Friday 10 April 2020

ஜோதிட பயிற்சி தளம் [பகுதி-1]

ஜோதிட பயிற்சி தளம் பகுதி -1
அனைவருக்கும் வணக்கம் நான் பெருந்துறையில் இருந்து Ask எனும்
Astro Senthil Kumar எழுதுகிறேன்.

அடிப்படையில் ஜோதிடத்தில் ஒன்றும் தெரியாது என்பவர்களுக்கு என இந்த தளம் 
https://www.youtube.com/channel/UCgkT8E50F8EbZfT0yOIT45A?view_as=subscriber
யூடியூப்பில் எனது சேனல் லிங்கில் உங்களுக்கு என ஜோதிட பதிவுகளை பதிகிறேன்.. அதையும் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்...


இப்பொழுது ஜோதிடவியலில் அடித்தளம் என்பது கால புருஷ தத்துவம் என அழைக்கிறோம்.
காலம் என்பது கடவுள் ஜாதகம் பாவித்து ஒரு ஜாதகத்தை உருவாக்கியுள்ளனர் மேசம் முதல் இலக்கணத்தையே கால புருஷனின் லக்னமாக வைத்து உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் இணைத்து ஒரு முறைப்படுத்தி வைத்துள்ளனர்.இது நிலையான தன்மை உடையவை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வதற்கு ஏதுவாக அமைத்துள்ளனர்.

 காலகட்டத்தில் உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் எவ்வாறு எந்த அடிப்படையில் எனப் பிரித்துக் கொடுத்துள்ளனர் என்பதை அறிவோம்.

 முதன்முதலில் உலகிலுள்ள மரம் செடி கொடி மலைகள் நிலம் கட்டிடம் உயிரினங்கள் ஊர்வன பறப்பன தாழ்வான நடப்பன மற்றும் ஜடப் பொருள்கள் இவர்கள் காலச்சக்கரத்தில் எனக்கு உள்ளனர்.

 1] மரம் செடி கொடி மலை ஜடப்பொருள் கட்டிடம் இவை நிலையாக இருப்பவை ஆதலால் இவைகள் ஸ்திரத் தன்மை கொண்டது 

2]ஊர்வன பரப்பன தாழ்வான இவைகள் ஓரிடத்தில் நிலையாக இருப்பதில்லை ஆகவே இவைகள் தன்மை கொண்டவை சத்தமிடும் என்றால் அசையும் பொருள்  

3]பறப்பன பறவைகள் நடந்துசெல்லும் பறந்து செல்லும் தன்மை உடையவை இவைகளெல்லாம் உபய தன்மைகொண்ட என வகுத்துள்ளனர்.

 இதனடிப்படையில் சரம் ஸ்திரம் உபயம் என பிரித்துக் கொடுத்துள்ளனர் மூன்று பிரிவாக இதைத்தொடர்ந்து உலகிலுள்ள அனைத்து விஷயங்களையும் வளரும் தன்மை நிலையான தன்மை நிலையற்ற தன்மை என வகுத்துள்ளனர்..

 அறிவு வளர்ச்சி உடைய உயிரினங்களை சர ராசியிலும் நிலையான புத்தியுடைய உயிரினங்களை ஸ்திர ராசிகள் நிலையற்ற புத்தியுடைய உயிரினங்களை உபயோகித்துள்ளனர் தாவரங்களையும் உயிரினங்களையும் மூன்று பிரிவாக பிரித்துள்ளனர்..

 ஆண்மை தன்மை கொண்ட உயிரினம் தாவர தன்மை உடையவை என்றும் 

பெண்மை தன்மை கொண்ட உயிரினம் தாவரம் தன்மை உடையவை என்றும் 

அலித்தன்மை கொண்ட உயிரினம் தாவரம் உபய தன்மை உடையவை என்றும் வகுத்துள்ளனர்..


 சரம் சிரம் உபயம் வைத்து காலத்தை வகுத்துள்ளனர் சர ராசிகள் காலைப்பொழுது ஸ்திர ராசிகள் நண்பர்களையும் உபய ராசிகள் உபய ராசிகள் இரவுப்பொழுது எம் குறுகிய மனம் வகுத்துள்ளனர்..

 சரம் ஸ்திரம் உபயம் இவைகளை வைத்து பருவங்களையும் வகுத்துள்ளனர்..

 ராசிகள் பருவத்தின் ஆரம்ப நிலையும் ஸ்திர ராசிகள் பருவ மத்திய நிலையையும் உபய ராசிகள் அறிவும் பருவம் முடிந்த நிலையையும் காட்டுகின்றன..

 வெயில் மழை காற்று குளிர் காலம் சர ராசிகளில் ஆரம்பிக்கின்றன சித்திரை ஆடி ஐப்பசி தை மாதம் அதாவது மேஷம் கடகம் துலாம் மகரம் ஆகிய ராசிகளில் சூரியன் சஞ்சாரம் செய்யும்போது இந்த காற்று மழையை வகுத்துள்ளனர்..

இதேபோல் பலதரப்பட்ட சம்பவங்களை சித்தரித்துள்ளனர் 

அடுத்தபடியாக பஞ்சபூதங்களை வரிசைப்படுத்தி 

ஒன்று ஆகாயம் 

இரண்டு நெருப்பு 

மூன்று பூமி 

நான்கு காற்று

ஐந்து நீர் என வகுத்துள்ளனர்..

 ஆகாயத்திலிருந்து அனைத்து செயல்களும் நட்சத்திரத்தின் வாயிலாக தொடர்ந்து இயங்குகின்றன ஓரிடத்தில் ஒரு இயக்கம் நடைபெற வேண்டுமானால் அங்கே வெளிச்சம் தேவை வெளிச்சம் என்றால் அங்கு இருந்துதான் வெப்பம் என்ற வெளிச்சத்தை ஏற்படுத்தும்..

 ஓரிடத்தில் ஒரு இயக்கம் தேவை என்றால் அங்கு நிலைத்தன்மை தேவை அதற்கு புவியீர்ப்பு சக்தி தேவை அந்த ஈர்ப்பு சக்தியை நாம் பூமி என்கிறோம்..

இவ்விரண்டும் இருந்துவிட்டால் இங்கு தாவரங்களும் உயிரினங்களும் வாழ துவங்கிவிடும்..

 இவைகள் உயிர் வாழ உயிர்நாடியாக காற்றும் தேவைப்படுகிறது இங்கு தாவரங்களும் உயிரினங்களும் தோன்றியவுடன் அவைகளுக்கு நீர் இருந்தால் தான் வாழ இயலும் என பிரித்தனர்..

 ஆனால் நாம் ஜோதிடத்தில் ஆகாயத்தை நட்சத்திரத்தை கொடுத்துள்ளதால் ஆகாயத்தை வெளிக்காட்டுவதில்லை இதை நமது முன்னோர்கள் சாரம் பார்த்து பலன் சொல்ல வேண்டும் என வகுத்துள்ளனர்..

 ஜோதிடத்தில் நெருப்பு பூமி காற்று நீர் ராசிகள் என நான்கு வகையாகப் பிரித்து ராசி கட்டத்தை வரையும்போது அதை ஆகாய மார்க்கமாக நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.. 

இந்த மூன்று நிலைகளில் பிரித்த பின் இவைகளில் நெருப்பு என்ற வெளிச்சம் எப்பொழுதும் மூன்று கோலங்களில் பிரதிபலிக்கும் தன்மை உடையது இந்த முக்கோணத்தை இயற்கையின் சுழற்சியில் பார்க்கும்போது ஒரு வட்டம் உருவாகும் 360 பாகை கொண்டது..

