Sunday 22 December 2013

முன்னோர் கர்ம வினை நிச்சயமாக பாதிப்பு தரும்

எனக்கு தெரிந்த ஒரு குடும்பம் அண்ணனுக்கு 3 மகன்கள்.
தம்பிக்கு 3 மகள்கள். அதில் தம்பி 3 மகளுக்கும் திருமணம் செய்து 7 பேரக்குழந்தைகள். ஆனால் மூத்தவ்ர் வீட்டில் ஒருவருக்கும் திருமணம் இல்லை. முதல் பையன் 37 வயது, 2 வது பையன் 35 வயது, 3-வது பையன் 30 வயது, ஆனால் இன்னமும் ஒருவருக்கும் திருமணம் இல்லை. முதல் பையன் மூலம் அதுவும் ஹனுமன் ஜெயந்தியில் பிறந்தவர், எனக்கு கடந்த 2 ஆண்டுகளாக மிக பெரிய சந்தேகம் , இவர்கள் குடும்பம் “பிரம்மசாரி சாபம்” இருக்குமோ என்று. பின்னிட்டு அவர்களிடமும் கேட்க முடியாது தயக்கம், ஒரு நாள் அவர்கள் ஊர்காரர் வயதான பெரியவர் ஒருவர் ஜாதகம் பார்க்க வந்தார், அவருக்கு பலன் சொல்லி யாரும் காத்திருப்பில் இல்லாமல் இருக்க நான் அவர்கிட்டே கொஞ்சமாக பேச்சு இந்த திருமணம் இல்லாத பையனை பற்றி திருப்பி பேசினேன், “அவரும் என்ன செய்ய ஒருத்தனுக்கும் கல்யாணம்” அமையவில்லையே? என வருத்தப்பட்டார், நானும் அவரிடம் எனக்கு என்னமோ அவர்கள் குடும்பம் “பிரம்மசாரி சாபம்” பெற்று இருக்குமோ? என சந்தேகம் எனக்கு இருப்பதை சொன்னேன், அவர் என்னை ஆழமாகப்பார்த்தார், பின் உங்க கிட்ட யாராவது சொன்னார்கள? என கேட்டார், நான் இல்லை முதல் பையன் மார்கழி அமாவாஸை அதுவும் இல்லாமல் ஹனுமன் ஜெயந்தியில் பிறந்து இருக்கிறார். அதனால் நான் ஜோதிட ரீதியாக சொன்னேன் என்றேன், பின்னர் அவர் சொன்ன தகவல் அதிர்ச்சி அடைய வைத்தது,
அவர் சொன்னதகவல்:-
இந்த பையனின் தாத்தா அந்த ஏரியா மிராசுதார், அவருக்கு ஒருதம்பி , சுமார் 50 ஏக்கர் பூமி அந்தக்காலத்தில் இருந்துள்ளது, இந்த பையனின் சின்ன தாத்தா
[ தாத்தாவின் தம்பி] சிறந்த முருகு பகதர், அவர் விவசாய வேலையை எதுவும் பார்க்காமல் அடிக்கடி முருகர் தரிசனம் காண “அறுபடை” பயணம் , அல்லது மருதமலை பழனி மலை என சென்று விடுவார், திருமணம் வேண்டாம் என சொன்னது அண்ணனுக்கு மிகுந்த சந்தோசம் [ பங்கு தர வேண்டியதில்லையே],தம்பியின் பயணத்திற்க்கு எந்த தடையும் விதிப்பதில்லை. செலவுக்கும் பணம் தந்து மயக்கி வைத்து இருந்தார், சில நாட்களில் தம்பி அண்ணனிடம் “சொத்து பிரித்து தா” நான் பழனிமுருகனுக்கு என் பங்கு சொத்தை எழுதிவைக்கணும் என்றார், அண்ணன் தனக்கு இரு மகன்கள் அவர்கள் உனக்கு மண்தள்ள வெண்டும் தானே? அதனால் உன்பங்கை அவர்களுக்கு விட்டு விடு”பழனிமுருகனுக்கு என்ன சொத்தா இல்லை” என மறுத்து விட்டார், ஆனால் தம்பி ஊர்பஞ்சாயத்தை கூட்டி விட்டார்,
[ அப்போது யாரும் நீதிமனறம் சென்றதில்லை ] ஊர்பஞ்சாயத்தில் அண்ணன் இப்போ அறுவடை இருக்கு அது முடிந்ததும் வேண்டுமால் பஞ்சாயத்தார் வந்து “யாருக்கு எந்த பங்கு என பிரித்து தரட்டும்”என சொல்லி விட்டார், பஞ்சாயத்தாரும் அறுவடை முடியட்டும் தம்பி என சொல்லி விட்டனர், ஆனால் அறுவடை முடியும் முன்னர் தம்பி கிணற்றில் தவறி இறந்து விட்டார், அப்போது அவர் உடலில் ஒருபெரியகல் கட்டபட்டு இருந்ததாம், அப்போதே “ அவர் அண்ணனால் அவர்கொலைதான் செய்யப்பட்டார்” என்பது ஊருக்கே தெரியுமாம் ,ஆனால் மிராசுதாரை அப்போது எல்லாம் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது, ஆனால் அந்த “பிரம்மசாரி” இறந்தது, சரியாக மார்கழி மாதம் அமாவாஸையாம் , அதாவது “ஹனுமன் ஜெயந்தி” அன்று, அதனால் தான் இன்னமும் அந்த குடும்பத்தில் திருமண வாய்ப்பு வரவில்லை என அந்த ஊர்காரரான பெரியவர் சொன்னார், அப்போது தான் எனக்கும் என மனதில் பட்ட “பிரம்மசாரி சாபம்” இருக்குமோ எனும் ஐய்யம் சரியானது எனப்பட்டது, ஆனாலும் இன்னமும் அந்த குடும்பத்தில் திருமணம் அமையவில்லை, “உங்க பையன்களுக்கு கல்யாணம் ஆகணும்’ என்றால் “முருகனுக்கு பாதி சொத்தை எழுதிவைக்க” சொல்ல அவர்களிடம் யார் சென்று சொல்வது ? நீங்களே சொல்லுங்க ?அவர்களிடம் யார் சென்று சொல்வது ?

Sunday 15 December 2013

சுக்கிரனால் உடலில் ஏற்ப்படும் வியாதிகள்

மேஷத்தில் பாதிக்கப்பட்டால் :- சளித்தொல்லை, தலைநோய், சிறுநீரகப்பிரச்னையையும் தருவார்,

ரிஷபத்தில் பாதிக்கப்பட்டால்:- டான்ஸில், இரத்த கோளாறு தருவார்,

மிதுனத்தில் பாதிக்கப்பட்டால்;- வலிப்பு நோய்

கடகத்தில் பாதிக்கப்பட்டால்:- வயிற்றுக்கோளாறு, சதை வளர்ச்சி இவைகளை தரும்

சிம்மத்தில் பாதிக்கப்பட்டால்:- முதுகுவலி, இருதயகோளாறு தருவார்,

கன்னியில் பாதிக்கப்பட்டால்:- கிருமிகளால் தொல்லை,

துலாத்தில் பாதிக்கப்பட்டால்:- கருப்பையில் பாதிப்பும், மாதவிடாய் கோளாறு,விரையில் பாதிப்பு, பிறப்புறுப்பில் பாதிப்பு அடிக்கடி கர்ப்பசம்பந்தமான வைத்தியம் பார்க்க நேரிடும்,

விருட்சிகத்தில் பாதிக்கப்பட்டால்:- மூத்திரக்கோளாறு , கிட்னி பாதிப்பு, விரையில் பாதிப்பு, பிறப்புறுப்பில் பாதிப்பு

தனுசில் பாதிக்கப்பட்டால்:- ஈரல் சம்பந்தமான பாதிப்பு

மகரத்தில் பாதிக்கப்பட்டால்:- முழங்கால் வலி,பாத வலி, தோல் சம்பந்தமான வியாதி போன்றது பாதிப்பு தரும்

கும்பத்தில் பாதிக்கப்பட்டால்:- முழங்கால் வலி, பாத வலி,வீக்கம் போன்றது தருவார்,

மீனத்தில் பாதிக்கப்பட்டால்:-கர்ப்ப பையில் பாதிப்பு ஒழுக்கசீர்கேடு மதுபழக்கம் போன்றது பாதிப்பு தரும்

இது அனைத்தும் பொதுவான ஜோதிடக்கருத்தே தவிர சுக்கிரன் பாதகரை சேர்வதும் பார்ப்பதும் பாதககிரஹம் சாரம் பெறுவதும் தான் சுக்கிரன் பாதிப்பாரே தவிர ,இதை படிக்கும் வாசகர்கள் தனது ஜாதகம் கொண்டு சுயபரிசோதனை செய்யக்கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும் 

என்றும் ஜோதிட பணியில்!

ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்,
பெருந்துறை- 638 052
செல்:- 98427 69404
செல்:- 98434 69404

Friday 6 December 2013

புத்ரம் [குழந்தை] கிடைக்க என்ன வழி?

குரு சிலருக்கு யோகமும் தருவார்! 
குரு சிலருக்கு பாதகமும் தருவார்! 
அது அவர்கள் ஜாதகத்தை பொருத்தே அமையும்!
சிலருக்கு குருவால் குருதிசையால் பாதமான சூழ்நிலையும் ஏற்படும் குரு லக்னத்தின் பாதகரின் பாதக்காலில் செல்ல பாதகமும், யோகரின் காலில் செல்ல யோகமும் தருவார்!
திசையின் நாதனும் புக்தியின் நாதனும் செல்லும் நட்சத்திர அதிபதி ஜீவனாகவும், அவருக்கு பாதம் தந்த நட்ச்சத்திர அதிபதி சரீரமாகவும் பாவித்தே பலனும் உண்டாக்கும்!
அதனால் குருதிசையே நடந்தாலும் அவர் நின்ற பாதம்
[ ஜீவன் ] அவருக்கு பாதம் தந்தவர் [சரீரம்] ஆகும், ஜீவன் கெட்டாலும் சரீரம் கெட்டாலும் பாதிப்பு என்னவோ திசை நடப்பருக்கே தான் ஏற்ப்படுகிறது!

[ குழந்தை பேறு அமைய குரு ஜாதகத்தில் வழுத்தும் 5-ம் அதிபதி வழுத்தும் இருக்க புத்ரபிராப்தி சீக்கிரம் அமையும், கணவன் - மனைவி வாழைப்பழம் இரவில் உண்ண சொல்லி பெரியவர்கள் சொல்வதன் காரணம்:- குரு மணடலத்தில் பரவியிருக்கும் ‘மீத்தேன் அமிலம்” [புத்திரபேறுக்கு இது உடலில் முக்கியம்] வாழைப்பழத்தில் அதிகம் இருப்பதே அதன் அர்த்தம், அதேபோல் நீண்டநாள் குழந்தை பேறு அமையாத தம்பதிகள் வாரம் ஆன வியாழன் அன்று மட்டும் தாம்பத்தியம் கொள்வது ”சீக்கிரமே புத்ரபிராப்தி” அமையும் 

பிரதோஷ வழிபாட்டின் ரகசியம் [ எல்லோரும் சொல்லுங்க ]

சோமசூத்ரப்பிரதஷ்ணம் வழிபாடு என்பது என்ன? 
சோமசூத்ரப்பிரதஷ்ணம் எனபது ஆலகாலவிஷம் தேவர்களை துரத்திய போது அவர்கள் இடமும் வலமும் ஓடியதே ஆகும்! 
நாமும் அதேபோல் ஓடவேண்டும் எப்படி தெரியுமா? 
முதலில் நந்தியில் இருந்து எதிர்மறையாக [ அபதஷ்ண வலம்] சண்டிகேஸ்வரர் வரை இடபுறமும் சென்று சண்டிகேஸ்வரை வணங்க வேண்டும், [ அங்கு அபிஷேகத்தீர்த்தம் விழும் நிர்மால்ய தொட்டியை தாண்டாமல் பார்த்து கொள்ளுங்கள் ] போனவழியேதிரும்பி வந்து நந்தியையும் சிவதரிசனம் செய்து வலம் வந்து சண்டிகேஸ்வரர் சன்னதிவரை வரவும்! [ அங்கு அபிஷேகத்தீர்த்தம் விழும் நிர்மால்ய தொட்டியை தாண்டாமல் பார்த்து கொள்ளுங்கள் ] போனவழியே
திரும்பி [ அபதஷ்ண வலம்] சண்டிகேஸ்வரர் வரை இடபுறமும் சென்று சண்டிகேஸ்வரை வணங்க வேண்டும்,
[ அங்கு அபிஷேகத்தீர்த்தம் விழும் நிர்மால்ய தொட்டியை தாண்டாமல் பார்த்து கொள்ளுங்கள் ]
இப்படி மூன்று முறை சுற்று வந்து சிவாலய தரிசனம் செய்தால் அனேக அஷ்வயாகம் செய்தபலன்
[ குதிரையை வைத்து பூஜித்த பலன் ] கிட்டும் என அனேக ஞானநூல்கள் சோல்லியுள்ளது! இதுவே சோமசூத்ரப்பிரதஷ்ணம் வழிபாடு எனப்பொருள் ஆகும்!

வருஷ ஜாதகத்தை கணிக்கும் விதம்

நீலகண்டர் வருஷ ஜாதகத்தை கணிக்க திருக்கணிதமுறையில் தந்துள்ள கணிதம் . 
இது படிப்படியாக உங்களுக்கு கணகிட்டு பயில உதவும்

1 வயது -----  1 நாள்              6 மணி      9 நிமிஷம்  12 செகண்ட்

2 வயது-------2 நாள்               12 மணி     18நிமிஷம்       18 செகண்ட் 

3 வயது--------3 நாள்               18 மணி     27 நிமிஷம்     30 செகண்ட் 

4 வயது-------5 நாள்                0 மணி       36 நிமிஷம்    36 செகண்ட்

5 வயது----  6 நாள்                 6 மணி       45 நிமிஷம்    48 செகண்ட் 

6 வயது----- 0 நாள்                 12 மணி       55 நிமிஷம்  55 செகண்ட் 

7 வயது-----1 நாள்                  19 மணி       04 நிமிஷம் 06 செகண்ட் 

8 வயது---- 3 நாள்                  1 மணி         13 நிமிஷம்  18 செகண்ட் 

9 வயது ----4 நாள்                  7 மணி         22 நிமிஷம்  30 செகண்ட் 

10 வயது----5 நாள்                 13 மணி        3 நிமிஷம்  12 செகண்ட் 

20 வயது ----4 நாள்                3 மணி          3 நிமிஷம்   36 செகண்ட் 

30 வயது-----2 நாள்                 16 மணி        34 நிமிஷம்  54 செகண்ட் 

40 வயது ----1 நாள்                  6 மணி          6 நிமிஷம்  30 செகண்ட் 

50 வயது----6 நாள்                   19 மணி         38 நிமிஷம்  6 செகண்ட் 

60வயது-----5 நாள்                   9 மணி           9 நிமிஷம்  42 செகண்ட் 

இப்படி வயதை கணக்கிட ஜாதகர் பிறந்த கிழமை யுடன் நாழிகை மற்றும் விநாழிகையுடன் கூட்டி 

கணக்கிட வருவது ஜாதகரின் தற்போதைய வயதுக்கு ஏற்ப்ப கணக்கிட்டு கொள்ளவும் ,இப்படி மேற்கண்ட கணிதப்படி வருஷ ஜாதகம் கணிக்கலாம், அத்துடன் வருஷ ஜாதகத்திற்க்கு திசா புக்தியும் அந்தரமும் கணக்கிட்டு பலன் காணலாம், 

 என்றும் ஜோதிடப்பணியில் 

ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம் பெருந்துறை   

Tuesday 3 December 2013

தாரம் தங்காத ஜாதகம் [ தாரதோஷ ஜாதகம் ]

இதுபோன்ற ஜாதகம் அமையப்பெற்ற ஜாதக ஜாதகிகள் எத்தனை முறை திருமணம் செய்தாலும் தாரம் தங்குவதில்லை , லக்னம் எது ஆனாலும் ஜாதகத்தில் 7 க்குடையவன் 8 க்குடையவன் மற்றும் பாதகாதிபதி ஆகியோர் ஒரே பாதக்காலில் செல்வது [கிரஹயுத்தம் ] ஜாதகர்களின் திருமண வாழ்வை மிகவும் பாதிக்கிறது, இதுபோன்ற ஜாதகம் அமையப்பெற்றவர்கள் முடிந்தளவு இரண்டாம் தாரமாக வாழ்க்கையை அமைப்பது நல்லது. இந்தஜாதகத்தில் 4 ல் கேது [சுகஸ்தானம்]நான்காம் அதிபதி அஷ்டமாதிபதி செவ்வாய் சாரம் , 7 [சுக்கிரன்] 8 [செவ்வாய்] பாதகாபதி [சனி] ஆகியோர் ஒரேபாதக்கால் எடுத்து அதில் சுக்கிரனும் சனியும் கிரஹ யுத்தம் செய்வதை பாருங்கள் . இதுதான் தாரதோஷம் என்பது, இச்சாதகனுக்கு இருமுறை திருமணம் செய்தும் மனைவி இவருடன் பிழைக்காமல் ஓடிவிட்டனர், மூன்றாவதாக மனைவியை தேடி வருகிறார் [ ஆனால் இனி “திருமணம் நடக்கும்” என்று என் மனதுக்கு படவில்லை ]

Sunday 1 December 2013

சோமவார அமாவாஸை சிறப்பு & அதன் வழிபாடு

இம்மாதத்தில் இன்று கார்த்திகை 16 ம்தேதி உதிக்கின்ற அமாவாஸை ஆனது, மிகவும் சிறப்பானது, இன்று குழந்தை இல்லாத தம்பதிகள் மற்றும் திருமணம் ஆகாத இளைஞர்கள் & கன்னியர்கள் ஆகியோர்
 திங்கள் கிழமையாக [ சந்திரனுடைய நாளாக அமைவதால் ]
இன்று காலை 8.50 க்கு மேல் அமாவாஸை திதியில் அரசமரத்தில் கீழ் அமைய பெற்ற விநாயகரை 108 முறை அரசமரத்தை சுற்றி வலம் வந்து பிராத்திப்பவர்களுக்கு “சகலதோஷ நிவர்த்தி” அடைவர் என்பது காலம் தொட்டு வரும் மரபு,
அதனால் தோஷம் பீடிக்கப்பட்டவர்கள் இன்று அரசமர விநாயகரை நம்பிக்கையுடன் 108 முறை வலம் வந்து பயன் அடைவீர்களாக!

என்றும் ஜோதிட பணியில்
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம் பெருந்துறை

Thursday 28 November 2013

வருஷ ஜாதக கணிதமுறை [[தஜகநீலகண்டீயம்]

தஜகநீலகண்டீயம் படி வருஷ ஜாதகம் கணிக்கும் முறையானது!

ஜனன சமயம் முதல் சென்ற வருஷம் வரை எத்தனை ஆண்டுகள் ஆயின என்று கணக்கிடவும், பிறகு வ்ருஷம் ஒன்றுக்கு 1 நாள் வீதம் கணக்கிடவும்,அதை இப்போது சென்ற வருஷத்துடன் கூட்டவும், இது பக்கம் இருக்கட்டும்,  
பிறகு அது வரை சென்ற வருஷங்களை 21 ஆல் பெருக்கி 60 ஆல் வகுக்க மீதிவருவது மணி நிமிஷம் முதலியது ஆகும், அத்தோடு ஜாதகன் பிறந்த நாளன்று கிழமை நாழிகை விநாழிகையை கூட்டவும்,அப்படி கிடைக்கும் மொத்தத்தை 7 ஆல் வகுக்க மீதிவருவது அந்த வருஷத்தின் ஆரம்ப தினமும் நேரமும் ஆகும், 
உதாரணம்: வருஷ ஜாதகத்தை கணிக்க பலகாலமாக செய்து வரும் முறையானது சூர்யசித்தாந்த அடிப்படையானது.
சூர்யசித்தாந்தப்படி ஒருவருஷம் என்பது:-365 நாட்களும் 15 நாழிகையும் 31 விநாழிகையும் 30 தர்பரை கொண்டது ஆகும்.
இதை ஏழால் வகுத்து ஈவு போக நின்றது 1 நாள் 15 நாழிகை 30 தர்பரை ஆகும், ஒருஜாதகன் 08/08/2012 ம் வருஷம் பிறந்ததாக வைத்து கணக்கிடுவோம், அவரது 2013 ம் வருஷத்திய பிறந்தநாளை கண்டுபிடிக்க ,மேற்படி வருஷத்துடன் 1 நாள் 15 நாழிகை 30 பரையைக்கூட்ட வேண்டும், இந்த ஜாதகரின் பிறந்த நாள் 09/08/2013 ல் வரும் , அத்தோடு அவர்பிறந்த நேரத்தை கண்டுபிடித்து  [ நாழிகைரீதியாக] அத்தோடு 15 நாழிகை 31 விநாழிகையை கூட்ட வேண்டும் 
இதை கண்டுபிடிக்க நீலகண்டர் சில சுலபமான வழிகளை எழுதி இருக்கிறார்.     
கிழமைகளுக்கு ஒவ்வொரு எண் தந்து இருக்கிறார்,
ஞாயிறு:1 
திங்கள் ;2
செவ்வாய்:3
புதன்:4
வியாழன்;5
வெள்ளி:6
சனி;7 [இதை எண்கணிதத்துடன் போட்டு குழம்ப வேண்டாம். இது நாட்களுக்கு உண்டானது மட்டுமே]
இதில் தஜக முறைப்படி ஒருபட்டியல் & நவீன விஞ்ஞான முறைப்படி ஒரு பட்டியல் நாளை மறுநாள் இணைக்கப்படும், காரணம் சூர்யசித்தாந்தப்படி 365 நாட்களும் 6 மணி 12 நிமிஷம் ஆகும், ஆனால் தற்போதைய திருக்கணிதப்படி 365 நாட்களும் 6 மணி 12 நிமிஷம் 36 செகண்டு ஆகும், அதனால் வருஷத்திற்க்கு 3 நிமிஷம் 24 செகண்ட் வித்தியாசம் ஏற்ப்படுகிறது, திருக்கணிதம் தான் சரி என தூரதிருஷ்டி கருவிகள் மூலம்  விஞ்ஞானமுறைப்படி இப்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதனால் இருமுறையும் நாளை மறுதினம் பதியப்படும்,  
ஆனால் இதை இதன் ஆசிரியர் சுமார் 500 ஆண்டுக்கு முன்னரே கணக்கீடு செய்தது தான் நம்மை பிரமிக்க வைக்கிறது,

