Monday 7 April 2014

வைரஸ் காய்ச்சல் நோய் தீர ஆகும் கால அளவு

இன்றைய சூழலில் மனிதனுக்கு தீரத்துன்பத்தை தருவது நோய் தான் அதிலும் தற்போதைய மாசுபட்ட கலியுகத்தில் “வைரஸ்காய்ச்சல்”அதிக அளவு பாதிப்பை தருகிறது இந்த நோய் குறித்து பண்டைய காலத்தில் “முனிவர் எழுதிய சூட்சும விஷயங்களை தான் இன்றுகவனிக்க போகிறோம்,


பரணி-திருவோணம்-சித்திரை-சதயம்- ஆகிய நட்சத்திரத்தில் ஜுரம் கண்டால் குணம் அடைய 11 நாட்களில் குணம் அடையும்,

மகம் நட்சத்திரத்தில் ஜுரம் கண்டால் 20 நாட்கள் வரை நீடிக்கும்
,

அசுவினி-கிருத்திகை-மூலம் நட்சத்திரத்தில் ஜுரம் காண நிவர்த்தி அடைய 2 மாதம் ஆகும், 

அனுஷம்,ரேவதி நட்சத்திரத்தில் ஜுரம் காண வெகுநாட்கள் நீடிக்கும், அவிட்டம்-விசாகம்-ஹஸ்தம் இவைகளில் காண 15 நாட்களும்ஆகும்


 மிருகசீர்சம்-உத்திராட இவைகளில் 1 மாதமும், ரோஹிணி-புனர்பூசம்-பூசம்-உத்திரம்-உத்திரட்டாதி ஆகியவைகளில் ஜுரம் காண 7 தினத்திற்க்கு தீராது,


திருவாதிரை-ஆயில்யம்-சுவாதி-கேட்டை மற்றும்[முப்பூரம்:- அதாவது பூரம்-பூராடம்-பூரட்டாதி-]& ஜென்ம நட்சத்திரத்தில் ஜுரம் காண தீர்வுக்கு ஒருமண்டலம் கூட ஆகலாம்,

ஜென்மவாரத்தில் [பிறந்த தினம்] ஜுரம்காண 24 நாட்கள் [அரைமண்டலம்]அல்லது ஒருமாதம் பீடித்திருக்கும்,

சித்திரைபரணியும் கூடி அது அமாவாஸையாக இருந்தால் 6 மாதம் ஜுரபீடை இருக்கும்

தேய்பிறை அஷ்டமியும் சனிக்கிழமையும் கூடிவந்தால் ஜுரநோய் நிவர்த்திக்கு 15 நாட்கள் ஆகும், 

கிருத்திகையும் ஞாயிறும் கூடி வந்தால் 22 நாட்கள் நீடிக்கும்.விபதாரை -வதைதாரையில் ஜுரம் காண ஏழுநாட்கள் நோய் பீடையாம்,

ராகு காலத்தில் ஜுரம்காண மூன்றுநாட்களும் பெளர்ணமியில் ஜுரம்காண எட்டு நாட்களும்,

இனி முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது::_

 ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து 23 ம் நட்சத்திரத்தில் ஜுரம்காண [விஷநாடி-விஷயோகம்] 23 மாதம் நோய் பீடை இருக்கும்,

சனி இருக்கும் நட்சத்திரத்தில் நோய் காண ஒரு ஆண்டிற்க்கும்
செவ்வாய் இருக்கும் நட்சத்திரத்தில் நோய் காண  1 1/2 மாதத்திற்க்கு நோய் பீடை ஆகும்

பரணி-ஆயில்யம்,திருவாதிரை,ஸ்வாதி,மூலம், சதயம்-கிருத்திகை,-பூசம் -விசாகம்-ஆகிய நட்சத்திரமும் ஞாயிறு செவ்வாய் சனி ஆகிய கிழமையும் சதுர்த்தி-சஷ்டி-நவமி-துவாதசி திதி மற்றும் பிரதமை அமாவாஸை மேஷ முதலிய கலந்து இருக்கும் காலகட்டத்தில் ஜுரம் பீடிக்க நோய்வாய்ப்பட்டவர் மீண்டு வருவது சந்தேகமே [அகால மரணத்தை தரும்]  


 பற்பலசூட்சுமங்களை தன்னுள் மறைத்து கொண்டு உலாவரும் ஜோதிடம் பல சித்தர்கள் வழியாக ஞானத்தை சிலமனிதனின் மனதில் போதித்து மனித குல வாழ்வை மேன்மைப்படுத்தி  செம்மையுடன் வாழவே “ஜோதிடமும் ஜோதிடனையும் இறைவன் படைத்து இருக்கிறான்.
“ஜோதிஸ்” எனும் வார்த்தைக்கு அர்த்தம் ஒளி என பொருள்
“உடல்நலம் பாதிப்பு அடையும் காலகட்டத்தில் நன்கு ஆராய்ந்து பலாபலனை அறிய தகுந்த ஜோதிட ஆலோசனைகளை பெற்று தகுந்த ஆலய வழிபாடு செய்து “நோய் அற்ற வாழ்வை” பெற வேண்டுகிறோம்.

என்றும் ஜோதிடப்பணியில் 

பெருந்துறைஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம் 
98434 69404
98427 69404

No comments:

Post a Comment