Sunday 5 January 2014

சூரியன் சந்திரன் இணைவானால் ?

சூரியன் சந்திரன் இணைவானால் என்ன பலன்

புலிப்பாணி பாடல் படி:-

காணப்பா கதிரவனும் மதியும் கூடி

           கனமுள்ள லக்னத்தை கண்ணால் நோக்க 

சீனப்பா சக்கிலியப் பெண்ணை ஜென்மன் 

          சிறப்பாகச் சேர்ந்தணைவான் ஜெகத்திலே தான்

ஊனப்பா உதயவனும் கண்ணுற்றாலும் 

           உத்தமனே உலகத்தில் ஒருவர் பாரார்

வீணப்பா போகருட கடாஷ்த்தாலே

          விதமாகப் புலிப்பாணி விளம்பினேனே!

பொருள்:-
சூரியனும் சந்திரனும் கூடி பலமுள்ள லக்னத்தை கண்ணால் நோக்கினால் 
ஜென்மன் நீசப்பெண்ணுடன் கூடு இப்புவியில் அலைவான் என்பதை சிறப்பு விதியாக கொள்ளவும்!
சூரியன் சத்தியஜாதியை சேர்ந்தது!
சந்திரன் வைஸ்ய ஜாதியை சேர்ந்தது!
அதனால் ஜாதகனுக்கு நடுத்தர ஜாதி பெண்ணின் மேல் மோகம் கொள்வார் என்பது சரியான கருத்தாகும்!

சூரியன் சந்திரன் கூட அது அமாவாஸை யோகம் இருவரும் தன் சுயபலத்தை இழந்து விடுவர் . அப்படி தன் பலம் இழந்த சூரியனும் சந்திரனும் ஏழம் இடத்தில்  இருந்து பலமுள்ள லக்னத்தை நோக்கி லக்னாதிபதியும் வேறு இடத்தில் பலம் இழந்தோ நீசம் பட்டு போனாலோ இதில் உள்ள பாடல் அந்த ஜாதகனுக்கு பொருந்திப்போகும்!

குறிப்பு:- இப்பாடல் ஜோதிடர்களுக்கு மட்டுமே தவிர எனது மற்ற முகநூல் நண்பர்கள் இதை தனது ஜாதகத்துடனோ குடும்பத்தார் ஜாதகத்துடனோ சுயபரிசோதனையை செய்ய வேண்டாம்! ஜோதிடர்களை அணுகி பலன் காணவும் 

என்றும் ஜோதிடப்பணியில்!

பெருந்துறை ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம் 

 

No comments:

Post a Comment