செவ்வாய்க்கு -அங்காரகன் - ஆரன் -வக்கிரன் - மஹீஜன் - ருத்ரன் - குரூரதிருக் - எனும் மாற்று பெயருண்டு
Monday 24 February 2014
Sunday 23 February 2014
உங்க ஜாதகத்தில் “பத்தில்” என்ன இருக்கு ?
ஸூரியன் பத்தில் நிற்க தந்தை தேடிய சொத்துக்கள் அடைபவனாகவும் மன்னர் சேவை [அரசு வேலை] உடையவனாகவும் எடுத்த கார்யம் முடிப்பவனாகவும் நுட்பமாய் வெற்றியடைபவனாகவும் இருப்பான் .ஆனால் இவர் தந்தை “பாவத்தை செய்து சொத்து சேர்த்தவராக இருப்பார்”
ஸந்திரன் பத்தில் இருக்க சிறந்த வீடு உயர்ந்த வாழ்வு தீயசெயலுக்கு செல்லாமல் கபநோய் கொண்டவராகவும் .கதை காவியம் கவிதையில் புலமையில் ஈடுபாடு கொண்டவராகவும், மாதுர்வழி கர்மம் உடையவராகவும் “நற்க்குலத்தில் பிறந்தவராகவும் இருப்பார்”
செவ்வாய் பத்தில் அமைய ஜாதகர் அழகன் , எதிரியை வெல்பவர்,சாமார்த்திய சாலி, உலகப்பற்றுதல் நீக்கி “யாகம் யக்ஞம் ஹோமம்”முதலியவற்றை செய்து தெய்வ குற்றம் பெற்று நெருப்பாலும் ஆயுததாலும் பாதிப்பை அடைபவனாகவும் இருப்பார்
புதன் பத்தில் அமைய பெற்றவர் வித்தை மதி நுட்பம் தர்ம சிந்தனை நல்லொழுக்கம் பொறியியல் தொழில் நுட்பம் ஆகிய பலன்களை அடைபவராக இருப்பார்
குரு பத்தில் நிற்க ஆபரண சேர்க்கை பிரியன் நாற்கால் ஜீவனராசிகள் அதிகம் பெற்றவர் அதிக சுகமும் உள்ளத்தில் அன்பு நிறைந்தவராகவும் கணித நூலில் வல்லவனாகவும் இருப்பார்
சுக்கிரன் பத்தில் இருக்க ஜாதகர் ஆட்சியாளரக்கு சமமான வாழ்வும் நினைத்த கார்யத்தை “சூட்சுமத்தால் வெல்பவராகவும்” சகல செளபாக்கியம் அடைந்தவராகவும் சிவனின் அருளுக்கு பாத்திரமானவராகவும் இருப்பார்`
சனி பத்தில் அமைய பெற்றவர் பிறருடைய ஆதரவுடன் தொழில் அமைப்பவராகவும் “தீயோர் சேர்க்கையால் அவதி” அடைபவராகவும் அடிக்கடி தொழில் முடக்கம் அடைபவராகவும் “கால் முடக்கம்” அடைபவராகவும் இருப்பார்
இவைகள் அனைத்தும் கிரஹங்களின் பாதசாரம் சேர்க்கை பார்வைக்கு ஏற்ப்ப மாறுபாடு சிலவற்றில் வரும் அனைத்து “ஜாதகத்திற்கும்”இது பொருந்தாது என்பதை கவனத்தில் எடுத்து கொள்ளவும்
என்றும் ஜோதிட பணியில்
பெருந்துறை ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்
வெட்டுப்பட்டு இறக்கும் நிலை
“அரவுசுன் சேயிந்த மூவர் ஒன்றாய்ப் பவர் அங்கிசத்தேவரவினுமே புகர் எட்டோனைக் கூடி மருவுகினும்இரவிதனத்தினும் சேய்மதி ஈரைந்து இருப்பினும் தான் கரவினில் வெட்டுண்டு அவன் உயிர் மாயும் என் காதலியே”
என சொல்லி இருப்பது “யவன காவியம்”
ராகு-சனி-செவ்வாய் மூவரும் கூடி பாவகிரஹ நவாம்சத்தில் இருக்க “சுக்கிரன்” எட்டுக்குடையவனை கூடி இருந்தாலும் இரண்டாம் இடத்தில் “சூரியன்” பத்தில் “சந்திரன்” செவ்வாய் இருந்தாலும் அந்த ஜாதகன் கள்ள உறவு மற்றும் “திருட்டு” சம்பந்தமான பிரட்சனையால் உடலில் வெட்டு பட்டு இறப்பான் என்பதே பாடலின் பொருள்
Monday 10 February 2014
“சகட யோகம்” யோகம் தருமா?
