Wednesday 27 November 2013

வருஷ ஜாதகத்தை கணித்தவர்


  “தஜக நீலகண்டீயம்” இதன் ஆசிரியர் நீலகண்டர் சமஸ்கிருத பாஷையிலும் அரபி&பார்ஸி  பாஷையிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர்.

இவர் கார்க்கிய கோத்திரத்தில் பிறந்த பிராமணர் , தனது 30 வயதில்   “தஜக நீலகண்டீயம்”என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார்,இவர் தந்தை மூகூர்த்த சாஸ்த்திரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றவர், 

விதர்ப்ப தேசத்தில் தர்மபுரி என்ற ஊரில் ஆனந்த தெய்வக்ஞர்[தந்தை] பத்மா [தாயார்] ,நீலகண்டருடன் பிறந்தவர் ஸ்ரீ ராம தெய்வக்ஞர் இவரும் ஜோதிடத்தில் தேர்ச்சி பெற்றவர், 

நீலகண்டர் பிறந்தது கி.பி 1537 ம் வருஷம் என ஆண்டு பிறந்தவர், கி.பி 1567 ல் தான் இந்நூலை எழுதி இருக்கிறார், இதை இவர் எழுதிய போது இவர்தந்தை உயிருடன் இருந்துள்ளார், இவர் “தஜக நீலகண்டீயம்”எழுதும் போது மூன்று பாகங்களாக பிரித்து எழுதி அதில் பல இடங்களில் அரபி பார்ஸி வார்த்தைகளை பயன் படுத்தி இருக்கிறார், பல அறிய தகவல் நிறைந்தது இப்புத்தகம்

குறிப்பு:- இதை 02/07/1921 ல் பிறந்த புதுக்கோட்டை சமஸ்தான திருமணஞ்சேரியில் பிறந்த P.S.ஐயர் 1993 ல் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட முயற்சி செய்து அது வெளியிடப்படாமல் போய் அவரின் காலத்திற்க்கு பின் தான் வெளிவந்தது, 1000 பிரதிகளே முதல் பதிப்பு [அதில் ஒன்று அடியேனிடம் உள்ளது] 

தொடர்ந்து நான் அதில் சொல்லப்பட்ட விஷயங்களை புத்தகமாக வெளியீடு செய்வது சட்டப்படி குற்றம் என்பதால் சிறு சிறு ஜோதிடத்திற்க்கு தேவையான பகுதிகளை பதிந்தால் அதை சமஸ்கிருதத்தில் எழுதிய “நீலகண்டருக்கும்” தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட “P.S.ஐயர்” அவர்களின் நம்மால் செலுத்தப்படும் “குருமரியாதை” ஆகும். ஜோதிடர்களுக்கு ஜோதிட ஆய்வாளர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என கருதுகிறேன் , ஜோதிட நண்பர்கள் தனது கருத்தை சொன்னால் சற்று நல்லது,

2 comments: