Monday 25 November 2013

கோச்சார சூரியன் பலன் தரும் நிலை

நவகிரஹ வட்டத்திற்க்கு சூர்யனே பிரதானம் !
அவர் தன் சஞ்சார நிலையில் பலன் தருவது பின்வருமாறு;-
ஜெனன கால ஜாதகத்தில் சூர்யன் தான் இருக்கும் இடத்திற்க்கு
வரும் காலம் ஒரு வருஷம் முடிவை குறிக்கும் ,
 அக்கால கட்டத்தில் ஜாதகரின் மனநிலை உற்சாகமாக இருக்கும் ,
இக்காலகட்டத்தில் புது முயற்சி வெற்றியை தரும்,
கடன் பெற இக்காலகட்டம் உகந்தது,
வியாபாரமுயற்சி கைகொடுக்கும் நிலை வரும்,

சூரியன் ஜாதகத்தில்தான் இருந்த இடத்துக்கு மூன்றில் வரும் காலம்
நமக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல சுலபமாகும்,
உழைத்து முன்னேறக்கூடிய கால கட்டம் ஆகும்,

அதே சூரியன் கோச்சாரத்தில் பிறந்த ஜாதகத்தில் தான் இருக்கும் இடத்துக்கு நான்கில் அல்லது பத்தில் வரும் காலம் கார் வைத்து டிரைவர் வைத்து இருப்பவர்கள் கூட தன் டிரைவரிடமே கடன் வாங்கும் சூழல் வந்து சேரும்,அப்படி சூழ்நிலை அமையும் மாதிரி பணக்கஷ்டமும் உண்டாக்கும்,

அதே சூரியன் ஐந்திலோ ஒன்பதிலோ சஞ்சாரம் செய்யும் காலகட்டம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் மனைவியுடன் “உறவு” வலுப்பெறும்,
நண்பர் உதவிகள் சமயத்துக்கு கிடைக்கும் காலகட்டம் ஆகும்,

ஜென்ம சூரியனுக்கு ஏழில் சூரியன் கோச்சார ரீதியாக வரும் போது வேண்டாத “நீசஸ்திரி” தொடர்ப்பால் துன்பம் வந்து சேரும்,
சிலநேரம் விதவைகளால் கலகம் வந்து சேரும்,
வியாபாரத்தொடர்ப்புகள்  வில்லங்கம் தரும் பின்னர் சரியாகும்,

குறிப்பு;- இது பொதுவான பலனே தவிர உங்கள் தனிபலன் அல்ல!
உங்கள் தனிப்பலனுக்கு தகுந்த ஜோதிடரை அணுகவும்,காரணம் எங்களை போன்ற ஜோதிடர்களுக்கு நேரில் பலன் சொன்னால் மட்டுமே
“பலன் உண்டு”,தவிர இதுபோல் ஜோதிட குறிப்புகள் அனைத்தும் “ட்ரைலர்”
மட்டுமே- “மெயின் பிக்சர்’ இது அல்ல!
இது “ரீலும்” அல்ல! “ரியல்” தான்

என்றும் ஜோதிட சேவையில்!
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்,
பெருந்துறை- 638 052

செல்: 98427 69404 [ ஏர்செல்]
செல்; 98434 69404 [வோடாபோன் ]

1 comment:

  1. மிகவும் அருமை என்னுடைய நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete