Tuesday 3 December 2013

தாரம் தங்காத ஜாதகம் [ தாரதோஷ ஜாதகம் ]

இதுபோன்ற ஜாதகம் அமையப்பெற்ற ஜாதக ஜாதகிகள் எத்தனை முறை திருமணம் செய்தாலும் தாரம் தங்குவதில்லை , லக்னம் எது ஆனாலும் ஜாதகத்தில் 7 க்குடையவன் 8 க்குடையவன் மற்றும் பாதகாதிபதி ஆகியோர் ஒரே பாதக்காலில் செல்வது [கிரஹயுத்தம் ] ஜாதகர்களின் திருமண வாழ்வை மிகவும் பாதிக்கிறது, இதுபோன்ற ஜாதகம் அமையப்பெற்றவர்கள் முடிந்தளவு இரண்டாம் தாரமாக வாழ்க்கையை அமைப்பது நல்லது. இந்தஜாதகத்தில் 4 ல் கேது [சுகஸ்தானம்]நான்காம் அதிபதி அஷ்டமாதிபதி செவ்வாய் சாரம் , 7 [சுக்கிரன்] 8 [செவ்வாய்] பாதகாபதி [சனி] ஆகியோர் ஒரேபாதக்கால் எடுத்து அதில் சுக்கிரனும் சனியும் கிரஹ யுத்தம் செய்வதை பாருங்கள் . இதுதான் தாரதோஷம் என்பது, இச்சாதகனுக்கு இருமுறை திருமணம் செய்தும் மனைவி இவருடன் பிழைக்காமல் ஓடிவிட்டனர், மூன்றாவதாக மனைவியை தேடி வருகிறார் [ ஆனால் இனி “திருமணம் நடக்கும்” என்று என் மனதுக்கு படவில்லை ]

No comments:

Post a Comment