Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Sunday, 16 October 2016

திசா சந்தி என்பது என்ன??????????

திசா சந்தி என்றால் என்ன???
திருமண பொருத்தத்தில் இன்று மிகப்பெரிய குழப்பம் தரும் சங்கதி இது ..
இன்றைய ஜோதிடர்கள் இடையே மிகப்பெரிய “சர்ச்சை”
காரணம் ஏக திசை நடப்பதில்
ஒரு ஜோதிடர் செய்யலாம் என்கிறார்..[சரியான பதில்]
இன்னொரு ஜோதிடர் ஏக திசையில் செய்யக்கூடாது என்கிறார்..[ இது தவறான பதில் ]
மக்களுக்கு இதில் மிகப்பெரிய குழப்பம்
“ஜோதிடத்தை “
நம்புவதா???
நம்பக்கூடாதா???
என்பது குழப்பம்..
உண்மையில் ஏகதிசை நடக்கும் இருவருக்கு திருமணம் செய்யலாம் …
அதில் தவறில்லை …
ஆனால் வெவ்வேறு திசை நடந்தாலும் திசா சந்தி நடந்தாலும் திசா சந்தி வரும்..
அது எப்படி ???
அது தான் இன்றைய நம் உரையாடலில் பேசப்பட வேண்டிய விஷயம்..
முக்கியமாக படித்து விட்டு “ஜோதிடம்” வளர கொஞ்சம் இதை ஷேர் செய்யுங்கள்..
உதாரணமாக ஒரு பெண்
ராகு திசை : 12-08-2018 தொடங்கி 12-08-2026 வரை நடக்கும்
ஒரு ஆண் திசை 19—10-2005 வரை 19-10-2023 வரை நடக்கும்
ஆனால் இதில் ஒரே திசை திசை இருவருக்கும் நடக்கும் “ஏக திசை “ என அர்த்தம் என அர்த்தம் கொள்ளலாம்..
எப்படி எனில் இருக்கும் ஒரே ராகு திசை 1ஆண்டு 9மாதம் 23 நாளும் ஒரே திசை ஆனாலும் அங்கே திசா சந்தி என்பது இல்லை..
ஆனால் ஒரு பெண்ணுக்கு
சனி திசை 12.-08-2020 அன்று முடிகிறது எனில்
அதே கால கட்டத்தில் 12-08-2019 முதல் 12-08-2021 வரை
பெண்ணின் திசை தொடங்கும் [12-08-2020 ]
ஒரு ஆண்டு முன்போ [12-08-2019]
அல்லது
ஒரு ஆண்டு பின்போ [ 12-08-2020 ]
திசை மாற்றம் எந்த திசையில் இருந்து எந்த திசைக்கு வந்தாலும் அது திசா சந்தி என பொருள் கொள்ள வேண்டும்..
ஆனால் இன்று போதித்த ஆசானின் தவறா ??
அல்லது போதனையை புரிந்து கொண்டோர் தவறா??
என தெரியவில்லை ..
ஒரே திசை நடந்தால் உடனே
“திசா சந்தி” வருகிறது என வேறு சில “ஜோதிடர்” சொல்வதை அடிக்கடி என் வாடிக்கையாளர்கள்
என்னிடத்தில் சொல்லி விளக்கம் கேட்கும் போது எல்லாம்
நான் அவர்களுக்கு “மிகப்பெரிய ஜோதிட வகுப்பை “ எடுக்க வேண்டிய கட்டாயத்திற்க்கு உள்ளாகிறேன் ..
“இது ஒரு ஜோதிடரின்” அறியாமையால் செய்யப்படும் “தவறுதல்” என்பதை பகிரங்கமாக சொல்கிறேன்..
என் அன்பிற்கினிய ஜோதிட நண்பர்கள்
“ஏக திசை “ என்பது வேறு
“திசா சந்தி” என்பது வேறு
என்பதை கொஞ்சம் புரிந்து கொண்டு உங்கள் இடத்தில் வரும்
வாடிக்கையாளர்களுக்கு “வழிகாட்டுதல்” செய்ய கோருகிறேன் ..
மேலும்
இந்த சம்பவம் எம் பெருந்துறை நகரை சார்ந்த இடத்திலும்
எம் ஈரோடு மாவட்டம் சார்ந்த பகுதியிலும்
“சில ஜோதிடரின்” [அறியாமையால் ]
தவறான வழிகாட்டுதல் ஆக “ஒரே திசைக்கு”
திசை சந்தி என “தன் கைப்பட” எழுதி கொடுத்த
“பொருத்த அட்டவணை” எம் கையில் உள்ளது..