தேவகுரு வியாழன் நின்ற ராசிக்கு 6,8,12 -ல் சந்திரன் நிற்க அது சகடயோகம்.
சகடம் என்பது சக்கரம் ஆகும். சக்கரம் போல் நிலையில்லாத ஏற்ற தாழ்வு ஏற்ப்படுத்தும் ,படிபடியாக உயர்ந்து “திடீர் வீழ்ச்சியை” சந்திக்கும் சகடயோக ஜாதகர்ளுக்கு வாடிக்கையே!!
சகட யோக ஜாதகத்தில் சந்திரன் கடகத்தில் ஆட்சியிலும், ரிஷபத்தில் உச்சத்திலும், குருவின் வீடான தனுசு, மீனத்திலும் இருக்க பெற்ற ஜாதகர்களுக்கு தீமைகள் விலகி “நன்மைகள்” ஏற்ப்படும்,
“நறுமணம் தனுமீன் கன்னி நண்டுடன் எருது தண்டு, திறமுடன் சசியே நிற்கில் தீர்க்கமாம் சகடபின்னம்”
பொருள்:- சந்திரன் தனுசு.மீனம். கன்னி. கடகம். ரிஷபம்.மிதுனம். ஆகிய ராசிகளில் இருந்து “சகட யோகமாயின்” தீமைகள் குறைந்து நன்மைகள் ஏற்றப்படும் என்பதே பாடலின் பொருள்,
ஜோதிடம் என்றால் என்ன?
வேதங்கள் நான்கு வகைப்படும் அவை:- ரிக் ,யஜுர்,சாம, அதர்வண வேதங்கள்!!
1} ரிக் வேதம்:- இது உலக சிருஷ்டி முதல் மனித இயல்பு வரை உள்ள எல்லா ரகசியங்களையும் விளக்கமாகவும் ,உதாரணங்களுடனும் ,சீக்கிரம் புரிந்து கொள்ளும் விதமும் ஸ்படமாக எடுத்துரைக்கிறது!!
2} யஜுர் வேதம்:- மனிதன் தன் திருப்திக்காகவும், வாழ்வியலின் தர்மத்தை கடைபிடிக்கவும் உபயோகமான வழியில் தன் நித்திய கர்மாக்களையும் , ஸரெளத, ஸ்மார்த்த அனுஷ்டானங்களையும் அவைகளை செய்யும் முறையும் எடுத்துரைக்கிறது!!
3 } சாம வேதம்:- பக்தி மற்றும் சங்கீதமயம் ஆனது!!இதிலும் அதிகமாக ரிக்வேதத்தின் அடிப்படையிலேயே கையாளப்படுகிறது!!ஸ்வரம் தான் இதன் பிரதானம்.இது பெரும்பாலும் பிராத்தனை ரூபத்தில் உள்ளது!!
4 } அதர்வண வேதம்:- சர்வ கஷ்ட நிவாரண ,தோஷ பரிஹார மந்திரங்களை உள்ளடங்கியது!!
ஒவ்வொரு வேதத்திலும் ஸம்ஹிதை, சாகை, ஆரண்யம், பிராமணம் மற்றும் உபநிஷத் அடங்கியது!!
