Wednesday 4 March 2015

மன்மத வருஷத்தில் கோயில் கும்பாபிஷேகம் செய்யலாமா???

ஜோதிட முழக்கம்” 2015  பெருந்துறைகாஞ்சிபுரம்
ராஜப்பா குருக்கள் அவர்கள் ஆற்றிய சிறப்புரைஎழுத்து வடிவில் உங்கள் பார்வைக்கு!!!!
காமாட்சியாஸ்னாம் கடிதாஸ்னம் இதபவு!!!
வியாக்யாத காமா ஹமகா!!!கல்யாணம் சதுதங்க ரோதுபவம்காஞ்சிபுர நாயகா!!!”
[ஸ்லோகத்தில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும் திருத்தம் செய்ய]
எல்லாம் வல்ல இறைவனின் அருளாலே!!
இந்த காலங்களை பற்றிய நிர்ணயம் செய்யும்ஜோதிட சாஸ்திரம்வேதங்களின் அங்கமாக இருக்கிறது!!
வேதம் நான்கு அதில்6 சாஸ்திரங்களின் ஜோதிடமும் ஒன்றாகும்!!
வேதம் ,வேதாங்கம், இம்சா, மாமீம்சா என சாஸ்திரங்களின் பிரிவுகளில் ஜோதிடமும் நிருத்தம் என சேர்க்கப்பட்டுள்ளது!!
இங்கே ஆகம சாஸ்திரங்கள் எல்லாம் உலக நன்மைக்காகவே படைக்கப்பட்டது,,
எல்லோரும் இங்கே ஜோதிட சாஸ்திரம் பற்றி பேச இருந்தாலும் பொதுவாக காமீகம் ,காரணம் இதில் காமீகம் தான் பகவானால் உபதேசிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக கட்டிடம் சார்ந்த கலைகளில் காமீகம் சிற்ப அமைப்பாகிறது,
அதற்கான காரணிகள் இருக்கிறது, அதில்காலவீதி படலம்என்றும் ஒன்று உண்டு!!
மாகமாகம் வினாசத்ரோ யனோ ரவைத்ரோத்ரம்
உத்ராயணத்தில் சாந்திரமானத்தில் தை அமாவாஸை வந்தால் மாசி மாதப்பிறப்பு என்கிறது விதிமுறை!!
ஆனால் ஆகமத்தில்மாக இதி கும்பாசம்தியாசூர்யன் கும்பத்தில் பிரவேசிக்கும் காலத்தை கொடுத்து இருக்கிறது!!அதற்க்கு வியாக்னம் கொடுத்து இருக்கிறார்கள் ..நாம் சாதாரணமாகசைத்ர ,வைசாகம். ஜேஷ்டாஎன சொல்கிறோம்,, சந்திரன் அந்த நட்சத்திரத்தில் கூடுவது கண்டு செளரமானம் என சொன்னால் சூர்ய கதிவைத்து சொன்னால் எந்த ராசிக்கு பிரவேசிக்கிறதோ அதை வைத்து உதாரணமாகசைத்ரமாதம்என கணிதம் ..சித்திரை மாத பெளர்ணமி  ஒருநாள் முன்பின் அமையலாம்.விசாகம் ,வைகாசிக்கு சம்பந்தப்பட்ட்து,, இப்படி மாதமும் பெளர்ணமியும் கணக்கில் வைப்பது சாந்திரமானம் ..இவைகள் எல்லாம் சாந்திரமானத்தில் கணக்கிடாலும்சிவராத்திரிபோன்ற வைபவங்கள் எல்லாம் செளரமான வழி வகையாக செய்ய வேண்டும் என்பது ஆகமவிதி முறை ஆகும்..வியாக்னம் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படி பல வருஷங்களுக்கு முன்பு 12 ஆண்டு என நினைக்கிறேன் தைமாத கடைசியில் வருவதுமாசி சிவராத்திரியா??”என சர்ச்சை வந்தது..அப்போது கும்பத்தில் சூர்யன் பிரவேசித்த பின்னர் வருவதேமஹா சிவராத்திரிஎனபஞ்சாங்க சத் சங்கத்தில்முடிவு செய்தார்கள்.. இதற்கு உதவியாக பஞ்சாங்க கணிதர்கள் பயன்படுத்தசைவ கால விவேகாஎனும் பல்வேறு உப ஆகம விதிமுறைகள் எல்லாம்இகமத்யான சிவாச்சாரியார்என்பவர் அந்த காலத்திலேயேகால நிர்ணயம் சைவ காலவித விவேகாஎனும் கிரந்தம் படைத்துள்ளார்கள்..பூஜைகள் பற்றிய சர்ச்சைகள் எழும் போது எல்லாம் பஞ்சாங்க கணிதர்களுக்கு கை கொடுப்பதே இந்தசைவ கால விவேகாநூல் தான் ..
ஜோதிடத்தில் மூல நட்சத்திரம் இப்போதெல்லாம் முகூர்த்ததிற்கு எடுத்து கொள்கிறார்கள்..பஞ்சாங்கமும் கொடுத்தும் இருக்கிறதுஆனால் ஆகமத்தில்மூல நட்சத்திரம்இரண்டாம் பட்சத்தில் தான் வைக்கபடுகிறது..
12 நட்சத்திரங்கள் விலக்கப்படுகிறது அதில் உதாரணமாக ஆருத்ராய சர்வநாசம்என சொல்லப்பட்டாலும் ஆனால்திருவாதிரைசிவ பிரதிஷ்டைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது..ஆனால் திருவாதிரை மற்ற தேவதைகள் பிரதிஷ்டைக்கு எடுக்கவும் கூடாது..
ஆகமவிதி என்பதுகீழ் நீதிமன்றம்போல தான் ஆனால்சிவாகம விதிஉயர்நீதிமன்றம்போல என்பதை கருத்தில் கொள்ளுங்கள்!!
ரிஷிகள் தன் ஞானத்தின் வலிமையால் கண்டு உணர்ந்து அதை அனுசரித்து தன்தபஸ் வலிமையால்மக்களுக்கு படைக்கப்பட்டதேஜோதிட சாஸ்திரம்
கோயில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜோதிட விதிகளை ஆகமவிதிகளுக்கு உட்பட்டு மீறாமல் இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது..
திருமணம் போன்ற முகூர்த்தங்களில் 7/8 இடம் சுத்தம் பார்த்தாலும் குறிப்பாக 7 இடம் சுத்தம் இருந்தாலும் முகூர்த்தம் நிர்ணயம் செய்யப்படுகிறது,,ஆனால் ஆலய விஷயங்களில் லக்னத்தின் எட்டாம் இடம் சுத்தி வேண்டும் கிரகங்களில் உயர்வான குருவே எட்டில் இருந்தாலும் ஆலய விஷயங்களை பார்க்கும் போது அந்த லக்ன நேரத்தை தவிர்க்க வேண்டும்..அவ்வாறாக தான் ஆலய கும்பாபிஷேக கால நிர்ணயம் செய்ய வேண்டும்..
பிரஷ்திடை என்றால் எட்டாம் இடம் சுத்தம் வேண்டும்..
சிலர் வரும்மன்மத வருஷம்கோயில் கும்பாபிஷேகம் செய்விக்க கூடாது :
கோயில் கும்பாபிஷேகத்திற்க்கு நாட்கள் இல்லை என சொல்லி கொள்கிறார்கள் ..எதோ ஒரு பத்திரிக்கை கூட அதை எழுதி இருப்பதாக சொன்னார்கள்..
இவைகள் எல்லாம் தவறான தகவல்கள்
மன்மத வருஷம்கீலக வருஷம்தாது வருஷம் என ஒரு ஆறு தமிழ் ஆண்டுகள் அதுவும்கூட தொடர்ச்சியாக இல்லை மாறி மாறி வரும்..
வரும் மன்மத வருஷம் சேர்ந்த அந்த ஆறு ஆண்டுகளில்நூதன ஆலயம் கும்பாபிஷேகம்செய்விக்க கூடாது என்றே சொல்கிறது!!
எல்லா கும்பாபிஷேகமும் ஒரே கணக்கில் எடுத்து கொள்ளக்கூடாது!!
ஆவர்தனம்ஆனாவர்தனம்புனராவர்தம்என திதி/நட்சத்திர வேறுபாடுகள் உண்டு!!
நூதன பிரதிஷ்டை என்பது முற்றிலும் புது ஆலயமாக ஆலயமே இல்லாத இடத்தில் உருவாக்கப்படுவது!!
ஜூர்ணதாரண பிரதிஷ்டை என்பது பழைய கோயில்களைஅஷ்டமங்கல பிரசன்னம்பார்ப்பதாலோ ஆலய கோபுரம் அல்லது சில பழுது சார்ந்த வேலையாக [ரீசார்ஜ் செய்வது போல] இருந்தால் அந்த கோயில்கள் கும்பாபிஷேகம் செய்விக்கலாம்.. குறைபாடுகளை கொண்ட ஆலயங்கள் தாரளமாக கும்பாபிஷேகம் செய்விக்கலாம்..
12 ஆண்டுக்கு ஒரு முறை செய்யப்படும் கும்பாபிஷேகம் தாராளமாக செய்யலாம்..ஆனால் எட்டாம் இடமும் சுத்தம் வேண்டும் அதை மறந்து விடாதீர்கள்..