[ தேவைபடும் பட்சத்தில் தன் பாணியை ஒருவர் திருத்தி கொள்ளவில்லை எனில் யார் யார் என பகிரங்கமாக வெளியிடப்படும் ]
இந்த தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்வது கூட
“பொது மக்களுக்கு “ திசா சந்தி என்றால் “என்ன?’ என ஒரு விழிப்புணர்வு கொடுக்க செய்யப்பட்ட பதிவு தான்..
உங்களுக்கு என ”பொருத்தம்” பார்க்க செல்லும்போது
ஒரு ஜோதிடர் “ஒரே திசையை”
“திசா சந்தி “ என ஒருவர் சொன்னால் “ அவரிடம்”
நீங்கள் இதை “குறித்து” சரியான விபரங்களை கேட்கவும்..
“இதைப்பற்றி”
சரியான விழிப்புணர்வு “அனைவரிடமும்” வர வேண்டும்
என்பதால் இதை அனைவரும் கொஞ்சம் ஷேர் செய்து
“ஜோதிட விழிப்புணர்வு” செய்ய வேண்டுகிறேன்…
இதைப்பற்றிய விவாதங்கள் என் இன்பாக்ஸ் மூலமாக அல்லது ஒரு குழ்வின் மூலமாகவும் நேரடியாக விவாதம் செய்யவும் தயாராக உள்ளேன்.....
பெருந்துறையில் இருந்து
Astro Senthil Kumar
Wats App:- 9843469404
EMAIL:- astrosenthilkumar@gmail.com

Sunday, 22 November 2015

சஷ்டி விரதம் குழந்தை அமையும்

எந்த வினையானாலும்,                                                                              கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.  முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.

வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?


கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். (இந்த வருடம் 6.11.2010 முதல் 11.11.2010 வரை.) சூரசம்ஹார தினத்தன்று (11.11.2010) அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள்.பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள். அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள். பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள். நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம். அன்று மாலை, பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள். வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்.


சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் !ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம:  குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன.சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள். ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜையாகும். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலம் சிதம்பரம், அங்கு உஷத் காலத்தில் பெருமானின் கலைகள் எல்லாம் எல்லாத் தலங்களுக்கும் சென்று தெய்வப் பொலிவூட்டுகின்றன என்றும், அர்த்தஜாம காலத்தில் ஆயிரம் கலைகளும் பெருமானிடம் ஒடுங்குகின்றன என்றும், எனவே எல்லாத் தலங்களையும் சென்று தரிசிக்கும் புண்ணியத்தை, சிதம்பரத்தில் அர்த்தஜாமத்தில் வழிபடுவதால் பெற முடியும் என்று சிதம்பர மஹாத்மியம் குறிப்பிடப்படுகிறது. சஷ்டிபதி என்றால் இந்த வேளையில் (அர்த்தஜாமத்தில்) செய்யப்பெறும் வழிபாட்டில் மிகவும் விருப்பம் கொள்பவன் என்றும் பொருள். திருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர்.ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த குமாரஸ்தவம் என்னும் பாராயண நூலில், 25-வது மந்திரம் ஓம் சஷ்டி பதயே நமோ நம என்பதாகும், சஷ்டி தேவியின் நாயகனாக விளங்கும் சண்முகப் பெருமானுக்கு வணக்கம் என்பது இதன் பொருள். சஷ்டிதேவி, தேவசேனைப் பிராட்டியாரின் ஆறில் ஓர் அம்சமாக அவதரித்தவள். அதனால் தேவசேனைக்குரிய சஹஸ்ரநாமத்தில் - ஓம் ஷஷ்ட்யை நம, ஓம் ஷஷ்டீச்வர்யை நம், ஓம் ஷஷ்டி தேவ்யை நம. எனும் மந்திரங்கள் வருகின்றன. ஆறில் ஓர் அம்சமாகத் தோன்றியதால், இவள் சஷ்டிதேவி என்று அழைக்கப்பெறுகிறாள். பெற்ற தாய் கவனிக்காதிருக்கும் காலத்தும், பச்சிளங்குழந்தைகளைப் பாதுகாத்து வளர்க்கும் கருணை நாயகி இவள். இந்தத் தேவியைக் குறித்த வரலாறு தேவி பாகவதம் ஒன்பதாம் ஸ்காந்தத்தில் வருகிறது. இவளுக்கு ஸம்பத் ஸ்வரூபிணி என்றும் பெயர். சுவாயம்ப மனு என்பவனின் மகன் பிரியவிரதன். இவனுக்கு இல்லற வாழ்க்கையில் விருப்பம் இல்லாமலே இருந்தது. எனினும், பிரம்மாவின் வற்புறுத்தலின்படி மாலினி என்பவளை மணந்துகொண்டான். திருமணமாகி பல ஆண்டு ஆகியும் பிள்ளைப்பேறு இல்லாத காரணத்தால், காச்யபரைக் கொண்டு புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்தான் பிரியவிரதன், இதனால் மாலினி, பன்னிரண்டாம் ஆண்டு பிள்ளையைப் பெற்றாள். ஆனால் குறைப் பிரசவமாக இருந்ததால், குழந்தை உருத்தெரியாமலும் உயிரற்றும் இருந்தது. மனம் உடைந்த பிரியவிரதன் குழந்தையை அடக்கம் செய்துவிட்டு, தானும் இறக்கத் துணிந்தான். அப்போது தெய்வாதீனமாக ஒரு பெண் தோன்றினாள். உயிரற்ற - உருவமற்ற அந்தக் குழந்தையை அவள் தொடவும், குழந்தை உருவத்துடன் உயிர்பெற்று அழத் தொடங்கியது.பிரிய விரதன் மிகவும் நெகிழ்ந்து தேவி! தாங்கள் யார் என்று கேட்டான். நான் சஷ்டி தேவி, தேவசேனையின் அம்சம். பிரம்மாவின் மானசீக புத்திரி. நான் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பவள், பிள்ளைப்பேறு இல்லாதவருக்கு அவ்வரத்தை அருள்பவள். மாங்கல்ய பலம் இழக்கும் நிலையில் உள்ளவருக்கு அதனை நிலைப்படுத்துபவள். அவ்வாறே வினைப்பயன் எப்படியிருப்பினும், அவரவர் வேண்டுகோளுக்கு இணங்கி கணவன்மார்களுக்கு இல்லற சுகத்தையும் செல்வப்பேற்றையும் அருள்பவள் என்று கூறி, அந்தக் குழந்தைக்கு சுவிரதன் என்று பெயரிட்டாள். குழந்தைகளுக்கு நலமும் வாழ்வும் அருளும் சஷ்டிதேவி, எப்போதும் குழந்தைகளின் அருகிலேயே இருந்துகொண்டு விளையாட்டு காட்டுவதிலும் திருப்தி கொள்வாள். இவள், அஷ்ட மாத்ரு தேவதைகளில் சிறந்தவள், யோகசித்தி மிக்கவள். பிள்ளைப்பேற்றுக்குப் பிறகு ஆறாம் நாளிலும், இருபத்தோராம் நாளிலும் சஷ்டிதேவியை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஐப்பசி மாதத்தில் வரும் மஹா ஸ்கந்த சஷ்டியைப் போன்று, ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டியை குமார சஷ்டி என்று அழைப்பர்.  அதைப் போல கார்த்திகை மாதத்து வளர்பிறை சஷ்டியை சம்பக சஷ்டி என்றும், சுப்ரமண்ய சஷ்டி என்றும் கூறுவார்கள். இந்த சம்பக சஷ்டியை அனந்தசுப்ரமண்ய விரதம் என்றும் அழைப்பர். குழந்தைப்பேறு அளிக்கும் தெய்வங்களுள் முதன்மையானவர் முருகன் ஆவார். செகமாயை என்று தொடங்கும் சுவாமிமலைத் திருப்புகழில், முருகனையே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார். இந்தத் திருப்புகழைப் பாராயணம் செய்வோர்க்கு, நல்ல குழந்தைப்பேறு கிடைக்கும் என்று வள்ளிமலை சச்சிதானந்தா சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார். தென்காசிக்கு அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் என்று ஊரில் குமார சஷ்டி விழா ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனை தாரக ஹர குமார சஷ்டி என்று அழைக்கிறார்கள். இவ்விழாவில்  படிப் பாயாசம் வழங்குவது விசேஷமானது.