக்கும்..இரண்டு , நான்கு, பால கால்களை சம்பந்தமான இருகால் நான்கு கால் அல்லது பலகால் ராசி இவைகளை உடையவை “ஜீவசிந்தனை” ஆக இருக்கும்..


வெள்ளி, வெண்கலம், தங்கம், துக்கநாகம், ஈயம், இரும்பு, நவரத்னம் இவைகளை “தாது” சிந்தனையில் அடங்கும் …வாணிபம் யுத்தம் ,தானியம், விருட்ஷம், வீடு, பாக்கு, கந்தம்,கற்பூரம்,  கஸ்தூரி , புதுவிதைகளை நடுதல் ஆகியவை “மூலசிந்தனை”யில் அடங்கும்..


மேஷம் மீனம் தனுசு, இவைகளை நடப்பு ராசிகள் ஆகும்..மிதுனம், துலாம், கும்பம் ஆஸீன ராசிகள் ..கடகம் சிம்மம். விருட்சிகம், இவைகளை இருப்பு ராசிகள்..ரிஷபம் கன்னி மகர ராசிகள் சயன ராசிகள் ..இவைகளில் நடப்பு ராசிகள் பிரசன்னம் கேட்கப்பட்டால் “ கோர சம்பவம்” ”கோர கலகம்” குறித்த ”ஆருடமாக” இருக்கலாம்..

இருப்பு ராசிகளில் உத்தம பலனும்
சயன ராசிகளில் மரணத்தையும்
ஆஸின ராசிகளில் கார்ய சித்தியும் பலனாக தரும்..

நோயாளி சம்பந்தமாக பிரச்னைகளை கேட்கும் போது கர்ப்ப ராசிகளில் பிரசன்னம் கேட்கும் போது வியாதி அல்ல என்றும்
துவார ராசிகளில் பிரசன்னம் செய்தால் நோய் அதிகம் உடைய நோயாளி மிருத்யவை அடைவான் என்றும்
பாஹிய ராசிகளில் பிரசன்னம் நேர்ந்தால்  நோயாளி சுகத்தை அடைவான் என்றும் ஆருடம் சொல்லவும்.. 


நஷ்ட [தொலைந்த] பிரச்னையில் பிரசன்னம் கேட்கும் போது
சரம் எனும் துவாராசியில்
அல்லது கர்ப்ப ராசியில்  பிரசன்னம் ஆனால் நஷ்டமான பொருள் கிடைக்கும் எனவும் ஸ்திரியின் கையில் அது சிக்கி இருக்கும் எனவும் சொல்லலாம்..
ஸ்திர எனும் பாஹிய ராசியில் நஷ்டம் குறித்து பிரசன்னம் கேட்பின்
போன பொருள் ஒரு ஆணால் கொண்டு செல்லப்பட்டது ..அது திரும்ப கைக்கு கிடைக்காது என சொல்லலாம்..
கர்ப்ப ராசி எனும் மிதுனம் கன்னி தனுசு மீனம் ஆகிய கார்னர் ராசிகள் இருக்கும் போது பிரசன்னம் கேட்டால் உயரமில்லாத ஒரு குள்ளமான தாயாதியால் அது சோரம் [ திருட்டு] போய் இருக்கும் என சொல்லலாம்.
பாஹிய ராசி எனும் ஸ்திர ராசி செய்யப்பட்டால் தாயாதியும் சேர்ந்தே கூட சேர்ந்தே களவு செய்யப்பட்டு இருக்கும் ..உயரமான நபர் என்றும் துவார ராசியில் சர ராசியில் ஆனால் வெளி தேசத்தவர் களவு செய்யப்பட்டு இருக்கும்..
சீக்கிரம் வஸ்து காணப்படும் என்றும் சம உயரமுடையவர் .
மேஷம், சிம்மம், தனுசு இவைகளில் பிரசன்னம் நேர்ந்தால் கால தாமதத்திற்க்கு கார்ய சித்தி உண்டு ஆகட்டும்..
கடகம், மகரம், விருட்சிகம் இவைகளில் பிரசன்னம் செய்யப்பட்டால் கார்ய நாசம் ஆகும்,,
ரிஷபம், துலாம்,குமபம் இவற்றில் பிரசன்னம் செய்யப்பட்டால் வெகு தனலாபமும் பிரசன்னத்தின் பலனாக உண்டாகும்..

பிரசன்ன பெயர் எட்டு விதம்

[1] சம்யுக்தம்
[2] அஸமயுக்தம்
[3] அபிஹிதம்
[4] அநபிஹிதம்
[5] அபிகாதிகம்
[6] ஆலிங்கிதம்
[7] அபிதூமிதம்
[8] தக்தம்
ஆக எட்டு விதங்களிலும் பிரசன்னக் கேட்கும் போது கேட்பவர் பக்தி சிரத்தையுடன் தன் கையினால் வேறு எதையும் தொடாமலும் ஒரு விதமான சேஷ்டைகளும் செய்யாமல் இருந்து கேட்கும் பிரசன்னத்திற்கு ஸமயுக்தம் என்று பெயர் ..இப்படி கேட்கும் பிரச்சனை மிக்க உத்தமமான பலனை தரும். லாபமும் உண்டாகும்..பிரசன்னம் கேட்கும் போதுமார்க்கங்களில் இருந்து கொண்டும் படுத்து கொண்டும் வாகனங்களிள் அமந்து கொண்டும் சரியான ஜோதிடம் கேட்கும் எண்ணம் இன்றியும் பழம் தாம்பூலம் தட்சிணை இவையின்றியும் கேட்கும் பிரசன்னத்திற்கு அஸமயுக்தம் என பெயர் ஆகும். இதன் பலன் இவர்களின் கேள்விக்கு வெகு நாட்கள் கழித்தே பிரசன்னன் கேட்டதிற்கு பலன் சித்தி ஆகும்.. 

