Sunday 17 December 2017
சந்திரனுக்கு சூர்யன் உங்களுக்கு எங்கு உள்ளது ??????
Friday 15 September 2017
ராகு கேது திருமணத்தடையா?????
ராகு கேது திருமண தடையா????
19ம் நூற்றாண்டின் ஜோதிட வல்லுனர்கள் துவக்கி வைத்ததே
7-8ல் ராகு கேது தோசம்...
அந்த
ஜோதிட பெருந்தகை
அனைவருக்கும் எனது ஒரே
கேள்வி...
2 அல்லது 7ல் இருக்கும்
சூர்யன்
அல்லது
8ல் மறைந்த சந்திரன் எல்லாம்
அந்த ஜாதகர்-ஜாதகி வாழ்க்கையில் பிரச்சினைகள் தரவில்லையா????
எம்மை பொறுத்தவரை இங்கே ஜோதிட உலகில்
ராகு-கேது ஜாதகம் என கூடி கும்மி
அடிப்பது எல்லாம் இடைப்பட்ட காலத்திலேயே வந்த
பட்டய படிப்புக்கு
மற்றும்
கல்லூரி படிப்பிற்காக
வந்த
ஜோதிட மாணவர்கள் தானே தவிர
பாரம்பரிய வழியை சரியாக கடைப்பிடித்து வரும் எந்தவொரு குறிப்பிட்ட ஜோதிடரும்
ராகு கேது வை கிரங்கள் ஆகவே பார்ப்பதும் இல்லை...
ஏழில் எட்டில் ராகு கேது போன்ற இரு கிரகங்கள் அமையப்பெற்ற எந்தவொரு குறிப்பிட்ட ஜாதகர் ஆகினும்
அவர்கள்
ஏழில் எட்டில்
சூர்யன்
சந்திரன்
சனி
நபர்களை மணக்கலாம்..
இதை மறுத்து பேசும் யார் ஆகினும் அவர்கள் முகநூலில் பேசாமல்
நேரடியாக எம் வாசல் வந்து பேசவும் உரிய பதில்கள் கொடுக்கப்படும்..
ராகு -கேது என்பது
தோசம் என்றாலும் ஏழு எட்டில் எது இருந்தாலும் அதற்கு அந்த ராகு-கேது வரனை இணைக்கலாம்...
பெருந்துறையில் இருந்து
Astro Senthil Kumar...
Thursday 14 September 2017
சுக்கிரன் ஜெயந்தி
கும்பத்தை குரு பார்க்கும் காலத்திலேயே வெள்ளி வாங்கவும் என்கிறது
கால ப்ரகாசிகை ஜோதிட சாஸ்திர நூல் சொல்கிறது...
தேய்பிறை தசமி திதியும்
பூசம் நட்சத்திரத்தில் சுக்கிர ஜெயந்தி விழா நடைபெறும்..
அந்த விழா ஆனது
15-08-2017ல்
ஆவணி 30ல்
வெள்ளிக்கிழமை அன்று
தசமி திதியில்
பூச நட்சத்திரத்தில்
சுக்கிரன் ஜெயந்தி விழா வருகிறது..
15-09-2017ல்
ஆவணி 30ல்
மாலை 5மணி முதல் 6மணிக்கு அல்லது
இரவு 8மணி முதல் 9மணிக்கு
அல்லது
மறுநாளில்
16-09-2017ல்
ஆவணி 31ல்
சனிக்கிழமை அன்று
காலை 10-30மணி முதல் மதியம் 1மணி வரை
இருக்கக்கூடிய சுப நேரத்தில்
சுக்கிரன் என சொல்லப்படும் வெள்ளி ஆபரணங்கள் வாங்கி அல்லது வெள்ளி நாணயங்கள் வாங்கி உங்கள் வீட்டில் பெட்டக அறையில் வைக்கும் போது உங்களுக்கு எதிர்காலத்தில் வளம் மிக்க ஒரு நிம்மதியான சொகுசுவான வாழ்க்கையை சுக்கிரன் பகவான் அருள்பாலிப்பார்...
மேலும் இந்நாளில்
நவக்கிரகக் கோயில்கள் அல்லது
சிவாலயங்களில் உள்ள நவகிரகங்கள் சென்று
சுக்கிரன் பகவானுக்கு வெள்ளை ஆடை அணிவித்து மற்றும்
மொச்சை தான்யம் வைத்து வெள்ளை மலர்கள் ஆகிய முல்லை மற்றும் மல்லிகை மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்ய சுக்கிரன் தோஷம் போக்கும் விலகி சகல செளபாக்யங்களை பெறலாம்
என சேலம் ஸ்ரீநிவாசன் பஞ்சாங்க வல்லுநர் திருவாளர் முராரி.V.நரநாராயாணன் அய்யா அவர்கள்
தன்னுடைய
பஞ்சாங்க ரஹஸ்யம் எனும்
நூலில்
குறிப்பிட்டுள்ளார்...
இதை
பொதுமக்கள் நலன் கருதி
வெளியீடு செய்வது
என்றும் ஜோதிட பணியில்
பெருந்துறையில் இருந்து
Astro Senthil Kumar
Wats App 9843469404
Sunday 14 May 2017
41 வயது வரை காக்க வைத்த குரு [ யோகர் ]
ஜோதிடத்தில் நீங்க அவ்வளவு உங்களுக்கு உங்க லைப் முடிஞ்சு போச்சு என சொல்லும் ஜோதிடர்களை நீங்கள் புறக்கணிக்க வேண்டும்..
வரும்
25-05-2017 அன்று திருமணம் எனும் வாழ்க்கையில் திருப்புமுனையை அடையும் 07-02-1977 காலை 4-55 நிமிடங்களுக்கு ஈரோட்டில்
பிறந்த எம் வாடிக்கையாளர் அவர்களின் வயது இன்று
40 வயது 4 மாதம் ஆகிறது..
பொதுவாக இரண்டாம்
இடத்தின் [ இவர் தனுசு 2க்குறிய சனி 8ல் ]
அதிபர் ஆகியவர் 8ல் மறையும் போதும் ..
அது பகை பெறும் போதும் ஒருவருக்கு காமம் எனும் விஷயம் சிறு வயதில் கிடைக்காது…..இவருக்கும் பொருந்து போனது..
பொதுவாக 5ல் ராகு 5ல்
குரு எனும் போது இங்கே புத்திர தோஷம் தருகிறது [ காமமே இல்லை இங்கே புத்திரம் எங்கே??]
அதே போல 11க்குறிய சுக்கிரன் இங்கே உச்சம் [ 11க்குறியவன் உச்சம் பெற இருதார யோகம்
அல்லது இரண்டாம் தார யோகம் ]
ராசி சந்தி என்பதும்
இவருக்கு பிரச்சனைகளை தந்தது
என் இடத்தில் இருப்பது
salem ics software ஆகும்..அது இவருக்கு காட்டும் ஸ்புடம் midile lamp[ ஆரம்ப சூர்ய
பிம்பம் ] எனும் போது
சந்திர ஸ்புடம்
150-06-01 ஆகும் .. [கன்னி ராசி]என் இடத்தில் இருப்பது
salem ics software ஆகும்..அது இவருக்கு காட்டும் ஸ்புடம் upper lamp[ மத்திய
சூர்ய பிம்பம் ] எனும் போது
சந்திர ஸ்புடம்
150-03-23 ஆகும்..[கன்னி ராசி]
இதே வேறு சில சாப்ட்வேரில்
கொடுக்கும் போது அங்கே 149-59-05 [சிம்ம ராசி]எனும்
சிலது 149-59-58 எனும் காட்டி [ சிம்ம ராசி] பல ஜோதிட மேதைகளை குழப்பம் செய்வதே இந்த
கணிப்பின் தனமை
[ நான் அடிப்படையில்
ஸ்புடகலை கணிதம் செய்தமையாலும் கொஞ்சம் ஏதோ ஜோதிட மதி நுட்பம் கொண்டதாலும் இவரை அடியேன்
கன்னி ராசி நபர் என்றே பாவித்து கணிதம் செய்து பலன் சொல்வேன் ]
இங்கே ஒரு கருத்தை
சொல்கிறேன் ..
