“அரவுசுன் சேயிந்த மூவர் ஒன்றாய்ப் பவர் அங்கிசத்தேவரவினுமே புகர் எட்டோனைக் கூடி மருவுகினும்இரவிதனத்தினும் சேய்மதி ஈரைந்து இருப்பினும் தான் கரவினில் வெட்டுண்டு அவன் உயிர் மாயும் என் காதலியே”
என சொல்லி இருப்பது “யவன காவியம்”
ராகு-சனி-செவ்வாய் மூவரும் கூடி பாவகிரஹ நவாம்சத்தில் இருக்க “சுக்கிரன்” எட்டுக்குடையவனை கூடி இருந்தாலும் இரண்டாம் இடத்தில் “சூரியன்” பத்தில் “சந்திரன்” செவ்வாய் இருந்தாலும் அந்த ஜாதகன் கள்ள உறவு மற்றும் “திருட்டு” சம்பந்தமான பிரட்சனையால் உடலில் வெட்டு பட்டு இறப்பான் என்பதே பாடலின் பொருள்
சாமுத்திரிகா லஷ்ணம் தலையில் “மூன்று சுழியம்” இருப்பவனுக்கும் இதே நிலைமை தான் என சொல்லி இருக்கிறது!!
No comments:
Post a Comment