பிரசன்னம் கேட்கும் போது மங்களகரமான பொருட்களை வைத்து கொண்டே
கொண்டே அல்லது எடுத்து கொண்டே அல்லது தொட்டு கொண்டே ஒருவர் பிரசன்னம் கேட்கிறார் எனில் அது அபிஹிதம் என்று பெயர் ஆகும்..இதன் அர்த்தம் ஆனது பிரசன்னம் கேட்ட விஷயம் மிக நல்ல லாபகரமான ஆதாயம் தரும் .சித்திக்கும் என பொருள் ஆகும்..பிரசன்னம் கேட்ட போது அவர்கள் தன் கையினால் அடுத்தவர்கள் சரீரத்தை தொட்டு கொண்டே கேட்டால் அது அநபிதம் என பொருள் ஆகும்..இது போன்ற பிரசன்னம் கேட்கும் போது வினவப்படும் கேள்வியில் எந்தவொரு பலனும் அவர்களுக்கு கிட்டாது .. மேலும் அதில் அவர்களுக்கு நஷ்டமே ஏற்படுத்தும் என பொருள் எடுத்து கொள்ளலாம்..

பிரசன்னம் கேட்கும் போது தன் சகாயத்தினால் பிறருக்குக்காக கேட்கப்படும் போது தலையை தடவிக்கொண்டே கேட்டாலும் அல்லது இதயப்பகுதி ஆகிய இடத்தில் அடித்து கொண்டே கேட்டாலும் கைகளால் காலை தடவி கொண்டே கேட்டாலும் அடித்து கொண்டே கேட்டாலும் அல்லது கை கால்களை ஆட்டி கொண்டே கேட்டாலும் அதன் பெயர் “அபிகாதிகம்” என பொருள் ஆகும்.. இதன் பலனாக அவர்கள் சோகமும் பாதகமும் அடைவார்கள் என்பதே இதன் பொருள் ஆகும்..பிரசன்னம் கேட்பவர் தான் கேட்கும்போது கேட்பவர் தன்னுடைய வலது கையினால் தன் சரீரத்தை தொட்டு கொண்டே கேட்டால் அது ஆலிங்கம் என பெயர் ஆகும். இதன் பலன் சுகமும் சற்றே துக்கமும் உண்டாகும் என பொருள்..துக்கத்தை சில வியாகூலம் எனவும் கூறுகிறார்கள்..பிரசன்னம் கேட்கும் போது ஒருவர் தன்னுடைய இரு கைகளாலும் தன்னுடைய சர்வ அங்கங்களை தொட்டுக்கொண்டே கேட்டால் அந்த பிரசன்னம் ஆனது “அபிதூமிதம்” என பெயர் ஆகும்..இதன் பலன் அற்ப லாபமும் மித்திரர் வருகையும் அந்த மித்திரரால் இவருக்கு அற்ப லாபமும் என்கிற வெளிப்பாடு தான் இந்த பிரசன்னம் என கருத்தில் கொள்ளலாம்.. 

பிரசன்னம் கேட்கும் போது அழுது கொண்டோ அல்லது அலட்சியமாகவோ அல்லது ஜலத்தில் கால் வைத்து கொண்டோ அல்லது குளித்து கொண்டோ தகாத இடங்களில் இருக்கும் போதோ தகாத செய்கை செய்து கொண்டோ பக்தி ஹீனமாக இருந்து கொண்டோ அங்கும் இங்கும் அலைந்து கொண்டோ நல்ல எண்ணமின்றியோ , இன்னொருவருடன் வீண் வாய் சண்டை இட்டு கொண்டோ துன்பப்பட்டு  கொண்டோ கேட்கும் போது இதன் பெயர் “தக்தம்” என சொல்லப்படுகிறது..இதன் பலன் “நிஷ்டபலன்” இவர்களின் பிரசன்ன கேள்வியால் எந்தவொரு பலனும் ஏற்ப்பட போவதில்லை என பொருள் ஆகும்..

பிரசன்னம் கேட்க தகுதி இல்லாதவர்கள்
குள்ளர்கள்
அங்கஹீனம் அடைந்தோர்
காக்கையை போன்ற குணம் உடையோர்
பரபரப்பு உடன் இருப்போர் ..
பேராசை பிடித்தோர் ..
திருப்தி அற்ற நிலையில் வாழ்வோர்கள்..
குஷ்டரோகிகள் ..
நல்ல நடத்தை இல்லாத தாயின் பிள்ளைகள்..
ஆத்திரம் கொண்டோர்கள்..
குருடர்கள்..
வஞ்சகர்கள்..
கோளர்கள் …[ கணவர் இறந்த பின்னர் ரகசிய உறவில் குழந்தை என பொருள்]
லோபிகள் [குடியும் பிற பெண்களின் தொடர்பில் உள்ளோர்கள் ]
செவிடர்கள் .
இவர்கள் பிரசன்னம் கேட்கும் போது சொல்வதும் கூடாது .


இவர்கள் பிரசன்னம் கேட்கவும் தகுதி இல்லாதவர்கள் ..இவர்கள் கேடபதற்க்கு சமாதானம் ஆக இவர்களுக்கு இக்கலியுகத்தில் ஜோதிடரால் எதையும் சொல்லி விட முடியாது ..மேலும்
அனர்தகர்களுக்கு விசுவாசம் அற்றவர்களுக்கு பெரிய சந்தேககாரர்களுக்கு பரிகாசம் பேசுவோருக்கும் பிரசன்னம் சொல்லவே கூடாது என்பதே இதன் பொருள் ஆகும்…


பிரசன்னம் கேட்பவர் எதைப்பற்றி கேட்கிறார் என்பதை சாமான்னய சிந்தனையாய் அறிய

மேஷராசி பிரசன்ன ராசி ஆனால் இருகால் உள்ளவைகளை பற்றியதும்ரிஷபராசி ஆனால் நாற்கால் ஜந்துவைப்பற்றியதும்..மிதுனம் இரட்டைப் படை ராசி ஆகினில் கேட்கும் பிரசன்னம் “கர்ப்பிணி” குறித்ததும்
கடகராசியில் பிரசன்னம் கேட்கும் போது வியாபார விவகாரங்களை பற்றியதும்சிம்ம ராசியில் பிரசன்னம் கேட்கப்படும் போது அரசாங்க உத்தியோகம் குறித்தும்
கன்னி ராசியில் பிரசன்னம் கேட்கப்படும் போது கன்னி அல்லது விவாஹ சம்பந்தமான கேள்வி எனவும்துலாராசியில் பிரசன்னம் கேட்கப்படும் போது அது “தாது” சம்பந்தமான விஷயங்கள் எனவும்
விருட்சிக ராசியில் பிரசன்னம் கேட்கப்படும் போது அது “நோய்” சமப்ந்தப்பட்ட விஷயம் எனவும்தனுசு ராசியில் பிரசன்னம் ஆகில் அது “தன லாபம் “ குறித்த விஷயம் எனவும்மகர ராசியில் பிரசன்னம் கேட்பின் அது “ சத்ரு உபாதை” குறித்த பிரசன்னம் எனவும்கும்ப ராசியில் பிரசன்னம் ஆனால் அது “ ரகசியமான வியாபார ஆதாயம்” குறித்து எனவும்
மீனராசியில் பிரசன்னம் ஆனால் அது “ ஸ்தானத்தின் அசைவு பற்றியும் விரயம் செய்வது பற்றியும்” என பொருள் கொள்ளலாம்.. 

   இதையும் வேறு பட்ஷத்தில்
மேஷராசி ஆகின் ஸ்வர்ணம் சம்பந்தப்பட்ட விஷயம் எனவும்
ரிஷபராசியில் பிரசன்னம் எனில் வெள்ளி குறித்த விஷயம் எனவும்
மிதுனம் ஆகில் அது தாமிரம் எனும் “செம்பு” குறித்து விஷயம் எனவும்
கடக ராசி ஆனால் அது “ வெண்கலம்” குறித்த விஷயம் எனவும்
சிம்ம ராசி ஆனால் அது “இரும்பு” சம்பந்தமான வினா எனவும்
கன்னி ராசி ஆனால் அது “வஸ்திரம் “ சம்பந்தப்பட்டது எனவும்
துலாராசியில் எனில் அது “பருத்தி” சம்பந்தப்பட்டது எனவும்
விருட்சிகராசியில் எனில் அது “தானியம்”குறித்த வினா எனவும்
தனுசு ராசியில் எனில் அது “ தனம்” சார்ந்த பிரச்சினை எனவும்
மகர ராசியில் எனில் அது “நீரில்” சஞ்சரிக்கும் பொருளைப்பற்றியது எனவும்
கும்பராசியில் எனில் அது” சூத்திரர்” குறித்த வினா எனவும்
மீன ராசியில் எனில் அது “ வாசனை திரவியங்களை” பற்றியது எனவும்
சிந்தனையில் கொள்ளவும்..

பிரசன்னத்தில் ஏற்படும் கால நிர்ணயம் ஆனது எப்படி கணிப்பது எனில்ஆலிங்கிதம் எனப்படும் பிரசன்னத்தில் அன்றைய தினத்திலேயே பிரசன்னம் பலிக்கும் என கருதலாம்.அபிதூமிதம் எனும் பிரசன்னத்தில் கேட்கப்படும் கேள்விக்கு பத்து தினங்களில் பலனுண்டாம்..வேறு பட்ஷத்தில் கேட்கப்படும் கேள்விக்கு பிரசன்னம் கேட்ட தினத்தில் இருந்து ஒரு மாதத்தில் மேற்படி பிரசன்னம் பலிதம் ஆகும் எனலாம்.. 

