Wednesday 26 November 2014

சாமுத்திரிகா லக்ஷ்ணம் [பகுதி 8]

சாமுத்திரிகா லக்ஷ்ணம் [ பகுதி 8 ]வலதுகாதினிலே வலசுழி இருக்கப் பெற்றவர் நல்ல வீரமுடையவர் ஆக இருப்பார்கள்
இடதுகாதினிலே இடசுழி இருக்கப் பெற்றவர் நல்ல தைரியம் இல்லாமலும் புத்திசாலி தனம் இல்லாமலும் வறுமை நிலையில் இருப்பவராகவும் இருப்பார்கள்சுழியம் வலமுன்தலையில் இருக்கப் பெற்றவர் மிகுந்த செல்வம் உடையவர் ஆக இருப்பார்கள்
இடது தலையின் முன்பக்கத்தில் சுழியம் அமையப் பெற்றவர் பின்னிட்டு காலத்தில் வேறு ஊரில் இரந்துண்டு வாழும் நிலையே தரும்முன்தலையில் மத்தியில் சுழியம் இருக்கப் பெற்றவர் சாஸ்திர ஞானத்துடன் இருப்பார்கள்
இப்படியாக மனிதனின் வெளியே தெரியும் தெரியாத லக்ஷ்ணங்களை பலவாறாக சொல்லி வந்தாலும் சில லக்ஷ்ணம் ஒருமனிதனின் “ஆயுள் ஐஸ்வர்யம்” பற்றி சில குறிப்புகள்.வலதுகையில் ஐந்து விரல்கள் அளவு கயிற்றை அளக்க நடுவிரல் நடுநுனி வரை வந்து இருக்கப் பெற்றவர் அதிகமான செல்வம் உடையவர் ஆவர்.அந்த விரலில் மேல் இறைவரை வந்து இருக்க பெற்றவர் “மந்திர சாஸ்திரம்”உடையவர்.நடுஇறை வரை வந்து இருக்கப் பெற்றவர் நன்மையுள்ளவர்நடுவிரல் வந்து இருக்கப் பெற்றவர் உத்தமசீடன் ஆவார்உள்ளங்கையுடன் எவருக்கு அந்த அளக்கப்பட்ட “கயிறு”நிற்க்கிறதோ அவர்கள் வறுமை நிலையில் இருப்பார்கள் ..கால் பெருவிரல் முதல் நடு நெற்றிவரை உள்ள அளவில் கயிறும்
தன் மார்பில் அளக்கும் கயிறு இந்த இரண்டும் நான்கில் ஒருபாகம் சேர்த்து தன்கையின் அளவுக்கு 108 எட்டு அங்குலம் இருக்கப் பெற்றவர் குபேரசம்பத்து உடையவராம்108 அங்குலத்திற்க்கு அதிகம் இருக்கப் பெற்றவர் குறைந்த ஆயுள் உடையவர்108 அங்குலத்திற்க்கு குறைவாக இருக்கப் பெற்றவர் வறுமை நிலையில் இருப்பார்கள்வலதுதோள் தொட்டு வலதுகை சுண்டுவிரல் வரை அளக்கப் பெற்றவர் இரண்டுமடங்கு கால் பெருவிரல் முதல் நெற்றிவரை வந்திருக்கப் பெற்றவர் 70 வயதுவரை ஆயுளும் செல்வநிலையும் உடையவர்நெற்றியின் மத்திவரை வந்து இருக்கப் பெற்றவர் 65 வயது உடையவர்புருவம் வரை வந்து இருக்கப் பெற்றவர் 80வயது உடையவர்
நாசிவரை  வந்து இருக்கப் பெற்றவர் 75 வயதுடையவர் ஆவர்வால்வரை வந்து இருக்கப் பெற்றவர் 60 வயது சொற்ப வருமானம் உடையவர்முகத்தின் தாடைவரை இருக்கப் பெற்றவர் 55 வயதுடையவர்கழுத்துவரை இருக்கப் பெற்றவர் 45 வயதுடையவர்இந்த அளவுக்கும் குறைவாக அமையப் பெற்றவர்கள் “அற்பாயுள்”உடையவர்கள்
இவ்வாறு அளக்கும் கயிற்றை முறையாக “நூலுக்கு மஞ்சள்- குங்குமம்-சந்தனம் வைத்து”: தூபம் முதலியன காண்பித்து விநாயகப்பெருமானை வணங்கி தியானித்து அளக்க வேண்டும்
குறிப்பாக
ஆணுக்கு 16 வயதை தாண்டியும்
பெண்ணுக்கு 13 வயது தாண்டியும் அளக்க வேண்டும்குறிப்பு: சாமுத்திரிகா லக்ஷ்ணம் என்பது முன் காலத்தில்
“புருஷ சாமுத்திரிகா லக்ஷ்ணம் என்றே சொல்வழக்கு
இது ஆண்களுக்கே அதிகமாக பலாபலன் பொருந்தும் என்பதை மனதில் வைத்து வாசிக்கவும்
நன்றி
என்றும் ஜோதிட துறையில்
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம் பெருந்துறை
Astro Senthil Kumar 

No comments:

Post a Comment