Wednesday 15 January 2014

ஜென்ம வாரத்தின் துர்பலன்

காசிபன்அத் திரி நிலத்தில் தாரை பாலும்

காலம்உணர் அங்கிரரில் மாட்டும்

ஏசல்இலாச் சாயையினும் இரவி ஆதி 

எழுவரும்பின் நாள் நிரையே பிறந்த வாற்றால்

தாசிதுகில் ஆடி ஆவணியும் கேட்டை 

சாரும்உடை குளம்கடை நாள் முறையே கண்டு

தேசுபெற அவரவர்தம் வாரநாளில்

சேய் உதிக்கில் கொடும் துயரம் செப்புவாரே!

பொருள்;- 

காசிபமுனிவருக்கு பரணியும் ஞாயிறும்

அத்திரிமுனிவ்ருக்கு சித்திரை திங்களும்,

சிவபெருமானின் வியர்வையில் உத்திராடத்திற்க்கு செவ்வாயும், 

தாராதேவிக்கு அவிட்ட புதனும், 

ஆங்கிரஸமுனிவருக்கு கேட்டை வியாழனும்,

சிவனின் சுக்கிலத்தில் பூராட வெள்ளியும்,

சாயாதேவிக்கு ரேவதியில் சனியும் 

பிறந்தனர், 

ஆகையால் மேற்படி நாளில் அந்தந்த நட்சத்திரம் வரும்போது ஜெனனிக்கும் குழந்தை பிறக்க மிகுந்த கஷ்ட ஜீவனம் அமையும் என்பதை கவனித்து பலன் காண வேண்டும்!

என்றும் ஜோதிட பணியில்!

ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்,

பெருந்துறை- 638 052
 
 

 

1 comment: