Monday 10 February 2014

ஜோதிடம் என்றால் என்ன?

வேதங்கள் நான்கு வகைப்படும் அவை:- ரிக் ,யஜுர்,சாம, அதர்வண வேதங்கள்!!

1} ரிக் வேதம்:- இது உலக சிருஷ்டி முதல் மனித இயல்பு வரை உள்ள எல்லா ரகசியங்களையும் விளக்கமாகவும் ,உதாரணங்களுடனும் ,சீக்கிரம் புரிந்து கொள்ளும் விதமும் ஸ்படமாக எடுத்துரைக்கிறது!!

2} யஜுர் வேதம்:- மனிதன் தன் திருப்திக்காகவும், வாழ்வியலின் தர்மத்தை கடைபிடிக்கவும் உபயோகமான வழியில் தன் நித்திய  கர்மாக்களையும் , ஸரெளத, ஸ்மார்த்த அனுஷ்டானங்களையும் அவைகளை செய்யும் முறையும் எடுத்துரைக்கிறது!!

3 } சாம வேதம்:- பக்தி மற்றும் சங்கீதமயம் ஆனது!!இதிலும் அதிகமாக ரிக்வேதத்தின் அடிப்படையிலேயே கையாளப்படுகிறது!!ஸ்வரம் தான் இதன் பிரதானம்.இது பெரும்பாலும் பிராத்தனை ரூபத்தில் உள்ளது!!

4 } அதர்வண வேதம்:- சர்வ கஷ்ட நிவாரண ,தோஷ பரிஹார மந்திரங்களை உள்ளடங்கியது!!

ஒவ்வொரு வேதத்திலும் ஸம்ஹிதை, சாகை, ஆரண்யம், பிராமணம் மற்றும் உபநிஷத் அடங்கியது!!

ஒவ்வொரு வேதத்திலும் ஒவ்வொரு காண்டமும் ஒவ்வொரு ரிஷிகளும் எடுத்துரைப்பதால் நித்திய பாரணத்திலும் ஒவ்வொரு காண்டத்திலும் & மந்திரத்திலும் ஒருரிஷியை குறிப்பிட்டுள்ளார்கள்

மேலை நாட்டை சேர்ந்த இந்தியன் தன் நவீன ஆராய்ச்சியில் ஈடுபட்டதன் காரணமாய் நமது “வேதம் சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது என்பதை ஆங்கிலேயனும் ஒப்புக்கொள்கிறான். அதில் நாம் ஜீவித்திருக்கும் இந்த யுகத்தை “கலியுகம்” என்று பெயர், 

இந்த வேதத்திற்க்கு ஆறு உறுப்புகள் உள்ளது!! அவைகள்:-

1} சிஷை : [படிப்பியல் ] இதில் வேதம், வேதாங்கம், சாஸ்த்திரம்,விஞ்ஞானம், தர்க்கம்,மீமாம்சை.அரசியல், மனுநீதி போன்றது அடக்கம்!!

2 } கல்பம்: இது மந்திரபிரயோகம் ஆகும். 

3 } நிருக்தம்: இது [பலபாஷையை அறிவது] மொழியியல் ஆகும் 

4 } வியாகரணம்:- இது இலக்கண முறையை சார்ந்தது ஆகும் 

5 } சந்தஸ்: அலங்காரம் [ பாஷையின் நடை] நாட்டியம் போன்றது ஆகும்!!

6 } ஜோதிஷம்: [ஜோதிடம்] விண்வெளியில் ஆய்வை அறிவது ஆகும்!!!

 “சப்த சாஸ்திரம் முகம், ஜ்யோதிஷம் சஷுஷி சீரோத்ர முக்தம் நிருக்தம்.கல்பஹகரெள, யாதுரஸ்ய வேதஸ்ய, ஸாநாஸிகா, பாதபத்ம  த்வ்யச்சந்த ஆத்யெள புதைஹி” என 1200 ஆண்டுகளுக்கு முன்னர் கணிதமேதை “பாஸ்கராசார்யான்” குறிப்பிட்டு உள்ளார்,  அதன் பொருள்:--

வேத புருஷனின் முகம் இலக்கணம், கண்கள் “ஜோதிஷம்”, செவிகள் நிருக்தம், கைகள் கல்பம், சிட்சை [படிப்பு] அவனது மூக்கு, சந்தஸ் அவன் இரண்டு கால்கள் [பாதம்] ஆகும், மனிதனுக்கு கண்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு தூரம் “ஜோதிஷம்” முக்கியம், “ஜோதிஷம்” எவ்வளவு அவசியம் ஆனது என்பதை எடுதுரைக்கிறது!!

வேதத்தின் கண்கள் ஆன “ஜோதிஷ” சாஸ்த்திரம் ஆனது அண்டத்தில் [ விண்வெளி-space] மற்றும் அதன் பிரகாசம் [light] இவற்றின் ரசகியத்தை எடுத்துரைப்பது ஆகும்!!

சூரியனை சுற்றி இருக்கும் கிரஹங்கள் மற்றும் நட்சத்திர மண்டலங்களும் மனிதனுக்கு “தனிப்பட்ட வாழ்வியலினின் மாறுதலை நுணுக்கங்களை கண்டு எடுத்துரைப்பதே “ஜோதிஷம்” ஆகும்!!

இது நம்முனோர்கள் கண்ணை மூடி தவம் புரிந்து தன் “யோக திருஷ்டியால்” பெற்று அதை நமக்கு எழுதிவைத்து விட்டு போன பொக்கிஷம் என்றால் மிகையல்ல!!

No comments:

Post a Comment