ராசி சந்தி லக்ன சந்தி நட்சத்திர சந்தியில் பிறந்த ஜாதகர்களுக்கு
வாழ்க்கையில் கொஞ்சம் போராடி தான் மேலே வர இயலும்..சுக்கிரன் உச்சத்தில்
ஆதலால் ஜவுளிக்கு போனார்..பின் இவர் தனக்கு தன்
நண்பர்கள் சொன்ன் விதத்தில் LIC போனார் சரி.. இவர் அவர் வீட்டில் செல்லப்பிள்ளை…
ஆம் ஒரே பிள்ளை …இவரை சீராட்டி பால் ஊட்டி
வளர்த்த தாய் “கண்ணீர்”’’மல்கினார்..காரணம்.தன் மகனுக்கு திருமணம் இதுவரை கைகூடவில்லை எனும் வேதனை இவர் குடும்பம்
மட்டுமே இன்றி இவர் சமுதாயமே கவலை கொண்டது…சொன்னால் உங்களுக்கு
புரியாது..7ம் அதிபர் பகை
[ 8ல் சனி பகை]2ல் ஒரு அதிபர்
[2ல் சூர்யன் பகை]ஆனாலும் ஒருவர்
திருமணம் தாமதம் ஆகும் …சிலருக்கு நடக்காமல் கூட போகும்….;[முன்னோர் ஜென்ம கர்மவினை]
எல்லாம் காரணம் தான் ….
இதிலே ஒரு ஜோதிட
பாடம் எந்த ஜாதகத்தில் எல்லாம் இரண்டாம் அதிபர்
எட்டில் பகை பட்டு நிற்க்கிறாரோ அங்கே அந்த ஜாதகரின் வயதை இந்த வயதில் தான் திருமணம்
என அடித்து சொல்ல இயலாது…
கடகம் சிம்மம்
விருட்சிகம் தனுசு மகரம் ஆகிய லக்னத்திற்க்கு இது பொருந்தும்..
அதே போல குரு லக்னாதிபதி
ஆகினும் 5ம் பாவத்தில் அமரும் போது தாமதமான புத்திர விருத்தியை தரக்கூடியவர் ஆகிறார்..அதேபோல 7ம் அதிபர்
புதனுக்கு வீடு கொடுத்த அதிபர் சனி பகை பெறும்
போது மனைவி மற்றும் அவரால் கிடைக்கும் காமம் ஆகியவை கால தாமதம் செய்கிறார்..பொதுவாக 5ம் அதிபர்
செவ்வாய் நின்ற
வீட்டின் அதிபர் பகை பெற்றாலும் புத்திர விருத்தியை தாமதப்படுத்தி விடுகிறார்…
9ம் அதிபர் உடன்
10 அதிபர் கூடும்போது இங்கே தர்ம கர்மாபதி யோகம் தருகிறது..
11ல் இருந்த ராகு
மாந்தி உடன் இணைவு பெற்ற காரணத்தால் இங்கே ராகு திசை இவருக்கு ஆன்மீகப்பாதையை கொடுத்ததே
தவிர இல்லற வாழ்க்கையை தர இயலவில்லை..
பிறக்கும் போது
சூர்ய திசை 4 வருடம்
5 மாதம் 13 நாள்சந்திர திசை
10செவ்வாய் திசை
7
ராகு திசை வரும்
போது ஜாதகருக்கு 21 வயது
ராகு திசையில்
குரு புக்தியில் தேடி வந்த ஒரு வரன்..பையனுக்கு 24 வயதுதானே
ஆகிறது ..வசதியான ஒரே பையன் பெண் கிடைக்காமலா போய் விடும் என கொஞ்சம் பெற்றோர்கள் அசால்ட்டாக
விட வாழ்க்கையை புரட்டி போட்டு 24க்கு பதிலாக தற்போது 41ம் வயதில் இந்த ஜாதகருக்கு
திருமணம் உறுதி ஆகி உள்ளது…
இங்கே குரு கொடுப்பதை
எவராலும் தடுக்க இயலாது..ஆம்
இந்த ஜாதகர்க்கு
குருதிசையில் குரு புக்தியில் புதன் அந்திரம் நாளில்வரும் வைகாசி
15ல் திருமணம் நடக்கிறது
[குறிப்பு :- இது
ஜாதகர் ஒப்புதல் உடன் தான் போஸ்ட் செய்யப்படுகிறது என்பதால் சில சில்வண்டுகள் கொஞ்சம்
அடக்கி வாசிக்கவும்]
ஒவ்வொரு நபருக்கும்
அவர்கள் கர்மவினை படியே வாழ்க்கை அமையும் ..
ஏதோ கொஞ்சம் ஜோதிடம்
அறிந்தோம் என சிலரை
“உன் வாழ்க்கை
அவ்வளவு தான்”
“நீ அவுட் “ என
விமர்சனம் செய்வதை முதலில்வகுப்பறை ஜோதிடர்கள்
கொஞ்சம் குறைத்து கொள்வது நல்லது..பெருந்துறையில்
இருந்து
Astro Senthil KumarWats App 9843469404
Wednesday 19 April 2017
K.P.ஜோதிடம் ஒரு பாரம்பரியமே
K.P.ஜோதிடம் ஒரு பாரம்பரிய ஜோதிடமே......
ஜோதிடத்துறை
இதில் பல்வேறுபட்ட ஜோதிடநிலை
பாரம்பரியம்
அதில் வாக்கியம் மற்றும் திருக்கணிதம் என இரண்டு முறைகள்
அதுபோக இப்போது
KP
KB மற்றும்
சாரஜோதிடம்
பஞ்சபட்ஷியை கொண்டு
ஜாமக்கோள் கொண்டு
நிமித்தங்கள் கொண்டு என்று பல்வேறு ஆசான்கள் தனக்கென ஒரு பாதை இட்டு அதில் தனக்கும் கீழ் சீடர்களை ஏற்படுத்தி கொண்டு ஒரு மாறுப்பட்ட விதமாக
"தன்னை மட்டுமே "முன்னிலை படுத்தி செல்கிறார்கள் !!!!!
சமீபத்தில் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கீடு செய்து K.P.ஜோதிடத்தால் எப்படி கேள்வியாளர் வரும்போது நிகழும் மற்றும் கிரகங்கள் இருக்கும் நிலையை கண்டு பலாபலனை அறிவதெப்படி என்ற கருத்துக்களை உள்வாங்கும் முயற்சியில் இருக்கிறேன் !!!!!
அப்படி படிக்கும்போது அதில் சொல்லபட்ட விஷயங்களை எல்லாம் முன்னரே ஶ்ரீகுமாரசாமி சுவாமிகள் இயற்றிய
"குமாரசாமியம் "ஜோதிடநூலில் எழுதப்பட்ட விஷயங்களில் 54 படலத்தில் ஒரு படலம் 47வதாக வரும்
"சிந்தனாபல படலம் " (சிந்தனை நேரத்தில் நிகழும் கிரகநிலைகள் )என்பதில் 18 ஆண்டுகள் ஆழ்ந்த ஆராய்ச்சி காரணமாக இருக்கவும் நாம ரெடி கிருஷ்ணமூர்த்தி பத்ததி எனும் KP System உருவாகி இருக்கிறது என்பது நன்றாக புலப்பட்டது !!
அதைபற்றி கொஞ்சம் குமாரசாமியம் நூலில் என்னதான் இருக்கிறது என்பதை கொஞ்சம் விவரிக்க இப்பதிவு !!!!
"சிந்தனையுற் றவனுதயம் செடத்துதய மாயத்
தினகிரகர் முற்கிரகத் திரத்தினில்வைத் திதனால் எந்தவினம் எந்தவகை எப்பலம் சொல்லா விதையமுள ததற்குதய மேடாதி எதுவோ வந்தவிடத் தும் இறைமே அவ்விடத்தும் உளாக ரகப்பெயரில் அதிபலப்பேர் அறைகுவரா லசியம் வந்தவனுக்குக் குயதமாக பத்தலமாய் விழித்தன் மற்றவரா இறைபெலக்கின் மரணமின்மற் றதற்கே """"
-------++குமாரசாமியம் பாடல் எண் 389 ......
பொருள் விளக்கம் ;-
கேள்வியாளர் குறிப்பிட்ட சிந்தனையாக ஜோதிடரை காண வந்த நேரத்தில் கண்ட உதயராசி லக்னமாக கொண்டு அன்றைய தினத்தின் அதிபதி தாற்கால கிரகமாக வைத்து (ஜெனன கால ) அந்த ஜாதகர் முதலாக குடும்பத்துக்கு எல்லாம் பலன்களை சொல்லபடுவன ஆதலால் அந்த ஜாதக கேள்வியாளர் நினைத்து வந்த சிந்தனை பற்றி பலாபலனை சொல்ல வேண்டில் உதய லக்னம் மேடாதிக்கு எவ்விடம் என்று அறிந்து உதய லக்னாதிபதி இருந்த இடம் எவ்விடத்தில் என்று அறிந்து இந்த இடங்களுக்கு உண்டாகும் காரகத்தன்மை வைத்து பலமுள்ள இடங்களுக்கு காரக பெயர்களை கொண்டு பலனை அறிந்து சொல்லுதல் வேண்டும் பிணியுடன் இருப்போர் பற்றிய கேள்வியாகில் உதய பாவ கிரக ராசியாகவும் அந்த உதயத்தை சுபர்கள் நோக்கவும் நோயில் இருந்து மீள்வார் என்ற பலாபலனை சொல்லி அனுப்பலாம் !!!
மாறாக சுபகிரகம் சுபராசி உதயமாகி பாவர்கள் பார்வைக்கு சிக்கினால் மாரகம் எனும் மரணமே உண்டு என அறியலாம். ...அதற்கு அடுத்தபடியான 390 வது பாடலில் இன்னும் அற்புதமான கருத்துக்களை கொண்டதாக அமைந்துள்ளது !!!
அது
"தற்கமொரு வர்க்கொருவர் உற்றிடில்வெல் பராகில் சாற்றெனுமுன் மனையோனி தங்களில் சத்துருவாய் நிற்குமிதற் கடலுள நாளொரு பாத முதனேர் நெருப்பளவாய் எலிமுயறோ லரவிவை நேர்க்குதளாம் சொற்குளவத் திசைக்குளதும் பஞ்சபட்ஷிக் குளதும் சொற்றிடு நாமத்துளதும் சுடர் முதலெண் டிசைப்போர் மற்குளது மற்றதுவும் கண்டுறைத்திடு வரிதுவெவ் வளவு நாள்கெனிலதிபர்க் குளது வகுப்பதுவே """""
------------### குமாரசாமியம் பாடல் எண் 390
இச்செய்யுள் சொல்வது ;-
ஒரு விஷயத்துக்கு ஜோதிடரிடம்
வெற்றி கிடைக்குமா ?***
தோல்வி கிடைக்குமா ??**என்று கேள்வியாளர் கேட்கும்போது
கிரகங்களின் யோனியாக
1)கீழ்திசை (நேர்கிழக்கு இந்திர மூலை) கருடனாகவும்
2)தென்கிழக்கு (அக்னிமூலை ) பூனையாகவும்
3) தெற்கு (யமமூலை ) சிங்கமாகவும்
4) தென்மேற்கு (நிருதி மூலை )நாயாகவும்
5)மேற்கு (வருணமூலை ) சர்ப்பம் எனும் பாம்பாகவும்
6) வடமேற்கு (வாயுமூலை ) எலியாகவும்
7) வடக்கு (குபேரமூலை ) யானையாகவும்
8) வடகிழக்கு (ஈசான்ய மூலை ) முயல் ஆகவும்
திசைகளுக்கு யோனியை நிர்ணயம் செய்து அந்த திசைக்கு இருக்கும் பகை யோனியை கண்டு வெற்றியை வகுத்து சொல்லலாம் என்கிறது பாடல்
அதன்படி
சித்திரை முதல் ஆனி வரை எலி பூனையை வென்று விடும் !!!
ஆடி முதல் புரட்டாசி வரை முயல் நாயை வென்று விடும் !!
ஐப்பசி முதல் மார்கழி வரை யானை சிங்கத்தை வென்று விடும் !!!!
தை முதல் பங்குனி வரை சர்ப்பம் கருடனை வென்று விடும் இப்படி பலம்வாய்ந்த மிருகங்களை பலம் குறைந்த மிருகங்கள் வெல்லும் என்பதை அந்த ஜாதகர் வருகைப் பொருத்து அமைந்த உதயலக்னம் கொண்டும் பஞ்சபட்ஷி பலனும்
நாம நட்சத்திரம் பலனும் (கோட்சாரத்தில் சந்திரன்
நடப்பு திசை புக்தி அறிந்து இவைகள் முதலானவைக்கு தக்கதொரு பலாபலனை சொல்ல பலன் தப்பாது நடக்கும் என்பதும் அது எத்தனை நாட்களில் என்பதை பலவானுக்கு சொன்ன விதம் (வேறு ஒரு பாடலில் ) கணித்து சொல்லவும் என்கிறது குமாரசாமியம் ஜோதிடநூல் .......
படலம் எனும் தொகுதி 54
செய்யுள் மொத்தமாக 425 கொண்டது குமாரசாமியம்
வெறும் இரண்டு பாடலை எடுத்து பார்த்தாலே இவ்வளவு விஷயங்களை பிடிக்க முடிகிறது என்றால் மொத்தமாக இருக்கும் செய்யுள் உள்ளே எவ்வளவு விஷயங்கள் பொதிந்து இருக்கிறது என்பதை வரும்கால ஜோதிடராக திகழப்போகும் ஜோதிட ஆர்வலர்கள் எல்லாம் சிந்தனை செய்து பாருங்கள் !!!
மிக அற்புதமான விஷயங்களை எல்லாம் சின்ன சின்ன செய்யுள் உள்ளே வைத்து இருக்கிறார்கள் காலஞ்சென்ற சித்தர்கள் !!!
சிறந்த ஜோதிட நூல் ஆன இந்த குமாரசாமியம் ஜோதிடத்துறைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும் .....
(எங்க ஸார் கிளம்பீட்டிங்க ஓ குமாரசாமியம் வாங்கவா ம்ம்ம்ம் வாங்குங்க வாங்குங்க அற்புதமாக வாசியுங்கள் )
பெருந்துறையில் இருந்து
*Astro Senthil Kumar*
Wats App
9843469404
Monday 10 April 2017
ஹேவிளம்பி ஆண்டில் தீராத நோயை தீர்க்கும் உக்ர யோகங்கள் [ 2017-2018]
நோயை
தீர்க்க “உத்ரயோகங்கள்”
அன்பு
ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்
இந்தியவேத
ஜோதிடம் பல பிரிவுகளை கொண்ட அமைப்பு ஆகும்!!!
நான்கு
வேதத்தில் உட்பிரிவாக “கல்பம்” [மருத்துவம்] “ஜோதிஷ்” [ஜோதிடம்] கொண்ட தளம் நம் வேதங்கள்
நோய்க்கு
தீர்வு ஜோதிடத்தில் பண்டய காலத்திலேயே எழுதப்பட்டு இருக்கிறது என்பதை பற்றிய பதிவு இது!!
[இன்று பல்கலைகழகத்தில் எடுக்கும் மருத்துவ ஜோதிட படிப்பில் இவை இருக்கிறதா என்பது நான் அறியவில்லை இருந்தால் சந்தோசமே இல்லையெனில் இனி இதையும் சேர்த்து படியுங்கள் ]
கடந்த
வாரத்தில் “காலப்ரகாசிகை
எனும்
ஜோதிடநூலில் இருந்த சில நுட்பங்களை எம்முடைய கோணத்தில்
பதியப்பட்ட்து அதன்
சாராம்சம்
“நீண்டகாலமாக
நோய்வாய்ப்பட்டு சிகிச்சைகள் பல எடுத்தும் பயனில்லை என்று சொல்வோர்களை தான்
இப்போதெல்லாம் அதிகமாக காண முடிகிறது !!!!!
மருந்துகள் சரியில்லையா ????*?*
மருத்துவர் சரியில்லையா ???****
நோய் தீரும் எனும் நம்பிக்கை இல்லாமல் போகும் காரணம்
தான் என்ன எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று கவலையோடு இருப்போர்களுக்கு
கொஞ்சம் ஆறுதல் தரும் பதிவு இது !!!!
(நாள் செய்யாதை
நல்லாரும் செய்யார் )
காலப்ரகாசிகை எனும் அற்புதமான நூலை புரட்டிய போது
சிக்கிய தகவல்களை கொஞ்சம் நீங்களும் வாசியுங்கள் !!!!!
"உக்ர யோகங்கள் "
(தீரா
நோய் தீர சிகிச்சைக்கு உகந்த நாட்கள் )
திருதியை அல்லது அஷ்டமி உடன் கூடிய ரோஹிணி நட்சத்திரம்
நாள் !!!!
சதுர்த்தி அல்லது அஷ்டமி உடன் கூடிய உத்திர நட்சத்திரம்
நாள்
பஞ்சமி திதியும் திருவோணம் கூடிய நாள்
சஷ்டி திதியுடன் மிருகசீரிடம் நட்சத்திரம் கூடிய நாள்
சப்தமி திதியுடன் ரேவதி நட்சத்திரம் கூடிய நாள்
நவமி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடிய நாள்
தசமி திதியுடன் பூசம் நட்சத்திரம் கூடிய நாள்
திருதியை அல்லது துவாதசி திதியுடன் அனுஷம் நட்சத்திரம்
கூடிய நாள்
ஏகாதசி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் அல்லது மகம்
நட்சத்திரம் கூடிய நாள்
தசமி திதியுடன் ரோஹிணி நட்சத்திரம் கூடிய நாள்
திரயோதசி திதியுடன் உத்திரம் நட்சத்திரம் கூடிய நாள்
போன்றவை "உக்ர யோகங்கள் "என்ற பெயரில்
அழைக்கப்படுகிறது !!!
"உக்ர
யோகங்கள் "நாளில் தீர்க்க முடியாத நாள்பட்ட வியாதிகளுக்கு சிகிச்சைகள்
எடுத்தால்
"நோய்
தீரும் "என்கிறது
"காலப்ரகாசிகை
"ஜோதிட நூல்
எதை
செய்தாலும் முதலில் அதன்மேல் நம்பிக்கையை வைத்து முயற்சி செய்யுங்கள் !!!
"நோயற்ற
வாழ்வே குறைவற்ற செல்வம் """
எல்லோரும் இன்புற்று இருக்க !!!!!!
எல்லாம்
வல்ல "தன்வந்திரி பகவான் "அருள்புரியட்டும் !!!!!!” “”
திருக்கணித ஜோதிடம் எனும்
முகநூல் பேஜ்ஜில் ஒரு வாரத்தில் வாசித்தோர்கள் எண்ணிக்கை 15,000க்கும் மேலே அதை வாசித்த நண்பர்கள் தொடர்ந்து பதிவை பாராட்டியது இல்லாமல்
வரும் “மன்மத ஆண்டில் “ (2015-2016)பின்னர்துன்முகி ஆண்டில் (2016-2017)இனி வரும்ஹேவிளம்பி (2017-2018)க்கும் ஆக இந்த பதிவு வாசித்தால் மட்டும் போதாது கொஞ்சம் கருணையுடன் மற்றவர்களுக்கு சென்றடைய ஷேர் செய்யுங்கள்..
இந்த
தீராதநோய்க்கு அறுவை சிகிச்சை போன்றவை செய்ய உகந்த நாட்களை பட்டியல் செய்யுங்கள்
என தொடர்ந்து கோரியதாலும் ஜோதிடத்தை வைத்து வாழும் நம்மால் மக்களுக்கு உதவ
வேண்டும் எனும் எண்ணத்துடன் வரும் ஆண்டில் மருத்துவர்கள் “மிகவும்
முற்றியநோய் அறுவை சிகிச்சை செய்தாலும் காப்பாற்ற இயலாது “என்று
கைவிடப்பட்ட நோயாளிகள் யாரேனும் இந்த “உக்ரயோகநாளில்”
தக்கதொரு அறுவை சிகிச்சை செய்து “உயிர்
மீண்டார்கள்”என்றால் அதை பின்னிட்டு இங்கே தகவல்கள்
செய்யுங்கள் …இப்பதிவின் நோக்கமே “ஜோதிடத்தில்
இல்லாதது ஒன்றுமே இல்லை “என்பதே !!!
வரும் ஹேவிளம்பி
[ 2017 -2018 ] ஆண்டு தீராத நோய்க்கு சிகிச்சைகள் எடுத்து நோய்
தீர்த்து வாழ சில நாட்கள் எம்முடைய தேடலில் சிக்கியது அதன் பட்டியல் பின்வருமாறு::----
மருத்துவர் சரியில்லையா ???****
நோய் தீரும் எனும் நம்பிக்கை இல்லாமல் போகும் காரணம் தான் என்ன எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று கவலையோடு இருப்போர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தரும் பதிவு இது !!!!
(நாள் செய்யாதை நல்லாரும் செய்யார் )
காலப்ரகாசிகை எனும் அற்புதமான நூலை புரட்டிய போது சிக்கிய தகவல்களை கொஞ்சம் நீங்களும் வாசியுங்கள் !!!!!
(தீரா நோய் தீர சிகிச்சைக்கு உகந்த நாட்கள் )
"உக்ர யோகங்கள் "நாளில் தீர்க்க முடியாத நாள்பட்ட வியாதிகளுக்கு சிகிச்சைகள் எடுத்தால்
"நோய் தீரும் "என்கிறது
"காலப்ரகாசிகை "ஜோதிட நூல்
எதை செய்தாலும் முதலில் அதன்மேல் நம்பிக்கையை வைத்து முயற்சி செய்யுங்கள் !!!
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் """
எல்லாம் வல்ல "தன்வந்திரி பகவான் "அருள்புரியட்டும் !!!!!!” “”