Friday 18 January 2019

கட்டிலில் இன்பமும் கையில் குழந்தையும்

 கட்டிலில் இன்பமும் கையில் குழந்தையும் அமைவதும் ..


பொதுவாக 10 பொருத்தங்களை அதுவும் கூட பத்து ஜோதிடரிடம்  ஆலோசனைகளை கேட்டு பின்னர் ஆண் பெண் இருவரையும் இணைத்து வைத்து கூட ஒரு சில தம்பதிகளுக்கு  பத்து வருடங்களாக கூட மகப்பேறு எனும் குழந்தை செல்வம் அமையாது போகிறது ..இதில் எங்கே குறைபாடு வருகிறது ??? என ஆய்வில் பயணிக்க வேண்டும் என ஒரு கருத்தை மனதில் நிறுத்தி கொண்டு பயணிக்க வாருங்கள் ..ஜோதிடத்தில் ஒரு தேடல் உடன் விடையை தேடி செல்வோம் 


..ஒரு கர்ப்பம் தரிப்பது ஏதோ ஒரு ஜவுளிக்கடையில் காய் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி வருவது போல அல்ல ..


இயற்கை மிக அற்புதமான படைப்பை ஆணின் மூலமாக ஒரு பெண்ணின் கருவறையில் “பிரபஞ்ச உற்பத்தியை” துவக்கி வைக்கிறார்.
ஒரு சில புதியதாக ஜோதிடம் கற்று வரும் நபர்கள் கூட 10 பொருத்தம் எனும் திருமண பொருத்தத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை ..ஏன் இந்த பொருத்தங்களை எல்லாம் ஆணின் நட்சத்திரம் முதல் பார்க்காமல் “பெண்ணின்” நட்சத்திரத்தில் வைத்து பொருத்தம் பார்க்கணும் ??? என விதண்டாவாதம் செய்த நபர்கள் பலரை பார்த்து விட்டேன்.. அது போல புரிந்துணர்வு இல்லாமல் இருக்கும் “ஜோதிட மாணவர்கள்” பலரும் கொஞ்சம் தங்களின் கருத்தில் தெளிவடைய வைக்கவும் கூட இந்த கட்டுரை பயன்பட்டால் மிகவும்  மனம் மகிழ்ச்சி அடைவேன்...



ஒரு கரு கர்ப்பப்பையில் உருவாகும் பொழுது

முதல் மாதத்தில் சுக்கிலம் [ விந்தணு ] உடன் சுரோணியம் [ கரு முட்டை ] இணைந்து நாம் சற்றே “பேஸ்ட்” போல கெட்டியான “உப்பு பருப்பை” தயாரிக்கும் அளவுக்கு “கெட்டியான பேஸ்ட்” வடிவம் அடைந்து மறு மாதத்தில் அது இன்னும் கெட்டியாகி கனத்து மூன்றாம் மாதத்தில் உடலில் அவையங்கள் உருவாகி பின்னர்

நான்காம் மாதத்தில் அவையங்களுக்கு உள்ளே எலும்பு வளர்ச்சி அடைகிறது
[ நான்காம் மாதம் கர்ப்பிணி பெண்கள் எலும்பு வளர்ச்சிக்கு காரண கர்த்தா எனும் சூர்யனுக்கு உகந்த கோதுமை உணவுகளை அதிகம் பயன்படுத்த வேண்டும் ]
பின்னர் ஐந்தாவது மாதத்தில் “தோல்” வளர்ச்சியை அடைகிறது
[ ஐந்தாம் மாதத்தில் கர்ப்பிணிகள் சந்திரனுக்கு என நெல் மட்டுமே அல்ல பிறக்கும் குழந்தை  தோல் அழகு அடைய குங்குமப்பூ சேர்க்க வேண்டும் ]ஆறாவது மாதத்தில் கருவில் உள்ள சிசுவுக்கு ரோமங்கள் வளரும்
[ ஆறாவது மாதத்தில் கர்ப்பிணிகள்  சனிக்கு உகந்த நல்லெண்ணை அதிகமாக பயன்படுத்த வேண்டும்]
ஏழாம் மாதத்தில் குரு மூலமாக “சைதன்யம்” என்பது உண்டாகிறது ..

இப்படி ஒரு கருவின் வளர்ச்சிக்கு பல கிரகங்கள் வேலை செய்யும் பொழுது
சில அரை குறை ஆக ஜோதிடம் கற்று விட்டு
5ல் கேது புத்திர தோஷம்
5ல் ராகு புத்திர தோஷம் என கட்டுரைகளை எழுதுவதும்
அதுவும் இந்த முகநூல் கூகுள் ப்ளஸ் வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம்
என பல இணைய தளங்கள் வந்த பின்னர் போலி கணக்கில் பல மோசடிகளும் கூட நடப்பதையும் கண்கூடாக பார்க்கிறோம்..

கொஞ்சம் பொது மக்கள் விழிப்படைய வைக்கும் வண்ணம் இக்கட்டுரையை செதுக்கி இருக்கிறேன்.. வாசிக்கும் நீங்களும் கொஞ்சம் ஷேர் செய்யுங்கள்..



கூடவே உங்கள் கருத்தை சொல்லுங்கள்..
இப்பொழுது இந்த கட்டுரையின் தலைப்பு ஆகிய
தாம்பத்திய சுகமும் மகப்பேறு எனும்
 குழந்தைகள் அமைவதும் ..
எனும் தலைப்பின் உள்ளே பயணிப்போம்..


பல ரீதியாக 1000 ஜோதிட காரணங்களை கண்டு பிடித்து பல நவீன கால பாராசரர்கள் என தன்னை புகழ்ந்து கொள்ளும் ஜோதிட மேதைகள் பல சொல்லி கொண்டாலும் நாம் பயணிக்க போவது ஜோதிட ரீதியாக அல்ல குழந்தை உற்பத்தி என்பது கூட மனிதன் செய்யும் ஒரு விவசாய அபிவிருத்தி தான் இதற்கு விவசாய பொருட்கள் எவ்வாறு நமக்கு துணை வருகிறது ???? இது தான் இக்கட்டுரையின் ஆய்வு பயணம் ஆகும் .



பொதுவாக
திருமணம் முடிந்த பின்னர் இருவரையும் இணைய வைப்பது
“சாந்தி முகூர்த்தம்” இந்த ஆண் பெண் இணைவை கூட ஏன் “சாந்தி முகூர்த்தம்” என பெயர் வந்தது எனும் ஆய்வில் போனால் கட்டுரை மிக நீண்டதாக அமைந்து விடும் என்பதால் பின்னர் அதை பற்றி பேசி பயணிப்போம்..


“சாந்தி முகூர்த்தம்” என்ற இனைவை செய்யும் பொழுது நம் பெரியோர்களால் அனுபவத்தின் மூலமாக நன்கு உணர்ந்து கொண்ட விஷயங்களை எல்லாம் வைத்து “சாந்தி முகூர்த்தம்” செய்விக்கப்படும் போது “மா- பலா-வாழை” என முக்கனிகளை தம்பதியினர் அறையில் வைப்பார்கள் ...


காரணம் ??

கருவுக்கு ஏழாவது மாதத்தில் உயிர் கொடுக்கும் குருவின் உகந்த நிறம் ஆகிய “மஞ்சள் நிறத்தின் காரகத்தன்மை” கொண்டதால் ஒரு கரு உருவாக இந்த முக்கனிகள் பெரும் பங்கு வைக்கிறது என முன்னோர்கள் அறிந்து வைத்து இருந்தார்கள் ...



சிறு வயதிலே நாம் இரட்டை வாழைபழம் என்பதை உட்கொள்ளும் பொழுது பெரியோர்கள் “ஏய் இரட்டை வாழைப்பழம்” சாப்பிட்டால் இரட்டை குழந்தைகள் பிறக்கும் என சொல்வார்கள்..

அதிலே ஒரு உண்மை தன்மை இருக்கிறது..

ஒரு கரு முட்டையை உடைக்க பயணிக்கும் “சுக்கிலம்” [விந்தணு பல கோடி செல்கள் உடன் கருவறையை நோக்கி பயணிக்கிறது .

செல்லும் வழியிலேயே  சில கோடிகள் செல்கள் மரணிக்கும் சில கோடி மட்டுமே கருவறைக்கும் செல்லும் ஆகினும் செல்லும் “செல்கள்” இறுதி வரை சென்று பயணித்து சென்று ஒரு கரு முட்டையை உடைத்தால் ஒரு குழந்தையும் இரு முட்டைகளை உடைக்கும் பொழுது இரு குழந்தைகளும் என “கருவறையில்” உருவாகும் ..

இப்படி பிரபஞ்ச உற்பத்தியை சிசு உருவாவதை ஒரு பெண்ணின் “கருவறை” தீர்மானிப்பதால் மட்டும் இங்கே “பெண் நட்சத்திரம்” முதலாக “திருமண பொருத்தம்” பார்க்கப்படுகிறது ..

இப்படி ஒரு சிசுவை உருவாக்க பயணிக்கும் “சுக்கிலம்” [ விந்தணுக்கள் ] ஒரு மணி நேரத்திற்க்கு 72 KM // PH வேகத்தில் பயணிக்கும் பொழுது “ராகுவின் வீரியத்துடன்” முன்புறத்தில் செல்கள் பாம்பு போன்ற தோற்றத்துடன் சென்று கரு முட்டையை “ஒரு கை பார்க்க வேண்டும்”” ஆனால் இயற்கை விவசாயம் இல்லாமல் போனதால் இன்று இந்த செல்களின் வேகம் சற்றே மட்டுப்பட்டு போய்விட்டது என்பதையும் யாராலும் மறுக்க இயலாது ..