இந்த இடைவெளி இந்த 360  பாகையை மூன்று சம பாகமாகப் பிரித்து 120 பாகை ஒரு பாகம் என பிரித்தனர் இது காலச்சக்கரத்தில் 

1 5 9 ஆகிய வீடுகளில் மேஷம் சிம்மம் தனுசு ராசிகளாக கொண்ட வட்டம் அறுகோணம் நெருப்பு ராசி என அழைத்தனர்

 நெருப்பு ராசிக்கு அடுத்தபடியாக பூமி ராசி ரிஷபம் கன்னி மகரம் 120 பாகை இடைவெளியில் அமைத்தனர்.

 பூமிக்கு அடுத்தபடியாக காற்று ராசிகள் மிதுனம் துலாம் கும்பம் என 120 பாகை இடைவெளியில் அமைத்தனர் 

அடுத்தபடியாக நீர் ராசிகள் கடகம் விருச்சிகம் மீனம் என 120 பாகை இடைவெளியில் அமைத்தனர்..

 ஜோதிடத்தில் பொதுவாக ராசிகளை எல்லாம் நெருப்பு பூமி காற்று நீர் ராசிகள் என அழைக்கிறோம் ...



வான மண்டலத்தில் கிரகங்கள் எந்த வரிசையில் உள்ளது வானமண்டலத்தில் சூரியனை மையமாக வைத்து கிரகங்கள் சுற்றி வருவதால் நாம் சூரியனிலிருந்து வரிசைப்படுத்த வேண்டும்.. 1] சூரியன் 2] புதன் 3] சுக்கிரன் 4] சந்திரன் 5] செவ்வாய் 6] குரு 7] சனி என வரிசையாக அமைந்துள்ளது..


 நாம் பூமியில் வசிப்பதால் பூமியை ஒதுக்கிவிட்டு என வரிசையாக கணக்கீடு செய்து கொள்ள வேண்டும்

ராசி அதிபதிகளாக கிரகங்களை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை காண்போம் நாம் வரிசைப்படுத்திய கிரகங்களில் 

சூரியன் சந்திரன் இரு கிரகங்களை நாம் ஜோதிடத்தில்முக்கியமாகஎடுத்துக்கொள்கிறோம்சூரியனை வைத்து லக்னம் கணிதம் செய்கிறோம் சந்திரனை வைத்து தசா புத்தி எடுக்கிறோம் ..

சூரியன் தந்தைக்கு காரகனாகிறார் சந்திரன் தாய்க்கு காரகர் ஆகிறார்.

 ஒரு குழந்தை உருவாக ஒரு தந்தையின் ரத்த அணுக்களால் உருவாகும் விந்து மூலமாக கரு உண்டாகிறது கால சக்கரத்தில் ஐந்தாம் வீடாக சிம்மம் ரத்தனகிரி குறிப்பதால் சிம்மத்தை சூரியன் வீடாக கொடுக்கப்பட்டுள்ளது.


 தந்தையின் விந்து மூலமாக தாயின் சினைமுட்டை இணைந்து ஒரு குழந்தையை உற்பத்தி செய்கிறது காலச்சக்கரத்தின் நான்காம் பாவம் கடக ராசி உற்பத்தி குறிப்பதால் கடகத்தை சந்திரன் வீடாக கொடுக்கப்பட்டுள்ளது..


 ஆகவே சூரிய குடும்பத்தில் தாய் தந்தை யார் சூரியன் சந்திரனை எடுத்துள்ளனர் இதைத்தான் நமது முன்னோர்கள் உடலை சரீரம் என்று கூறுகின்றனர் சரீரம் என்பது சமமான வெப்பம் குளிர்ச்சியை குறிப்பதால் சரீரம் எனக் கூறுகின்றனர்..

 மனித உடலில் வெப்பம் கூடினால் காய்ச்சல் வரும் 

மனித உடலில் குளிர் கூடினால் தண்ணி வரும்..

தளத்தில்பகுதி -2 ஐ தொடருவோம் 


தனி ஆலோசனைகள் போன்றவை பெறWhat's App 9843469404 

ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம் 

பெருந்துறை
Astro Senthil Kumar.

No comments:

Post a Comment