நான் இதை கணிக்கீடு செய்ய முதலில் மிகுந்த சிரமமாகத்தான் இருந்தது, ஆனால் கணக்கிட கணக்கிட சற்று சுலபமாக இருக்கிறது, இதை நமது ஜோதிட நண்பர்கள் சற்று நுணுக்கமாக படிக்கவும்,இதன் படி பலன் காண்பது என்பதை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக எழுதப்போகிறேன், இக்கணிதமுறை மிகவும் நுணுக்கமாக எனக்கு வருஷ ஜாதகம் கணித்து தாருங்கள் எனும் வாடிக்கையாளருக்கு பயன்படும்,

குறிப்பு:-நான் எனது என் குடும்பத்தார் என [ சுயநலம்] கணக்கிட்டீர்கள் எனில் கணிப்பு வராது, அடியேன் இதுவரை ஜோதிடம் பயின்ற பின்னர் எனது ஜாதகம் குழந்தைகள் ஜாதகம் எதையும் கணிப்பதும் இல்லை.மற்ற நண்பர்கள் இடம் ஆலோசனையும் கேட்பதில்லை, அப்படி ஒருமன பக்குவம் வந்தால் தான் நீங்களும் புலமை அடைய முடியும் என்பதே நிதர்சனமான உண்மை!
என்றும் ஜோதிடப்பணியில் 
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம், பெருந்துறை

Wednesday 27 November 2013

வருஷ ஜாதகத்தை கணித்தவர்


  “தஜக நீலகண்டீயம்” இதன் ஆசிரியர் நீலகண்டர் சமஸ்கிருத பாஷையிலும் அரபி&பார்ஸி  பாஷையிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர்.

இவர் கார்க்கிய கோத்திரத்தில் பிறந்த பிராமணர் , தனது 30 வயதில்   “தஜக நீலகண்டீயம்”என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார்,இவர் தந்தை மூகூர்த்த சாஸ்த்திரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றவர், 

விதர்ப்ப தேசத்தில் தர்மபுரி என்ற ஊரில் ஆனந்த தெய்வக்ஞர்[தந்தை] பத்மா [தாயார்] ,நீலகண்டருடன் பிறந்தவர் ஸ்ரீ ராம தெய்வக்ஞர் இவரும் ஜோதிடத்தில் தேர்ச்சி பெற்றவர், 

நீலகண்டர் பிறந்தது கி.பி 1537 ம் வருஷம் என ஆண்டு பிறந்தவர், கி.பி 1567 ல் தான் இந்நூலை எழுதி இருக்கிறார், இதை இவர் எழுதிய போது இவர்தந்தை உயிருடன் இருந்துள்ளார், இவர் “தஜக நீலகண்டீயம்”எழுதும் போது மூன்று பாகங்களாக பிரித்து எழுதி அதில் பல இடங்களில் அரபி பார்ஸி வார்த்தைகளை பயன் படுத்தி இருக்கிறார், பல அறிய தகவல் நிறைந்தது இப்புத்தகம்

குறிப்பு:- இதை 02/07/1921 ல் பிறந்த புதுக்கோட்டை சமஸ்தான திருமணஞ்சேரியில் பிறந்த P.S.ஐயர் 1993 ல் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட முயற்சி செய்து அது வெளியிடப்படாமல் போய் அவரின் காலத்திற்க்கு பின் தான் வெளிவந்தது, 1000 பிரதிகளே முதல் பதிப்பு [அதில் ஒன்று அடியேனிடம் உள்ளது] 

தொடர்ந்து நான் அதில் சொல்லப்பட்ட விஷயங்களை புத்தகமாக வெளியீடு செய்வது சட்டப்படி குற்றம் என்பதால் சிறு சிறு ஜோதிடத்திற்க்கு தேவையான பகுதிகளை பதிந்தால் அதை சமஸ்கிருதத்தில் எழுதிய “நீலகண்டருக்கும்” தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட “P.S.ஐயர்” அவர்களின் நம்மால் செலுத்தப்படும் “குருமரியாதை” ஆகும். ஜோதிடர்களுக்கு ஜோதிட ஆய்வாளர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என கருதுகிறேன் , ஜோதிட நண்பர்கள் தனது கருத்தை சொன்னால் சற்று நல்லது,

Monday 25 November 2013

கோச்சார சூரியன் பலன் தரும் நிலை

நவகிரஹ வட்டத்திற்க்கு சூர்யனே பிரதானம் !
அவர் தன் சஞ்சார நிலையில் பலன் தருவது பின்வருமாறு;-
ஜெனன கால ஜாதகத்தில் சூர்யன் தான் இருக்கும் இடத்திற்க்கு
வரும் காலம் ஒரு வருஷம் முடிவை குறிக்கும் ,
 அக்கால கட்டத்தில் ஜாதகரின் மனநிலை உற்சாகமாக இருக்கும் ,
இக்காலகட்டத்தில் புது முயற்சி வெற்றியை தரும்,
கடன் பெற இக்காலகட்டம் உகந்தது,
வியாபாரமுயற்சி கைகொடுக்கும் நிலை வரும்,

சூரியன் ஜாதகத்தில்தான் இருந்த இடத்துக்கு மூன்றில் வரும் காலம்
நமக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல சுலபமாகும்,
உழைத்து முன்னேறக்கூடிய கால கட்டம் ஆகும்,

அதே சூரியன் கோச்சாரத்தில் பிறந்த ஜாதகத்தில் தான் இருக்கும் இடத்துக்கு நான்கில் அல்லது பத்தில் வரும் காலம் கார் வைத்து டிரைவர் வைத்து இருப்பவர்கள் கூட தன் டிரைவரிடமே கடன் வாங்கும் சூழல் வந்து சேரும்,அப்படி சூழ்நிலை அமையும் மாதிரி பணக்கஷ்டமும் உண்டாக்கும்,

அதே சூரியன் ஐந்திலோ ஒன்பதிலோ சஞ்சாரம் செய்யும் காலகட்டம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் மனைவியுடன் “உறவு” வலுப்பெறும்,
நண்பர் உதவிகள் சமயத்துக்கு கிடைக்கும் காலகட்டம் ஆகும்,

ஜென்ம சூரியனுக்கு ஏழில் சூரியன் கோச்சார ரீதியாக வரும் போது வேண்டாத “நீசஸ்திரி” தொடர்ப்பால் துன்பம் வந்து சேரும்,
சிலநேரம் விதவைகளால் கலகம் வந்து சேரும்,
வியாபாரத்தொடர்ப்புகள்  வில்லங்கம் தரும் பின்னர் சரியாகும்,

குறிப்பு;- இது பொதுவான பலனே தவிர உங்கள் தனிபலன் அல்ல!
உங்கள் தனிப்பலனுக்கு தகுந்த ஜோதிடரை அணுகவும்,காரணம் எங்களை போன்ற ஜோதிடர்களுக்கு நேரில் பலன் சொன்னால் மட்டுமே
“பலன் உண்டு”,தவிர இதுபோல் ஜோதிட குறிப்புகள் அனைத்தும் “ட்ரைலர்”
மட்டுமே- “மெயின் பிக்சர்’ இது அல்ல!
இது “ரீலும்” அல்ல! “ரியல்” தான்

என்றும் ஜோதிட சேவையில்!
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்,
பெருந்துறை- 638 052

செல்: 98427 69404 [ ஏர்செல்]
செல்; 98434 69404 [வோடாபோன் ]

Sunday 24 November 2013

பிறந்த நாளை கொண்டாடுவது எப்படி?

பிறந்த நாளை கொண்டாட நாம் அனைவரும் முதலில் தேர்ந்து எடுப்பது நம் தமிழ்முறைபடி என 

Saturday 23 November 2013

வாரசூலை என்பது என்ன ?

11-07-2013, 12:47 PM

வாரசூலை என்பதின் பொருள் என்ன ?பொதுவாக நாம் ஏதேனும் ஒருகாரியமாக புதுவிஷயமாக செல்வது என்றால் அன்று நாம் செல்லும் திசையில் வாரசூலை உள்ளதா? என்பதை பார்த்து தான் கார்யமுயற்ச்சி செய்வோம் , இது நமது ஜோதிட கலாச்சாரம், நான் புதியதாய் ஜோதிடம் பயில ஆரம்பித்த போது வாரசூலை என்பதின் பொருள் குறித்து நானும் பல அனுபவ ஜோதிடர்களை அணுகி கேட்ட போது பலரிடம் இதுபற்றி “ எதுவும் தங்களுக்கு தெரியாது” என்றும் “ பஞ்சாங்கத்திலேயே வாரசூலை எந்தநாளுக்கு எத்திசை சூலம் என்பது போட்டிருக்குமே? அதை பார்த்து பலன் சொல்லுங்க” என்றனர்,

ஆனால் எனக்கு வாரசூலம் எப்படி உருவானது என்பதை அறிய ஆவல் எற்ப்பட்ட்து!
பின்னர் பலநூல்கள் தேடி நான் அறிந்து கொண்ட விஷயம் என்னவென்றால்
“இந்த உலகை ஆளும் சிவபெருமான் தன் சூலாயுத்தை ஓய்வுக்கு கொடுக்க சற்று நேரம் தரையில் வைத்து வைப்பார்” அப்போ நாம் அதை எதிர்கொண்டு போக்க்கூடாது “எனபதால் தான் வார[ தினம் ] சூலம் வாரசூலை உருவானது! சிவனின் சூலம்



ஞாயிறு = மேற்கு

திங்கள் = கிழக்கு

செவ்வாய்= வடக்கு

புதன்= வடக்கு

வியாழன்= தெற்கு

வெள்ளி= மேற்கு

சனி= கிழக்கு


பின் திரும்ப மேலிருந்து கணக்கிடவும்’ ’சிவனின் சூலம் கூட காலையில் 5 நாழிகை தான் பூமிமீது வைப்பார் , 2 மணி நேரம் மட்டுமே காலையில் வாரசூலை கணக்கிடவும், பின் 2 மணிநேரத்திற்க்கு மேல் மேற்கொண்டு அந்த திசையில் பயணிக்கலாம்’ என்பதே பொருள்


இதை ஷேர் பண்ணிய Facebook+1 for Brahmins > Friendship-Gossip-Social > Social > Groups and Talks > News & Knowledge to Share ஆகியோருக்கு நன்றி

Friday 22 November 2013

ஜோதிடம் வளர்ச்சியா? வீழ்ச்சியா?

முன்னர் பழையகாலத்தில் ஜோதிடம் என்பது மிகவும் புனிதமாக பார்க்கப்பட்டது!