சரவணபவ தத்துவம்சேனானீனாம் அஹம் ஸ்கந்த: படைத்தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில். சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின் மறு அவதாரத்தால் அழிவை வேண்டினர். அது கிடைத்தது. சிவன் தங்களை அழிக்க மாட்டான் என நம்பி, அகங்காரம் மேலிட, அவர்கள் தேவர்கள் அனைவரையும் பணியாளர்களாக்கினர். பிரம்மா, விஷ்ணு முதல், யாவரும் மோன நிலையிலிருந்த சிவபெருமானை வேண்டினர், அவரும் இசைந்து பார்வதியை பங்குனி உத்திரத்தன்று மணம் புரிந்தார். சூரபத்மாதியரின் அட்டூழியத்தை அடக்க, சிவமறு அவதாரம் வேண்ட, சிவன் தமது ஐந்து முகங்களுடன் அதோமுக்தினின்றும் ஜோதியை எழுப்பி, வாயுவையும் அக்னியையும் அதை ஏந்தி கங்கையில் இடச் செய்தார். கங்கை, சரவணப் பொய்கையில் 6 தாமரைகளில் இட்டாள். அங்கு 6  ஜோதியும் 6 குழந்தைகளாக மாறின. அவர்கள் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டனர். அதனால் முருகன், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், என்றும் துதிக்கப்படுகிறான்.உமை, குழந்தைகளை அழைத்து அணைக்க ஆறு குழந்தைகள், ஆறுமுகம், பன்னிருகை, இருகால், ஓருடலாகக் கந்தனாக (ஸ்கந்தன் = ஒன்று சேர்ந்தவன்) மாறினான். கந்தன் உதித்த தினம் வைகாசி மாத - விசாக பௌர்ணமி. அதனால் அவன் பெயர் விசாகன். சிவஜோதியின் மறுஉருவம். வேதசொரூபன் அதனால் சுப்ரமண்யன், என்றும் இளையவன் அதனால் குமாரன், மிக அழகானவன் ஆகவே முருகன் (முருக என்றால் அழகு).மு  - முகுந்தன் என்கிற விஷ்ணு
ரு - ருத்ரன் என்கிற சிவன்
க - கமலத்தில் உதித்த பிரம்மன்.
ரு - ருத்ரன் என்கிற சிவன்க - கமலத்தில் உதித்த பிரம்மன்.ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன். காஞ்சி குமரப் பெருமானால் அடி எடுத்துக் கொடுக்கப்பட்டு கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தில் முருகன் அவதாரத்தை இவ்வாறு கூறுவார்:அருவமும் உருவமாகிஅநாதியாய் பலவாய், ஒன்றாய்ப்பிரம்மமாய் நின்ற ஜோதிப்பிழம்பதோர் மேனியாகிக்கருணைகூர் முகங்கள் ஆறும்கரங்கள் பன்னிரண்டும் கொண்டேஒரு திருமுருகன் வந்து ஆங்குஉதித்தனன் உ<லகம் உய்ய!இந்தப் பாடலை உள்ளன்புடன் ஓதினால் குழந்தைப் பேறு பெறலாம். - நாரதர் பழம் ஒன்றை சிவனிடம் வழங்க கணபதி சிவபார்வதியை வலம் வந்து பழத்தைப் பெற, கோபம் கொண்ட பாலன் தண்டம், கௌபீனம் அணிந்து பழனி ஆண்டியானான்.தலம் பழனி (3-ஆம் படை வீடு) - கந்தனைப் புறக்கணித்து சிவனைத் தரிசிக்க பிரம்மா செல்ல, பிரணவத்திற்குப் பொருள் அறியாமல் அவர் சிறைப்பட, சிவனுக்கு பிரணவப் பொருள் உரைத்ததால் கந்தன், சிவகுருநாதன், சுவாமிநாதன் என்று போற்றப்பட்டான். இது நடந்த தினம் ஆடிப்பௌர்ணமி, குருபௌர்ணமி என்றும் கூறுவர். (தலம் - சுவாமிமலை 4-ஆம் படைவீடு). குருவருள் பெற உகந்த தினம். முருகன் தம் அவதாரக் காரணம் நிறைவேற குருவும் நாரதரும் புகன்றிட, திருச்செந்தூரில் தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாகப் பதவியேற்றார். வீரபாஹுவைத் தூது அனுப்பினார். முடிவில் தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன், சூரபத்மாதியரையும் அழித்து வெற்றியை நிலைநாட்டினார்.கந்தனின் ஆயுதம் - பராசக்தியின் மறு உருவமான வேல். சூரபத்மன் கடைசியில் மாமரமாக நின்றான். அதை வேலால் துளைக்க. ஒரு பாதி மயிலாகி வாகனம் ஆனான். மறு பாதி கொடியில் சேவலாக மாறினான். ராவண வதம், கம்ஸ வதம் என்பர், ஆனால் இங்கு மட்டும் சூரசம்ஹாரம் என்பர். வேறு எந்த தெய்வ அவதாரத்திலும் நிகழாத சம்பவம், அது தான் கந்தன் கருணை.  இது நடந்த தினம் கந்த சஷ்டி - தீபாவளி - அமாவாசைக்குப் பிறகு வரும் ஆறாவது நாள். இது நடந்த இடம் திருச்செந்தூர் ஜயந்திபுரம் (2 ஆம் படை வீடு) வெற்றி தினம் கந்த சஷ்டி தினம். மாத சுக்ல சஷ்டியும் கந்தனுக்கு ஒரு விசேஷ தினமாக அமைகிறது. சஷ்டியில் விரதம் இருந்தால் சகல நலன்களும் பெறலாம். தேவேந்திரன் கந்தனுக்குத் தனது பெண் தெய்வயானையை மணம் புரிவித்தான். சப்தமி தினம் இது நடந்த இடம் திருப்பரங்குன்றம் - (முதல் படைவீடு) - (திருப்பரங்குன்றத்தில் தெய்வயானை கல்யாணம் பங்குனி உத்திரம் அன்றே.) வேடன் நம்பிராஜன் மகளாக வள்ளி (மாதவன் மகாலஷ்மி நோக்கால் தைப்பூசத்தில் உதித்தவள்) வள்ளி மலையில் வளர்க்கப்பட்டாள். நாரதர் நினைவூட்ட, கந்தன், வேடனாக, வேங்கை மரமாக, கிழவனாக வள்ளியை நாடி, சாடி, தேனும் தினையும் உண்டு, பணிந்து சுயதரிசனம் தந்து, போரும் புரிந்து, வள்ளியை மணந்து கொண்டான். இது நடந்த இடம் வள்ளிமலையில். திருத்தணிகையில் (5-ம் படைவீடு), வள்ளித் திருமணம், தைப்பூசம், மாசி பூசம், பங்குனி உத்திரத் தினங்களில் நடக்கின்றன. சிறுவனாக தோன்றி, ஒளவைக்குச் சுட்ட பழத்தைக் கொடுத்து, பாட வைத்துத் தரிசனம் தந்தான் பழமுதிர்ச் சோலையில் (6-ஆம் படைவீடு).ஆறுமுகமான - சண்முக தத்துவம் என்ன ?ஒரு முகம் - மஹாவிஷ்ணுவுக்கு,
இரு முகம் - அக்னிக்கு,
மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு,
நான்முகம் - பிரம்மனுக்கு,
ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் - கந்தனுக்கு.
இரு முகம் - அக்னிக்கு,மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு,நான்முகம் - பிரம்மனுக்கு,ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்குஆறு முகம் - கந்தனுக்கு.நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் இவ்வாறு கூறுவார் :1. உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம், 2. பக்தர்களுக்கு அருள ஒரு முகம், 3. வேள்விகளைக் காக்க ஒரு முகம், 4. உபதேசம் புரிய ஒரு முகம், 5. தீயோரை அழிக்க ஒரு முகம், 6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்.குமரகுருபரர் - தமது கந்தன் வரலாறான கந்தர் கலிவெண்பாவில் இவ்வாறு கூறுவார்:(ஊமை பக்தருக்கு திருச்செந்தூர் முருகன் அடி எடுத்துக் கொடுக்கப் பாடியது.)சத்ரு சம்ஹாரத்திற்கு ஒரு முகம்முக்தி அளிக்க ஒரு முகம்ஞானம் அருள ஒரு முகம்அக்ஞானம் அழிக்க ஒரு முகம்சக்தியுடன் இணைந்து அருள ஒரு முகம்பக்தர்களுக்கு அருள ஒரு முகம்.உயிரை மாய்த்துக் கொள்ள, கோபுரத்தினிற்று விழுந்தவரை ஏற்று, முத்தைத் தரு....... என்று பதம் எடுத்துக் கொடுத்த முருகன் அருளால் அருணகிரிநாதர் இவ்வாறு பாடுவார்:ஏறுமயிலேறி விளையாடு முகம் ஒன்றேஈசருடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றேகூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றேகுன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றேமாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றேவள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றேஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!திருச்செந்தூர் புராணம் ஷண்முகனை இவ்வாறு கூறுவார்:ஷடரிம் ஷட்விகாரம் ஷட்கோசம் ஷட்ரஸம் தத்ஷட் ஸூத்ரம் ஷண்மதம் ஷட்வேதாங்கம் ஷண்முகம் பஜேஷடரிம் - காமம், குரோதம், லோபம், மதம், மாத்சர்யம், மோகம் என்ற ஆறு அவகுணங்களை போக்குபவன் கந்தன். ஷட்விகாரம் - உண்டாக்குதல், இருத்தல், வளர்த்தல், மாற்றமடைதல், குறைதல், அழித்தல், என்ற ஆறு செயல்கள் அற்றவன்.
