Friday 22 November 2013

ஜோதிடம் வளர்ச்சியா? வீழ்ச்சியா?

முன்னர் பழையகாலத்தில் ஜோதிடம் என்பது மிகவும் புனிதமாக பார்க்கப்பட்டது!

அன்றைய காலகட்டத்தில் பஞ்சாங்கம் கோவிலில் குருக்கள் வசம் இருந்தது, அவர்களை இறைவனுக்கு நிகராக இன்னமும் மக்களால் பார்க்கப்பட்டு வருகிறார்கள். அப்போது எல்லாம் ரச்சு இல்லாத திருமணமும் அவர்களால் கோவிலில் நடத்தி வைக்கப்பட்டது, கிணறு வெட்ட வீடுகட்ட ஜாதகம் இல்லாதவர்களும் அவர்களை நாட பூ வாக்கால் முடிவு எடுக்க பட்டது, 
காலப்போக்கில் பஞ்சாங்கம் வள்ளுவர்களிடம் வந்தது அவர்களும் அப்போது எல்லாம் ஆபீஸ் போட்டு தொழில் செய்ய முடியாது என்பதால் கிராமம் தோறும் வீடு சென்று பலன் பார்த்தனர் 
அது வரை  ஜோதிடம் மிக மிக புனிதமான கண்ணோட்டத்துடன் பார்க்க பட்டது,
இடையே தான் சில மாற்றம் படித்தவர்கள் பலரும் பஞ்சாங்கம் பிடிக்க ஆரம்பித்தனர் அதனாலும் பாதிப்பில்லை ஜோதிடம் நன்றாக வந்து கொண்டிருக்கிறது, 
இடையே எங்கே குழப்பம் வந்தது? என்றால் படித்த மக்கள் தனது வீட்டில் மகனுக்கோ மகளுக்கோ கடைவீதியில் விற்பனை ஆகிக்கொண்டிருக்கும் பொருத்த புத்தகத்தை எப்போது வீட்டில் வாங்கி வைத்தனரோ அப்போதே ஜோதிடம் கொஞ்சம் தடுமாற ஆரம்பித்து விட்டது, 
எங்கு வைத்து யாரிடம் ஜோதிடம் படித்தார்கள் வரன் வீட்டார் ?
ஆனால் பாருங்கள் ஒரு தொழில்முறை ஜோதிடரை போல் தன்னை காட்டி கொண்டு பேசுவதை 
திருக்கணிதமும் சரி வாக்கியமும் சரி யோனியோ ரச்சோ இல்லாமல் திருமணம் செய்யலாம் எனத்தான் சொல்லி இருக்கிறது.

ஆரோகண நிலைபாடு அவரோகண நிலைபாடு போன்றதை வைத்து இருவீட்டாரும் ஒத்துப்போனால் திருமணம் செய்யலாம் என சொல்லி இருக்கிறது
சிரசு ரச்சு :-புருஷனுக்கு ஆகாது [ சரி ஆயுள் பாவம் பார்த்து செய்யலாம்]
கண்டரச்சு :- ஸ்திரிக்கு ஆகாது [சரி ஆயுள் பாவம்   பார்த்து செய்யலாம்]
உதரரச்சு:- புத்திர நாசம் [சரி இருவரின் 5&9 பார்த்து பால் உள்ளவிருட்சமா என பார்த்து செய்யாலாம்]
தொடை ரச்சு :-செல்வநாசம் [ சரி இருவரின் 2&11 ஐ பார்த்து செய்யலாம்]
பாதரச்சு:-தேசாந்திரம் [சரி பூர்வீகத்தை விட்டு வெளியே தான் இருப்போமே] 

இப்படி தான் செல்கிறது ஜோதிட குறிப்புகள் ஆதாரம் பல உள்ளது. காலவிதானம் & கேரள ஜோதிடம் & 108 நவீன கோவில் வாக்கிய பஞ்சாங்கம் இதை பற்றி விரிவாக சொல்லி இருக்கிறது!
ஆனால் உண்மையில் நடப்பது என்ன யார் ஜோதிடரிடம் வந்து ரச்சு இல்லாத ஜாதகத்தை கொண்டு வருகிறார்கள்? அவர்களே வீட்டில் சுயபரிசோதனை செய்ய எது காரணம் கடை வீதியில் விற்க்கப்படும், குறிப்பாக சிவகாசிப்பக்கம் அச்சிடப்பட்ட சில பொருத்த புத்தகங்கள் 
அதை வாங்கி ஆதரிக்கும் மக்கள் தான் காரணம் இன்னமும் சொல்லப்போனால் அப்படிப்பட்ட புத்தகம் ஒன்றை பலன் காணும் ஜோதிடர்களும் நம்புவது தான் வேதனை தருகிறது, 
எனக்கு தெரிந்த ஜோதிட நண்பர் ஒருவர் யாராவது பொருத்தம் பார்க்க வந்தால் இருஜாதகமும் கையில் வாங்கி கொண்டு நட்சத்திரம் பார்த்து பின்னர் அந்த குறிப்பிட்ட புத்தகத்தை எடுத்து இரண்டும் பொருந்தி போகிறதா எனப்பார்த்து விட்டு தான் திசாசந்திப்பு கவனிப்பார் , அதுவும் அவர் குரு நாதர் சொல்லி கொடுத்த திசாசந்திப்பு என்பது ஏகதிசை தான் திசாசந்திப்பு என [அட ஈஸ்வரா] சொல்லி அனுப்பி விடுவார் நான் பலமுறை அவரிடம் சொல்லி விட்டேன் ஏகதிசை என்பது திசாசந்தி அல்ல என உடனே 2 நாட்களில் குருநாதரை போய்ப்பார்ப்பார்
விளக்கம் கேட்பார் குரு நாதர் உடனே யாருய்யா சொன்னது ஏகதிசை வந்தால் திசாசந்திப்பு தான் என சொல்லு என்பார்
நம்ம நண்பரும் நான் சொன்ன மாதிரியை  உதாரண திசாசந்திப்பை [ அகஸ்திய கணக்குப்படி ஆண் பெண் இருவருக்கும் 2015 ல் திசாமாற்றம் மாடல் கணிப்பு] கொடுத்துள்ளார், அந்த குரு நாதனுக்கு தெரியாது அதை பற்றி [ சரி என்னிடமாவது கேட்டு இருக்கலாம்] 
என்னால் கணிக்கப்பட்ட சீட்டை உற்று பார்த்த குருநாதர் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா? 
”தம்பி இதை கணித்தவனுக்கு ஜோதிடம் பற்றி தெரியாது போல் இருக்கிறது நீ நம்ம ரூட்லயே போ” என சொல்லி அனுப்பி விட்டார் 
இதே போக்கில் போனால் ஜோதிடமும் ஜோதிடத்தை நம்பி வாழ்வோரும் வீழ்ச்சி தான் அடைவோம் ,
வாருங்கள் அனைவரும் ஜோதிடத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வோம் 
குறிப்பு:- அதற்க்கு முதலில் வீட்டில் இருக்கும்  பொருத்த புத்தகத்தை புறக்கணிப்பீர்!
ஏகதிசையை திசாசந்தி என சொல்லும் ஜோதிடர்களையும் ரச்சு இல்லாமல் திருமணம் செய்தால் கணவன் மனைவிக்கு உயிருக்கு தீங்கு என சொல்லும் ஜோதிடர்களை புறக்கணிப்பீர்
ரச்சு இல்லாமல் திருமணம் செய்து உயிர் தீங்கு இல்லாமல் வாழும் பலதம்பதிகள் ப்க்கத்திலேயே இருக்கிறார்கள் 
ஜோதிஸ் என்பது வெளிச்சம் அதை நீங்களாக பார்த்து பார்த்து இருட்டுக்கு போகாதீர்கள் 
 

No comments:

Post a Comment