Saturday 25 March 2017

அரசுஉதவி நாடி செல்லஉகந்த நாள்


அரசு அதிகாரிகளை அணுக உகந்தநாட்கள்..

ஒரு V.A.O.
ஒரு தாசில்தார்
ஒரு கலெக்டர்
ஒரு  M.L.A 
ஒரு அமைச்சர் போன்ற ஆசாமிகளை
நமது கார்யம் காரணமாக செல்லும்போது அவர்களை எந்தநாளில்
சென்று பார்த்தால் நமக்கு நம் பணியில் வெற்றி கிடைக்கும் என
குழப்பத்தில் இருப்போர்களுக்கு ஆகவே இந்த பதிவு.....

சுந்தரானந்தர் சோதிட காவியம் என்ற மூலநூலில்
சுந்தரானந்தரின் 300முகூர்த்தம் என்ற தலைப்பில் சொல்லிய விஷயத்தில் இன்று ஒரு செய்யுளை வாசிப்போம்....

மிகுத்ததோர் மன்னர்தெரி சனங்கள் செய்ய மிக்கமுள்ள திங்கள் புதன் வியாழன் வெள்ளி பகுத்ததோர் துவாதசியுந் திரயோதசி பஞ்சமித் தமி தசமி திருதிகையும் தொகுத்ததோ ருத்திரட்டாதியோணம் தூய் சதயம் ரேவதிரோ கணியும் பூசம் வகுத்ததோ ரிடப துலாந் தனுர் மீனத்தில் மகாராஜ தெரிசனங்கள் செய்யுநாளே..

என்கிற பாடல் எண்29
ஆகும்

இதில் சொல்லப்படும் கருத்து ஆனது

அரசு சார்பில் நமக்கு தேவைப்படும் வேலையை
திங்கள்
புதன்
வியாழன்
வெள்ளிக்கிழமை அன்று

திருதியை
பஞ்சமி
தசமி
திரயோதசி
துவாதசி

ஆகிய திதிகள் கூடும் நாளில்

ரோஹிணி
பூசம்
திருவோணம்
சதயம்
உத்திரட்டாதி
ரேவதி
ஆகிய நட்சத்திரம் அமையும் நாட்களில்
#மன்னர்
தரிசனம் செய்ய கார்ய வெற்றி அடையும்
என்கிறது
இப்பாடல்...

இன்னும் வேறு ஒரு பழைமையான ஜோதிட பாடலை அடுத்த பதிவில் காண்போம்...

என்றும் ஜோதிடப்பணியில்
பெருந்துறையில் இருந்து

Astro Senthil Kumar

Wats App 9843469404

ஜோதிட ஆலோசனைகளை பெ கட்ட அடிப்படையில் அணுகவும்.

No comments:

Post a Comment