லக்னத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் எப்போதும்ஸ்திர லக்னமும்உபய லக்னமும்கும்பாபிஷேகம் செய்விக்க வேண்டும்>> சிலர் தவறாக சர லக்னம் எடுப்பது சரியானதில்லை!!
ஆனால்சர லக்னம்பால ஆலயம் செய்விக்க எடுத்து கொள்ளலாம் பால ஆலயம் செய்விக்கசரலக்னம்என்பது மிக உத்தமம் ””
சர்ராசி விர்ஜயேஎனகாலவீதி படலம்சொல்கிறது..பின் விதி தொடர்ந்து வருகிறது அதில் தான் சூட்சுமம்குருவும் சர்ராசியில்இருக்க வேண்டும் எனும் விதிமுறை..
மாகாபாத்ரபதயோ விநா” – கும்பாபிஷேகம் மற்றும் விவாகம் மாசி மாதம் சிறப்பில்லை என்கிறது ஆகமவிதி!!
ஆனால் இப்போதெல்லாம் செய்கிறார்கள் ஆனால் யாருடைய தூண்டுதலில் செய்விக்கப்படுகிறது என்று  தெரியவில்லை!!
உத்ராயணத்தில்மாசியைதவிர மற்ற ஐந்து மாதங்கள் எடுத்து கொள்ளலாம்தட்சிணாயனத்தில்ஆவணி- ஐப்பசி- கார்த்திகைஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும்..]
ஜூர்ணதார்ண கும்பாஷேக விஷயத்தில்அஸ்ட பந்தன மருந்துதேவதைகளுக்குசாற்றியேதீர வேண்டும் எனும் நிர்பந்தம் இருக்கும் ஆலயத்தில் இன்றே பணியை ஆரம்பித்து நாளை காலையே செய்விக்கலாம் இதைஅர்த்தரித பிரதிஷ்டைஎன்று சொல்வார்கள்..இதற்குராகு காலம் எம கண்டம் போன்றவைகள் தவிர்த்து செய்தால் போதுமானது
அம்பாள் போன்ற பெண் கடவுளுக்கு செய்விக்கும்போது ஆயாதிபெளஷியாந்தம்என சொல்வார்கள்..கிராம தேவதைகள் காளி-துர்க்கை-போன்ற பெண்கடவுளுக்கு ஆடி மாதம் கூட கணக்கில் எடுக்கப்படுகிறது!!
இதர விஷேசங்கள் ஆடி மாதம் கூடாது!
தைமாதமும் ஆடிமாதமும் வெள்ளிக்கிழமை என்பது மிக சிறப்பு மிக்கது!!
சித்திரை மாத சித்திரை நட்சத்திரம்வைகாசி மாத விசாகம்ஆனி மாத ஜேஷ்டா [கேட்டை] அல்லது மூலம்ஆடி மாத பூராடம்/ உத்திராடம்ஆவணி மாத திருவோணம்புரட்டாசியில் [பாத்ரபத நட்சத்திரம்] பூரட்டாதி /உத்திரட்டாதிஐப்பசி அசுவிணிகார்த்திகை கிருத்திகைதனுசு மாத திருவாதிரைதை பூசம்மாசி மகம்பங்குனி உத்ரம் என அடிப்படையாக பெளர்ணமி திதியை பிரதானமாக அனுசரித்தாலும் சவ்வியமாக வரும் முதல்நாள் அல்லது அடுத்தநாள் அதே நட்சத்திரம் தொடரும் அதை எல்லாம் அந்தந்த ஊருதீர்த்தவாரிஅனுசரிக்க வேண்டும்..கடலோர ஆலயங்களில் பத்து நாட்கள் கூட விழா எடுக்கபடுகிறது..
27 நட்சத்திரம் 30 நாட்களுக்கு பகிர்ந்து வரும்போது ஒரு மாதத்தில் ஒரே நட்சத்திரம் இருமுறை வரும் ..தீர்த்தவாரி எடுக்க எதை கணக்கில் எடுப்பது எனும் குழப்பம் வருவது இயற்கையே!!
அப்படி சர்ச்சைகள் வரும்போது எல்லாம் முதலில் வரும் நட்சத்திரம் விட்டு விட்டு பின்னால் வருவதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்..
பொதுவாக மாத ஆரம்பத்தில் சில வருஷங்களில் வருவதால் தான் இதுபோன்ற சர்ச்சைகள் வரும் .ஜோதிடர்கள் ஆகிய நீங்கள் எல்லாம்காலவிதி படலம்அவசியம் அறிந்து வைத்து இருக்க வேண்டும்.கால நேரமும் குறைவாக இருக்கிறது.. என்க்கு பின்னால் மக்களின்லோக-சுப சுகங்களைபற்றி எல்லாம் ஏனைய ஜோதிட பெருமக்கள் இனி பேசுவார்கள் நன்றி!!

No comments:

Post a Comment