தாம்பூலம் எனும் வெற்றிலையினால் பிரசன்னம் குறித்த பலாபலனை அறிய
பிரசன்னம் கேட்க வருபவர் ஜோதிடரிடம் கொண்டு வரப்பட்ட
வெற்றிலை பாக்கு  பழம் தட்சிணை இவைகளில் ஒவ்வொன்றையும் தனி தனியாக வைத்து கொண்டு அவற்றில் வெற்றிலையை மட்டுமே தனியாக எண்ணி அதன் எண்ணிக்கையை இரண்டு மடங்கு ஆக்கி செய்து கொண்டு வந்த எண்ணிக்கையை 12ல் வகுத்தால் கிடைக்கும் எண்ணிக்கையை மேஷாதி ராசியில் வரிசை கிரமாக எண்ணி கண்டு அதன்படி பலாபலனை சொல்லவும்..
மனதில் உள்ளவற்றை அறியும் வழியில் சொல்லியபடி அறிந்து அதிலுள்ள அனுகூலமான பலனை எடுத்து சொல்லவும்..
வெற்றிலை பாக்கு இவற்றினால் பிரசன்னம் பலனை காண
மேலே சொல்லியபடி பிரசன்னம் கேட்க வருங்காலத்தில் பிரசன்னம் கேட்பவரால் கொண்டு வரப்படுகின்ற வெற்றிலை பாக்கு இவற்றை எண்ணி எண்னிக்கையை மூன்றினால் பெருக்கி வைத்து கொண்டு ஆறினால் வகுத்து வரும் மீதமுள்ள எண்ணுக்குறிய பலனை வரிசை கிரமப்படி தெரிந்து சொல்ல வேண்டியது..
மேலே சொல்லி உள்ளபடி வகுத்து வரும்
எண் 1 ஆனால் கேட்கப்பட்ட கேள்வியால் லாபம் உண்டு எனவும்.
எண்  2 ஆனால் கேட்கப்பட்ட கேள்வியால் ஹானி உண்டாகும்
மேற்படி
எண் 3 ஆனால் பிரசன்னம் கேட்கப்பட்டதில் பலனுண்டாம்
எண் 4 ஆனால் பிரசன்னத்தின் பலன் ‘துக்கம்” உண்டாம்..
எண் 5 ஆனால் பிரசன்னம் கேட்கப்பட்டதுக்கு “ஜீவன்” உண்டெனவும் அறியலாம்..
எண் 6 ஆனால் பிரசன்னத்தின் பலன் அந்த குடும்பத்தில் “ மரணம்” உண்டென அறியலாம்..
நவகிரகங்களினால் பிரசன்னம் அறிய பிரசன்னம் கேட்க வந்தவர் கொண்டு வந்த “தட்சிணையை” [ நாணயங்களை கொண்டு வர சொல்லி] எண்ணி ஒவ்வொன்றையும் தனி தனியாக எண்ணி கொண்டு அவை ஒவ்வொன்றின் தொகையை இரண்டால் பெருக்கி கொண்டு அதை ஒன்பதால் வகுத்து மீதம் ஏற்படும் எண்ணிக்கையை வரிசை கிரமமாக கிரகங்களை அறிந்து அவர்களால் பலனை அறியவும் ..
மேலே சொல்லிய வகுத்த மீதம்
ஒன்று எனில் சூர்யன்
இரண்டு எனில் சந்திரன்
மூன்று எனில் செவ்வாய்
நான்கு எனில் புதன்
ஐந்து எனில் குரு
ஆறு எனில் சுக்கிரன்
ஏழு எனில் சனி
எட்டு எனில் ராகு
ஒன்பது எனில் கேது
ஆதித்யாதி இந்த நவகிரங்களையும் கிரந்த கர்த்தாக்களையும்
பெரியோரையும்
தன் குல தெய்வத்தையும்
இஷ்ட தெய்வத்தையும்
தன் ஆசானையும்
நன்கு பூஜித்து தைவக்ஞர் [ ஜோதிடர்] பலாபலனை சொல்ல வேண்டியதே ஒரு ஜோதிடர் கடமை ஆகும்..
 என்றும் ஜோதிடப்பணியில்
பெருந்துறையில் இருந்து
Astro Senthil Kumar
எம்மை நேரடியாக அணுக !!
தொடர்புகொள்ள
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்
புதுபஸ் நிலையம் பின்புறம்
 பெருந்துறை   -638 052
ஜோதிடர்A .செந்தில் குமார் 
செல்: +91 98427 69404
             +91 98434 69404    
அல்லது
ஆன்லைனில் ஆலோசனை பெற நீங்கள்
 astrosenthilkumar@gmail.com எனும் மெயிலில் உங்கள் ஜாதக கேள்விக்கு
பதிலை பெறலாம்
ஆனால் முறையாக வங்கி கணக்கில் உங்களால் கட்டணம் செலுத்தப்பட்ட பின்னரே உங்களுக்கு பதில் அளிக்கப்படும்..
வங்கி விபரங்கள்..

Union bank of india
a/c no:- 629102010002579
Ifsc code:- UBIN 0562912
Village:- 803534- Perundurai
Cust Id:- 241739254
Name:- Senthilkumar .A


Sunday 16 October 2016

திசா சந்தி என்பது என்ன??????????

திசா சந்தி என்றால் என்ன???
திருமண பொருத்தத்தில் இன்று மிகப்பெரிய குழப்பம் தரும் சங்கதி இது ..
இன்றைய ஜோதிடர்கள் இடையே மிகப்பெரிய “சர்ச்சை”
காரணம் ஏக திசை நடப்பதில்
ஒரு ஜோதிடர் செய்யலாம் என்கிறார்..[சரியான பதில்]
இன்னொரு ஜோதிடர் ஏக திசையில் செய்யக்கூடாது என்கிறார்..[ இது தவறான பதில் ]
மக்களுக்கு இதில் மிகப்பெரிய குழப்பம்
“ஜோதிடத்தை “
நம்புவதா???
நம்பக்கூடாதா???
என்பது குழப்பம்..
உண்மையில் ஏகதிசை நடக்கும் இருவருக்கு திருமணம் செய்யலாம் …
அதில் தவறில்லை …
ஆனால் வெவ்வேறு திசை நடந்தாலும் திசா சந்தி நடந்தாலும் திசா சந்தி வரும்..
அது எப்படி ???
அது தான் இன்றைய நம் உரையாடலில் பேசப்பட வேண்டிய விஷயம்..
முக்கியமாக படித்து விட்டு “ஜோதிடம்” வளர கொஞ்சம் இதை ஷேர் செய்யுங்கள்..
உதாரணமாக ஒரு பெண்
ராகு திசை : 12-08-2018 தொடங்கி 12-08-2026 வரை நடக்கும்
ஒரு ஆண் திசை 19—10-2005 வரை 19-10-2023 வரை நடக்கும்
ஆனால் இதில் ஒரே திசை திசை இருவருக்கும் நடக்கும் “ஏக திசை “ என அர்த்தம் என அர்த்தம் கொள்ளலாம்..
எப்படி எனில் இருக்கும் ஒரே ராகு திசை 1ஆண்டு 9மாதம் 23 நாளும் ஒரே திசை ஆனாலும் அங்கே திசா சந்தி என்பது இல்லை..
ஆனால் ஒரு பெண்ணுக்கு
சனி திசை 12.-08-2020 அன்று முடிகிறது எனில்
அதே கால கட்டத்தில் 12-08-2019 முதல் 12-08-2021 வரை
பெண்ணின் திசை தொடங்கும் [12-08-2020 ]
ஒரு ஆண்டு முன்போ [12-08-2019]
அல்லது
ஒரு ஆண்டு பின்போ [ 12-08-2020 ]
திசை மாற்றம் எந்த திசையில் இருந்து எந்த திசைக்கு வந்தாலும் அது திசா சந்தி என பொருள் கொள்ள வேண்டும்..
ஆனால் இன்று போதித்த ஆசானின் தவறா ??
அல்லது போதனையை புரிந்து கொண்டோர் தவறா??
என தெரியவில்லை ..
ஒரே திசை நடந்தால் உடனே
“திசா சந்தி” வருகிறது என வேறு சில “ஜோதிடர்” சொல்வதை அடிக்கடி என் வாடிக்கையாளர்கள்
என்னிடத்தில் சொல்லி விளக்கம் கேட்கும் போது எல்லாம்
நான் அவர்களுக்கு “மிகப்பெரிய ஜோதிட வகுப்பை “ எடுக்க வேண்டிய கட்டாயத்திற்க்கு உள்ளாகிறேன் ..
“இது ஒரு ஜோதிடரின்” அறியாமையால் செய்யப்படும் “தவறுதல்” என்பதை பகிரங்கமாக சொல்கிறேன்..
என் அன்பிற்கினிய ஜோதிட நண்பர்கள்
“ஏக திசை “ என்பது வேறு
“திசா சந்தி” என்பது வேறு
என்பதை கொஞ்சம் புரிந்து கொண்டு உங்கள் இடத்தில் வரும்
வாடிக்கையாளர்களுக்கு “வழிகாட்டுதல்” செய்ய கோருகிறேன் ..
மேலும்
இந்த சம்பவம் எம் பெருந்துறை நகரை சார்ந்த இடத்திலும்
எம் ஈரோடு மாவட்டம் சார்ந்த பகுதியிலும்
“சில ஜோதிடரின்” [அறியாமையால் ]
தவறான வழிகாட்டுதல் ஆக “ஒரே திசைக்கு”
திசை சந்தி என “தன் கைப்பட” எழுதி கொடுத்த
“பொருத்த அட்டவணை” எம் கையில் உள்ளது..
[ தேவைபடும் பட்சத்தில் தன் பாணியை ஒருவர் திருத்தி கொள்ளவில்லை எனில் யார் யார் என பகிரங்கமாக வெளியிடப்படும் ]
இந்த தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்வது கூட
“பொது மக்களுக்கு “ திசா சந்தி என்றால் “என்ன?’ என ஒரு விழிப்புணர்வு கொடுக்க செய்யப்பட்ட பதிவு தான்..
உங்களுக்கு என ”பொருத்தம்” பார்க்க செல்லும்போது
ஒரு ஜோதிடர் “ஒரே திசையை”
“திசா சந்தி “ என ஒருவர் சொன்னால் “ அவரிடம்”
நீங்கள் இதை “குறித்து” சரியான விபரங்களை கேட்கவும்..
“இதைப்பற்றி”
சரியான விழிப்புணர்வு “அனைவரிடமும்” வர வேண்டும்
என்பதால் இதை அனைவரும் கொஞ்சம் ஷேர் செய்து
“ஜோதிட விழிப்புணர்வு” செய்ய வேண்டுகிறேன்…
இதைப்பற்றிய விவாதங்கள் என் இன்பாக்ஸ் மூலமாக அல்லது ஒரு குழ்வின் மூலமாகவும் நேரடியாக விவாதம் செய்யவும் தயாராக உள்ளேன்.....
பெருந்துறையில் இருந்து
Astro Senthil Kumar
Wats App:- 9843469404
EMAIL:- astrosenthilkumar@gmail.com

Thursday 6 October 2016

அரசு வேலை அமையும் ஜாதக அமைப்பு இது [ goverment job ]

அரசு வேலை அமையும் யோகம் எப்படி இருக்கும் என்பதற்க்கு என ”ஜோதிட ஆய்வினை” செய்ய ஒரு பதிவு ..

இத்துடன்
ஈரோட்டில் 13-02-1983 மதியம் 12-07 மணிக்கு பிறந்த இவருக்கு இன்று 33வயது 8மாதம் ஆகி விட்டது ..


ரிஷப லக்னம்
2-ல் ராகு
3-ல் மாந்தி
6-ல் சனி [ வக்ரம் ]
7-ல் குரு
8-ல் கேது
9-ல் புதன்
10-ல் சூரியன் – சந்திரன் –செவ்வாய்- சுக்கிரன்
என அமையப்பட்ட ஜாதகம் இது..



யோகத்தை பற்றிய ஆய்வினை கவனிப்போம் …

 தோஷ நிவர்த்தி யோகம்:-

லக்னத்தின் கேந்திரத்தில் நான்கு ஏழு பத்து ஆகிய இடத்தில் குரு புதன் அமையப்பெற்றால் அது “தோஷநிவர்த்தி யோகம்” ஆகும் ..
 


கஜகேசரி யோகம்:-

சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு அமையப்பெற்றால் அங்கே கஜகேசரி யோகம் எல்லோருக்கும் முன்னுதாரணம் ஆக திகழ வேண்டும் என எண்ணத்துடன் வாழ்வார்கள்..



 சந்திர மங்கள யோகம்:-
செவ்வாயும் சந்திரனும் கேந்திரத்தில் இருக்க சந்திர மங்கள யோகம் அமைகிறது..இது எடுத்த கார்யங்களை முடிக்க வேண்டும் என முழுமுயற்சி செய்து “தலைமை பாங்கை” அடையும் தகுதியை அடைவார்கள்..


 

அனபா யோகம்:-
சந்திரனுக்கு 12-ல் புதன் அமையும் போது தலைமை ஏற்று பாங்கு அமைகிறது..உடல் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தி முக்கியத்துவம் கொடுப்பார்கள்..



சிவ யோகம்:-
பொதுவாக சுக்கிரன் சூரியன் புதன் போன்றவை
கேந்திரத்தில் திரிகோணத்தில் அமையும் போது “சிவயோகம்” இது அசையும் அசையா சொத்துக்களை வாங்குவதும் உறவினர்களை நட்பின் வட்டத்தில் கொண்டு செல்வார்கள்..  

உபயசர யோகம்:-
சனி ஆறில் இருந்து உச்சம் அமையும் போது இந்த உபயசர யோகம் ஆகிறது..எடுத்த கார்யங்களில் வெற்றி பெற போராடும் மனோநிலையை கொடுக்கிறது.. 



மாலா யோகம்:-
சந்திரனுக்கு பத்தில் குரு இருக்க ”கேசரி யோகத்துடன்”நிர்வாக திறமையுடன் பொருள் சேர்க்கை காணும் நோக்கில் வாழ்வார்கள்.. 


அமலா யோகம்:-
லக்னத்திற்க்கோ அல்லது சந்திரனுக்கோ பத்தில் சுபகோள் இருப்பதால் ”புத்திசாலி தனமாக” மற்றவர்களுக்கு “ஆலோசனைகள்” வழங்கும் சாமார்த்தியம் கொண்டவர்கள்..



பர்வத யோகம்:-
 லக்னாதிபதி நின்ற ராசி அதிபதி உச்சம் பெறுவதால்
”பர்வத யோகம்” இது “வீடு நிலம்” போன்றவைகளை வாங்கி போடும் எண்ணத்தை உருவாக்கி கொள்ளும் “சாமார்த்தியத்தை” கொடுக்கும் எப்போதும் பொருள்வரவை நோக்கி பயணத்தை செய்யும்..மற்றவர்களை நாகரீகமாக நடந்து வசியம் செய்யும் வித்தகர் ஆவர்…




ஹரி யோகம்:-
ஒரு லக்னத்தின் இரண்டாம் அதிபதி நின்ற ராசிக்கு 2-8-12 ஆகிய இடங்களில் சுபகிரகங்கள் அமையும் போது இந்த யோகம் அமைகிறது .. 

வசுமதி யோகம்:-
ஒரு லக்னத்திற்க்கோ அல்லது சந்திரன் நின்ற ராசிக்கோ உபசய ஸ்தானங்களில் நற்கோள் அமையும் போது இந்த யோகம் அமைகிறது ..எந்த கார்யத்தை எடுத்தாலும் அதில் “ஆதாயம்” பார்த்து பணி ஆற்றும் வல்லமையை கொண்ட “ஜாதகர் ஆக” கொண்டு செல்லும் அமைப்பு ஆகும்.”பொருள் ஆதாயம் இன்றி எதையும்” செய்ய துணியாத தன்மையை இந்த யோகம் கொடுக்கும் ..


லக்ஷ்மி யோகம்: -
ஒன்பதாம் அதிபதி ஆகிய கோள் [சனி]
கேந்திரம்
மூலத்திரிகோணம்
ஆட்சி அல்லது
உச்சம் [ ரிஷப லக்னத்தின் பாதகரும்  சனியே] ஆறில் உச்சம் அடைவதால் இந்த “லக்ஷ்மி யோகம்” இது உறவினர்கள் இடத்தில் செல்வாக்கும் பணியை எடுத்து செய்து ”நிர்வாகத்தினால்” பாராட்டு பெறுவதும் இந்த யோகத்தால் தான்….


இதிலே இன்னும் ஒரு யோகம்
உண்டு “அது”
“ஸ்ரீநாத யோகம்” என பெயர் ஆகும்..



ஸ்ரீநாத யோகம் என்பது ஏழாம் அதிபதி நின்ற வீட்டின் அதிபதி ஆகியவர் செவ்வாய் பத்தில் அமர்ந்து அந்த பத்தாம் இடத்தின் அதிபர் இன்னொரு வீட்டில் உச்சம் பெற்று அந்த பத்தாம் இடத்திற்க்கு கேந்திர திரிகோணத்தில் “உச்சம்” பெறுவதால் “ஸ்ரீநாத யோகம்” அமைந்து ”அதிகாரம் மிக்க அரசு பணியை “ அல்லது “அரசியல் பொறுப்பை “ இந்த “ஸ்ரீநாத யோகம்” மூலமாக பெற்று விடுகிறது..


சில மாதங்களுக்கு முன் இந்த “ஜாதகரின்” ஜாதகம் என் பார்வைக்கு வந்த போது [ துருவ கணிதம் இல்லாத ஜாதகம்] இந்த “ஜாதகத்தில்” பத்தாம் இடத்து செவ்வாய்க்கு இடம் கொடுத்த “சனி” உச்சம் பெற்ற நிலையை கண்டு “இவர் அரசு ஊழியராக உள்ளாரா??” என கேட்டேன்…
சந்திரனுக்கு பத்தில் குரு இருப்பதால் “ இவர் ஒரு ஆசிரியர்” ஆக “வாய்ப்பு” தேடி வந்து “பதவியை” கொடுத்து இருக்கிறது ..
மேலும் இப்பொழுது அவரை மேற்கல்வியை தொடர சொல்லி ஆலோசனை கொடுத்து அனுப்பினேன்..


கல்வித்தரம் உயரும் போது “இவருக்கு இன்னும் ஒரு உயர்நிலையை தரும் “ என்பது ஒரு காரணம் ..



புதியதாக ஜோதிடம் பயிலும் ஜோதிட நண்பர்களுக்கு என இப்பதிவு செய்யப்படுகிறது..
இனி தொடர்ந்து சில ஜாதகங்களை “ஜோதிட ஆராய்ச்சி” காண முயற்சிகளை செய்வோம்..
என்றும் ஜோதிடப்பணியில்..
பெருந்துறையில் இருந்து
Astro Senthil Kumar …
Wats App:- +919843469404


[ முக்கிய குறிப்பு வரும் 
13-10-2016 முதல் 23-10-2016 வரை பத்து நாட்கள் சிங்கப்பூரில் வாழும் தமிழ் நண்பர்கள் சந்திப்புக்கு செல்ல இருக்கிறேன் .. முன்பதிவுக்கு வாட்ஸ் அப் எண்ணில் அல்லது astrosenthilkumar@gmail.com எனும் மெயிலில் முன்னிட்டு தகவல்களை செய்யவும்..]





Saturday 17 September 2016

பரணி நட்சத்திர பெண்ணுக்கு உகந்த ஆண் நட்சத்திர பட்டியல்

பரணி நட்சத்திர பெண்ணுக்கு
பொருந்தும் நட்சத்திர பட்டியல்
1)அசுவினி (ஏகராசி)
2)மிருகசீர்ஷம் 
3)ஆயில்யம்
4)மகம் 
5)பூரம் (ஆரோகணத்தில் ரச்சு இல்லாமல் போனாலும் செய்யலாம்)
6)உத்திரம் 1ம் பாதம் 
8)சித்திரை 3@4 பாதம் 
9)சுவாதி 
10)விசாகம் 1-2&3 பாதம்
11)மூலம்
12)உத்திராடம்
13)திருவோணம் 
14)அவிட்டம்
15) சதயம் 
16)பூரட்டாதி
17)உத்திரட்டாதி (ரச்சு இல்லாமலும் செய்யலாம்)
18)ரேவதி 
ஆகிய ஆண் நட்சத்திர ஜாதகங்கள்
பொருந்தும்
பொதுவாக
#ரச்சு இல்லாமல் திருமணம் செய்தாலும்
நல்ல தாராபலன் இருக்கும் நாட்களில்
திருமணம் செய்ய வேண்டும
பரணி நட்சத்திரம் எனும்போது
அவர்களுக்கு நல்ல தாராபலன் இருக்கும்
#முகூர்த்த_நட்சத்திரங்கள்
1)மிருகசீர்ஷம் 
2)மகம் 
3) உத்திரம் 
4)சித்திரை 
5)விசாகம் 
6)மூலம் 
7)அவிட்டம்
8)பூரட்டாதி 
9)ரேவதி
ஆகிய
முகூர்த்தம் இருக்கும் நாட்களில்
மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்....
பூசம் 
அனுஷம் (வேதை நாள்)
உத்திரட்டாதி
போன்ற வதை நாட்கள் என்பதால்
அந்த நட்சத்திர நாளில்
திருமணம் செய்யும்போது அவர்கள் வதை படும் வாழ்க்கை அமையும் என்பதால் இவைகள் அமைக்கவே கூடாது...
]
அனுஷம் நட்சத்திர முகூர்த்தம் (பெண்ணுக்கு சந்திராஷ்டம் என்பதாலும்)அமைக்கப்பட்ட கூடாது...
அசுவினி (ஜென்ம)
மகம் (அனுஜென்ம)
மூலம் (திரிஜென்ம)
போன்ற
நட்சத்திர நாட்கள்
இயன்றவரை தவிர்ப்பது நல்லது....
(ஆண் பெண் இருவருக்கும் தாராபலன் பார்க்கும்போது அனுஜென்ம திரிஜென்ம நட்சத்திர நாளிலும் திருமணம் செய்யலாம்)
(குறிப்பு சில ஜோதிட ஆசான்கள் எழுதிய திருமண பொருத்தம் புத்தகம்
சிவகாசியில் அச்சிட்டு
பேருந்து நிலையம் ரயில் நிலையம் போன்ற இடங்களில் ₹10க்கும் ₹20க்கும் விற்பனை ஆகி கொண்டு இருக்கிறது அதிலுள்ள நட்சத்திர பொருத்த விஷயங்களை தாண்டிய ஜோதிட ஆலோசனைகள் தான் மேலே கொடுக்கப்பட்ட விஷயம் ஆகும்)
இன்னும் கூட அதிக ஜோதிட
விஷயங்களை தான் அலசி ஆராய்ந்து பார்க்க தான்
சேலத்தில் இருநாட்கள் ஜோதிட வகுப்பு ஆகும்...
ஜோதிடத்தில் சிலரிடத்தில் 
சில குறைபாடு இருக்கவே செய்யும் ஆனாலும் நம்மை நாம் மாற்றி கொள்ள வேண்டும்..
மேலும் விளக்கம் அறிய 
சேலத்தில் 
வரும் 24-09-2016
சனிக்கிழமை 
மற்றும்
25-09-2016 
ஞாயிற்றுக்கிழமை ஆகிய 
இருநாளும்
“’ திருமண பொருத்தமும் ஜோதிடகள் பங்களிப்பும்”
எனும் எம் இடத்தில் 
“நான் அறிந்த ஜோதிட தகவல்களை மட்டுமே “ வழங்க விரும்புகிறேன் ..
காரணம் நேரத்தை நானும் வீண் அடிக்க விரும்பவில்லை ...
நான் சொல்ல வருவதை சொல்லும் போது 
கேட்டால் மட்டுமே ஒரு மாற்றம் தரும் அனுபவம் 
கிடைக்கும்..
இடம் தேதியை
முன்னிட்டு அறிவிக்கும் காரணம்
உங்களுக்கும் பல்வேறுபட்ட பணிசுமை இருக்கும்
அதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு வர தான் முன்னிட்ட அழைப்பு ஆகும்...
இடம் :- J.V.R.திருமண மண்டபம் 
நாராயணசாமி பிள்ளை சாலை 
பெரமனூர் 
நால் ரோடு அருகில்.
சேலம்
திருமண பொருத்தமும் ஜோதிடர்கள் பங்களிப்பும்
எனும் தலைப்பில் பாரம்பரிய ஜோதிடத்தில் நான் அறிந்த
எவராலும் மறுக்க முடியாத பொதுபடையான ஜோதிட விஷயங்களை பற்றிய ஒரு வகுப்பு அவசியம் இரண்டு நாட்கள் சேலத்தில் தங்க விரும்புவோர்கள் மட்டுமே வரவும் ...
இரு நாளும் 
இரு வேளை தேனீர் வசதி மதிய உணவு உட்பட மொத்த செலவு தொகை ரூ 500 மட்டுமே அனுமதி கட்டணம் .....
இந்த செலவும் கூட உங்களை ஜோதிடத்துறையில் 
விழிப்புணர்வை அடைய செய்யும் முதலீடு ஆகும்...
இதையும் கூட ஒரு ஜோதிட அனுபவம் பெற செய்யப்படும் அழைப்பு ஆகும்...
முன்பதிவு செய்ய]
சேலம் ஜோதிடர் மகேந்திரன் :- 9524239934 எனும் எண்களில்
அல்லது
என் செல் மற்றும் வாட்ஸ் அப் :9843469404 ஆகிய எண்ணிலும் 
முன்பதிவு செய்ய வேண்டுகிறேன்...
வாருங்கள் இனி ஒரு விதி செய்வோம்..
என்றும் ஜோதிட பணியில்
பெருந்துறையில் இருந்து 
Astro Senthil Kumar
9843469404