Tuesday, 13 September 2016

அசுவிணி நட்சத்திர பெண்ணுக்கு பொருந்தும் நட்சத்திரம்

அசுவினி நட்சத்திர பெண்ணுக்கு
பொருந்தும் நட்சத்திர பட்டியல்

1)பரணி (ஏகராசி)

2)ரோகிணி

3)பூசம்

4)ஆயில்யம் (ரச்சு இல்லாமல் போனாலும் ஆரோகண அவரோகணத்தில்செய்யலாம்)

5)மகம் (ஆரோகணத்தில் ரச்சு இல்லாமல் போனாலும் செய்யலாம்)

6)பூரம்

7)உத்திரம் 1ம் பாதம் 

8)விசாகம் 1-2&3 பாதம்

9)அனுஷம் (அஷ்டம ராசி ஆனாலும் வசியம் இருப்பதால்
ராசி அதிபர் ஒருவரே என்பதால் செய்யலாம்)

10)மூலம் (ஆரோகணம் என்பதால் இணைக்கலாம்)

11)பூராடம் 

12)உத்திராடம்

13)திருவோணம் 

14) சதயம் 

15)பூரட்டாதி

16)உத்திரட்டாதி

ஆகிய ஆண் நட்சத்திர ஜாதகங்கள்
பொருந்தும்
பொதுவாக
#ரச்சு இல்லாமல் திருமணம் செய்தாலும்
நல்ல தாராபலன் இருக்கும் நாட்களில்
திருமணம் செய்ய வேண்டும்
.....
அசுவினி பெண் எனும்போது
அவர்களுக்கு நல்ல தாராபலன் இருக்கும்
#முகூர்த்த_நட்சத்திரங்கள்
1)ரோகிணி
2)திருவாதிரை
3) பூசம்
4)அஸ்தம்
5)சுவாதி
6)திருவோணம்
7)சதயம்
8)உத்திரட்டாதி
9)ரேவதி
ஆகிய
முகூர்த்தம் இருக்கும் நாட்களில்
மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்....
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
போன்ற வதை நாட்கள் என்பதால்
அந்த நட்சத்திர நாளில்
திருமணம் செய்யும்போது அவர்கள் வதை படும் வாழ்க்கை அமையும் என்பதால் இவைகள் அமைக்கவே கூடாது...
அனுஷம் நட்சத்திர முகூர்த்தம் (பெண்ணுக்கு சந்திராஷ்டம் என்பதாலும்)அமைக்கப்பட்ட கூடாது...
அசுவினி (ஜென்ம)
மகம் (அனுஜென்ம)
மூலம் (திரிஜென்ம)
போன்ற
நட்சத்திர நாட்கள்
இயன்றவரை தவிர்ப்பது நல்லது....
(ஆண் பெண் இருவருக்கும் தாராபலன் பார்க்கும்போது அனுஜென்ம திரிஜென்ம நட்சத்திர நாளிலும் திருமணம் செய்யலாம்)
(குறிப்பு சில ஜோதிட ஆசான்கள் எழுதிய திருமண பொருத்தம் புத்தகம்
சிவகாசியில் அச்சிட்டு
பேருந்து நிலையம் ரயில் நிலையம் போன்ற இடங்களில் ₹10க்கும் ₹20க்கும் விற்பனை ஆகி கொண்டு இருக்கிறது அதிலுள்ள நட்சத்திர பொருத்த விஷயங்களை தாண்டிய ஜோதிட ஆலோசனைகள் தான் மேலே கொடுக்கப்பட்ட விஷயம் ஆகும்)
இன்னும் கூட அதிக ஜோதிட
விஷயங்களை தான் அலசி ஆராய்ந்து பார்க்க தான்
சேலத்தில் இருநாட்கள் ஜோதிட வகுப்பு ஆகும்...
ஜோதிடத்தில் சிலரிடத்தில்
சில குறைபாடு இருக்கவே செய்யும் ஆனாலும் நம்மை நாம் மாற்றி கொள்ள வேண்டும்..
மேலும் விளக்கம் அறிய
சேலத்தில்
வரும் 24-09-2016
சனிக்கிழமை
மற்றும்
25-09-2016
ஞாயிற்றுக்கிழமை ஆகிய
இருநாளும்
“’ திருமண பொருத்தமும் ஜோதிடகள் பங்களிப்பும்”
எனும் எம் இடத்தில்
“நான் அறிந்த ஜோதிட தகவல்களை மட்டுமே “ வழங்க விரும்புகிறேன் ..
காரணம் நேரத்தை நானும் வீண் அடிக்க விரும்பவில்லை ...
நான் சொல்ல வருவதை சொல்லும் போது
கேட்டால் மட்டுமே ஒரு மாற்றம் தரும் அனுபவம்
கிடைக்கும்..
இடம் தேதியை
முன்னிட்டு அறிவிக்கும் காரணம்
உங்களுக்கும் பல்வேறுபட்ட பணிசுமை இருக்கும்
அதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு வர தான் முன்னிட்ட அழைப்பு ஆகும்...
இடம் :- J.V.R.திருமண மண்டபம்
நாராயணசாமி பிள்ளை சாலை
பெரமனூர்
நால் ரோடு அருகில்.
சேலம்
திருமண பொருத்தமும் ஜோதிடர்கள் பங்களிப்பும்
எனும் தலைப்பில் பாரம்பரிய ஜோதிடத்தில் நான் அறிந்த
எவராலும் மறுக்க முடியாத பொதுபடையான ஜோதிட விஷயங்களை பற்றிய ஒரு வகுப்பு அவசியம் இரண்டு நாட்கள் சேலத்தில் தங்க விரும்புவோர்கள் மட்டுமே வரவும் ...
இரு நாளும்
இரு வேளை தேனீர் வசதி மதிய உணவு உட்பட மொத்த செலவு தொகை ரூ 500 மட்டுமே அனுமதி கட்டணம் .....
இந்த செலவும் கூட உங்களை ஜோதிடத்துறையில்
விழிப்புணர்வை அடைய செய்யும் முதலீடு ஆகும்...
இதையும் கூட ஒரு ஜோதிட அனுபவம் பெற செய்யப்படும் அழைப்பு ஆகும்...
முன்பதிவு செய்ய]
சேலம் ஜோதிடர் மகேந்திரன் :- 9524239934 எனும் எண்களில்
அல்லது
என் செல் மற்றும் வாட்ஸ் அப் :9843469404 ஆகிய எண்ணிலும்
முன்பதிவு செய்ய வேண்டுகிறேன்...
வாருங்கள் இனி ஒரு விதி செய்வோம்..
என்றும் ஜோதிட பணியில்
பெருந்துறையில் இருந்து
Astro Senthil Kumar
9843469404

Wednesday, 3 August 2016

ஜோதிட பலாபலன் பாடம் -1

இதை முழுமையாக வாசிக்காமல் லைக் செய்வோர் ஜோதிடர் அல்ல....

ஜோதிடர் எனில் ஜோதிட ஆர்வலர் எனில் அதிலும் ஜோதிடம் பயிலும் மாணவர்கள் எனில் அவசியம் படிக்கவும் ..கற்போம் ஜோதிடம்
ஜோதிட ஆர்வலர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அறிந்து கொள்ள உதாரண ஜாதகம் இது..

சில வாரங்களுக்கு முன் இந்த ஜாதகம் என்னிடம் பலாபலனை காண வந்தது..இன்று இவருக்கு 40 வயது பூர்த்தி அடைகிறது ..[ 28-07-76 காலை 6-02 நிமிடம் ..பிறந்த ஊர் கோவை ]
இன்னும் கூட திருமணம் அமையவில்லை என்ற காரணம் ஆகவே ஜோதிடம் பார்க்க வந்தார்கள் …

பல்வேறுபட்ட ஜோதிடரை சந்தித்த பின்னரே எம்மை அணுகி உள்ளார்கள்..
இத்தகைய அமைப்பில் பிறந்தால் அவர்கள் வாழ்வாதாரம் குடும்பம் குழந்தை எப்படி இருக்கும் எனும் ஆய்வை செய்வோம்..

ஆய்வுகளை தொடர்வோம் ..

கடக லக்னம் :- இதற்க்கு யோகர்கள் செவ்வாயும் குருவும் தான் ..
பாதகாதிபதி சுக்கிரன் [இயற்கையில் சுபர் ஆன சுக்கிரனும் கடகலக்னத்தில் ராசியில் பிறந்தவர்களுக்கு பாவரே] ஒரு மனிதனுக்கு தன் வம்ச விருத்திக்கு வாரிசு அமைய வேண்டும் எனில் முதல் மனைவி தேவை …

மனைவியால் கிடைக்கும் காமம் தேவை …சரி மனைவியை காமத்தை கொடுப்பது எது எனில் அது ஏழாம் பாவமே. அந்த ஏழாம் இடத்தின் அதிபர் சனி இருப்பது லக்னத்தில் [ஸ்புடம் 102-56 ல்] சனி தொலைதூரத்தில் இருந்து இந்த லக்னத்திற்க்கு தன் பலத்தை செலுத்தும் போது அதை வரும் வழியில் பலம் குன்ற வைத்தது உடன் இணைவு பெற்ற சூர்யன் [ ஸ்புடம் 101-38ல்] ஆக ஏழாம் இடத்து அதிபரால் கிடைக்கப்பெறும் பலன்கள் அனைத்தும் கிட்டாமல் போனது ..
அப்படி
இரண்டாம் (குடும்பம்)
அதிபர் சூர்யன் அம்சத்தில் நீசம்
ஏழாம் அதிபர் சனி அம்சத்தில் உச்சம் எனில் இவர் தாலி கட்டும்
மனைவிக்கு அது மறு திருமணம் ஆகவும் இருக்கும்..

ஜாதி மாறிய திருமணம் கூட அமையலாம் இது பொது ஜோதிட விதி....

விதி லக்னம் ] அற்று போனவர்க்கு மதியை [சந்திரன்] பார்த்து சொல்லு என்பார்கள் ..

ஆனால் மதி எனும் சந்திரன் நிலை?? லக்ன ராசிக்கு 3ம் மற்றும் 12ம் அதிபர் புதன் சேர்க்கை [ஸ்புடம் 114-48ல்] இயற்கை சுபர் ஆன சுக்கிரனும் இந்த ராசி லக்னத்திற்க்கு பாவர் [ சுக்கிரன் ஸ்புடம் 112-37ல்] ஆக ஸ்புடகலை ரீதியாக பார்க்க புதனுக்கும்[ 114-48] சுக்கிரனுக்கும் [112-37ல்] இடையை சிக்கிய சந்திரன் வளர்பிறை துவிதியை ஆனாலும் [ஸ்புடம் 113-51] தன் பலத்தை முழுமையாக இழக்கிறார்.. 

ஐந்தாம் அதிபர் செவ்வாய் இரண்டில் அமைந்தாலும் அவர் அமைந்த நட்சத்திரம் கடக லக்ன பாதகாதிபதி சுக்கிரனின் பூரம் நட்சத்திரம் 3ம் பாதம் [ கடக லக்னத்தை பொருத்தவரை அம்சத்தில் புத்திர ஸ்தான அதிபர் செவ்வாய் புதனின் வீட்டில் அமையும் எந்தவொரு ஜாதகருக்கும் கொள்ளி இட பிள்ளை இல்லை எனும் பொருளில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் சிலருக்கு பெண் குழந்தைகள் ஆகவே இருக்கும் ]
அடுத்தபடியாக இவர் கடந்து வந்த கால கட்டம்
புதன் திசை 7 வயது 10 மாதம் வரை
கேது திசை 14 வயது 10 மாதம் வரை
சுக்கிரன் திசை 34 வயது 10 மாதம் வரை [ கடகத்தில் பிறந்தாலே சுக்கிரனால் எந்தவொரு நற்பலனும் இல்லை என்பதால் அந்த திசையில் நற்பலனும் இல்லை ]
பொதுவாக கால சர்ப்ப தோசத்தில் பிறந்தாலே 33 வயதுக்கு மேலே தான் நல்லதொரு முன்னேற்றம் ஜாதகருக்கு கிடைக்கும்
ஆக 34 வயது 10 மாதம் கழித்தும் பல இடங்களில் தேடியும் இன்னும் திருமணம் இல்லை என்பதாலும் யார் என்ன பரிகாரம் சொன்னாலும் தேடி சென்று செய்வது யார் நன்றாக ஜோதிடம் பார்க்கிறார்கள் என்றாலும் தேடி சென்று பார்ப்பதும் இவருடைய தலையாத வேலை ஆகவே அமைந்து விட்டது [ கடக சூர்யன் இரண்டாம் அதிபர் ஆக இருந்து சூர்யன் அம்சத்தில் நீசம் அடைந்தால் அந்த திசையில் அவர்கள் ஆலய பணிக்கு அதிகமான செலவுகளை செய்வார்கள் என்பதும் ஒரு காரணம் ஆகும்]
யாரோ பெருந்துறையில் Astro Senthil Kumar இடத்தில் ஒருமுறை சென்று ஜோதிடம் பார் என சொல்லி அனுப்பி உள்ளார்கள் ..

[ ஆஹா!!! நம்பளையுமா இந்த உலகம் நம்புது ??]சரி சரி
தற்போது இவருக்கு சூர்யதிசையில் சுக்கிர புக்தி நடப்பு 29-05-2016 வரை நானும் மற்ற ஜோதிடரை போல உடனே பரிகார முறைகளை சொல்லி எனக்கு தெரிந்த ஐய்யர் இருக்கிறார் என அழைக்கவில்லை ..

ஆடியில் வாடிக்கையாளர் வருகை சற்றே குறைவு என்பதால் சற்றே நேரம் இருப்பதால் இங்கு பதியப்படும் அனைத்து கருத்தும் அவர்கள் இடத்தில் பலாபலனாக சொல்லிய கருத்துக்களே தான்.. 

ஆயில்யத்தில் பிறந்தவர்களுக்கு நான்காம் திசை ஆன சூர்யதிசை யோகம் தர வேண்டும் ஆனால் சனி சேர்க்கை அம்சத்தில் நீசம் போன்ற காரணம் ஆக 40 வயது 10 மாதம் முடியும் வரை சூர்யதிசை சுக்கிர புக்தியால் இவருக்கு நற்பயனை தரும் வாய்ப்புகள் குறைவு தான் என்பதும் ..

அடுத்தபடியாக துவங்கும் ஐந்தாம் திசை ஆன சந்திர திசையில் சந்திர புக்தியில் குறிப்பாக ராகு அந்திரம் நடக்கும் போது [ 11-07-2017 முதல் 26-08-2017 வரை] அல்லது குரு அந்திரம் [ 26-08-2017 முதல் 5-10-2017 வரை ] இந்த இரு அந்திரத்தில் திருமணம் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என ஆருடம் சொல்லி இருக்கிறேன் .. 

இதற்க்கு காரணம் ராகு யோகி என்பதும் கடக லக்னத்தின் யோகராக அமைந்த குரு தன் அந்திரத்தில் கூட விவாஹம் செய்ய வாய்ப்புகள் உள்ளது என்பதும் ஒரு காரணம் ஆகும்..

அதுவும் தவிர 3/11 ஆக இருக்கும் கிரகங்களின் பலாபலன் [ பஞ்சபூத தத்துவம் இதை தான் நான் முழுமையாக நம்புகிறேன் ] எப்போதும் நற்பலனையே தரும் ..
உடனடியாக ஜோதிடர்கள் மத்தியில் ஒரு கேள்வி எழலாம் அது ஏன் சுக்கிரனும் குருவும் 3/11 தானே சுக்கிர திசையில் குரு புக்தியில் ஏன் திருமணம் இல்லை என்ற கேள்வி எழலாம்..

இருக்கிறது விளக்கம் இயற்கையில் சுபர் ஆன சுக்கிரன் கடகத்தின் பாதகாதிபதி என்றாலும் சுக்கிரனுக்கும் குருவுக்கும் எப்போதும் பகைமை என்பதால் கடக லக்ன யோகர் ஆன குரு தன் புக்தியில் கொடுக்க நினைத்த சுபத்தை சுக்கிரன் புக்தியில் கொடுக்க முடியவில்லை [ மனைவியும் காமமும் கிடைக்காமல் போனாலும் வேறு சில நற்பயன் கிட்டி இருக்கிறது அதையும் தெளிவுபடுத்தி கொண்டேன் ]
ஆக சந்திரனும் குருவும் எப்போதும் நட்பு என்பதும் கடக யோகர் குரு என்பதும் திசா நாதன் புக்திநாதன் ஆகியோருக்கு 11ல் 3ல் அமைந்த கிரகம் நல்ல பலனையே தரும் என்பாதாலும் இதுபோன்ற ஜாதகம் காண நேரிட்டால் தில்லாக பலாபலனை சொல்லலாம்…

இது போன்ற ஜாதக அமைப்பில் பிறந்து எவருக்குமே திருமணம் இல்லை என சொல்லி விட முடியாது
மனைவி மற்றும் குழந்தை உடன் கூட ஜாதகர்கள் இருக்கலாம் [ மனைவி உடன் சதா சண்டை அல்லது பிரிவினை ..
பெண் குழந்தைகள் மட்டுமே அல்லது ஆண் வாரிசு இருந்தாலும் அவனால் பயனில்லை என வேதனை அடையும் நிலை என வாழலாம்]..
இந்த ஜாதகத்தில் யோகமே இல்லையா?? என வினா எழும்
சரி இந்த ஜாதகத்தில் இருக்கும் யோகங்கள் என்ன???
அதையும் ஆராய்ந்து தான் பார்ப்போமே???

1] அனபா யோகம் என ஒன்று இருக்கிறது..
கடக லக்னம் / கடக ராசிக்கு இரண்டில் செவ்வாய் இருப்பதால் இந்த அனபா யோகம் ஏற்படுகிறது.. இதன் பலன் செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு வருமானம் கிடைக்கும்…

2 ] தோச நிவர்த்தி யோகம் உள்ளது
லக்னத்தில் அல்லது கேந்திரத்தில் புதன் சுக்கிரன் இருப்பதால் இந்த யோகம் ஆனாலும் கடக லக்னத்தின் பாதகர் சுக்கிரன் 3/12 அதிபர் புதனும் லக்னத்தில் அமைந்தது தோச நிவர்த்தி என சொல்லி விடவும் இயலாது ..
இது தோச ஜாதகமே ஆகையால் தானே இன்னும் இல்லற சுகம் இல்லாத நிலையை கொடுத்து இருக்கிறார் [ லக்னாதிபதி சந்திரன் தன் திசையில் யோகம் தரட்டும் ] 

3 ] சர்ப்ப யோகம் உள்ளது
ராகு கேது கேந்திரத்தில் அமைந்தால் அது சர்ப்ப யோகம் ஊரில் பிரபலமான தன்மை கடக லக்னத்திற்க்கு எப்போதும் அரசியல் ஆசையால் எம்.எல்.ஏ. முதல் கவுன்சிலர் போன்ற தேர்தலில் போட்டி இடுவது இவரையும் விட்டு வைக்கவில்லை ..
கவுன்சிலர் தேர்தலில் சுக்கிர திசையில் தோல்வியை தழுவி உள்ளார்..சந்திர திசையில் அது கை கூடட்டும்..
[குறிப்பு:- தற்போதைய சில அமைச்சர்கள் கடக லக்னம் கடக ராசியை சேர்ந்தவர்கள் தான் ]

4 ] பர்வத யோகம் உள்ளது..
லக்னாதிபதி லக்னத்தின் கேந்திரம் 1-4-7-10ல் அமைந்தால் அது பர்வத யோகம் ஆகும் ..லக்னாதிபதி லக்னத்தில் இருப்பதால் அது நல்ல யோகம் தான் ..


5] சாமர யோகம் உள்ளது
இரு சுபர்கள் கேந்திர வலுவில் 1-4-7-10 அமைந்தால் சாமர யோகம் ஆகும்..

6] சங்க யோகம் உள்ளது
ஐந்தாம் அதிபர் செவ்வாய் க்கு கேந்திரத்தில் ஆறாம் அதிபர் குரு இருப்பதால் இந்த சங்க யோகம் ஆகும் …பொருளாதார தட்டுப்பாடு எப்போதும் அமைக்காமல் சமாளிக்க வைக்கும் ..

7] சதா சஞ்சார யோகம் உள்ளது
சரலக்னம் அல்லது லக்னாதிபதி சர ராசியில் இருப்பது போன்ற அமைப்புக்கு பெயரே சதா சஞ்சார யோகம் [ இது நல் யோகம் ஒரு இடத்தில் அமராமல் சும்மா சுற்றி கொண்டே இருக்கும் அமைப்பு ]
உதாரணம் :- இந்த ஜாதகர் ஒரு சொகுசு வாகன [ டிராவல்ஸ் டிரைவர் ] ஓட்டுநர் ..ஆக சதா சஞ்சார யோகம் நன்றாக வேலை செய்கிறது …

8] கவுள யோகம் உள்ளது
இது நல்ல யோகம் அல்ல.. லக்னத்தில் நான்கு கிரகங்களுக்கு மேலே இருப்பதன் பெயரே கவுள யோகம் ஆகும்..இதர திசா புக்தி கொடுப்பதையும் இதர கிரகங்கள் கொடுப்பதையும் கெடுப்பதே இந்த கவுள யோகம் தான்..

[குறிப்பு:-இதை உங்களுக்கு தெரிந்த ஜாதகத்தில் காணவும் ]
பொதுவாக 10 அதிபர் அமைந்த வீட்டின் [ சிம்மம் ] அதிபர் சூர்யன் [ பூசம் –சனி சாரம் சனி இணைவு இரும்பு சார்ந்த தொழில் ஆக அமையும்..
10 அதிபர் சுக்கிரன் சாரம் [ பூரம்]
10ம் இடத்தில் இருக்கும் கேது சாரம் [பரணி ] இரண்டும் சுக்கிரன் எனும் போது
டெக்ஸ்டைல்ஸ் மற்றும் நகைக்கடை அல்லது
பேன்சி கடை .. 

பொருள் வாடகைக்கு விடும் கல்யாண் ஸ்டோர்ஸ் அல்லது வாடகைக்கு வாகனங்களை விடும் டிராவல்ஸ் உரிமையாளர் ஓட்டுநர் அல்லது அதில் பணி புரியும் சூழ்நிலைகளை தான் தரும்…அது இந்த ஜாதகத்தில் நன்றாக பொருந்தி வந்தது ..

தோசத்தின் தீர்வுகளே இல்லையா ?????என கேள்வி வரலாம் இருக்கிறது ..
திருமணம் தடை சனி கொடுக்க நினைத்த [ மனைவி காமம் ] சூர்யன் கெடுக்கிறார் .அதுவும் போக அம்சத்தில் நீசம் அடைந்த சூர்ய திசை வேறு
[ ஆடுதுறை சூர்யானார் கோயிலுக்கு ஆதி வாரம் சென்று சூர்யனுக்கு ப்ரீதி கொடுப்பது ]பொதுவாக சூர்ய திசை நடப்போர் ஞாயிறு அன்று அசைவம் தவிர்ப்பது நல்லது ஆகும்..
நடப்பு சுக்கிர புக்தி [ஸ்ரீரங்கம் பெருமாளை வெள்ளிக்கிழமை அன்று காலை நடக்கும் விஸ்வரூப தரிசனம் நடக்கும் போது தரிசனம் செய்வது ..

திருமணம் எதற்காக செய்ய வேண்டும்????
ஒரு வாரிசு ஒன்று வேண்டும் என்பதற்காக வாரிசு தருவது ஆணுக்கு ஐந்தாம் பாவம் தான் [ பெண்ணுக்கு ஒன்பதாம் பாவம் மட்டுமே அதற்க்கான பதிவினை தனியே செய்யலாம் ] அந்த ஐந்தாம் அதிபர் செவ்வாய் லக்ன பாதகாதிபதி சுக்கிரன் சாரம் [ இது ஒரு தீமை தான் ]

சரி புத்திரகாரன் செவ்வாய்க்கு 10ல் குரு [ கொள்ளி இட பிள்ளை இருப்பதும் இல்லை ]
செவ்வாய் வேறு சுக்கிரன் சாரத்தில் இரண்டாம் பாதத்தில் ஆக எதிர்கால சந்திர திசையில் இரு பெண் மகவுகள் அமையும் வாய்ப்பு இருக்கிறது..

சரி ஐந்தாம் அதிபர் இப்படி தோசம் அடைவதும் இந்த ஐந்தாம் அதிபர் செவ்வாய்க்கு பத்தில் குரு இருப்பதும் தோசமே …

பரிகாரம் தான் என்ன ??
ஆடி அமாவாஸை அல்லது
புரட்டாசி அமாவாஸை அல்லது
ஐப்பசி அமாவாஸை அல்லது
தை அமாவாஸை நாளில்
நதிக்கரையில் நீராடி ஏதேனும் ஐந்து சன்னியாசிகளுக்கு [ காவி வேஷ்டி துண்டு என துணிவகை மற்றும் உணவு ]
வஸ்திர தானம் போஜன தானம் உடன் வெற்றிலை பாக்கு காணிக்கை
உடன் கொடுத்து அந்த ஐந்து சன்னியாசிகள் காலில் அஷ்டங்கமாக விழுந்து வணங்கி விட்டு வர குழந்தை கிடைக்க என்றாவது திருமணம் அமையும் என்பதை ஆலோசனை ஆக சொல்லி அனுப்பி உள்ளேன் ..

இதை பற்றிய பதிவு எதற்காக ????
பல்கலை கழகத்தில் பாடம் எடுக்கிறோம் என சிலர் கோமாளி டிரெஸ் போட்டு கொண்டு ஜோதிடத்தில் பரிகாரமே இல்லை என சாத்தான் வேதம் ஓதலாம் [ பரிகாரத்தால் கடந்த என் அனுபவத்தில் 10 ஆண்டுக்கும் மேலே பல்வேறுபட்ட புண்ணிய பலனை ஜாதகர் அடைந்து இருக்கிறார்கள் … ]
பரிகாரம் என்பதை சொல்லி அதன் மூலம் பிராமணர்களுக்கு கிடைப்பதை எப்போது ஒரு ஜோதிடர் கமிஷன் எனும் அடிப்படையில் பொறுக்கி தின்கிறார்களோ அங்கே பரிகாரம் வேலை செய்வது இல்லை என்பதே உண்மை ஆகும்..
ஆக ஜோதிட நண்பர்களே பிராமணர்கள் இடத்தில் கமிஷனும் பேசாமல் குறிப்பிட்ட கோயிலுக்கு மட்டும் வழி வகை சொல்லி அனுப்புங்கள் ..

யோகங்களை பழைய பாடல்களை தூக்கி குப்பையில் போடு சாத்தான் நான் ஓதுவதே உனக்கு வேதம் என பல்கலையில் ஜோதிட போதனை செய்யும் கோமாளியாலும்
பரிகாரத்தில் கமிஷன் வாங்கும் ஜோதிடராலும்
அந்த ஜோதிடரை அணுகி என்னிடம் பரிகாரம் செய்ய ஆட்களை அனுப்பி வை உங்களுக்கு தேவைப்படும் கமிஷனை நான் தருகிறேன் என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசும் பிராமண பரிகார புரோஹிதராலும் தான் இந்த ஜோதிடத்துறை பாழ்பட்டு போனது..

சிறந்த ஜோதிடர் ஆக வர வேண்டும் எனும் ஒரு நோக்கத்தை மட்டுமே வைத்து கொள்ளுங்கள் உங்கள் நாவில் சரஸ்வதி தேவி அருளால் உள்ளத்தில் [ஆன்மா ] தோன்றுவது உதட்டில் [ வாக்கு ]
அதை செவியில் கேட்டு சொல்லும் வாடிக்கையாளர் உங்களை முழுமையாக சொன்னது நடக்கும் என சென்றால் அது நிச்சயம் நடந்தே தீரும் ..அங்கே நீங்கள் வாய் திறந்து சொல்வதே ஜாதகருக்கு நடக்கும்…..

அடியேனும் கமிஷனுக்கு ஆசைப்பட்ட பரிகாரம் சொல்லவில்லை
[ ஹ்ஹ்ஹ்ஹ் சன்னியாசி இடத்தில் கமிஷன் திருவோடு தான் கிடைக்கும் ]
சரி இவ்வளவு நேரம் டைப்பிங் செவ்வன செய்து இதை உங்கள் இடத்தில் பகிர காரணம்???

பழமையும் பாரம்பரியமும் ஜோதிடமும் காக்கப்படணும்… என் சொந்த ஜோதிட அனுபவம் ஜோதிட அறிவை வளர்க்க பழமையான ஜோதிட நூல்களே எனக்கு வழி காட்டி ஆகும்..

இதை வாசிக்கும் நீங்கள் 50 ஆண்டு கால ஜோதிடரோ அல்லது
ஆரம்ப நிலை ஜோதிடரோ எம் பதிவில் ஜோதிட நுட்பம் இருப்பதாக கருதினால் இதை ஷெர் செய்து அனைத்து ஜோதிட குழுவிலும் கொண்டு செல்லுங்கள்..
அதே நேரம் உங்கள் கருத்தை அல்லது ஆலோசனையை இதில் பின்னோட்டம் [கமெண்ட்ஸ் ] மூலமாக கொடுக்கவும்..
நன்றி வணக்கம் அடுத்த பதிவில் இன்னொரு ஜோதிட ஆய்வினை தொடருவோம்..
என்றும் ஜோதிட பணியில் ..
Astro Senthil Kumar
எம்மை நேரடியாக அணுக !!
தொடர்புகொள்ள
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்,
புதுபஸ் நிலையம் பின்புறம்
பெருந்துறை -638 052
ஜோதிடர்A .செந்தில் குமார்
செல்: +91 98427 69404
+91 98434 69404


Tuesday, 12 April 2016

துன்முகி ஆண்டில் தீராத நோய்க்கு சிகிச்சை எடுக்க உகந்த நாட்கள்

துன்முகி வருஷத்தின் நோயை தீர்க்கஉத்ரயோகங்கள்
அன்பு ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்இந்தியவேத ஜோதிடம் பல பிரிவுகளை கொண்ட அமைப்பு ஆகும்!!!
நான்கு வேதத்தில் உட்பிரிவாககல்பம்” [மருத்துவம்] “ஜோதிஷ்” [ஜோதிடம்] கொண்ட தளம் நம் வேதங்கள்நோய்க்கு தீர்வு ஜோதிடத்தில் பண்டய காலத்திலேயே எழுதப்பட்டு இருக்கிறது என்பதை பற்றிய பதிவு இது!!
[இன்று பல்கலைகழகத்தில் எடுக்கும் மருத்துவ ஜோதிட படிப்பில் இவை இருக்கிறதா என்பது நான் அறியவில்லை இருந்தால் சந்தோசமே இல்லையெனில் இனி இதையும் சேர்த்து படியுங்கள் ]
கடந்த வாரத்தில்காலப்ரகாசிகை
[ புத்தக அன்பளிப்பு  தஞ்சை பவளக்கண்ணன் ]
எனும் ஜோதிடநூலில் இருந்த சில நுட்பங்களை எம்முடைய கோணத்தில் 
பதியப்பட்டது அதன் சாராம்சம்

நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சைகள் பல எடுத்தும் பயனில்லை என்று சொல்வோர்களை தான் இப்போதெல்லாம் அதிகமாக காண முடிகிறது !!!!!மருந்துகள் சரியில்லையா ????*?*மருத்துவர் சரியில்லையா ???****நோய் தீரும் எனும் நம்பிக்கை இல்லாமல் போகும் காரணம் தான் என்ன எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று கவலையோடு இருப்போர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தரும் பதிவு இது !!!!

காப்பாற்ற முடியாது கடினம் என மருத்துவர்கள் கை விட்ட நோயாளிக்கு சிகிச்சை செய்ய உகந்த நாட்களின் பட்டியலை காணுங்கள் ..
(நாள் செய்யாதை நல்லாரும் செய்யார் )காலப்ரகாசிகை எனும் அற்புதமான நூலை புரட்டிய போது சிக்கிய தகவல்களை கொஞ்சம் நீங்களும் வாசியுங்கள் !!!!!

"உக்ர யோகங்கள் " (தீரா நோய் தீர சிகிச்சைக்கு உகந்த நாட்கள் )


திருதியை அல்லது அஷ்டமி உடன் கூடிய ரோஹிணி நட்சத்திரம் நாள் !!!

சதுர்த்தி அல்லது அஷ்டமி உடன் கூடிய உத்திர நட்சத்திரம் நாள்


பஞ்சமி திதியும் திருவோணம் கூடிய நாள்


சஷ்டி திதியுடன் மிருகசீரிடம் நட்சத்திரம் கூடிய நாள்


சப்தமி திதியுடன் ரேவதி நட்சத்திரம் கூடிய நாள்


நவமி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடிய நாள்


தசமி திதியுடன் பூசம் நட்சத்திரம் கூடிய நாள்


திருதியை அல்லது துவாதசி திதியுடன் அனுஷம் நட்சத்திரம் கூடிய நாள்


ஏகாதசி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் அல்லது மகம் நட்சத்திரம் கூடிய நாள்


தசமி திதியுடன் ரோஹிணி நட்சத்திரம் கூடிய நாள்


திரயோதசி திதியுடன் உத்திரம் நட்சத்திரம் கூடிய நாள்


போன்றவை "உக்ர யோகங்கள் "என்ற பெயரில் அழைக்கப்படுகிறது !!!

"உக்ர யோகங்கள் "நாளில் தீர்க்க முடியாத நாள்பட்ட வியாதிகளுக்கு சிகிச்சைகள் எடுத்தால் 
"
நோய் தீரும் "என்கிறது 
"
காலப்ரகாசிகை "ஜோதிட நூல் 
எதை செய்தாலும் முதலில் அதன்மேல் நம்பிக்கையை வைத்து முயற்சி செய்யுங்கள் !!!
"
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் """
எல்லோரும் இன்புற்று இருக்க !!!!!!
எல்லாம் வல்ல "தன்வந்திரி பகவான் "அருள்புரியட்டும் !!!!!!” “”
வரும் துன்முகி  ஆண்டு தீராத நோய்க்கு சிகிச்சைகள் எடுத்து நோய் தீர்த்து வாழ சில நாட்கள் எம்முடைய தேடலில் சிக்கியது அதன் பட்டியல் பின்வருமாறு::----

1 ]  16-04-2016 அன்று இரவு 11-19 முதல் மறுநாள் இரவு 7.32 வரை 20மணிநேரம் 13 நிமிஷம் [ ஏகாதசி-மகம்]


2 ]  24-04-2016 அன்று மாலை 3-36 முதல் 25-04-2016  மாலை 3-39 வரை 24மணிநேரம் 03நிமிடங்கள் [திருதியை-அனுஷம்]


3 ] 08-05-2016 அன்று மாலை 5-51 முதல் மறுநாள் 09/06/2015 அதிகாலை 2-06வரை 8 மணிநேரம் 15 நிமிடங்கள். [திருதியை  ரோகிணி  ]


4 ] 28/05/2016 அன்று 03-16 முதல் நள்ளிரவு 3-32 வரை காலை 7-28 மணி வரை 3 மணிநேரம் 56நிமிஷம் [ பஞ்சமி-திருவோணம் ]


5 ] 12-06-2016  அன்று காலை 11-36 முதல் மறுநாள் அதிகாலைகாலை 02-39 வரை 15 மணிநேரம் 03 நிமிஷம் [ அஷ்டமி- உத்திரம் ]


6 ] 02-07-2016 அன்று நள்ளிரவு 2-00  முதல் அதிகாலை 03-14  வரை 1 மணிநேரம் 14 நிமிஷம் [ ஏகாதசி- கிருத்திகை ]


7 ] 16-07-2016 அன்று நள்ளிரவு 02-08 முதல்  அன்று 11-56 வரை 9மணிநேரம் 48நிமிஷம் [ துவாதசி- அனுஷம் ]


8 ] 25-07-2016 அன்று இரவு 7-45 முதல் மறுநாள் 26-07-2016 அன்று காலைன்11-06வரை 15 மணிநேரம் 21 நிமிஷம் [ சப்தமி-ரோகிணி ]


9 ] 6-8-2016 அன்று அதிகாலை 4-26  முதல் 7-8-2016 அதிகாலை 4-05 வரை 23 மணிநேரம் 49 நிமிஷம் [ சதுர்த்தி-உத்திரம் ]


10 ] 25-08-2016 அன்று மதியம் 12-05 முதல்  இரவு 8-08 வரை 8 மணிநேரம் 3 நிமிஷம் [அஷ்டமி- ரோஹிணி ]


11 ] 25-09-2016  அன்று மதியம் 02-38 முதல் 26-09-2016 அன்று அதிகாலை  1-03 வரை 10 மணிநேரம் 15 நிமிஷம் [தசமி- பூசம் ]


12 ] 20-10-2016 அன்று மாலை 4-47 முதல் இரவு 10-14 வரை 5 மணிநேரம் 27 நிமிஷம் [ சஷ்டி - மிருகசீரிடம்]


13] 25-10-2016 அன்று மதியம் 01-13  முதல் இரவு 11-02  வரை 9 மணிநேரம் 49 நிமிஷம் [ எகாதசி- மகம் ]


14] 27-10-2016 அன்று மாலை 04-16 முதல் 28-10-2016 அன்று அதிகாலை 03-29 வரை 11 மணிநேரம் 11 நிமிஷம் [திரயோதசி -உத்ரம் ]


15 ] 04-11-2016 அன்று காலை 09-08 முதல் 05-11-2016 அதிகாலை  2-26 வரை 17 மணிநேரம் 18 நிமிஷம் [ பஞ்சமி- திருவோணம்  ]


16 ] 20-12-2016 அன்று மாலை 06-45 முதல் 21-12-2016 அன்று மாலை 04-11 வரை 21 மணிநேரம் 26 நிமிஷம் [ திருதியை ரோஹிணி ]


17 ] 04-01-2017 அன்று இரவு 08-45 முதல் 04-01-2017 அன்று மாலை 05-07 வரை 20 மணிநேரம் 22 நிமிஷம் [ நவமி கிருத்திகை ]


18 ] 14-02-2017 அன்று அதிகாலை 04-57 முதல் காலை 09-56 வரை 4 மணிநேரம் 59 நிமிஷம் [ சதுர்த்தி  உத்ரம் ]


19 ] 05-02-2017 அன்று அதிகாலை 06-07 முதல் இரவு 09-00 வரை 14 மணிநேரம் 53 நிமிஷம் [ அஷ்டமி -ரோகிணி ]

20 ] 01-04-2017 அன்று அதிகாலை 02-53 முதல் மாலை 03-16 வரை 12 மணிநேரம் 23 நிமிஷம் [சஷ்டி - மிருகசீர்ஷம் ]


21 ] 05-04-2017 அன்று காலை 10-05 முதல் இரவு 10-52 வரை 12 மணிநேரம் 47 நிமிஷம் [ தசமி -பூசம் ]


22 ] 06-04-2017 அன்று இரவு 11-01 முதல் 07-04-2017 காலை 08-55 வரை 9 மணிநேரம் 04 நிமிஷம் [ ஏகாதசி மகம் ]


23 ] 09-04-2017  அன்று நள்ளிரவு 12-32 முதல் காலை 09-30 வரை அதாவது 8 மணிநேரம் 58 நிமிஷம் மட்டுமே [ திரயோதசி உத்ரம் ]

ஆக துன்முகி ஆண்டில் இந்த 23 நாளும் அதில் இருக்கும் நேரமும் தீராத வியாதிக்கு உகந்த சிகிச்சைகள் செய்ய உகந்த நேரம் ஆகும்..
இந்த நாடகள் எல்லாம் தீராத வியாதி என கருதுவதற்க்கு சிகிச்சை எடுக்க உகந்த நாட்கள் ஆகும்..
இவையெல்லாம் சாத்தியமா என கருத வேண்டாம்
மகாபாரதம் அறிவீர் அதில் கெளரவர்கள் “ 100 பேர் கருக்கலைந்தபோது 100 குடுவையில் பிடிக்கப்பட்டு 100 சகோதர்கள் உருவானார்கள் ..முதல் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை என்பது விநாயகப்பெருமானுக்கு நடந்த்து.. இன்று மருத்துவத்தில் அதையெல்லாம் சாத்தியம் ஆக்கி இருக்கிறது….
உத்ரயோகம்இனி வரும் காலகட்டத்தில் ஒவ்வொரு மருத்துவரும் சிகிச்சை பலன் அளிக்காத நோயாளிகளுக்கு சோதித்து பார்த்துஅதில் மருத்துவ வெற்றிஅடைய அதிக நாட்கள் இல்லை !!!
``````````````````இதோ துன்முகி  ஆண்டு நெருங்கி விட்ட்து!!!
மக்களின் நலன் கருதி வெளியிடுவது!!!
என்றும் ஜோதிடப்பணியில்!!!
Astro Senthil Kumar
 ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்
புதுபஸ் நிலையம் பின்புறம்
 பெருந்துறை   -638 052
ஜோதிடர்A .செந்தில் குமார் 
செல்: +91 98427 69404
             +91 98434 69404    


Sunday, 22 November 2015

சஷ்டி விரதம் குழந்தை அமையும்

எந்த வினையானாலும்,                                                                              கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.  முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.

வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?


கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். (இந்த வருடம் 6.11.2010 முதல் 11.11.2010 வரை.) சூரசம்ஹார தினத்தன்று (11.11.2010) அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள்.பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள். அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள். பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள். நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம். அன்று மாலை, பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள். வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்.


சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் !ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம:  குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன.சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள். ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜையாகும். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலம் சிதம்பரம், அங்கு உஷத் காலத்தில் பெருமானின் கலைகள் எல்லாம் எல்லாத் தலங்களுக்கும் சென்று தெய்வப் பொலிவூட்டுகின்றன என்றும், அர்த்தஜாம காலத்தில் ஆயிரம் கலைகளும் பெருமானிடம் ஒடுங்குகின்றன என்றும், எனவே எல்லாத் தலங்களையும் சென்று தரிசிக்கும் புண்ணியத்தை, சிதம்பரத்தில் அர்த்தஜாமத்தில் வழிபடுவதால் பெற முடியும் என்று சிதம்பர மஹாத்மியம் குறிப்பிடப்படுகிறது. சஷ்டிபதி என்றால் இந்த வேளையில் (அர்த்தஜாமத்தில்) செய்யப்பெறும் வழிபாட்டில் மிகவும் விருப்பம் கொள்பவன் என்றும் பொருள். திருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர்.ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த குமாரஸ்தவம் என்னும் பாராயண நூலில், 25-வது மந்திரம் ஓம் சஷ்டி பதயே நமோ நம என்பதாகும், சஷ்டி தேவியின் நாயகனாக விளங்கும் சண்முகப் பெருமானுக்கு வணக்கம் என்பது இதன் பொருள். சஷ்டிதேவி, தேவசேனைப் பிராட்டியாரின் ஆறில் ஓர் அம்சமாக அவதரித்தவள். அதனால் தேவசேனைக்குரிய சஹஸ்ரநாமத்தில் - ஓம் ஷஷ்ட்யை நம, ஓம் ஷஷ்டீச்வர்யை நம், ஓம் ஷஷ்டி தேவ்யை நம. எனும் மந்திரங்கள் வருகின்றன. ஆறில் ஓர் அம்சமாகத் தோன்றியதால், இவள் சஷ்டிதேவி என்று அழைக்கப்பெறுகிறாள். பெற்ற தாய் கவனிக்காதிருக்கும் காலத்தும், பச்சிளங்குழந்தைகளைப் பாதுகாத்து வளர்க்கும் கருணை நாயகி இவள். இந்தத் தேவியைக் குறித்த வரலாறு தேவி பாகவதம் ஒன்பதாம் ஸ்காந்தத்தில் வருகிறது. இவளுக்கு ஸம்பத் ஸ்வரூபிணி என்றும் பெயர். சுவாயம்ப மனு என்பவனின் மகன் பிரியவிரதன். இவனுக்கு இல்லற வாழ்க்கையில் விருப்பம் இல்லாமலே இருந்தது. எனினும், பிரம்மாவின் வற்புறுத்தலின்படி மாலினி என்பவளை மணந்துகொண்டான். திருமணமாகி பல ஆண்டு ஆகியும் பிள்ளைப்பேறு இல்லாத காரணத்தால், காச்யபரைக் கொண்டு புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்தான் பிரியவிரதன், இதனால் மாலினி, பன்னிரண்டாம் ஆண்டு பிள்ளையைப் பெற்றாள். ஆனால் குறைப் பிரசவமாக இருந்ததால், குழந்தை உருத்தெரியாமலும் உயிரற்றும் இருந்தது. மனம் உடைந்த பிரியவிரதன் குழந்தையை அடக்கம் செய்துவிட்டு, தானும் இறக்கத் துணிந்தான். அப்போது தெய்வாதீனமாக ஒரு பெண் தோன்றினாள். உயிரற்ற - உருவமற்ற அந்தக் குழந்தையை அவள் தொடவும், குழந்தை உருவத்துடன் உயிர்பெற்று அழத் தொடங்கியது.பிரிய விரதன் மிகவும் நெகிழ்ந்து தேவி! தாங்கள் யார் என்று கேட்டான். நான் சஷ்டி தேவி, தேவசேனையின் அம்சம். பிரம்மாவின் மானசீக புத்திரி. நான் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பவள், பிள்ளைப்பேறு இல்லாதவருக்கு அவ்வரத்தை அருள்பவள். மாங்கல்ய பலம் இழக்கும் நிலையில் உள்ளவருக்கு அதனை நிலைப்படுத்துபவள். அவ்வாறே வினைப்பயன் எப்படியிருப்பினும், அவரவர் வேண்டுகோளுக்கு இணங்கி கணவன்மார்களுக்கு இல்லற சுகத்தையும் செல்வப்பேற்றையும் அருள்பவள் என்று கூறி, அந்தக் குழந்தைக்கு சுவிரதன் என்று பெயரிட்டாள். குழந்தைகளுக்கு நலமும் வாழ்வும் அருளும் சஷ்டிதேவி, எப்போதும் குழந்தைகளின் அருகிலேயே இருந்துகொண்டு விளையாட்டு காட்டுவதிலும் திருப்தி கொள்வாள். இவள், அஷ்ட மாத்ரு தேவதைகளில் சிறந்தவள், யோகசித்தி மிக்கவள். பிள்ளைப்பேற்றுக்குப் பிறகு ஆறாம் நாளிலும், இருபத்தோராம் நாளிலும் சஷ்டிதேவியை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஐப்பசி மாதத்தில் வரும் மஹா ஸ்கந்த சஷ்டியைப் போன்று, ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டியை குமார சஷ்டி என்று அழைப்பர்.  அதைப் போல கார்த்திகை மாதத்து வளர்பிறை சஷ்டியை சம்பக சஷ்டி என்றும், சுப்ரமண்ய சஷ்டி என்றும் கூறுவார்கள். இந்த சம்பக சஷ்டியை அனந்தசுப்ரமண்ய விரதம் என்றும் அழைப்பர். குழந்தைப்பேறு அளிக்கும் தெய்வங்களுள் முதன்மையானவர் முருகன் ஆவார். செகமாயை என்று தொடங்கும் சுவாமிமலைத் திருப்புகழில், முருகனையே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார். இந்தத் திருப்புகழைப் பாராயணம் செய்வோர்க்கு, நல்ல குழந்தைப்பேறு கிடைக்கும் என்று வள்ளிமலை சச்சிதானந்தா சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார். தென்காசிக்கு அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் என்று ஊரில் குமார சஷ்டி விழா ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனை தாரக ஹர குமார சஷ்டி என்று அழைக்கிறார்கள். இவ்விழாவில்  படிப் பாயாசம் வழங்குவது விசேஷமானது.சரவணபவ தத்துவம்சேனானீனாம் அஹம் ஸ்கந்த: படைத்தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில். சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின் மறு அவதாரத்தால் அழிவை வேண்டினர். அது கிடைத்தது. சிவன் தங்களை அழிக்க மாட்டான் என நம்பி, அகங்காரம் மேலிட, அவர்கள் தேவர்கள் அனைவரையும் பணியாளர்களாக்கினர். பிரம்மா, விஷ்ணு முதல், யாவரும் மோன நிலையிலிருந்த சிவபெருமானை வேண்டினர், அவரும் இசைந்து பார்வதியை பங்குனி உத்திரத்தன்று மணம் புரிந்தார். சூரபத்மாதியரின் அட்டூழியத்தை அடக்க, சிவமறு அவதாரம் வேண்ட, சிவன் தமது ஐந்து முகங்களுடன் அதோமுக்தினின்றும் ஜோதியை எழுப்பி, வாயுவையும் அக்னியையும் அதை ஏந்தி கங்கையில் இடச் செய்தார். கங்கை, சரவணப் பொய்கையில் 6 தாமரைகளில் இட்டாள். அங்கு 6  ஜோதியும் 6 குழந்தைகளாக மாறின. அவர்கள் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டனர். அதனால் முருகன், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், என்றும் துதிக்கப்படுகிறான்.உமை, குழந்தைகளை அழைத்து அணைக்க ஆறு குழந்தைகள், ஆறுமுகம், பன்னிருகை, இருகால், ஓருடலாகக் கந்தனாக (ஸ்கந்தன் = ஒன்று சேர்ந்தவன்) மாறினான். கந்தன் உதித்த தினம் வைகாசி மாத - விசாக பௌர்ணமி. அதனால் அவன் பெயர் விசாகன். சிவஜோதியின் மறுஉருவம். வேதசொரூபன் அதனால் சுப்ரமண்யன், என்றும் இளையவன் அதனால் குமாரன், மிக அழகானவன் ஆகவே முருகன் (முருக என்றால் அழகு).மு  - முகுந்தன் என்கிற விஷ்ணு
ரு - ருத்ரன் என்கிற சிவன்
க - கமலத்தில் உதித்த பிரம்மன்.
ரு - ருத்ரன் என்கிற சிவன்க - கமலத்தில் உதித்த பிரம்மன்.ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன். காஞ்சி குமரப் பெருமானால் அடி எடுத்துக் கொடுக்கப்பட்டு கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தில் முருகன் அவதாரத்தை இவ்வாறு கூறுவார்:அருவமும் உருவமாகிஅநாதியாய் பலவாய், ஒன்றாய்ப்பிரம்மமாய் நின்ற ஜோதிப்பிழம்பதோர் மேனியாகிக்கருணைகூர் முகங்கள் ஆறும்கரங்கள் பன்னிரண்டும் கொண்டேஒரு திருமுருகன் வந்து ஆங்குஉதித்தனன் உ<லகம் உய்ய!இந்தப் பாடலை உள்ளன்புடன் ஓதினால் குழந்தைப் பேறு பெறலாம். - நாரதர் பழம் ஒன்றை சிவனிடம் வழங்க கணபதி சிவபார்வதியை வலம் வந்து பழத்தைப் பெற, கோபம் கொண்ட பாலன் தண்டம், கௌபீனம் அணிந்து பழனி ஆண்டியானான்.தலம் பழனி (3-ஆம் படை வீடு) - கந்தனைப் புறக்கணித்து சிவனைத் தரிசிக்க பிரம்மா செல்ல, பிரணவத்திற்குப் பொருள் அறியாமல் அவர் சிறைப்பட, சிவனுக்கு பிரணவப் பொருள் உரைத்ததால் கந்தன், சிவகுருநாதன், சுவாமிநாதன் என்று போற்றப்பட்டான். இது நடந்த தினம் ஆடிப்பௌர்ணமி, குருபௌர்ணமி என்றும் கூறுவர். (தலம் - சுவாமிமலை 4-ஆம் படைவீடு). குருவருள் பெற உகந்த தினம். முருகன் தம் அவதாரக் காரணம் நிறைவேற குருவும் நாரதரும் புகன்றிட, திருச்செந்தூரில் தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாகப் பதவியேற்றார். வீரபாஹுவைத் தூது அனுப்பினார். முடிவில் தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன், சூரபத்மாதியரையும் அழித்து வெற்றியை நிலைநாட்டினார்.கந்தனின் ஆயுதம் - பராசக்தியின் மறு உருவமான வேல். சூரபத்மன் கடைசியில் மாமரமாக நின்றான். அதை வேலால் துளைக்க. ஒரு பாதி மயிலாகி வாகனம் ஆனான். மறு பாதி கொடியில் சேவலாக மாறினான். ராவண வதம், கம்ஸ வதம் என்பர், ஆனால் இங்கு மட்டும் சூரசம்ஹாரம் என்பர். வேறு எந்த தெய்வ அவதாரத்திலும் நிகழாத சம்பவம், அது தான் கந்தன் கருணை.  இது நடந்த தினம் கந்த சஷ்டி - தீபாவளி - அமாவாசைக்குப் பிறகு வரும் ஆறாவது நாள். இது நடந்த இடம் திருச்செந்தூர் ஜயந்திபுரம் (2 ஆம் படை வீடு) வெற்றி தினம் கந்த சஷ்டி தினம். மாத சுக்ல சஷ்டியும் கந்தனுக்கு ஒரு விசேஷ தினமாக அமைகிறது. சஷ்டியில் விரதம் இருந்தால் சகல நலன்களும் பெறலாம். தேவேந்திரன் கந்தனுக்குத் தனது பெண் தெய்வயானையை மணம் புரிவித்தான். சப்தமி தினம் இது நடந்த இடம் திருப்பரங்குன்றம் - (முதல் படைவீடு) - (திருப்பரங்குன்றத்தில் தெய்வயானை கல்யாணம் பங்குனி உத்திரம் அன்றே.) வேடன் நம்பிராஜன் மகளாக வள்ளி (மாதவன் மகாலஷ்மி நோக்கால் தைப்பூசத்தில் உதித்தவள்) வள்ளி மலையில் வளர்க்கப்பட்டாள். நாரதர் நினைவூட்ட, கந்தன், வேடனாக, வேங்கை மரமாக, கிழவனாக வள்ளியை நாடி, சாடி, தேனும் தினையும் உண்டு, பணிந்து சுயதரிசனம் தந்து, போரும் புரிந்து, வள்ளியை மணந்து கொண்டான். இது நடந்த இடம் வள்ளிமலையில். திருத்தணிகையில் (5-ம் படைவீடு), வள்ளித் திருமணம், தைப்பூசம், மாசி பூசம், பங்குனி உத்திரத் தினங்களில் நடக்கின்றன. சிறுவனாக தோன்றி, ஒளவைக்குச் சுட்ட பழத்தைக் கொடுத்து, பாட வைத்துத் தரிசனம் தந்தான் பழமுதிர்ச் சோலையில் (6-ஆம் படைவீடு).ஆறுமுகமான - சண்முக தத்துவம் என்ன ?ஒரு முகம் - மஹாவிஷ்ணுவுக்கு,
இரு முகம் - அக்னிக்கு,
மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு,
நான்முகம் - பிரம்மனுக்கு,
ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் - கந்தனுக்கு.
இரு முகம் - அக்னிக்கு,மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு,நான்முகம் - பிரம்மனுக்கு,ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்குஆறு முகம் - கந்தனுக்கு.நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் இவ்வாறு கூறுவார் :1. உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம், 2. பக்தர்களுக்கு அருள ஒரு முகம், 3. வேள்விகளைக் காக்க ஒரு முகம், 4. உபதேசம் புரிய ஒரு முகம், 5. தீயோரை அழிக்க ஒரு முகம், 6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்.குமரகுருபரர் - தமது கந்தன் வரலாறான கந்தர் கலிவெண்பாவில் இவ்வாறு கூறுவார்:(ஊமை பக்தருக்கு திருச்செந்தூர் முருகன் அடி எடுத்துக் கொடுக்கப் பாடியது.)சத்ரு சம்ஹாரத்திற்கு ஒரு முகம்முக்தி அளிக்க ஒரு முகம்ஞானம் அருள ஒரு முகம்அக்ஞானம் அழிக்க ஒரு முகம்சக்தியுடன் இணைந்து அருள ஒரு முகம்பக்தர்களுக்கு அருள ஒரு முகம்.உயிரை மாய்த்துக் கொள்ள, கோபுரத்தினிற்று விழுந்தவரை ஏற்று, முத்தைத் தரு....... என்று பதம் எடுத்துக் கொடுத்த முருகன் அருளால் அருணகிரிநாதர் இவ்வாறு பாடுவார்:ஏறுமயிலேறி விளையாடு முகம் ஒன்றேஈசருடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றேகூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றேகுன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றேமாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றேவள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றேஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!திருச்செந்தூர் புராணம் ஷண்முகனை இவ்வாறு கூறுவார்:ஷடரிம் ஷட்விகாரம் ஷட்கோசம் ஷட்ரஸம் தத்ஷட் ஸூத்ரம் ஷண்மதம் ஷட்வேதாங்கம் ஷண்முகம் பஜேஷடரிம் - காமம், குரோதம், லோபம், மதம், மாத்சர்யம், மோகம் என்ற ஆறு அவகுணங்களை போக்குபவன் கந்தன். ஷட்விகாரம் - உண்டாக்குதல், இருத்தல், வளர்த்தல், மாற்றமடைதல், குறைதல், அழித்தல், என்ற ஆறு செயல்கள் அற்றவன்.
ஷட்கோசம் - அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய, அதீதமய என்ற ஆறு நிலைகளில் இருப்பவன். ஷட்ரசம் - இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, உறைப்பு, துவர்ப்பு, கார்ப்பு, என்ற ஆறு வகை சுவைகளாக இருப்பவன். ஷட்ஸூத்ரம் - ஸாங்க்யம், வைசேஷிகம், யோகம், ந்யாயம், மீமாம்ஸம், வேதாந்தம் என்ற ஆறு சாத்திரங்களாக இருப்பவன். ஷண்மதம் - காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம் என்ற ஆறு மத தத்துவமாக இருப்பவன். ஆக, ஷண்முகனை வணங்குதல் ஷண்மத ஈடுபாட்டுக்குச் சமம். என்னே ஷண்முகப் பெருமை ! ஷட்வேதாங்கம் - சிக்ஷõ, கல்பம், வ்யாகரணம், நிருக்தம், ஜ்யோதிஷம், சந்தம் என்ற ஆறு வேத அங்கங்களாக இருப்பவன்.
ஷண்முகம் - ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஸத்யோஜாதம் என்ற சிவனின் ஐந்து முகங்களுடனும் அதோ முகத்துடன் கூடியும் உள்ளவன்.
ஷட்கோசம் - அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய, அதீதமய என்ற ஆறு நிலைகளில் இருப்பவன். ஷட்ரசம் - இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, உறைப்பு, துவர்ப்பு, கார்ப்பு, என்ற ஆறு வகை சுவைகளாக இருப்பவன். ஷட்ஸூத்ரம் - ஸாங்க்யம், வைசேஷிகம், யோகம், ந்யாயம், மீமாம்ஸம், வேதாந்தம் என்ற ஆறு சாத்திரங்களாக இருப்பவன். ஷண்மதம் - காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம் என்ற ஆறு மத தத்துவமாக இருப்பவன். ஆக, ஷண்முகனை வணங்குதல் ஷண்மத ஈடுபாட்டுக்குச் சமம். என்னே ஷண்முகப் பெருமை ! ஷட்வேதாங்கம் - சிக்ஷõ, கல்பம், வ்யாகரணம், நிருக்தம், ஜ்யோதிஷம், சந்தம் என்ற ஆறு வேத அங்கங்களாக இருப்பவன்.ஷண்முகம் - ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஸத்யோஜாதம் என்ற சிவனின் ஐந்து முகங்களுடனும் அதோ முகத்துடன் கூடியும் உள்ளவன்.ஸரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). இதன் மகிமை என்ன ?ஸ - லக்ஷ்மிகடாக்ஷம்ர - ஸரஸ்வதி கடாக்ஷம்வ - போகம் - மோக்ஷம்ண - சத்ருஜயம்ப - ம்ருத்யுஜயம்வ - நோயற்ற வாழ்வுஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம். நம: சிவாய என்பது பஞ்சாக்ஷரம். ஓம் நம: சிவாய என்பது ஷடாக்ஷரம் நம: குமாராய என்பதும் ஷடாக்ஷரம் ஓம் நம: கார்த்தகேயாய என்பது குஹ அஷ்டாக்ஷரம் (8 எழுத்து) ஓம் நம; குருகுஹாய என்பதும் குஹ அஷ்டாக்ஷரம். ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் முத்திரை அடி குருகுஹ. இதய குகையில் அமர்ந்து அஞ்ஞானம் அழித்து ஞானம் அளிக்கும் வள்ளல் குகன்.ஓம் நம: ஸரவணபவாய என்பது குஹ தசாக்ஷரம் (10 எழுத்து).ஓம் நம ஸரவணபவ நம ஓம் என்பது குஹ த்வாதசாக்ஷரம் (12 எழுத்து).வடமொழியில் பீஜாக்ஷர மந்திரத்தில் அக்ஷரம் இரண்டு தடவை வரக் கூடாது என்பர். ஆகவே வடமொழியில் சரவணபவ என்பது ஷடாக்ஷரம். ஆறுபடை வீடுகளும் ஆறு  குண்டலினிகளாக விளங்குகின்றன.திருப்பரங்குன்றம் - மூலாதாரம்திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம்பழனி - மணிபூரகம்சுவாமிமலை - அனாஹதம்திருத்தணிகை - விசுத்திபழமுதிர்சோலை - ஆக்ஞை.ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் ஸ்கந்த ஷஷ்டியில் துதித்து வழிபட்டு குஹானந்த அனுபூதி வாரிதியில் மூழ்குவோம்.

இதில் சில செய்திகள் இணையத்தில் இருந்தும் கிடைக்கப்பெற்றமையால் வேறு எங்கும் கூட வாசிக்க இயலும்  என்றும் ஆன்மீக பணியில் 

Astro Senthil Kumar