Sunday 10 November 2013

ஜோதிடத்தில் பிரச்சனம் கணிக்கலாம்

 

பலன்காணஅன்பர்கள்  வரும்போது அப்பப்போது நடக்கும் பிரசன்ன விஷயம் மற்றும் நிமித்த சாஸ்திரம் போன்றதே ஜோதிடர்களால் சில விஷயம் அனுமானிக்க முடியும்,என்பால் மிகுந்த அன்பு வைத்து ஜோதிடம் பார்க்க வந்த அன்பர் ஒருவர் [ வெள்ளோடு பக்கம்] அவரின் பெண்ணுக்கு அமைந்த வரன் சுமார் 6 மாதம் இழுத்து அடித்து பின் ஒருநாள் ஏற்பாடு ஆனது, பொருத்தம் பார்க்கவே 50 முறை வந்த மனிதர் ,அவர் தன்மகளுக்கு அமைந்த மாப்பிள்ளை பையன் வீட்டாரோடு வந்து அமர்ந்த போது [ என்னை ஒருநண்பர்  தனது சித்தப்பா இறந்து போனதை சவம் எடுக்க எந்த நேரம் என செல்போனில் நேரம் கேட்டார், இது எதிரில் அமர்ந்து இருந்தவர்களுக்கு தெரியாது, நானும் குளிகை காலம் தவிர்த்து நேரம் சொன்னேன், பின் முன்னால் அமர்ந்து இருப்பவர்களை கவனிக்க அவர்கள் இரு ஜாதகத்தையும் [ முன்னமே பொருத்தம் பார்த்தது தான் அதை கொடுத்தனர், நான் பஞ்சாங்க கணிதம் இட்டு 7 மாதம் தள்ளி [ சென்ற கார்த்திகையில் ] ஆனிமாதம் நாள் குறித்தேன், ஆனால் மாப்பிள்ளை பையனோ மாசிக்கு முகூர்த்தம் கணிக்க சொன்னார், நான் அது பெண்ணின் ஜென்ம மாதம் அதை நான் கணிக்க மாட்டேன் என சொல்லி விட்டு ஆனிதான் தாராபலம் சிறப்பு எனச்சொல்ல அந்த மாப்பிள்ளை பையன் தனக்கு தெரிந்த ஜோதிடருக்கு போன் போட்டுஎன்னிடம் நீட்டி அவரிடம் பேசுங்க” என சொன்னார், நான் மறுத்து விட்டேன், நீங்க வேறுபக்கம் வேண்டும் என்றாலும் நாள் கணித்து கொள்ளுங்க ஆனால் நான் பெண்ணின் ஜென்மமாதத்தில் கணிக்க மாட்டேன் என சொல்ல அந்த மாப்பிள்ளை பையனோ மாசிதான் திருமணம் அமைக்கணும் வாங்க எங்க ஜோதிடரிடம் போகலாம் என்றார், பெண்ணின் அப்பாவுக்கோ தர்மசங்கடம் ஆகிப்போனது, “ அவர் ஜோதிடரே நீங்க தான் மாசியில் முகூர்த்தம் கணித்து தாருங்க நாங்க முதலில் இருந்தே உம்மிடம் தானே பொருத்தம் பார்த்தேன்,முகூர்த்தமும் நீங்களேகணியுங்க என சொல்லியும் நான் ம்றுத்து விட்டேன், பின் வேறு ஜோதிடரிடம் சென்று முகூர்த்தம் கணித்து “மாசித்திருமணத்திற்க்கு நானும் சென்றேன் , நாட்களும் ஓடியது , ஆனால் திருமணம் முடிந்து வைகாசியில் பெண்ணின் தகப்பனார் ”ஹார்ட் அட்டாக்” வந்து போய் விட்டார், இதுபோல அசம்பாவிதம் ஏதேனும் தோன்றும் என மனதில் எனக்கு ஈசன் அருளால் அந்த நேரத்தில் சவம் எடுக்க ஒருத்தர் போன் செய்தார் அல்லவா? அந்த இறந்து போனவருக்கு காலாஷ்டமி 6 மாதம் இருந்தது, அதை கொண்டே நானும் திருமண தேதி கேட்க வந்தவர்களை 6 மாதம் காலாஷ்டமி கணக்கிட்டு தள்ளி இடையே பல சுபமூர்த்தம் இருந்தும் ஆனிமாதத்தை சொன்னேன், ஆனால் விதி என் வாடிக்கையாளர் வெள்ளோடு கவுண்டிச்சிபாளையம் சுப்ரமணி [நாடார்] அவர்களை விட்டு வைக்கவில்லையே? என்ன செய்ய ? அதனால் புதியதாய் ஜோதிடம் பழகிவருவோர்கள் ‘ஜோதிடம் பார்க்க அன்பர் வந்தபோதும் சற்று முன்னரும் என்ன நடந்தது என்பதை கொண்டே அனுமானிக்கலாம் என்பதால் இப்பதிவு

4 comments:

  1. எங்கள் பக்கத்தில் ஜென்ம நட்சத்திரம், ஜென்ம நாள் தான் திருமணத்திற்கு தவிர்ப்பார்கள்.
    நீங்கள் கூறிய பிரசன்ன குறிப்பு மிக தேவையே.
    >>பாலசுப்ரமணியன். வேலூர்

    ReplyDelete
  2. கண்டிப்பாக புதிதாக ஜோதிடம் பார்க்க துவங்குபவர்கள் நிமித்தங்களை அனுசரித்து பலன் சொல்வது சரியாக இருக்கும்..

    ReplyDelete