அன்றைய காலகட்டத்தில் பஞ்சாங்கம் கோவிலில் குருக்கள் வசம் இருந்தது, அவர்களை இறைவனுக்கு நிகராக இன்னமும் மக்களால் பார்க்கப்பட்டு வருகிறார்கள். அப்போது எல்லாம் ரச்சு இல்லாத திருமணமும் அவர்களால் கோவிலில் நடத்தி வைக்கப்பட்டது, கிணறு வெட்ட வீடுகட்ட ஜாதகம் இல்லாதவர்களும் அவர்களை நாட பூ வாக்கால் முடிவு எடுக்க பட்டது, 
காலப்போக்கில் பஞ்சாங்கம் வள்ளுவர்களிடம் வந்தது அவர்களும் அப்போது எல்லாம் ஆபீஸ் போட்டு தொழில் செய்ய முடியாது என்பதால் கிராமம் தோறும் வீடு சென்று பலன் பார்த்தனர் 
அது வரை  ஜோதிடம் மிக மிக புனிதமான கண்ணோட்டத்துடன் பார்க்க பட்டது,
இடையே தான் சில மாற்றம் படித்தவர்கள் பலரும் பஞ்சாங்கம் பிடிக்க ஆரம்பித்தனர் அதனாலும் பாதிப்பில்லை ஜோதிடம் நன்றாக வந்து கொண்டிருக்கிறது, 
இடையே எங்கே குழப்பம் வந்தது? என்றால் படித்த மக்கள் தனது வீட்டில் மகனுக்கோ மகளுக்கோ கடைவீதியில் விற்பனை ஆகிக்கொண்டிருக்கும் பொருத்த புத்தகத்தை எப்போது வீட்டில் வாங்கி வைத்தனரோ அப்போதே ஜோதிடம் கொஞ்சம் தடுமாற ஆரம்பித்து விட்டது, 
எங்கு வைத்து யாரிடம் ஜோதிடம் படித்தார்கள் வரன் வீட்டார் ?
ஆனால் பாருங்கள் ஒரு தொழில்முறை ஜோதிடரை போல் தன்னை காட்டி கொண்டு பேசுவதை 
திருக்கணிதமும் சரி வாக்கியமும் சரி யோனியோ ரச்சோ இல்லாமல் திருமணம் செய்யலாம் எனத்தான் சொல்லி இருக்கிறது.

ஆரோகண நிலைபாடு அவரோகண நிலைபாடு போன்றதை வைத்து இருவீட்டாரும் ஒத்துப்போனால் திருமணம் செய்யலாம் என சொல்லி இருக்கிறது
சிரசு ரச்சு :-புருஷனுக்கு ஆகாது [ சரி ஆயுள் பாவம் பார்த்து செய்யலாம்]
கண்டரச்சு :- ஸ்திரிக்கு ஆகாது [சரி ஆயுள் பாவம்   பார்த்து செய்யலாம்]
உதரரச்சு:- புத்திர நாசம் [சரி இருவரின் 5&9 பார்த்து பால் உள்ளவிருட்சமா என பார்த்து செய்யாலாம்]
தொடை ரச்சு :-செல்வநாசம் [ சரி இருவரின் 2&11 ஐ பார்த்து செய்யலாம்]
பாதரச்சு:-தேசாந்திரம் [சரி பூர்வீகத்தை விட்டு வெளியே தான் இருப்போமே] 

இப்படி தான் செல்கிறது ஜோதிட குறிப்புகள் ஆதாரம் பல உள்ளது. காலவிதானம் & கேரள ஜோதிடம் & 108 நவீன கோவில் வாக்கிய பஞ்சாங்கம் இதை பற்றி விரிவாக சொல்லி இருக்கிறது!
ஆனால் உண்மையில் நடப்பது என்ன யார் ஜோதிடரிடம் வந்து ரச்சு இல்லாத ஜாதகத்தை கொண்டு வருகிறார்கள்? அவர்களே வீட்டில் சுயபரிசோதனை செய்ய எது காரணம் கடை வீதியில் விற்க்கப்படும், குறிப்பாக சிவகாசிப்பக்கம் அச்சிடப்பட்ட சில பொருத்த புத்தகங்கள் 
அதை வாங்கி ஆதரிக்கும் மக்கள் தான் காரணம் இன்னமும் சொல்லப்போனால் அப்படிப்பட்ட புத்தகம் ஒன்றை பலன் காணும் ஜோதிடர்களும் நம்புவது தான் வேதனை தருகிறது, 
எனக்கு தெரிந்த ஜோதிட நண்பர் ஒருவர் யாராவது பொருத்தம் பார்க்க வந்தால் இருஜாதகமும் கையில் வாங்கி கொண்டு நட்சத்திரம் பார்த்து பின்னர் அந்த குறிப்பிட்ட புத்தகத்தை எடுத்து இரண்டும் பொருந்தி போகிறதா எனப்பார்த்து விட்டு தான் திசாசந்திப்பு கவனிப்பார் , அதுவும் அவர் குரு நாதர் சொல்லி கொடுத்த திசாசந்திப்பு என்பது ஏகதிசை தான் திசாசந்திப்பு என [அட ஈஸ்வரா] சொல்லி அனுப்பி விடுவார் நான் பலமுறை அவரிடம் சொல்லி விட்டேன் ஏகதிசை என்பது திசாசந்தி அல்ல என உடனே 2 நாட்களில் குருநாதரை போய்ப்பார்ப்பார்
விளக்கம் கேட்பார் குரு நாதர் உடனே யாருய்யா சொன்னது ஏகதிசை வந்தால் திசாசந்திப்பு தான் என சொல்லு என்பார்
நம்ம நண்பரும் நான் சொன்ன மாதிரியை  உதாரண திசாசந்திப்பை [ அகஸ்திய கணக்குப்படி ஆண் பெண் இருவருக்கும் 2015 ல் திசாமாற்றம் மாடல் கணிப்பு] கொடுத்துள்ளார், அந்த குரு நாதனுக்கு தெரியாது அதை பற்றி [ சரி என்னிடமாவது கேட்டு இருக்கலாம்] 
என்னால் கணிக்கப்பட்ட சீட்டை உற்று பார்த்த குருநாதர் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா? 
”தம்பி இதை கணித்தவனுக்கு ஜோதிடம் பற்றி தெரியாது போல் இருக்கிறது நீ நம்ம ரூட்லயே போ” என சொல்லி அனுப்பி விட்டார் 
இதே போக்கில் போனால் ஜோதிடமும் ஜோதிடத்தை நம்பி வாழ்வோரும் வீழ்ச்சி தான் அடைவோம் ,
வாருங்கள் அனைவரும் ஜோதிடத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வோம் 
குறிப்பு:- அதற்க்கு முதலில் வீட்டில் இருக்கும்  பொருத்த புத்தகத்தை புறக்கணிப்பீர்!
ஏகதிசையை திசாசந்தி என சொல்லும் ஜோதிடர்களையும் ரச்சு இல்லாமல் திருமணம் செய்தால் கணவன் மனைவிக்கு உயிருக்கு தீங்கு என சொல்லும் ஜோதிடர்களை புறக்கணிப்பீர்
ரச்சு இல்லாமல் திருமணம் செய்து உயிர் தீங்கு இல்லாமல் வாழும் பலதம்பதிகள் ப்க்கத்திலேயே இருக்கிறார்கள் 
ஜோதிஸ் என்பது வெளிச்சம் அதை நீங்களாக பார்த்து பார்த்து இருட்டுக்கு போகாதீர்கள் 
 

ஜோதிடத்தில் எதை பின்பற்றுவது?

நமது ஜோதிட சித்தாந்தத்தை மிகவும் நுணுக்கமாய் ஆராய்ந்து நமக்கு பல அறிய தகவலை தந்தது ஆர்யபட்டர்,பின்னிட்டு வாராகமிகிரர்,வருஷ ஜாதகமுறைய    [தஜகநீலகண்டீயம்] உலகுக்கு தந்த நீலகண்டர் , யவனர், போன்றோர்கள் மிகவும் நுணுக்கமான பல வழிமுறைகளை தந்துள்ளனர், நிலை அப்படி இருக்க நம்முன்னோர்கள் விட்டு விட்டு சென்ற அனைத்தையும் விட்டு தள்ளு புதியதாக நான் சொல்லி தருகிறேன் ஜோதிடம் என்பது சற்று வியப்பை அளிக்கிறது, முகநூலில் கூட பல ஜோதிடர்கள் நான் சொல்லி வந்த கருத்தை ஏற்று கொண்டு கெளரவிப்பது எனக்கு மகிழ்ச்சியே! 
ஆனாலும் விதிமுறைக்கு புறம்பாக சில விஷயம் சொல்வதை யாரும் ஏற்று கொள்வதில்லை,
தற்போது, ஜோதிடத்தில் முன்னரே இருக்கும் பழமையான வாக்கிய பஞ்சாங்கம் , C.G.ராஜனால் [ 1921 முதல் 1942 வரை நவீனபடுத்தப்பட்ட திருக்கணித பஞ்சாங்கம் ஆகியவை தான் தற்போது அனைத்து ஜோதிடர்களாலும் பயன்பாட்டில் உள்ளது, C.G.ராஜனால் இயற்றப்பட்ட பல ஜோதிட நூல்கள் மூலம் ஒரு ஆர்வம் உள்ள நபர் கொஞ்சமாக குருவழி காட்டுதலுடன் நிச்சயமாக நல்ல ஜோதிடராக புகழ் அடைய முடியும் என்பது நிதர்சன உண்மை!
ஆனால் நான் சற்று கருத்தை பதிவது எதனால் என்றால் ஜோதிடம் பாழ்பட்டு போய்விடக்கூடாது அதுவும் நமது ஜோதிடரால் என்பதே ஐய்யப்பாடு!

திருக்கணிதம் ,வாக்கியம்,  நாடியில் திருமணப்பொருத்தம் 
கே.பி.ஸிஸ்டம் ,ஜாமக்கோள் ஆருடம், பிரச்சன்ன சூட்சுமம் ,சந்திர நாடி கற்று கொள்ளவது சரியானது,

இதை தவிர வேறுவிதமாய்
  “கால் கட்டை விரலுக்கும், அஞ்சனா வசிய மூலிகை   தருகிறேன் ,அஸ்டதித்திக்கு தேவதா செய்து தருகிறேன் உனக்கு வாக்கு பலிதம்ஆகும் மற்றும்
தாந்திரீக பயிற்சி எனும் பெயரில்
நல்ல வருமானம் தரும் வாங்கி கொள் என ஜோதிடர்களிடம் வியாபாரம் செய்யும் முறையும் 
வாக்கு பலிதம் அடைய  வாங்கிக்கொள் என்பதும் அதை வாங்கி வைத்தால் மட்டும் சொல்லும் அனைத்தும் நடந்து விடுமா?
இந்தக்கூற்று எப்படி சாத்தியம் ஆகும்? சொல்லுங்க ? ”

இடையே ஆறுமாதத்தில் ஜோதிடம் பயின்று ஜோதிடர் ஆகலாம் என விளம்பரம் பயிற்சி கட்டணம் எனும் பெயரில் சில ஆயிரம் பின்னர் ஆஞ்சனா மை வாங்கி கொள் என சில ஆயிரம் எதேனும் ஒருபட்டம் “ ஜோதிட பூஷன் .ஜோதிடரத்னா, ஜோதிஸ்சிரோண்மணி ‘ என பெயருக்கு முன்னால்  ஒரு பட்டம் , அப்படி பட்டம் வாங்கியவரால் சரியான பலன்  சொல்ல முடியுமா? முகநூலில் கூட நான் மூலநட்சத்திர பெண்ணும் மகநட்சத்திர ஆணும் திருமணம் செய்ததை பற்றி எழுதினேன், நண்பர் தீர்த்தகிரி வெங்கடேஷன் அவர்கள் கூட அதை ஆதரித்தார், ஆனால் பெரும்பாலான ஜோதிடர்கள் அதை லைக் கூட செய்யவில்லை.காரணம் அவர்களுக்கு அதை பற்றி தெரியாது என்பதே உண்மை ஆகும், தவிர ஒரே திசை நடந்தால் அதை திசாசந்திப்பு எனவும் பழமையான ஆரோகண அவரோகணத்தை ஏற்று கொள்ள மறுப்பது, அதே போல் வேறு ஜோதிடரிடம் முன்னரே திருமணப்பொருத்தம் பார்த்து விட்டு வந்தாலும் நாடி முறையில் சரியில்லை சாரப்படி சரியில்லை , ஜாமக்கோள் படி சரியில்லை எனவும் [எண்கணிதப்படி சரியில்லை என்பதும் ] ஆள் ஆளுக்கு ஒருமுறையில் பயணம் செய்ய சொன்னால் பலன் காண வரும் நபர் பைத்தியகார ஆஸ்பத்திரிக்கு தான் போகணும், ஆசான் என கூறிக்கொண்டு இருக்கும் பலருக்கு நான் வாரசூலையை பற்றி கேட்க யாருக்கும்ட் தெரியவில்லை ஆனால் தேடிபிடித்தேன் படித்தேன் பதிந்தேன் முகந்நூலில், அதைக்கூட பிராமணர் பக்கம் ஷேர் செய்து ஆதரித்தது, 
நான் யாரையும் குற்றம் கூறவரவில்லை , ஆனால் 10 பொருத்ததை போட்டு குழப்பாதீர்கள்!
நன்றாக பலனை அறிய வேண்டும் எனில் முதலில் ஜோதிடத்தையும் கணிதத்தையும் அடிப்படையில் இருந்து பயில வேண்டும் என பதிந்து நண்பர்களிடம் பகையை தேடி வைத்து விட்டதோ என எண்ணத்தோன்றல் வருகிறது, 

வாக்கியம் கோவில் வழிபாட்டுக்கு மட்டும் தான்,  திருக்கணிதம் மனித குல ஜாதக கணிப்பிற்க்கு  என்பதை மனதில் கொள்ளவும்

பழமையான பலமூல நூல்களை பாடல்களை தேடிப்பிடித்து ஜோதிஸ் ஜாம்பவான்கள் தற்க்கால நடைமுறைக்கு ஏற்ப்ப புதுபித்தால் போதும் ஜோதிடம் நன்கு வளரும் அதை விட்டு தான் நடத்தும் ஆறுமாத ஜோதிட பயிற்சி என்பது ஜோதிடத்தை வளர்த்தாது அதை நடத்தும் நபர்களை வேண்டுமானால் வளர்த்தும் 
அப்படி ஆறுமாதத்தில் படித்து விட்டு என்னைக்காண வந்த ஒருநபருக்கு ராசிகட்டமும் அம்ஷ நிலையும் கூட கணிக்க தெரியாமல் திணறிப்போனார், 
ஜோதிடக்கலை வளரவும் இனி வருங்கால ஜோதிடர்களை வளப்படுத்தவும் பழைய மூலநூல்களை மிகசிறந்தது ,இந்த ஆறுமாத பயிற்சி அல்ல!
பலமுனை கேள்விகள் வரலாம் ஆனால் மனதில் பட்டதை சொல்லிதானே தீரணும்?

Thursday 21 November 2013

திசாபுக்தி துரிதமாக கணிக்க எளிய முறை

இப்போது எல்லாம் ஜோதிடம் புதியதாக பயில்வோர் மட்டும் அல்ல 
அனுபவமாக ஜோதிடம் பார்ப்பவர்களும் சில நேரம் திசா புக்தியை கணிக்க தடுமாறியதை கண்டு இருக்கிறேன். எளிய முறையில் திசாபுக்தி கணிக்க கால்குலேட்டர் அவசியம் 
முதலில் சூர்ய திசையை காண்போம், 
சூர்யதிசை ஆனது 6 ஆண்டு அதன் ஆரம்பம் சூர்ய புக்தி கணக்கிடுவது 
திசாநாதன் 6 புக்தி நாதன் 6 [அதாவது திசையின் கால அளவிட] 
6x6= 36 விடை  ஆகிறதா? அதில் 3 க்கும் 6 க்கும் இடையே ஒருபுள்ளி வைக்கவும். சரி இப்போது கணக்கிடுவோம் முன்னால் இருப்பது 3 மாதம் அதாவது சூர்யதிசை சூர்யபுக்திக்கு பின்னால் இருக்கும் 6 இருக்கிறதா? அதை 6 X3 பெருக்கவும் அது 18 ஆகமாறும் சரியா ? இப்போது அந்த முன்புறம் இருக்கும் 3 மாதத்துடன் இந்த 18 நாட்களை இணைக்க இப்6 Xபோது சூர்யதிசை சூர்யபுக்தி 3 மாதம் 18 நாட்கள் ஆகும், அடுத்தது சந்திரபுக்தி வரும் அல்லவா/?
இப்போது சூர்யதிசை 6-யை சந்திரபுக்தி 10 பெருக்க வேண்டும் அதன் விடை 6 X10 = விடை 60 ஆகிறது முன்புறம் இருப்பது மாதம் பின்புறம் நாட்கள் இல்லை இப்போது சூர்யதிசை சந்திர புக்தி 6 மாதம் ,
அடுத்தது செவ்வாய் புக்தி அதற்க்கு 6 X 7 [ செவ்வாயின் 7 வருஷத்தால் பெருக்க வேண்டும் ]
6 X7 = 42 விடையாகும் 4க்கும் 2 க்கும் இடையே புள்ளி வைத்து முன்புறம் இருப்பது மாதம் பின்னால் இருக்கும் 2-யை 3ல் பெருக்க வருவது நாட்கள் ஆகும், ஆக சூர்யதிசை செவ்வாய் புக்தி 4 மாதம் 6 நாட்கள் 
சூர்யதிசை 6 ராகுபுக்தி 18  அதை  6 X 18 = 108 விடை ஆகும் முன்னால் இருப்பது10 மாதம் பின்னாலிருக்கும் 8 யை 3ல் பெருக்கி வருவது நாட்கள் = 24 ஆகும் ஆக 
சூர்யதிசை ராகுபுக்தி 10 மாதம் 24 நாட்கள் ஆகும், 
6 X6= 36
6 X10=60
6 X7=42
6 X18=108
6 X16=96
6 X19=114 
6 X17=102 
6X7=42
6X20=120 
அடுத்தது சந்திரதிசை அல்லவா?
10x10=100
10x7=70
10x18=180
10x16=160
10x19=190
10x17=170
10x7=70
10x20=200 இதில் நாட்கள் அமையாது அனைத்தும் மாதமே அடுத்தது செவ்வாய் திசை அதை திசாநாதனும் புக்திநாதனும் கொண்டு கணக்கிட
7x7=49 
7x18=126
7x16=112
7x19=133 
7x17=119
7x7=49 
7x20=140
7x6=42
7x10= 70
இதில் பின்புறம் வரும் எண்களை நாட்களாக கணக்கிட 3 ல் பெருக்கி கணக்கிடவும் ஆக 
சூர்யதிசை ஆறு வருஷம் 
சந்திரதிசை பத்து வருஷம்
செவ்வாய்திசை எழுவருஷம் என கணக்கீடு சரியாகவரும் இதைபோல இனி வரும் திசைகளை கணக்கிட்டு கொள்ளவும் 


             
  



 

ஜோதிடம் யாருக்கு அதிகமாக பலன் தந்தது?

ஜோதிடத்தில் பலன் காண நாம் அனைவரும் நவகிரஹத்தை மட்டும் வைத்து பலன் கண்டபோது இடையே ஒரு மூன்று கிரஹங்கள் வந்தது ,
அவை முறையே 

1]புளூட்டோ 2]நெப்ட்யூன்3]யுரோனஸ்

புளூட்டோ என்பது ஒருராசியில் குறைந்தது  15 ஆண்டும் அதிகளவு 32 ஆண்டும் என இருக்கும்
நெப்ட்யூன் என்பது குறைந்தது  ஒருராசியில் 14 ஆண்டுகள் இருக்கும்,
யுரோனஸ் என்பது ஒருராசியில் குறைந்தது 7 ஆண்டுகள் இருக்கும் இதை ஆங்கிலேயர்கள் நமது ஜோதிடத்தின் இடையே புகுத்தினர், நம்மில் பலருக்கும் அதில் அந்நிய மோகம் கொண்டு அதை பற்றியும் சற்று படிக்க முயற்சி செய்தனர் [ எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்பது போல] அதை பற்றி  1]புளூட்டோ &2]நெப்ட்யூன்3]யுரோனஸ் பலவிதமான ஜோதிட நூல்கள் எழுதப்பட்டு அதையும் நம்ம ஜோதிடர்களால் வாங்கி படிக்கப்பட்டு வந்தது, பின்னர் ஒருகால கட்டத்திலே நமது பஞ்சாங்க வெளியீட்டாளர்கள் & மற்றும் நமது தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியாவில் இருக்கும் அனைத்து ஜோதிடர்களும் கூடி இந்த மூன்றையும் கோள்களாக கணக்கிட கூடாது என முடிவெடுத்து மேலும் விஞ்ஞானிகளும் கூடி இந்த மூன்று கோள்களையும் நீக்கி விட்டனர், அது போல தான் அடிக்கடி ஏதாவது ஒன்று புதியதாய் வரும் பின்னர் காணாமல் போகும், 

ஆனால் எப்போதும் ஜோதிடத்தில் கணக்கிட பழமையான முறையே ஒத்து போகும்,


அதுதான் தொடர்ந்து வரும் முன்னர் எப்படி இந்த புளூட்டோ +நெப்ட்யூன்&யுரோனஸ் காணாமல் போனதோ அதுபோல் புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட முறை எனும் பெயரில் நமது ஜோதிடர் வட்டத்தில் பலன் கூற பயிற்சி முறை எனும் பெயரில் தனக்கு தானே பட்டமும் புகழாரமும் சூட்டி கொண்டு பலகுழுமம்   இன்னமும் எந்த எந்த பெயரிலோ பட்டம் வைத்து கொண்டு  அவர்களை முகதுதி பாட தனியாக சிஷ்யர் கூட்டம் அமைத்தும் தமிழகத்தில் பயிற்சிமுகாம் அமைத்து ஜோதிடர்களை குழப்பி கொண்டு தான் இருக்கிறது, அது அவர்கள் பிழைக்க வழியாக வேண்டுமானால் சரியாக இருக்கலாம் 