ஒவ்வொரு வேதத்திலும் ஒவ்வொரு காண்டமும் ஒவ்வொரு ரிஷிகளும் எடுத்துரைப்பதால் நித்திய பாரணத்திலும் ஒவ்வொரு காண்டத்திலும் & மந்திரத்திலும் ஒருரிஷியை குறிப்பிட்டுள்ளார்கள்
மேலை நாட்டை சேர்ந்த இந்தியன் தன் நவீன ஆராய்ச்சியில் ஈடுபட்டதன் காரணமாய் நமது “வேதம் சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது என்பதை ஆங்கிலேயனும் ஒப்புக்கொள்கிறான். அதில் நாம் ஜீவித்திருக்கும் இந்த யுகத்தை “கலியுகம்” என்று பெயர்,
இந்த வேதத்திற்க்கு ஆறு உறுப்புகள் உள்ளது!! அவைகள்:-
1} சிஷை : [படிப்பியல் ] இதில் வேதம், வேதாங்கம், சாஸ்த்திரம்,விஞ்ஞானம், தர்க்கம்,மீமாம்சை.அரசியல், மனுநீதி போன்றது அடக்கம்!!
2 } கல்பம்: இது மந்திரபிரயோகம் ஆகும்.
3 } நிருக்தம்: இது [பலபாஷையை அறிவது] மொழியியல் ஆகும்
4 } வியாகரணம்:- இது இலக்கண முறையை சார்ந்தது ஆகும்
5 } சந்தஸ்: அலங்காரம் [ பாஷையின் நடை] நாட்டியம் போன்றது ஆகும்!!
6 } ஜோதிஷம்: [ஜோதிடம்] விண்வெளியில் ஆய்வை அறிவது ஆகும்!!!
“சப்த சாஸ்திரம் முகம், ஜ்யோதிஷம் சஷுஷி சீரோத்ர முக்தம் நிருக்தம்.கல்பஹகரெள, யாதுரஸ்ய வேதஸ்ய, ஸாநாஸிகா, பாதபத்ம த்வ்யச்சந்த ஆத்யெள புதைஹி” என 1200 ஆண்டுகளுக்கு முன்னர் கணிதமேதை “பாஸ்கராசார்யான்” குறிப்பிட்டு உள்ளார், அதன் பொருள்:--
வேத புருஷனின் முகம் இலக்கணம், கண்கள் “ஜோதிஷம்”, செவிகள் நிருக்தம், கைகள் கல்பம், சிட்சை [படிப்பு] அவனது மூக்கு, சந்தஸ் அவன் இரண்டு கால்கள் [பாதம்] ஆகும், மனிதனுக்கு கண்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு தூரம் “ஜோதிஷம்” முக்கியம், “ஜோதிஷம்” எவ்வளவு அவசியம் ஆனது என்பதை எடுதுரைக்கிறது!!
வேதத்தின் கண்கள் ஆன “ஜோதிஷ” சாஸ்த்திரம் ஆனது அண்டத்தில் [ விண்வெளி-space] மற்றும் அதன் பிரகாசம் [light] இவற்றின் ரசகியத்தை எடுத்துரைப்பது ஆகும்!!
சூரியனை சுற்றி இருக்கும் கிரஹங்கள் மற்றும் நட்சத்திர மண்டலங்களும் மனிதனுக்கு “தனிப்பட்ட வாழ்வியலினின் மாறுதலை நுணுக்கங்களை கண்டு எடுத்துரைப்பதே “ஜோதிஷம்” ஆகும்!!
இது நம்முனோர்கள் கண்ணை மூடி தவம் புரிந்து தன் “யோக திருஷ்டியால்” பெற்று அதை நமக்கு எழுதிவைத்து விட்டு போன பொக்கிஷம் என்றால் மிகையல்ல!!
Subscribe to:
Posts (Atom)