வாடகை தாயால் குழந்தை அமையும் நிலை!
“உரிய காமத்தோர் பாவியுடன் கூடி இரண்டில் நிற்க!
விரிவுறு செவ்வாய் பார்க்கில் வேசியரிடத்திலேதான்
பரிவோடு புத்திர யோகம் பலித்திடும் “
[ஜாதக அலங்காரம்]
“காமத்தோன் பெரும் பாவரைக் கைகலந்து
ஏமத்துஏறி இரண்டில் கூடவே
பூமிக்கே சுதன் நோக்குறின் வேசியர்க்
கேமிக்காகும் இணையறு மைந்தனே”
[யவன காவியம்]
ஏழாம் இடத்துக்குறியவன் பாவகிரஹங்களை கூடி இரண்டாம் இடத்தில் இருக்க செவ்வாய் பார்த்தால் அந்த ஜாதகன் மனைவியால் புத்திரம் கிடைக்காமல் பழைய காலத்தில் [ வேசியர் என சொல்லப்பட்ட சொல் தற்க்காலத்திற்க்கு வாடகை தாய் என வைத்துக்கொள்ளலாம்]
புத்திர தோஷத்தை வெறும் ஐந்தாம் பாவத்தை மட்டும் எடுத்து கொள்ளாமல் 5 க்கு 3 மிடம் எனும் 7 ம் பாவத்தின் அதிபதியை சொல்ல வந்ததற்க்குள் பல சூட்சுமங்கள் இருக்கிறது என்பது மட்டும் உண்மை!!
likes this
ReplyDelete