புதியதாக பயில விரும்பும் ஒரு ஜோதிடர் தன் குரு நாதர்  அவர்களை நம்பி சென்று படிப்பதையும் பார்க்கிறோம், ஜோதிடத்தில் சீக்கிரம் பணம் பார்க்க வேண்டும் எனும் வேகம் இப்படி சொல்லி கொடுப்பவரிடமும் இருக்கிறது, கற்று கொள்ள செல்பவர்களிடமும் இருக்கிறது, ஆனால் நமது பாரம்பரியமான ஜோதிட அணுகுமுறை பற்றி கற்று கொடுப்பவருக்கும் தெரியாது, கற்று கொள்ள சென்றவரிடமும் இருக்காது, அதனால் முறையான ஜோதிடம் புதியதாக படிப்பவருக்கு தெரியாமல் போய்விடுகிறது, இவர்களுக்கு தேவை சீக்கிரமாக “ஜோதிடராக” பணம் சம்பாதிக்கணும் அவ்வளவே எண்ணம் .. இது எல்லாமே மூன்று வாரத்தில் கருவா பொண்ணு சிகப்பழகி ஆக்குகிறேன் எனும் விளம்பரம் செய்யும் “முகசாயம் வியாபாரிகளே!! எப்படியோ கொஞ்சம் காலத்தில் இவர்களை நம்பி போகும் சிஷ்யர்களுக்கும் “முகத்தில் பூசுவார்கள் “””

பின்னர் இந்தமுறையும் ஒருகாலத்தில் புறக்கணிக்கப்படும்,ஆனால் வாக்கியமோ திருக்கணிதமோ அதை பின் பற்றி கணிதம் போட்டு பயிற்சி முறையாக படிபடியாக அனுபவம் வர குறைந்தது 1 முதல் 3 ஆண்டுகள் வரை கற்று கொள்பவரின் ஆர்வம் பொருத்து காலதாமதம் ஆகலாம், தாமதம் ஆனால் தான் என்ன முறையே கற்று கொள்ளலாமே?பின்னால் பலன் தரும்  இல்லை எனில் புதியாதாய் புதுமுறையை கற்று தருகிறேன்  என்பவர்களுக்கு மட்டுமே ஜோதிடம் அதிக லாபம் தரும் என்பதே மறுக்க முடியாத உண்மை இதை நான் எப்போதோ சொல்லியது திரும்ப சொல்ல வேண்டிய சூழல்கள் இன்றும் இருக்கிறது 

Sunday 10 November 2013

ஜோதிடத்தில் பிரச்சனம் கணிக்கலாம்

 

பலன்காணஅன்பர்கள்  வரும்போது அப்பப்போது நடக்கும் பிரசன்ன விஷயம் மற்றும் நிமித்த சாஸ்திரம் போன்றதே ஜோதிடர்களால் சில விஷயம் அனுமானிக்க முடியும்,என்பால் மிகுந்த அன்பு வைத்து ஜோதிடம் பார்க்க வந்த அன்பர் ஒருவர் [ வெள்ளோடு பக்கம்] அவரின் பெண்ணுக்கு அமைந்த வரன் சுமார் 6 மாதம் இழுத்து அடித்து பின் ஒருநாள் ஏற்பாடு ஆனது, பொருத்தம் பார்க்கவே 50 முறை வந்த மனிதர் ,அவர் தன்மகளுக்கு அமைந்த மாப்பிள்ளை பையன் வீட்டாரோடு வந்து அமர்ந்த போது [ என்னை ஒருநண்பர்  தனது சித்தப்பா இறந்து போனதை சவம் எடுக்க எந்த நேரம் என செல்போனில் நேரம் கேட்டார், இது எதிரில் அமர்ந்து இருந்தவர்களுக்கு தெரியாது, நானும் குளிகை காலம் தவிர்த்து நேரம் சொன்னேன், பின் முன்னால் அமர்ந்து இருப்பவர்களை கவனிக்க அவர்கள் இரு ஜாதகத்தையும் [ முன்னமே பொருத்தம் பார்த்தது தான் அதை கொடுத்தனர், நான் பஞ்சாங்க கணிதம் இட்டு 7 மாதம் தள்ளி [ சென்ற கார்த்திகையில் ] ஆனிமாதம் நாள் குறித்தேன், ஆனால் மாப்பிள்ளை பையனோ மாசிக்கு முகூர்த்தம் கணிக்க சொன்னார், நான் அது பெண்ணின் ஜென்ம மாதம் அதை நான் கணிக்க மாட்டேன் என சொல்லி விட்டு ஆனிதான் தாராபலம் சிறப்பு எனச்சொல்ல அந்த மாப்பிள்ளை பையன் தனக்கு தெரிந்த ஜோதிடருக்கு போன் போட்டுஎன்னிடம் நீட்டி அவரிடம் பேசுங்க” என சொன்னார், நான் மறுத்து விட்டேன், நீங்க வேறுபக்கம் வேண்டும் என்றாலும் நாள் கணித்து கொள்ளுங்க ஆனால் நான் பெண்ணின் ஜென்மமாதத்தில் கணிக்க மாட்டேன் என சொல்ல அந்த மாப்பிள்ளை பையனோ மாசிதான் திருமணம் அமைக்கணும் வாங்க எங்க ஜோதிடரிடம் போகலாம் என்றார், பெண்ணின் அப்பாவுக்கோ தர்மசங்கடம் ஆகிப்போனது, “ அவர் ஜோதிடரே நீங்க தான் மாசியில் முகூர்த்தம் கணித்து தாருங்க நாங்க முதலில் இருந்தே உம்மிடம் தானே பொருத்தம் பார்த்தேன்,முகூர்த்தமும் நீங்களேகணியுங்க என சொல்லியும் நான் ம்றுத்து விட்டேன், பின் வேறு ஜோதிடரிடம் சென்று முகூர்த்தம் கணித்து “மாசித்திருமணத்திற்க்கு நானும் சென்றேன் , நாட்களும் ஓடியது , ஆனால் திருமணம் முடிந்து வைகாசியில் பெண்ணின் தகப்பனார் ”ஹார்ட் அட்டாக்” வந்து போய் விட்டார், இதுபோல அசம்பாவிதம் ஏதேனும் தோன்றும் என மனதில் எனக்கு ஈசன் அருளால் அந்த நேரத்தில் சவம் எடுக்க ஒருத்தர் போன் செய்தார் அல்லவா? அந்த இறந்து போனவருக்கு காலாஷ்டமி 6 மாதம் இருந்தது, அதை கொண்டே நானும் திருமண தேதி கேட்க வந்தவர்களை 6 மாதம் காலாஷ்டமி கணக்கிட்டு தள்ளி இடையே பல சுபமூர்த்தம் இருந்தும் ஆனிமாதத்தை சொன்னேன், ஆனால் விதி என் வாடிக்கையாளர் வெள்ளோடு கவுண்டிச்சிபாளையம் சுப்ரமணி [நாடார்] அவர்களை விட்டு வைக்கவில்லையே? என்ன செய்ய ? அதனால் புதியதாய் ஜோதிடம் பழகிவருவோர்கள் ‘ஜோதிடம் பார்க்க அன்பர் வந்தபோதும் சற்று முன்னரும் என்ன நடந்தது என்பதை கொண்டே அனுமானிக்கலாம் என்பதால் இப்பதிவு

Thursday 7 November 2013

அஷ்டவித விவாஹங்கள் [8 விதம்]

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கையில் பண்பும் பயனும் அது

அவ்வாறு இல்வாழ்க்கையை சிறக்க இல்லாளின் பங்கு மிக அவசியமாகிறது, 

1) ப்ராஹ்மம், 2) தைவம்,3)ஆர்ஷம்,4) ப்ராஜாபத்யம், 5) ஆஸுரம்

6) காந்தர்வம் 7) ராக்ஷஸம் 8) பைசாசம் அதன் விபரம் :-

1)ப்ராஹ்மம் என்பது ஒழுக்கமும் கல்வியும் நற்க்குடிபிறப்பும் இளமையு அழகும் கொண்ட மணமக்களை முறைப்படி கன்யாதானம் செய்து மணம் முடிப்பது ப்ராஹ்மம் ஆகும், 

2) தைவம் என்பது யாகங்களில் இளமையும் அழகும் கொண்ட மணமகனை தேர்வு செய்து தன் பெண்ணை கொடுப்பது தைவம்ஆகும் 

3)ஆர்ஷம் என்பது மணமகன் தனக்கு பெண் தர மணமகளின் தகப்பனுக்கு பசுவும் கன்றும் அல்லது இரண்டுகாளை மாடு கொடுத்து பெண்ணை திருமணம் செய்வது 

 4) ப்ராஜாபத்யம் என்பது நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு வேதத்தற்க்கு கட்டுபட்டு தர்மபடி வாழச்சொல்லி கன்னிகையை தானம் செய்வது  ப்ராஜாபத்யம் ஆகும்,

5) ஆஸுரம் என்பதுதன்வீட்டுக்கு தெரியாமல் மணமகன் பெண்ணின் தந்தை அல்லது அவள் உறவுக்கு பணம் அதிகம் தந்து மணம்முடிப்பது ஆஸுரம் ஆகும்

6) காந்தர்வம் ஒரு ஆணும் பெண்ணும் ஒருவர்மேல் ஒருவர் காதல் கொண்டு காமத்தில் தாலிகட்டாமல் உறவு கொள்வது என்பது காந்தர்வம் ஆகும்

7) ராக்ஷஸம் என்பது ஒரு பெண்ணின் மேல் ஒருதலைக்காதல் கொண்டு அவளை உறவினர்கள் தடுத்தும் உறவினர்களை  துன்புறுத்தி பெண்ணையும் துன்புறுத்தி தூக்கி சென்று “பலாத்காரம் “ செய்ய அது ராக்ஷஸம் ஆகும் 

கடைசியாக வருவதுதான்

8) பைசாசம் என்பது உறங்கி கொண்டு இருப்பவளையோ அல்லது மயக்கத்தில் இருப்பவளையோ  இயல்பாக மனநிலை சரியில்லாத பெண்ணையோ அல்லது ஒழுக்கம் இல்லாத பெண்ணை பலவந்தமாக உறவு கொள்வது ,அவ்வாறு செய்பவன் பாவிகளுக்குள்ளும் மஹாபாவியாகி விடுகிறான் என மனுதர்ம சாஸ்திரம் சொல்கிறது 

[ நன்றி :- அம்மன் தரிசனம் 2011 தீபாவளி மலர் ]




Thursday 31 October 2013

பெயர் நாம நட்சத்திரமும் & எண்கணிதமும்

ஜோதிடப்படி நட்சத்திர அடிப்படையும் உடன் எண்கணிதமும் இணைத்து பார்த்து உடன் பிரமீடு சோதனையும் செய்து தான் நிறுவனத்துக்கும் இல்லத்துக்கும் பிறந்த குழந்தைக்கும் பெயர் சூட்டணும் அதே போல் சுய பரிசோதனையும் ஆகாது பக்கத்தில் இருக்கும் ஜோதிடரை அணுகவும் 

அது தான் பின்னிட்டு பெயர் மாற்றம் செய்யாமல் வைக்கும் பெயரே நிலைத்து இருக்கும்  படி முன்னரே நாம் திட்டமிடல் வேண்டும்

உதாரணத்திற்க்கு இணைப்பை காண்க

Wednesday 30 October 2013

ஜோதிடத்தின் ஆதிமூலம் நான்கு வேதங்களே

1, ரிக்வேதம் 
2, யஜூர்வேதம். 
3, சாமவேதம். 
4அதர்வண வேதம். இதை உள்ளடங்கி செல்வது என்ன ? 
மனிதனுக்கு உடல் உறுப்பு போல வேத்திற்க்கும் ஆறு உறுப்பு உள்ளது! அவை என்ன? 
1, சிட்சை:-இது வேதம்,வேதாங்கம், தர்க்கம், மீமாம்சை,அரசியல், மனுநீதி முதலியது இதில் 
அடக்கம் [ படிப்பியல்] 

2, கல்பம்:- மந்திரப்பிரயோகம், மருத்துவம் சார்ந்தது ஆகும். 

3,நிருக்தம்:- இது மொழியியல் ஆகும் பேசும் பாஸை பயிலும் மொழி முதலியது, 

4, வியாகரணம்:- இது இலக்கண முறை தமிழ், ஆங்கிலம் B.A.LIT போன்றது, 

5, சந்தஸ்:- இது நாட்டியம் ,நாடகம் , நடிப்பு பயிற்சி, 
[ பாஸையின் நடை ] போன்றது! 

6, ஜோதிஷம்:- [ கண்கள்] 1200 ஆண்டுக்கு முன்பு இதைபற்றி பாஸ்கராச்சாரியார்,சாஸ்த்திரத்தின் ”சப்த சாஸ்த்திரம் முகம், ஜ்யோதிஷம் சஷுஷி, சீரோத்ர முக்தம், நிருக்தம்,,கல்பஹகரெள, யாதுராஸ்யவேதஸ்ய,ஸாநாஸிகா, பாதபத்ம த்வ்யச்சந்த ஆத்யெளபுதைஹி” என்றார். 
அதன் பொருள்;- வேதம் புருஷனின் முகம், இலக்கணம், கண்கள் ஜோதிஷம் [ ஓளி] , செவிகள் நிருத்தம், கைகள் கல்பம் , சிட்சை:-[படிப்பு] அவனது மூக்கு, மற்றும் சந்தஸ் அதின் பாதம் ஆகும், ஆக மனிதனுக்கு கண்கள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் வேதத்திற்க்கு கண்கள் ஜோதிடம் அவ்வளவு முக்கியம், அதை சற்று திறம் பட படித்து ஜோதிடம் பார்ப்பவர்கள் தான் காலம் கடந்தும் பேசப்படுவார்கள், 
இதை படிக்கும் ஜோதிடம் பயிலும் நண்பர்கள் தேர்ந்த ஆசான் கொண்டு படிப்பதும் பின் ஜோதித்தின் மூலம் புகழ் அடைவது நல்லது! எதேனும் ஒரு கலைமன்றம் “ ஜோதிஸ்சிரோன்மணி” ஜோதிடரத்னா- ஜோதிடகலாமணி -என பட்டம் பணம் கொடுத்து வாங்குவதை விட மக்கள் ”இவர் மிக நல்ல ஜோதிடர்” என புகழ் தருவதே சிறந்தது, 

8 ஆண்டு முன் எனக்கும் தன் சபாமூலம் சென்னையில் பட்டம் தருகிறேன் எனவும் அதற்க்கு கலைமன்ற நன்கொடையாக பணமும் கேட்டனர் ,” நான்.எனக்கு அது தேவை இல்லை என சொல்லி விட்டேன்.” 
பட்டயத்தால் அதை ஆபீஸ்ல மாட்ட்டுவதால் ஒரு ஜோதிடன் புகழ் ஓங்காது! படிக்கணும்! படிக்கணும்! படிக்கணும்! படிக்கணும்! ”ஜோதிடத்தை சாக மட்டும் ”படிக்கணும்!

லக்னகணிதம் சுலபமாக பழக சிறுகணக்கு

பொதுவாக லக்னம் கணிக்க இப்போது ஜோதிடம் கற்பவர்களுக்கு நாழிகை அளவீடு செய்ய தடுமாற்றம் கொள்கிறார்கள், அது மிகவும் சுலபமானதே! 
அது எப்படி எனில் உதாரணமாக ஒருகுழந்தை மதுரையில் இரவு 9 மணி 55 நிமிஷத்திற்க்கு பிறக்கிறது எனவைத்து கொண்டு கணிக்கிடுவோம், நல்லிரவு முதல் ரயில்வே மணிப்படிகணிக்கிட இரவு 9.55 p.m. ஆனது சரியான மணி 21 மணி 55 நிமிஷம் ஆகிறது, அதில்உதாரணமாக மதுரையில் சூர்ய உதயம் காலை 6 மணி 09 நிமிஷம் அதை கழியுங்கள் .விடை மீதி 15 மணி 44 நிமிஷம் வரும், சரியா? அதில் 15 மணியை நிமிஷமாக்கவும் கால்குலேட்டரில் 15x60 = 900 விடை அத்துடன் மீதி 44 நிமிஷத்தை கூட்டிக்கொள்ளவும் விடை900+44= 944 அதை கால்குலேட்டரில் ஒருநாழிகை என்பது 24 நிமிஷம் அல்லவா? அதனால் 24 ல் வகுத்து பாருங்கள் விடை என்ன வரும் ? 39.33 அல்லவா? இப்போது முன்புறம் இருக்கும் 39 என்பது நாழிகை பின்புறமாக இருப்பது 33 சதம் அதை 60 விநாழிகை கொண்டது 1 நாழிகை என்பதால் 33 சதம் என்பது 20 விநாழிகை ஆக்கி கொள்ளவும் . இப்போது அந்த குழந்தை பிறந்தது சூர்ய உதயாதி தொடங்கி 39 நாழிகை 20விநாழிகையில் குழந்தை சுபஜெனனம் என்பதே சரியான நாழிகை கணிக்கீடு ஆகும்,சூர்ய உதயம் வரை சென்ற மணிதுளிகளை நாம் 00.00 மணி முதல் கணக்கிட்டு பின்னர் குழந்தை  பிறந்த நேரம் வரை கணக்கிட்டு மணிகளை நிமிஷங்களாக்கி மீதி நிமிஷத்துடன் கூட்டி அதை வகுத்தல் 24 ல் செய்து பார்க்க முன்னிட்டு வருவது நாழிகை பின்னிட்டு வருவது விடையை 100 யை 60 ல் வகுத்து வருவது போல கணக்கிடவும் 10 எனில் 6 விநாழிகை எனில் 33 எனில் 20 விநாழிகை 66 எனில் 40 விநாழிகை எனும் முறையில் கணக்கிடலாம்

ஜோதிடத்தில் எண்களின் ஆதிக்கம்

ஜோதிடத்தில் எண்கள் ஆதிக்கம் மிகவும் இன்றியமையாதது! 

நவகிரஹம் மட்டும் மனிதகுலத்தை ஆட்டுவிக்கவில்லை! நவகிரஹங்களின் எண்களும் மனிதகுலத்தை ஆட்டுவிக்கிறது!

சிலர் தனது பெயரை மாற்றம் செய்து வெற்றிகண்டவரும் உண்டு!

அதேநேரம் சிலர் தனது நிறுவனத்தை பெயர் மாற்றம் செய்து தொழிலையே தொலைத்து போனவர்களும் உண்டு!

ஆகையால் ஒருகுழந்தைக்கு பெயர்வைக்கவும்!                                                        [  நட்சத்திரம் அடிப்படை மற்றும் எண்கணிதம் & பிரமீடு ஆகிய சோதனைக்கு உட்படுத்தி தான் [ name ] பெயரை பார்க்கணும் ]                   தவிர  இச்சோதனையை கவனித்து செய்ய தக்க ஜோதிடரை அணுகி ஆலோசனை பெற்றே செய்ய வேண்டும், தவிர சுயபரிசோதனையை நானும் கணிதநிபுணன் என தனக்கு தானே சோதித்துக்கொள்ள கூடாது!அதனால் பதிப்பு சம்பந்தப் பட்டவருக்கு தான் எனபதை மனதில் கொள்ளவும் 
                                            

Monday 28 October 2013

மாந்தியும் சனியும்

மாந்தியிடம் முதலில் அறிமுகம் ஆகி கொள்வோம்! 

மாந்தியை சனியின் மகனாக குறிப்பிட்டு உள்ளனர்,சனிதான் வலிமை குன்றிய கிரஹம் ஆனால் சனியை கண்டு நடுங்காதவர்கள் இல்லை எனலாம், இலங்கை அதிபன் ராவணன் முதல் நளமஹராஜா வரை சனியின் உபத்திரவத்துக்கு ஆட்பட்டவர்எத்தனைபேர்?

சனியின் பார்வை மிக கொடிது! இராவணன் நவக்கிரஹங்களை குப்புற கவிழ்த்து அரியணை ஏறியபோது . நம்ம நாரதமுனிவர் “ முதுகில் ஏறுவது வீரனுக்கு அழகில்லை, அதனால் மார்பில் ஏறி நட” என சொல்லி உசுப்பேற்றி நவக்கிரஹங்களை மல்லாக்க போட்டு ஏறி நடந்தான் இராவணன். சூரியன்,சந்திரன்.செவ்வாய்.புதன்,குரு,சுக்கிரன் மீது கால் வைக்க எதுவும் ஆகவில்லை,ஆனால் சனிபகவானின் மீது கால் வைக்கும்போது சனியின் பார்வை பட்ட்து, அதனால் வலிமை குன்றினான் இராவணன். பின்னாளில் ராமனிடம் தோற்றான்.

இப்படிபட்ட சனி இராவணன் மிகவலுவாக இருந்த நேரத்தில் அவனுக்கு பிறக்கும் குழந்தை இந்திரஜித்தால் உலகம் அழிவைத்தேடும் அனைவரும் அழிவர் என அதைதடுக்கும் பொருட்டு சிறையில் நவக்கிரஹங்கள் அடைக்கப்பட்டு இருந்தநேரத்தில் சனிபகவான் தன் உடலில் உள்ள அழுக்கை எல்லாம் திரட்டி [குளிகை] வெளியே போட அது இந்திரஜித் ஜாதகத்தில் லக்னத்தில் விழுந்தது, அதனால் இந்திரஜித் தலை சிதறி இறந்து போனான், இந்தமாந்தி எங்கு நிற்க்கிறதோ[ ஜெனன ஜாதகத்தில் ] அந்த இடம் காராகோபவ நாஸ்தி என பொருள் கொள்க! அழிவிற்காக தோற்று விக்கப்பட்ட்து மாந்தி அதனால் மாந்தியால் நற்பலன் ஏற்பட வாய்ப்பு இல்லை, 

குருவிற்க்கும் சனிக்கும் நாரதர் சண்டை ஏற்படுத்தி அதில் கீழே சனிபகவான் விழுந்ததால் ஏற்ப்பட்ட ரத்தத்தில் உருவானவன் மாந்தி எனவும் புராணகதை உண்டு!

கூண்டோடு மரணம் அமைவது கூட இந்த மாந்தியால் தான் [ சுனாமி& பூகம்பம் போன்றது ] விபத்தில் இப்படி மரணம் அடைந்தால் அந்த ஆவி 60 வயது வரை அலைந்து பின் மோர்சம் அடையும் என முனிவர்கள் சொல்லியுள்ளனர். விபத்தால் இறப்பவர்கள் ஒருசிலரின் ஜாதக அமைப்பு பலரை உடன் அழைத்து செல்கின்றனர். 

அதை பற்றி சர்வார்த்த சிந்தாமணி ஜோதிட நூலில் விளக்கம் உள்ளது!

இதர கிரஹங்களுக்கு இஷ்ட்தெய்வம் உள்ளது போல மாந்திக்கும் இஷ்டதெய்வம் துர் ஆவிகள் என முன்னோர்களால் குறிப்பிடபட்டுள்ளது! 


சூரியனுக்கும் சனிக்கும் இடைப்பட்ட தூரம் 148.8 கோடி கிலோ மீட்டர் ஆகு
ம். 

சனி சூரியனை சுற்றி வர எடுத்து கொள்ளும் கால அளவு 29 ½ ஆண்டுகள் ஆகும். சனி பூமியை விட 700 மடங்கு பெரியதாக இருந்தாலும் கனத்தில் 100 மடங்கு தான் உள்ளது. சனிகிரஹத்தை அம்மோனியா, மீதேன். ஹைட்ரஜன் ஆகியவை சூழ்துந்துள்ளது! கருநீலமான சனியை சுற்றி 9 உபகிரஹங்கள் உள்ளது! அதில் 8 கிரஹங்கள் அப்பிரதட்சிணமாகவும் ஒருகிரஹம் மட்டும் பிரதட்சிணமாகவும் சுற்றிவருகிறது! அந்த கிரஹம் பெயர் டைட்டன் [ titan] எனும் கிரஹம் பெயரிட்டு அழைக்கப்படுகிறது! வ இது மற்ற கிரஹத்தை விட அதிக தூரத்தில் உள்ளது! 7/10/2001 அன்று சனிக்கிரஹணம் ஏற்ப்பட்ட்து. அப்போது சனியின் துணை கிரஹம் ஆன டைட்டனுகும் கிரஹணம் ஏற்பட்ட்து! மாந்தியும் டைட்டனும் ஒன்றா என வரும் காலம் சொல்லும் நண்பர்களே!


திருமண பொருத்ததில் ஜோதிட ஆய்வு

திருமண பொருத்தம் பார்க்கும் போது கவனிக்க வேண்டியவை !
பெண்ணின் நட்சத்திரத்தை கொண்டு மட்டும் பொருத்தம் பார்ப்பதும்
பின்னர்  இருவருக்கும் ஏகதிசை நடந்தால் அதை திசைசந்திப்பு என்று சொல்லி அனுப்புவது நமது ஜோதிடர்களின் பழக்கமாக இருக்கிற்து,
ஆனால் இருவருக்கும் ஏகதிசை நடந்தால் அதை திசைசந்திப்பு என சொல்லி கொடுத்த குருநாதர்களை என்னவென சொல்வது?
திசைமாற்றம் என்பது இருவருக்கும் வேறு வேறுதிசை நடந்தாலும் பெண்ணுக்கோ ஆணுக்கோ முதலில் திசை மாறி [உதாரணம்: பெண்ணுக்கு சனிதிசை 12/04/2021 ல் மாற்றம் அதன்பின் ஆணுக்கு சூர்யதிசை 12/04/2022 க்குள் ]  மாற்றம் வந்தால் மட்டுமே திசை சந்திப்பு என்பர், இதைபற்றி நான் ஏற்கனவே முக நூல்லில் பதிந்து இருக்கிறேன், இதை பற்றி ஏதேனும் சந்தேகம் வந்தால் எம்மை தொடர்பு கொள்ள ஜோதிடரீதியான ஆய்வு கண்டு பலனுரைக்க சித்தமாய் உள்ளேன்,
என்றும் ஜோதிடபணியில்!
பெருந்துறை ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம் 

லக்ஷ்மி குபேர பூஜை

லஷ்மிகுபேர பூஜை செய்வது எப்போது?
தீபாவளியன்று லஷ்மிகுபேர பூஜையை நான் வீட்டில் நட்த்த வேண்டும் ,அன்று வீட்டை சுத்தம் செய்து அசைவம் சமைக்காமல் ஆச்சாரம் கடைபிடித்து செய்யவும்,
                              முதலில் ஸங்கல்பம் !
"ம்மோபார்த்த ஸமஸ்த துரிதஷயத்வாரா ஸ்ரீ பரமேச்"வர ப்ரீத்யர்த்தம்,கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதெள விக்னேச்:வர பூஜாம் கரிஷ்யே"
பின் பிராத்தனை!  பின் பூஜாரம்பம்! பின் ப்ராணாயாமம்!
அதன்பின் ஸங்கல்பம் பின் கலச பூஜை! அதன் பின் தான்
ஷோடச [16] மாத்ருகண பூஜை:-
ஓம் கெளர்யை நம: ஓம் ஸ்வதாயை நம:
ஓம் பத்மாயை நம; ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் ச"ச்யை நம: ஓம் மாத்ருப்யோ நம:
ஓம் மேதாயை நம: ஓம் லோக மாத்ருப்யோ நம:
ஓம் ஸாவித்ர்ய்யை நம: ஓம் த்ருத்யை நம:
ஓம்  விஜயாயை நம: ஓம்புருட்யை நம:
ஓம் ஐயாயை நம: ஓம் துஷ்ட்யை நம:
ஷோடசமாத்ருப்யோ நம:
என பூஜிக்க வேண்டும் அதை பற்றி "சம்ப்ரதாய விரத பூஜாவிதானம்"
எனும் நூலில் விவரிக்கப்பட்டுள்ளது,
இப்படி பூஜை நட்த்த வேண்டிய ஐப்பசி அமாவாஸை [ தீபாவளி ] அன்று நமது மக்கள் ஏன் தான் அசைவம் சமைத்து பழகினார்கள்?  என தெரியவில்லை,
லஷ்மிகுபேர பூஜை அன்று [ தீபாவளி] இனிப்பை இறைவனுக்கு படைத்து வழிபாடு செய்வீர்கள் ஆனால் வாழ்க்கையில் பொருளாதாரம் மேன்மைக்கு லஷ்மியும் குபேரனும் இல்லத்தில் என்பதே ஐதீகம் ,
வரும் தலைமுறையில் மாற்றம் அடைய நாமும் கொஞ்சம் பழக்கத்தை மாற்றி கொள்வது நல்லதே!
என்றும் இறைபணியில்
பெருந்துறை ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்
நமக்கு நோயற்ற வாழ்வைத்தரும் மருத்துவக்கடவுள் தன்வந்திரி பகவான் அவதாரதினம் ஆனது ,
வரும் ஐப்பசி மாதம் 15 தேதி [ 1/11/2013] வரும் வெள்ளி கிழமை ஆகும் , அந்தநாளில் மருத்துவ கடவுளை வணங்கி நோயற்ற வாழ்வு அமைய பிராத்தனை செய்யுங்கள் , நண்பர்களே! கிருஷ்ணபட்ஷ மஹாப்ரதோஷம் ஆகும், வேறேன்ன ? அதைவிட சிறந்த வெள்ளிகிழமை அமையுமா?
வழிபாடு செல்ல இன்றே திட்டம் இடுங்க !


Sunday 27 October 2013

திருமண முறிவு ஏன் ?

அடிக்கடி இப்போது திருமணம் பல மணமுறிவை சந்திக்கிறது!
பெண்களிடம் ஆணுக்கு அடங்கி செல்லும் சுபாவம் இல்லை!
தான் வேலை செய்யும் ஊருக்கு பையன் மாற்றல் வாங்கி வந்தால் திருமணம் என கட்டளை இடும் பெண்களும் அதிகம்,
" அந்த காலத்தில் சீதைக்கு ராமன் இருக்கும் இடம் அயோத்தி" என சொல்லப்பட்டது,ஆனால் இப்போ ?
சரி அதுபோக அப்போது எல்லாம் பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்ப பயப்பட்டனர், ஆனால் இப்போ தன் பெண்பிள்ளை வெளியூரில் வேலை பார்ப்பதை தான் பெருமையாக சொல்லி கொள்கிறார்கள் பெற்றோர் என்ன செய்ய கலிமுத்தி விட்டது,
என்னை பொருத்தவரை பெற்றோர்கள் தன் பிள்ளை [பெண்குழந்தை] கட்டி கொடுத்து கணவன் வீடு செல்லும் வரை வயதுக்கு வந்த பெண்களை எந்த பெற்றோர் தன் கண்காணிப்பில் வளர்த்துகிறார்களோ? அவர்களே தன் பிள்ளையின் நலனும் & பால் அன்புகொண்டோர்,
உதாரணத்திற்க்கு
தர்மபுரியில் இன்று ஒரு பெண் தன் தகப்பன் இறந்த தகவலை சொல்லி "கர்மகார்யம் செய்ய வீட்டுக்கு வா" என அழைத்தும் நீங்கள் என் காதலை பிரிக்க சதி செய்கிறீர்கள் நான் உங்களோடு வரமாட்டேன் காதலனோடு தான் செல்வேன் என்று காப்பகத்தில் இருந்தவள். 6 நாள் கழித்து நீதிமன்ற உத்திரவு செய்து போலீஸ் காவலில் எடுத்து தான் அவளின் தகப்பன் இறந்து போனபின் வீடுவருகிறாள். உண்மையிலே தன் தகப்பன் தான் ஒடிப்போனதை கண்டு தற்கொலை [அவள்தானே கொன்றாள்?] செய்து கொண்டது கண்டு "அய்யோ! தப்பு பண்ணிட்டேன்" என கதறுகிறாள், அவளும் வீட்டை விட்டு மகளீர் காப்பகம் வரமாட்டேன் என போலீஸிடம் கேட்க போலீஸ் நீதிமன்ற உத்திரவு படி " நீ எங்களோடு வா- காப்பகத்தில் விட்டு விடுகிறோம், பின்னர் கோர்ட் மூலம் நீ வீடுவரலாம் என சொல்லி விட்டனர் காவல் அதிகாரிகள், இனி வீடு வந்தால் தான் எப்படி அந்த பெண் தன் அம்மாவோடும் தம்பியோடும் வாழ்க்கை நடத்துவாள். என்னை பொருத்தவரை அந்த பெண்ணை சொல்லி குற்றம் இல்லை, அவளை செல்லம் கொடுத்து வளர்த்த பெற்றோரே இந்நிலைக்கு காரணம், பையனை தட்டி வளர்க்கணும் , பெண்ணை பொத்தி வளர்க்கணும் என சும்மாவா சொன்னார்கள் முன்னோர்கள்?
இதை எல்லாம் பார்க்கும் போது ஒருபலமொழி ஞாபகம் வருகிறது
"சும்மா கிடந்த சிட்டுக்கு குருவிக்கு சோற்றை போடுவானேன்?
அது கொண்டையை கொண்டையை ஆட்டிகிட்டு கொத்த வருவானேன்? "