Sunday 22 November 2015

11 -ல் இருந்தாலும் அது செவ்வாய் தோசத்தை தரும்

"இரு தார யோகமும் பதினொன்றாம் பாவமும் "இந்த தலைப்பில் மதுரையில் பேச நினைத்தேன் ....

அதிகமான பேச்சாளர்கள் இருந்தமையால் வாய்ப்பு விட்டு கொடுத்தேன் ...அதையேதான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன் ..


பொதுவாக அனைத்துவிதமான ஜோதிட நண்பர்கள் ஜாதக கட்டத்தில் கவனிக்கின்றபோது திருமண பொருத்தமும் இருபாலருக்கும் குருபலம் லக்னத்தை கொண்டு கவனிக்கின்றனர் ...

ஆஹா ஓகோ ஜாதகம் அற்புதமா இருக்கு கல்யாணத்தை முடியுங்கள் என்று சொல்லி விடுகிறோம் (நான் உட்பட )


இருதார யோகத்தை கொடுப்பதில் செவ்வாய் பகவானுக்கு அதிகமான பங்களிப்பு இருக்கிறது ....விஷயத்திற்கு வருவோம் ...செவ்வாய் லக்னத்தில் இருந்து "இரண்டு ""நான்கு ""ஏழு ""எட்டு ""பன்னிரண்டு "ஆகிய ஸ்தானத்தில் இருந்தால் அது "செவ்வாய் "தோசமே !!!இது பண்டைக்காலத்தில் இருந்ததையும் விட இப்போது புதிய புதிய வழிமுறைகளை கொண்டு கவனிக்கும் "நான்கு வார "பயிற்சி ஜோதிடர்கள் மட்டுமன்றி ஜாதகர் -ஜாதகி குடும்பமும் சேர எண்ணி எண்ணி எண்ணி எண்ணி வாழ்க்கையை தொலைக்கிறார்கள் ...


இந்த விதமாக பார்த்தால் அது தவறிப்போய் விடுகிறது ...நம்முடைய கண் பார்வைக்கு செவ்வாய் தோசத்தை தருகின்ற ஜாதகத்தில் இருக்கும் "செவ்வாய் "சிலருக்கு தோசத்தை தருவதில்லை ..

அதே நேரத்தில் "செவ்வாய் "தோசமே இல்லாத ஜாதகத்திலும் கூட செவ்வாய் ஒரு ஆட்டு ஆட்டி விடுகிறாரே ____விஷயமும் இது தான் .


லக்னத்தை வைத்து பார்க்கும்போது சில ஜாதகங்களில் செவ்வாய் தோசமே இல்லாமல் இருக்கும் ஆனால் அந்த ஜாதகத்தில் செவ்வாய் "இருதார யோகத்தை "கொடுத்து விடுகிறார் ..


விதி ஒன்று ;-லக்னத்தை வைத்து செவ்வாய் இருக்கும் இடத்தை பார்ப்பதை விட செவ்வாய் பார்வை எந்த எந்த ஸ்தானத்திற்கு விழுகிறது என்பதை பார்ப்பதே இல்லை ..உதாரணமாக செவ்வாய் லக்னத்தில் இருந்து ஏழாம் அதிபர் ஆறில் அல்லது எட்டில் இருந்தால் இங்கே முறையே களத்திர காரகனுக்கு எட்டு செவ்வாய் அடுத்தப்படியாக லக்ன செவ்வாய் எட்டில் இருக்கும் களத்திர காரகன் மீது பார்வை செலுத்துகிறது இது நிச்சயமாக இருதார யோகத்தை தரும் 


(பல்வேறு ஜாதகங்களை ஒப்பீடு செய்த பின்னர் தான் இதைப்பற்றி பேசுகிறேன் )விதி இரண்டு ;-


செவ்வாய் சந்திரனுக்கு எட்டில் இருப்பதை செவ்வாய் சுக்கிரனுக்கு எட்டில் இருப்பதை செவ்வாய் சந்திரனுக்கு நான்கில் இருப்பதை செவ்வாய் சுக்கிரனுக்கு நான்கில் இருப்பதை இப்போதைய ஜோதிட பயிற்சி ஆசிரியர்கள் ஒப்புக்கொள்வதாக இல்லை ...ஆனால் உண்மையில் இதுபோன்ற அமைப்பில் இருக்கும் ஜாதக ஜாதகர்கள் வாழ்வாதாரத்தை கவனியுங்கள் நிச்சயமாக "இருதார யோகத்தை "செய்து இருக்கும் ..


"சந்திர காவியம் ""ஜாதக சந்திரிகா "போன்ற மூலநூல்களில் இருக்கும் கருத்தின்படி "செவ்வாய் "பார்வையில் "நான்காம் "பார்வையும் "எட்டாம் "பார்வையும் கடும் தோசத்திற்கு ஆளாகிறது என்பதே ஆனால் அதை இன்றைய ஜோதிட போதனைகள் கொடுக்கும் ஆசிரியர்கள் ஒப்புக்கொள்வதாக இல்லை ..


"அதெல்லாம் இல்லை என்னுடைய புத்தகத்தில் வாசியுங்கள் எல்லாம் புரியும்" என்று வகுப்பின்போது முற்றுப்புள்ளி வைத்து விடுவார்களே தவிர "மூலநூலின் சாராம்சம் "பற்றி ஒப்புக்கொள்வதில்லை ...


((என்ன செய்ய ,,,,எங்களுக்கு தெரிஞ்சா சொல்ல மாட்டோமா ??என்பது அவர்கள் மைண்ட் வாய்ஸ் !!!சரி அதை இன்னொரு பதிவில் பேசுவோம் ))


சிம்மலக்ன கும்பலக்ன ஜாதகத்தில்பதினொன்றாம் பாவத்தில் இருந்த செவ்வாய் "இருதார யோகத்தை "பல்வேறு ஜாதகி ஜாதகருக்கு செய்து இருக்கிறது ..(ஆய்வின் ஜாதகங்களை எல்லாம் என்னுடைய அலுவலகத்தில் வைத்து இருக்கிறேன் ..வாதிட விரும்புவோர் அங்கே வரவும் )11 அதிபர் வலுவாக இருப்பதும் 11 அதிபர் இரண்டில் 2ம் அதிபர் உடன் கூடுவதும் 2ம் அதிபர் 11ல் பரிவர்த்தனை பெறுவது அல்லது 11 ம் அதிபர் உடன் 11ல் கூடுவதும் செவ்வாய் 11ம் அதிபர் 7 அதிபர் மீது தன்னுடைய பலம்வாய்ந்த "நான்காம் ""எட்டாம் "பார்வையை செலுத்துவது போன்றவை "இருதார யோகத்தை "செய்கிறது ..செவ்வாய் 11ல் இருந்தாலும் பாதிப்பு கொடுக்கிறது ....எப்படி ???எனும் கேள்விகள் வரலாம் ....செவ்வாய் நான்காம் பார்வை எந்த வீட்டின் மீது செலுத்துகிறார் ???இரண்டாம் வீட்டை பாதிக்கும் அல்லவா ???அப்போது இரண்டாம் மற்றும் பதினொன்றாம் அதிபர்கள் பாவர்கள் பார்வையில் அல்லது சேர்க்கையில் பாவர்கள் மத்தியில் சிக்குண்டு இருந்தால் அது ஒருவித செவ்வாய் தோசமே !!ஒரு பெண்ணுக்கு (மேஷ லக்னம் &மகர லக்னம் ) லக்னத்தில் இருந்து ஆறில் செவ்வாய் லக்னத்தில் இருந்து 12ல் சந்திரன் &சுக்கிரனும் இருக்க செவ்வாய் (மேஷ லக்ன களத்திர காரகன் சுக்கிரன் மீதும் சுகஸ்தான சந்திரன் மீதும் தன் சித்திரை நட்சத்திர சாரத்தில் இருந்து பார்ப்பதும் மகர லக்னமாக கொண்ட ஜாதகிக்கு களத்திர காரகன் சந்திரன் மீதும் சுக்கிரன் மீதும் தன் மிருகசீரிடம் சாரத்தில் பார்வையை செலுத்துவது பாதிப்பு கொடுத்து இருக்கிறது )செவ்வாய் ஆறில் மறையும்போது பாதிப்பு தருமா ???என்றால் மேஷலக்னமாக அமைந்துள்ள ஜாதகத்திற்கு பாதக கிரகம் 11ம் அதிபர் சனிபகவான் தன் வீட்டில் அல்லது சாரத்தில் வலுப்படுத்தும் போது 
மகரலக்ன ஜாதகத்திற்கு 11ம் அதிபர் செவ்வாய் ஆறில் மறைந்தாலும் தன் சாரத்தில் (மிருகசீரிடம் ) அல்லது 3&12 க்குடைய குரு சாரத்தில் (புனர்பூசம் )சாரத்தில் வலுப்படுத்தல் போன்றவை "இருதார யோகம் "செய்விக்கும் ...

பொதுவாக 11ம் அதிபர் பலம்வாய்ந்த தன்மையை அடையும்போது "ஜோதிடர்கள் "ஆகிய (என்னையும் சேர்ந்து தான் )சொல்வது என்ன ???"ஜாதகருக்கு ஒன்றுக்கும் வாகனங்கள் யோகம் உண்டு ""ஜாதகருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அமையும் ""ஜாதகருக்கு வாடகை வரவு வட்டி வரவு போன்றவை வரும் "என்பதே ...அதேநேரத்தில் அந்தளவிற்கு பல்வேறு வருமானத்தை கொடுக்கும் "11"அதிபர் பலம்வாய்ந்த தன்மையுள்ள ஜாதகத்தில் செவ்வாயின் பார்வைக்கு 7 & 11 அதிபர்கள் மற்றும் சுக்கிரன் சிக்குண்டு இருக்கும் நிலையிலிருக்கும் எந்தவொரு ஜாதகமும் "இருதார யோகம் "தான் ..


குறிப்பு ;- "தாமதமாக திருமணம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் " என்று "நமக்கு நாமே "சொல்லி சமாதானம் செய்யக்கூடாது ...30 ஐ தாண்டிய பல்வேறுபட்ட ஜாதகங்களில் "இருதாரம் "அமைந்துள்ளன ...(அனைத்து விஷயங்களுக்கு ஆதாரங்கள் இருக்கிறது ....அது எங்கும் இல்லை உங்கள் இடத்தில் இருக்கும் "பழமையான "சந்திர காவியம் ""ஜாதக சந்திரிகா "போன்றவைகளை படியுங்கள் ...அல்லது உதாரணமாக "இருதாரம் "அமைந்த உங்களுக்கு தெரிந்த வாடிக்கையாளர் ஜாதகங்களை வாங்கி ஆய்வுகளை செய்யுங்கள் ...) 


நீங்கள் எத்தனை ஆண்டு அனுபவம் வாய்ந்த ஜோதிடர்கள் ஆகினும் உங்களுக்கே "ஜோதிடம் புதியதாக தெரியும் "என்றும் ஜோதிடப்பணியில் !!பெருந்துறை ஶ்ரீவீரபத்ர ஜோதிட மையம் ..Astro Senthil Kumar ....

3 comments:

  1. ஐயா எனக்கு ஜாதகம் கணித்து தருவீர்களா

    ReplyDelete
  2. sir enaku jathaga palan slolveergala

    ReplyDelete