Tuesday 21 January 2014

திசையும் புக்தியும் பயன் தருவது எப்போது ?

எந்த திசை எந்த புக்தி நடந்தாலும் பிறந்த ஜாதகமும்
கோச்சாரமும் மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது அவசியம்!

1) ஒரே ராசியில் இணைவது [ Conjunction] 1 ஒரேபாகையில் இருப்பது சேர்க்கை ஆகும்!

2) மூன்றாவது வீட்டில் 60 சேர்க்கை  [ Sex tile ] 3/11 திருதீயம் ஆகும் [ ஜெனன ஜாதகத்தில்  மிகுந்த நற்பலன் தரும் அமைவு இது ]

3)நான்காவது வீட்டில் 90 பாகை [ Square ] 1/4 கேந்திரம் ஆவது [ ஜெனன ஜாதகத்தில் சுமாரான பலன் தரும் ]

4) ஐந்தாவது வீட்டில் 120 பாகையில் [ trine ] 1/5 திரிகோணமாக அமைவது 

5) ஒருகிரஹத்தில் இருந்து நேர் எதிர்வீட்டில் 180 [ opposition ] சமசப்தமம் C.G.ராஜன் இதுபோல் அமையும் கிரஹநிலை கெடுபலன் தான் அதிகம் தருகிறது என சொல்லி இருக்கிறார்.

6) ஒருகிரஹத்தில் இருந்து 240 பாகையில் அமைவது [  Square ] தசம்அ கேந்திரம் நற்பலன் தரும் 

கோசாரத்தில் “திசாநாதனும் புக்தி நாதனும்” வருவதையும் கவனத்தில் கொண்டும் பிறவி ஜாதகத்தில் இருக்கும் கிரஹ நிலையும் அவர்களின் சாரநாதன் [ஜீவன்] யார் ? சாரநாதனுக்கு பாதம் தந்த [ சரீரம்] எப்படி இருக்கிறது? என்பதை கவனத்தில் கொண்டு பலாபாலன் எடுத்து உரைக்க ஜோதிட பலன் துல்லியமாக வரும் என்பதும் உண்மை,

பொதுவாக 3 / 11 ஆக பிறவி ஜாதகமும் ஜோதிடம் பார்க்கும் காலகட்டத்தில் கோச்சாரமும் 3/11  ஆக திசாநாதனும் புக்திநாதனும் இருக்க ஜாதகருக்கு மிகவும் நற்பலன் அமையும் என்பது கணிப்பு!!

என்றும் ஜோதிட பணியில் !!

பெருந்துறை ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்

No comments:

Post a Comment