மண்ணையும் இங்கே பரிசோதிக்க வேண்டும்
அதே போல விதைக்கப்படும் விதைகளும் இங்கே பரிசோதிக்க வேண்டும்..
விவசாயத்துக்கு மட்டுமே அல்ல.. மனித உற்பத்திக்கும் இதே போல தான் எப்படி விவசாய விளைச்சலை அதிகப்படுத்த நமக்கு “உரங்கள்” தேவையோ அதே போல தான் “உரங்கள்” இந்த மனித உற்பத்தி எனும் விவசாயத்திற்கு தேவை ஆகிறது...


அப்படி உரங்கள் ஆக முன்னோர்கள் கண்டறிந்த சூட்சுமம் தான் “வாழைபழம்”
சிசுவை உருவாக்க பயணிக்கும் “சுக்கிலம்” [ விந்தணுக்கள் ] ஒரு மணி நேரத்திற்க்கு 72 KM // PH வேகத்தில் பயணிக்கும் பொழுது அதன் வீரியம் குறைந்து போய் விடக்கூடாது என்பதற்க்காக  “உரங்கள்” போல ஆண் பெண் இணையும் நாளில் இதை இரவு நேர சாந்தி முகூர்த்த விருந்துக்கு பயன்படுத்தினார்கள்.. நம்ம ஆளுங்க அன்றைய ஒரு இரவு உடன் உரம் எனும் “வாழைப்பழத்தை” மறுநாளும் பயன்படுத்தாமல் போய் பின்னர் ஒரு இரு ஆண்டு கழித்து “மகப்பேறு மருத்துவரை” தம்பதியினர்கள் சந்திக்க போய் விடுகிறார்கள்..


அங்கே உள்ள “மகப்பேறு மருத்துவரோ” இவர்களுக்கு முடிந்தவரை குழந்தை அமையாமல் இருப்பதற்க்கு என்றே மாத்திரை மருந்துக்களை கொடுத்து அவர்களை கொஞ்சம் நாள் அலைக்கழித்த பின்னர் சோதனை குழாய் குழந்தைக்கு என  “டெஸ்ட் டியூப் பேபி”  என்ற வார்த்தைகள் மூலமாக தம்பதியினர் வசதியை பொறுத்து ரூ 5 லட்சம் முதல் 20 லட்சம் வரை “ஆட்டையை போட்டு விடுகிறார்கள்..


தயவு செய்து திருமணம் ஆகி ஒரு சில ஆண்டுகள் குழந்தை அமையாத தம்பதிகள் முடிந்தவரை “முன்னோர்கள் வகுத்து கொடுத்த சில இயற்கை உரங்களை பயன்படுத்தி பார்த்து விட்டு வேறு முயற்சிகளுக்கு செல்லுங்கள் ..

இவைகளை எல்லாம் செய்தாலும் கொஞ்சம் ஜோதிட ரீதியான பரிகாரங்களு,ம் காலம் கடந்து குழந்தைகள் அமைய செய்ய வேண்டியும் இருக்கும் அதற்க்கு கொஞ்சம் உங்களுக்கு நன்கு அறிமுகம் ஆன ஜோதிடர்களை அல்லது உங்கள் நண்பர்கள் அறிமுகம் மூலமாக ஒரு ஜோதிடரை அணுகுங்கள் ..


இங்கே முகநூலில் வாட்ஸ் அப்பில் கூகுளில் பல ஜோதிடர்கள் Astro என போட்டு கொண்டு போலியாக நடமாடும் பலரும் வந்து விட்டார்கள் என்பதையும் சற்றே நினைவில் கொள்ள வேண்டும் ..

இத்துடன் இந்த கட்டுரையை முடிக்கிறேன் ..

அடுத்த கட்டுரையில்

“திருமணம் தாமதம்” அடைவதற்க்கும்
 “குழந்தைகள்” இல்லாமைக்கும்”” செய்யப்படும் பரிகாரங்கள் எல்லாம் பலிக்குமா??? ஆம் பலிக்கும் பலிதம் ஆகும் ..
எம் அனுபவத்தில் பரிகாரம் பல முறை வென்று உள்ளது. 

அதை அடுத்த பதிவில் பார்க்கலாம் .. இதை வாசித்த அனைவரும் இதை பகிர வேண்டுகிறேன் ..
பெருந்துறையில் இருந்து
Astro Senthil Kumar
Wats App:-+91  9843469404
Email:- astrosenthilkumar  


 Image result for கைக்குழந்தை


1 comment: