Thursday 19 March 2015

நோய் தீர்க்க ”உக்ர யோகங்கள்”


நோயை தீர்க்க “உக்ரயோகங்கள்”


அன்பு ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்!!!
இந்தியவேத ஜோதிடம் பல பிரிவுகளை கொண்ட அமைப்பு ஆகும்!!!
நான்கு வேதத்தில் உட்பிரிவாக “கல்பம்” [மருத்துவம்] “ஜோதிஷ்” [ஜோதிடம்] கொண்ட தளம் நம் வேதங்கள்
நோய்க்கு தீர்வு ஜோதிடத்தில் பண்டய காலத்திலேயே எழுதப்பட்டு இருக்கிறது என்பதை பற்றிய பதிவு இது!!


[இன்று பல்கலைகழகத்தில் எடுக்கும் மருத்துவ ஜோதிட படிப்பில் இவை இருக்கிறதா என்பது நான் அறியவில்லை இருந்தால் சந்தோசமே இல்லையெனில் இனி இதையும் சேர்த்து படியுங்கள் ] 

கடந்த வாரத்தில் “காலப்ரகாசிகை”
[ புத்தக அன்பளிப்பு  தஞ்சை பவளக்கண்ணன் ]
எனும் ஜோதிடநூலில் இருந்த சில நுட்பங்களை எம்முடைய கோணத்தில்
பதியப்பட்ட்து அதன் சாராம்சம்

“நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சைகள் பல எடுத்தும் பயனில்லை என்று சொல்வோர்களை தான் இப்போதெல்லாம் அதிகமாக காண முடிகிறது !!!!!
மருந்துகள் சரியில்லையா ????*?*
மருத்துவர் சரியில்லையா ???****
நோய் தீரும் எனும் நம்பிக்கை இல்லாமல் போகும் காரணம் தான் என்ன எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று கவலையோடு இருப்போர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தரும் பதிவு இது !!!!
(நாள் செய்யாதை நல்லாரும் செய்யார் )
காலப்ரகாசிகை எனும் அற்புதமான நூலை புரட்டிய போது சிக்கிய தகவல்களை கொஞ்சம் நீங்களும் வாசியுங்கள் !!!!!
"உக்ர யோகங்கள் "
(தீரா நோய் தீர சிகிச்சைக்கு உகந்த நாட்கள் )

திருதியை அல்லது அஷ்டமி உடன் கூடிய ரோஹிணி நட்சத்திரம் நாள் !!!!

சதுர்த்தி அல்லது அஷ்டமி உடன் கூடிய உத்திர நட்சத்திரம் நாள்
பஞ்சமி திதியும் திருவோணம் கூடிய நாள்

சஷ்டி திதியுடன் மிருகசீரிடம் நட்சத்திரம் கூடிய நாள்

சப்தமி திதியுடன் ரேவதி நட்சத்திரம் கூடிய நாள்

நவமி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடிய நாள்

தசமி திதியுடன் பூசம் நட்சத்திரம் கூடிய நாள்

திருதியை அல்லது துவாதசி திதியுடன் அனுஷம் நட்சத்திரம் கூடிய நாள்

ஏகாதசி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் அல்லது மகம் நட்சத்திரம் கூடிய நாள்

தசமி திதியுடன் ரோஹிணி நட்சத்திரம் கூடிய நாள்

திரயோதசி திதியுடன் உத்திரம் நட்சத்திரம் கூடிய நாள்

போன்றவை "உக்ர யோகங்கள் "என்ற பெயரில் அழைக்கப்படுகிறது !!!
"உக்ர யோகங்கள் "நாளில் தீர்க்க முடியாத நாள்பட்ட வியாதிகளுக்கு சிகிச்சைகள் எடுத்தால்
"நோய் தீரும் "என்கிறது
"காலப்ரகாசிகை "ஜோதிட நூல்
எதை செய்தாலும் முதலில் அதன்மேல் நம்பிக்கையை வைத்து முயற்சி செய்யுங்கள் !!!
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் """
எல்லோரும் இன்புற்று இருக்க !!!!!!
எல்லாம் வல்ல "தன்வந்திரி பகவான் "அருள்புரியட்டும் !!!!!!” “”
திருக்கணித ஜோதிடம் எனும் முகநூல் பேஜ்ஜில் ஒரு வாரத்தில் வாசித்தோர்கள் எண்ணிக்கை 15,000க்கும் மேலே அதை வாசித்த நண்பர்கள் தொடர்ந்து பதிவை பாராட்டியது இல்லாமல் வரும் “மன்மத ஆண்டில் “ இந்த தீராதநோய்க்கு அறுவை சிகிச்சை போன்றவை செய்ய உகந்த நாட்களை பட்டியல் செய்யுங்கள் என தொடர்ந்து கோரியதாலும் ஜோதிடத்தை வைத்து வாழும் நம்மால் மக்களுக்கு உதவ வேண்டும் எனும் எண்ணத்துடன் வரும் ஆண்டில் மருத்துவர்கள் “மிகவும் முற்றியநோய் அறுவை சிகிச்சை செய்தாலும் காப்பாற்ற இயலாது “என்று கைவிடப்பட்ட நோயாளிகள் யாரேனும் இந்த “உக்ரயோகநாளில்” தக்கதொரு அறுவை சிகிச்சை செய்து “உயிர் மீண்டார்கள்”என்றால் அதை பின்னிட்டு இங்கே தகவல்கள் செய்யுங்கள் …இப்பதிவின் நோக்கமே “ஜோதிடத்தில் இல்லாதது ஒன்றுமே இல்லை “என்பதே !!!
வரும் மன்மத ஆண்டு தீராத நோய்க்கு சிகிச்சைகள் எடுத்து நோய் தீர்த்து வாழ சில நாட்கள் எம்முடைய தேடலில் சிக்கியது அதன் பட்டியல் பின்வருமாறு::----

1 ] 21/04/2015 அன்று காலை 11-56 முதல் மாலை 5-06 வரை 5மணிநேரம் 10 நிமிஷம் [ திருதியை-ரோஹிணி]


2 ]  06/05/2015 அன்று காலை 10-10 முதல் மதியம் 12-40வரை 2மணிநேரம் 30நிமிடங்கள் [திருதியை-அனுஷம்]


3 ] 06/06/2015 அன்று மாலை 5-31 முதல் மறுநாள் 07/06/2015 மதியம் 2-27 வரை 20 மணிநேரம் 56 நிமிடங்கள். [பஞ்சமி – திருவோணம் ]


4 ] 24/06/2015 அன்று 03-16 முதல் இரவு 7-27 வரை 16 மணிநேரம் 11 நிமிஷம் [ அஷ்டமி –உத்ரம் ]


5 ] 29/06/06 அன்று அதிகாலை 04-10 முதல் காலை 11-00 வரை 6 மணிநேரம் 50 நிமிஷம் [ துவாதசி –அனுஷம் ]


6 ] 11/07/2015 அன்று பகல் 1-26 முதல் 12/07/2015 காலை 8-23 வரை 18 மணிநேரம் 57 நிமிஷம் [ ஏகாதசி- கிருத்திகை ]


7 ] 07/08/2015 அன்று மாலை 6-50 முதல் மறுநாள் 08/08/2015 அன்று மாலை 5-39 வரை 22 மணிநேரம் 50 நிமிஷம் [ நவமி –கிருத்திகை ]


8 ] 08/08/2015 அன்று மாலை 6-27 முதல் மறுநாள் 09/08/2015 அன்று 4-59 வரை 22 மணிநேரம் 32 நிமிஷம் [ தசமி –ரோஹிணி ]


9 ] 18/08/2015 அன்று 03-15 முதல் காலை 10-10 வரை 6 மணிநேரம் 55 நிமிஷம் [ ஏகாதசி-கிருத்திகை ]


10 ] 05/09/2015 அன்று 03-55 முதல் 06/09/2015 அன்று 00-05 வரை 20 மணிநேரம் [அஷ்டமி- ரோஹிணி ]


11 ] 05/09/2015 அன்று இரவு 03-55 முதல் 06/09/2015 அன்று 00-05 வரை 20 மணிநேரம் 16 நிமிஷம் [அஷ்டமி –ரோஹிணி ]


12 ] 02/10/2015 அன்று காலை 8-27 முதல் மாலி 4-46 வரை 8 மணிநேரம் 19 நிமிஷம் [ பஞ்சமி –ரோஹிணி ]


13] 03/09/2015 அன்று காலை 07-27 முதல் மாலை 03-19 வரை 7 மணிநேரம் 52 நிமிஷம் [ சஷ்டி –மிருகசீர்ஷம் ]


14] 06/10/2015 அன்று மாலை 03-38 முதல் 07/10/2015 அன்று காலை 10-58 வரை 19 மணிநெரம் 20 நிமிஷம் [ தசமி –பூசம் ]


