Wednesday 23 April 2014

ராசிசக்ரத்தில் செவ்வாயின் பலமும் பலஹீனமும் [பலநிர்ணயம்]

செவ்வாயின் பலத்தை பற்றி பலரும் பலவிதமாக சொல்லி வந்தாலும் சில மூலநூல்களின் அடிப்படையில் “செவ்வாயின் பலத்தை” சற்று அறிந்து  கொள்வோம்.

செவ்வாய் தன் சொந்தவீட்டில்  பலவானாகிறார்.

செவ்வாய் யுத்தத்தில் ஜெயம் பெற பலவானாகிறார்.

செவ்வாய் வக்கிரமாக இருக்க பலவானாகிறார்.

செவ்வாய் வீஸ்தீரணமாக இருக்க பலவானாகிறார்.

செவ்வாய் மகரம்-கும்பம்-மீனம் ஆகியராசியில் இருக்க பலவானாகிறார்,

செவ்வாய் தட்சிணாயனத்தில்பலவானாகிறார்.

செவ்வாய் இரவில் பலவானாகிறார்.

செவ்வாய் தன் நவாம்சத்தில் பலவானாகிறார்.

செவ்வாய் தன் திரேகாணத்தில் பலவானாகிறார்.

செவ்வாய் தன் கிழமையில் பலவானாகிறார்.

செவ்வாய் பத்தாம்பாவம் எதுவாகிலும் அங்கு பலவானாகிறார்.

செவ்வாய் கும்பலக்னம் ஆகி அதில் இருக்க பலவானாகிறார்.

செவ்வாய் கடகம்-விருட்சிகம் ஏழாம்பாவம் ஆகி அதில் இருக்க பலவானாகிறார்.

செவ்வாய் மிதுனம்-மகரம் முற்ப்பாதி பத்தாம் இடமாகி ஆகி அதில் இருக்க [ 15 டிகிரிக்குள்]பலவானாகிறார்.இதை பாவாகச்சக்ரத்தில் கவனிக்கவும்.
செவ்வாய் தனுசு பிற்ப்பாதி நான்காம் இடமாகி அதில் பலவானாகிறார்`
இதை பாவகத்தில் கவனிக்கவும்.


செவ்வாய் ராசியின் ஆரம்பத்தில் 10 டிகிரிக்குள் அதிக பலவானாகிறார்.


செவ்வாய் ராசியின் மத்தியில் 11 முதல் 20 டிகிரிக்குள் பலஹீனமாகிறார்.


செவ்வாய் ராசியின் கடைசியில் 21 முதல் 30 டிகிரிக்குள் மத்திமபலனை தருபவர் ஆகிறார்.

கிரஹத்தின் வலுவில் சனிபகவானை விட இரண்டு  மடங்கு வலுவானவர்.



இது போன்ற எண்ணற்ற ஜோதிட சூட்சுமங்கள் பழமையான மூல நூல்களில் பொதிந்து கிடக்கிறது!!!எமது அடுத்த பதிவில் வரிசை கிரமமாக அனைத்து நவநாயகர்களின்பல நிர்ணயம் குறித்து வரிசையாக தரவுள்ளேன்.இங்கே படிக்கும் நண்பர்கள் சற்று கருத்தை பதிவு செய்து சென்றால் சற்று ஆறுதலாக இருக்கும், 15,000 நபர்கள் பார்வையிட்டும் 150 கருத்துக்கள் கூட நண்பர்கள் பதியவில்லையே?? ஊக்கம் தருவதே எம்மை அதிகமாக எழுத வைக்கும்.நன்றி!!

என்றும் ஜோதிட பணியில்!!
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்.பெருந்துறை.
செல்:- +91 98427 69404
செல்;- +91 98434 69404

5 comments:

  1. மனதினில் உற்சாகம் கொண்டு தொடர்ந்து பதிவிடுங்கள் தோழரே!
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தகவல் நன்றாக இருப்பினும் மூலநூல்களை மேற்கோள் காட்டாதது ஏனோ?

    ReplyDelete
  3. Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன் அண்ணா உங்களுக்கு சொல்லலாம் ஆனால் இங்கே பொதுமக்களும் இருக்கிறார்கள்.அல்லவா?? ஆகையால் சில விஷயங்கள் மறைக்கப்பட்டது!! ஜோதிடர்கள் தனியே கேட்டால் எப்போது கேட்டாலும் அடியேன் சொல்லுவேன் அண்ணா !!

    ReplyDelete
  4. Nalla thagval,dhodaruttum ungal pani, Nantri.

    ReplyDelete