Sunday 20 April 2014

ராசிகளில் கிரஹங்களின் பலமும் பலாபலனும் !!![திரேகாணம்]

சரராசியை விட ஸ்திர ராசி பலமுடையது!!

ஸ்திர ராசியை விட உபயராசி பலமுடையது!!

இந்த மூன்று ராசிகளில் மூன்று கிரஹம் இருந்தால் மூன்றாவது கிரஹத்தின் மேல்விழும் இரண்டு கிரஹங்களின் பார்வையானது!!

அதாவது மற்ற இரண்டு கிரஹங்க்கள் சாதகன் வேதகனாய் இருந்து அக்கிரஹங்கள் சரராசியில் இருப்பதை விட ஸ்திர ராசியில் அதிக பலமும்
ஸ்திர ராசியில் இருப்பதை விட உபயத்தில் இருந்தால் பார்வையில் அதிக பலமும்  அதிகரிக்கும். இந்த மூன்று வீட்டில் இருக்கும் கிரஹங்களின் பலன்களை அவ்வாறே கூற வேண்டும்
,

மூன்று கிரஹங்கள் சரராசியின் முதல்திரேகாணத்திலும் ஸ்திரராசியின்  மத்திய திரேகாணத்திலும் உபயராசியின் கடைசி திரேகாணத்திலும்  இருந்தால் பூர்ணபலனை தருவார்கள்!!

அவர்கள் சரராசியின் மத்திய திரேகாணத்திலும் அல்லது ஸ்திரராசியின் கடைசி திரேகாணத்திலும் அல்லது உபயராசியின் முதல் திரேகாணத்திலும் இருந்தால் மத்திமமான பலனை தருவார்கள்!!

இக்கிரஹங்கள் எல்லாமே சரராசியின் கடைசி திரேகாணமும் ஸ்திரராசியின் முதல் திரேகாணமும் உபயராசிகளில் மத்திய திரேகாணமும் அமையப்பெற்றால் “அதமமான பலாபலனையே தருவார்கள்..

இது எல்லாமே நடக்கும் திசையின் பலத்தை அறிய கோட்சார கிரஹங்களின்
நிலைபாட்டை கண்டு பலாபலனை அறிய பண்டைய காலத்தில் தொடுக்கப்பட்ட “ஜோதிடநுட்பங்கள்””     

என்றும் ஜோதிட துறையில்!!
ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம், பெருந்துறை

1 comment:

  1. தகவல் நன்றாக உள்ளது. ஆயினும் துவக்கநிலை சோதிடர்களுக்கு இன்னும் சற்று விரிவாக தரலாம். தொடருங்கள் இந்த நற்பணியை. வேண்டுகோள் பத்திரிக்கையில் ஒருபக்கத்திற்குள்தான் எழுதவேண்டும் என கட்டாயம் இங்கே அதுபோல் இல்லை எனவே விரிவாக தரலாம்- பாலு சரவண சர்மா

    ReplyDelete