15 ] 08/10/2015 அன்று பகல் 01-25 முதல் இரவு 7-15 வரை 5 மணிநேரம் 50 நிமிஷம் [ ஏகாதசி- மகம் ]


16 ] 29/10/2015 அன்று மாலை 6-37 முதல் 30/10/2015 அன்று காலை 08-25 வரை 13 மணிநேரம் 45 நிமிஷம் [ திருதியை – ரோஹிணி ]


17 ] 15/12/2015 அன்று பகல் 02-05 முதல் 16/12/2015 அன்று 01-25 வரை 11 மணிநேரம் 20 நிமிஷம் [ பஞ்சமி –திருவோணம் ]


18 ] 06/01/2016 அன்று காலை 07-26 முதல் 07/01/2016 காலை 7-54 வரை 24 மணிநேரம் 38 நிமிஷம் [ துவாதசி – அனுஷம் ]


19 ] 16/01/2016 அன்று 02-32 முதல் மாலை 05-56 வரை 15 மணிநேரம் 24 நிமிஷம் [சப்தமி – ரேவதி ]


20 ] 19/01/2016 அன்று பகல் 12-19 முதல் இரவு 9-45 வரை 9 மணிநேரம் 26 நிமிஷம் [ ஏகாதசி – கிருத்திகை ]


21 ] 28/01/2016 அன்று 01-57 முதல் இரவு 11-57 வரை 10 மணிநேரம் [ சதுர்த்தி – உத்ரம் ]


22 ] 16/02/2016 அன்று 00-27 முதல் 03-09 வரை 2 மணிநேரம் 42 நிமிஷம் [ நவமி – கிருத்திகை ]


23 ] 16/02/2016 அன்று இரவு 11-05 முதல் 17/02/2016 02-30 வரை அதாவது 2 மணிநேரம் 35 நிமிஷம் மட்டுமே [ தசமி – ரோஹிணி ]


24 ] 18/03/2016 அன்று காலை 08-33 முதல் காலை 09-38 வரை 1 மணிநேரம் 05 நிமிஷம் [ தசமி –பூசம் ]

25 ] 11/04/2015 02-54 [அதிகாலை ] மாலை 04-11 வரை 14 மணிநேரம் 07 நிமிஷம் [பஞ்சமி –ரோஹிணி ]


26 ] 12/04/2016 அன்று 00-27 முதல் பகல் 2-54 வரை 10 மணிநேரம் 57 நிமிஷம் [ சஷ்டி – மிருகசீர்ஷம் ]


இந்த நாட்கள் எல்லாம் தீராத வியாதி என கருதுவதற்க்கு “சிகிச்சை “எடுக்க உகந்த நாட்கள் ஆகும்..

இவையெல்லாம் சாத்தியமா என கருத வேண்டாம் …
மகாபாரதம் அறிவீர் அதில் “கெளரவர்கள் “ 100 பேர் கருக்கலைந்தபோது 100 குடுவையில் பிடிக்கப்பட்டு 100 சகோதர்கள் உருவானார்கள் ..[அன்றைய குடுவை தானே இன்று டெஸ்ட் டியூப் குழந்தை ]
முதல் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை என்பது விநாயகப்பெருமானுக்கு நடந்த்து.. இன்று மருத்துவத்தில் அதையெல்லாம் சாத்தியம் ஆக்கி இருக்கிறது….


“உத்ரயோகம்” இனி வரும் காலகட்டத்தில் ஒவ்வொரு மருத்துவரும் சிகிச்சை பலன் அளிக்காத நோயாளிகளுக்கு “சோதித்து பார்த்து” அதில் “மருத்துவ வெற்றி” அடைய அதிக நாட்கள் இல்லை !!!

இதோ மன்மத ஆண்டு நெருங்கி விட்ட்து!!!இனி எல்லாம் சாத்தியம் தான்!!!!

மக்களின் நலன் கருதி வெளியிடுவது!!!

என்றும் ஜோதிடப்பணியில்!!!
Astro Senthil Kumar
 ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்,
புதுபஸ் நிலையம் பின்புறம்
 பெருந்துறை   -638 052
ஜோதிடர்A .செந்தில் குமார்
செல்: +91 98427 69404
             +91 98434 69404  


1 comment:

  1. ஓம் நமசிவாய 🙏🙏🙏 தங்கள் நல் உள்ளத்திற்க்கு மிக்க நன்றி ஐயா ஓம் நமசிவாயம்

    ReplyDelete