Thursday 28 November 2013

வருஷ ஜாதக கணிதமுறை [[தஜகநீலகண்டீயம்]

தஜகநீலகண்டீயம் படி வருஷ ஜாதகம் கணிக்கும் முறையானது!

ஜனன சமயம் முதல் சென்ற வருஷம் வரை எத்தனை ஆண்டுகள் ஆயின என்று கணக்கிடவும், பிறகு வ்ருஷம் ஒன்றுக்கு 1 நாள் வீதம் கணக்கிடவும்,அதை இப்போது சென்ற வருஷத்துடன் கூட்டவும், இது பக்கம் இருக்கட்டும்,  
பிறகு அது வரை சென்ற வருஷங்களை 21 ஆல் பெருக்கி 60 ஆல் வகுக்க மீதிவருவது மணி நிமிஷம் முதலியது ஆகும், அத்தோடு ஜாதகன் பிறந்த நாளன்று கிழமை நாழிகை விநாழிகையை கூட்டவும்,அப்படி கிடைக்கும் மொத்தத்தை 7 ஆல் வகுக்க மீதிவருவது அந்த வருஷத்தின் ஆரம்ப தினமும் நேரமும் ஆகும், 
உதாரணம்: வருஷ ஜாதகத்தை கணிக்க பலகாலமாக செய்து வரும் முறையானது சூர்யசித்தாந்த அடிப்படையானது.
சூர்யசித்தாந்தப்படி ஒருவருஷம் என்பது:-365 நாட்களும் 15 நாழிகையும் 31 விநாழிகையும் 30 தர்பரை கொண்டது ஆகும்.
இதை ஏழால் வகுத்து ஈவு போக நின்றது 1 நாள் 15 நாழிகை 30 தர்பரை ஆகும், ஒருஜாதகன் 08/08/2012 ம் வருஷம் பிறந்ததாக வைத்து கணக்கிடுவோம், அவரது 2013 ம் வருஷத்திய பிறந்தநாளை கண்டுபிடிக்க ,மேற்படி வருஷத்துடன் 1 நாள் 15 நாழிகை 30 பரையைக்கூட்ட வேண்டும், இந்த ஜாதகரின் பிறந்த நாள் 09/08/2013 ல் வரும் , அத்தோடு அவர்பிறந்த நேரத்தை கண்டுபிடித்து  [ நாழிகைரீதியாக] அத்தோடு 15 நாழிகை 31 விநாழிகையை கூட்ட வேண்டும் 
இதை கண்டுபிடிக்க நீலகண்டர் சில சுலபமான வழிகளை எழுதி இருக்கிறார்.     
கிழமைகளுக்கு ஒவ்வொரு எண் தந்து இருக்கிறார்,
ஞாயிறு:1 
திங்கள் ;2
செவ்வாய்:3
புதன்:4
வியாழன்;5
வெள்ளி:6
சனி;7 [இதை எண்கணிதத்துடன் போட்டு குழம்ப வேண்டாம். இது நாட்களுக்கு உண்டானது மட்டுமே]
இதில் தஜக முறைப்படி ஒருபட்டியல் & நவீன விஞ்ஞான முறைப்படி ஒரு பட்டியல் நாளை மறுநாள் இணைக்கப்படும், காரணம் சூர்யசித்தாந்தப்படி 365 நாட்களும் 6 மணி 12 நிமிஷம் ஆகும், ஆனால் தற்போதைய திருக்கணிதப்படி 365 நாட்களும் 6 மணி 12 நிமிஷம் 36 செகண்டு ஆகும், அதனால் வருஷத்திற்க்கு 3 நிமிஷம் 24 செகண்ட் வித்தியாசம் ஏற்ப்படுகிறது, திருக்கணிதம் தான் சரி என தூரதிருஷ்டி கருவிகள் மூலம்  விஞ்ஞானமுறைப்படி இப்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதனால் இருமுறையும் நாளை மறுதினம் பதியப்படும்,  
ஆனால் இதை இதன் ஆசிரியர் சுமார் 500 ஆண்டுக்கு முன்னரே கணக்கீடு செய்தது தான் நம்மை பிரமிக்க வைக்கிறது,

நான் இதை கணிக்கீடு செய்ய முதலில் மிகுந்த சிரமமாகத்தான் இருந்தது, ஆனால் கணக்கிட கணக்கிட சற்று சுலபமாக இருக்கிறது, இதை நமது ஜோதிட நண்பர்கள் சற்று நுணுக்கமாக படிக்கவும்,இதன் படி பலன் காண்பது என்பதை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக எழுதப்போகிறேன், இக்கணிதமுறை மிகவும் நுணுக்கமாக எனக்கு வருஷ ஜாதகம் கணித்து தாருங்கள் எனும் வாடிக்கையாளருக்கு பயன்படும்,

குறிப்பு:-நான் எனது என் குடும்பத்தார் என [ சுயநலம்] கணக்கிட்டீர்கள் எனில் கணிப்பு வராது, அடியேன் இதுவரை ஜோதிடம் பயின்ற பின்னர் எனது ஜாதகம் குழந்தைகள் ஜாதகம் எதையும் கணிப்பதும் இல்லை.மற்ற நண்பர்கள் இடம் ஆலோசனையும் கேட்பதில்லை, அப்படி ஒருமன பக்குவம் வந்தால் தான் நீங்களும் புலமை அடைய முடியும் என்பதே நிதர்சனமான உண்மை!
என்றும் ஜோதிடப்பணியில் 
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம், பெருந்துறை

No comments:

Post a Comment