ஷட்கோசம் - அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய, அதீதமய என்ற ஆறு நிலைகளில் இருப்பவன். ஷட்ரசம் - இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, உறைப்பு, துவர்ப்பு, கார்ப்பு, என்ற ஆறு வகை சுவைகளாக இருப்பவன். ஷட்ஸூத்ரம் - ஸாங்க்யம், வைசேஷிகம், யோகம், ந்யாயம், மீமாம்ஸம், வேதாந்தம் என்ற ஆறு சாத்திரங்களாக இருப்பவன். ஷண்மதம் - காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம் என்ற ஆறு மத தத்துவமாக இருப்பவன். ஆக, ஷண்முகனை வணங்குதல் ஷண்மத ஈடுபாட்டுக்குச் சமம். என்னே ஷண்முகப் பெருமை ! ஷட்வேதாங்கம் - சிக்ஷõ, கல்பம், வ்யாகரணம், நிருக்தம், ஜ்யோதிஷம், சந்தம் என்ற ஆறு வேத அங்கங்களாக இருப்பவன்.
ஷண்முகம் - ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஸத்யோஜாதம் என்ற சிவனின் ஐந்து முகங்களுடனும் அதோ முகத்துடன் கூடியும் உள்ளவன்.
ஷட்கோசம் - அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய, அதீதமய என்ற ஆறு நிலைகளில் இருப்பவன். ஷட்ரசம் - இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, உறைப்பு, துவர்ப்பு, கார்ப்பு, என்ற ஆறு வகை சுவைகளாக இருப்பவன். ஷட்ஸூத்ரம் - ஸாங்க்யம், வைசேஷிகம், யோகம், ந்யாயம், மீமாம்ஸம், வேதாந்தம் என்ற ஆறு சாத்திரங்களாக இருப்பவன். ஷண்மதம் - காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம் என்ற ஆறு மத தத்துவமாக இருப்பவன். ஆக, ஷண்முகனை வணங்குதல் ஷண்மத ஈடுபாட்டுக்குச் சமம். என்னே ஷண்முகப் பெருமை ! ஷட்வேதாங்கம் - சிக்ஷõ, கல்பம், வ்யாகரணம், நிருக்தம், ஜ்யோதிஷம், சந்தம் என்ற ஆறு வேத அங்கங்களாக இருப்பவன்.ஷண்முகம் - ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஸத்யோஜாதம் என்ற சிவனின் ஐந்து முகங்களுடனும் அதோ முகத்துடன் கூடியும் உள்ளவன்.ஸரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). இதன் மகிமை என்ன ?ஸ - லக்ஷ்மிகடாக்ஷம்ர - ஸரஸ்வதி கடாக்ஷம்வ - போகம் - மோக்ஷம்ண - சத்ருஜயம்ப - ம்ருத்யுஜயம்வ - நோயற்ற வாழ்வுஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம். நம: சிவாய என்பது பஞ்சாக்ஷரம். ஓம் நம: சிவாய என்பது ஷடாக்ஷரம் நம: குமாராய என்பதும் ஷடாக்ஷரம் ஓம் நம: கார்த்தகேயாய என்பது குஹ அஷ்டாக்ஷரம் (8 எழுத்து) ஓம் நம; குருகுஹாய என்பதும் குஹ அஷ்டாக்ஷரம். ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் முத்திரை அடி குருகுஹ. இதய குகையில் அமர்ந்து அஞ்ஞானம் அழித்து ஞானம் அளிக்கும் வள்ளல் குகன்.ஓம் நம: ஸரவணபவாய என்பது குஹ தசாக்ஷரம் (10 எழுத்து).ஓம் நம ஸரவணபவ நம ஓம் என்பது குஹ த்வாதசாக்ஷரம் (12 எழுத்து).வடமொழியில் பீஜாக்ஷர மந்திரத்தில் அக்ஷரம் இரண்டு தடவை வரக் கூடாது என்பர். ஆகவே வடமொழியில் சரவணபவ என்பது ஷடாக்ஷரம். ஆறுபடை வீடுகளும் ஆறு  குண்டலினிகளாக விளங்குகின்றன.திருப்பரங்குன்றம் - மூலாதாரம்திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம்பழனி - மணிபூரகம்சுவாமிமலை - அனாஹதம்திருத்தணிகை - விசுத்திபழமுதிர்சோலை - ஆக்ஞை.ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் ஸ்கந்த ஷஷ்டியில் துதித்து வழிபட்டு குஹானந்த அனுபூதி வாரிதியில் மூழ்குவோம்.

இதில் சில செய்திகள் இணையத்தில் இருந்தும் கிடைக்கப்பெற்றமையால் வேறு எங்கும் கூட வாசிக்க இயலும்  என்றும் ஆன்மீக பணியில் 

Astro Senthil Kumar

Wednesday, 4 March 2015

மன்மத வருஷத்தில் கோயில் கும்பாபிஷேகம் செய்யலாமா???

ஜோதிட முழக்கம்” 2015  பெருந்துறைகாஞ்சிபுரம்
ராஜப்பா குருக்கள் அவர்கள் ஆற்றிய சிறப்புரைஎழுத்து வடிவில் உங்கள் பார்வைக்கு!!!!
காமாட்சியாஸ்னாம் கடிதாஸ்னம் இதபவு!!!
வியாக்யாத காமா ஹமகா!!!கல்யாணம் சதுதங்க ரோதுபவம்காஞ்சிபுர நாயகா!!!”
[ஸ்லோகத்தில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும் திருத்தம் செய்ய]
எல்லாம் வல்ல இறைவனின் அருளாலே!!
இந்த காலங்களை பற்றிய நிர்ணயம் செய்யும்ஜோதிட சாஸ்திரம்வேதங்களின் அங்கமாக இருக்கிறது!!
வேதம் நான்கு அதில்6 சாஸ்திரங்களின் ஜோதிடமும் ஒன்றாகும்!!
வேதம் ,வேதாங்கம், இம்சா, மாமீம்சா என சாஸ்திரங்களின் பிரிவுகளில் ஜோதிடமும் நிருத்தம் என சேர்க்கப்பட்டுள்ளது!!
இங்கே ஆகம சாஸ்திரங்கள் எல்லாம் உலக நன்மைக்காகவே படைக்கப்பட்டது,,
எல்லோரும் இங்கே ஜோதிட சாஸ்திரம் பற்றி பேச இருந்தாலும் பொதுவாக காமீகம் ,காரணம் இதில் காமீகம் தான் பகவானால் உபதேசிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக கட்டிடம் சார்ந்த கலைகளில் காமீகம் சிற்ப அமைப்பாகிறது,
அதற்கான காரணிகள் இருக்கிறது, அதில்காலவீதி படலம்என்றும் ஒன்று உண்டு!!
மாகமாகம் வினாசத்ரோ யனோ ரவைத்ரோத்ரம்
உத்ராயணத்தில் சாந்திரமானத்தில் தை அமாவாஸை வந்தால் மாசி மாதப்பிறப்பு என்கிறது விதிமுறை!!
ஆனால் ஆகமத்தில்மாக இதி கும்பாசம்தியாசூர்யன் கும்பத்தில் பிரவேசிக்கும் காலத்தை கொடுத்து இருக்கிறது!!அதற்க்கு வியாக்னம் கொடுத்து இருக்கிறார்கள் ..நாம் சாதாரணமாகசைத்ர ,வைசாகம். ஜேஷ்டாஎன சொல்கிறோம்,, சந்திரன் அந்த நட்சத்திரத்தில் கூடுவது கண்டு செளரமானம் என சொன்னால் சூர்ய கதிவைத்து சொன்னால் எந்த ராசிக்கு பிரவேசிக்கிறதோ அதை வைத்து உதாரணமாகசைத்ரமாதம்என கணிதம் ..சித்திரை மாத பெளர்ணமி  ஒருநாள் முன்பின் அமையலாம்.விசாகம் ,வைகாசிக்கு சம்பந்தப்பட்ட்து,, இப்படி மாதமும் பெளர்ணமியும் கணக்கில் வைப்பது சாந்திரமானம் ..இவைகள் எல்லாம் சாந்திரமானத்தில் கணக்கிடாலும்சிவராத்திரிபோன்ற வைபவங்கள் எல்லாம் செளரமான வழி வகையாக செய்ய வேண்டும் என்பது ஆகமவிதி முறை ஆகும்..வியாக்னம் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படி பல வருஷங்களுக்கு முன்பு 12 ஆண்டு என நினைக்கிறேன் தைமாத கடைசியில் வருவதுமாசி சிவராத்திரியா??”என சர்ச்சை வந்தது..அப்போது கும்பத்தில் சூர்யன் பிரவேசித்த பின்னர் வருவதேமஹா சிவராத்திரிஎனபஞ்சாங்க சத் சங்கத்தில்முடிவு செய்தார்கள்.. இதற்கு உதவியாக பஞ்சாங்க கணிதர்கள் பயன்படுத்தசைவ கால விவேகாஎனும் பல்வேறு உப ஆகம விதிமுறைகள் எல்லாம்இகமத்யான சிவாச்சாரியார்என்பவர் அந்த காலத்திலேயேகால நிர்ணயம் சைவ காலவித விவேகாஎனும் கிரந்தம் படைத்துள்ளார்கள்..பூஜைகள் பற்றிய சர்ச்சைகள் எழும் போது எல்லாம் பஞ்சாங்க கணிதர்களுக்கு கை கொடுப்பதே இந்தசைவ கால விவேகாநூல் தான் ..
ஜோதிடத்தில் மூல நட்சத்திரம் இப்போதெல்லாம் முகூர்த்ததிற்கு எடுத்து கொள்கிறார்கள்..பஞ்சாங்கமும் கொடுத்தும் இருக்கிறதுஆனால் ஆகமத்தில்மூல நட்சத்திரம்இரண்டாம் பட்சத்தில் தான் வைக்கபடுகிறது..
12 நட்சத்திரங்கள் விலக்கப்படுகிறது அதில் உதாரணமாக ஆருத்ராய சர்வநாசம்என சொல்லப்பட்டாலும் ஆனால்திருவாதிரைசிவ பிரதிஷ்டைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது..ஆனால் திருவாதிரை மற்ற தேவதைகள் பிரதிஷ்டைக்கு எடுக்கவும் கூடாது..
ஆகமவிதி என்பதுகீழ் நீதிமன்றம்போல தான் ஆனால்சிவாகம விதிஉயர்நீதிமன்றம்போல என்பதை கருத்தில் கொள்ளுங்கள்!!
ரிஷிகள் தன் ஞானத்தின் வலிமையால் கண்டு உணர்ந்து அதை அனுசரித்து தன்தபஸ் வலிமையால்மக்களுக்கு படைக்கப்பட்டதேஜோதிட சாஸ்திரம்
கோயில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜோதிட விதிகளை ஆகமவிதிகளுக்கு உட்பட்டு மீறாமல் இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது..
திருமணம் போன்ற முகூர்த்தங்களில் 7/8 இடம் சுத்தம் பார்த்தாலும் குறிப்பாக 7 இடம் சுத்தம் இருந்தாலும் முகூர்த்தம் நிர்ணயம் செய்யப்படுகிறது,,ஆனால் ஆலய விஷயங்களில் லக்னத்தின் எட்டாம் இடம் சுத்தி வேண்டும் கிரகங்களில் உயர்வான குருவே எட்டில் இருந்தாலும் ஆலய விஷயங்களை பார்க்கும் போது அந்த லக்ன நேரத்தை தவிர்க்க வேண்டும்..அவ்வாறாக தான் ஆலய கும்பாபிஷேக கால நிர்ணயம் செய்ய வேண்டும்..
பிரஷ்திடை என்றால் எட்டாம் இடம் சுத்தம் வேண்டும்..
சிலர் வரும்மன்மத வருஷம்கோயில் கும்பாபிஷேகம் செய்விக்க கூடாது :
கோயில் கும்பாபிஷேகத்திற்க்கு நாட்கள் இல்லை என சொல்லி கொள்கிறார்கள் ..எதோ ஒரு பத்திரிக்கை கூட அதை எழுதி இருப்பதாக சொன்னார்கள்..
இவைகள் எல்லாம் தவறான தகவல்கள்
மன்மத வருஷம்கீலக வருஷம்தாது வருஷம் என ஒரு ஆறு தமிழ் ஆண்டுகள் அதுவும்கூட தொடர்ச்சியாக இல்லை மாறி மாறி வரும்..
வரும் மன்மத வருஷம் சேர்ந்த அந்த ஆறு ஆண்டுகளில்நூதன ஆலயம் கும்பாபிஷேகம்செய்விக்க கூடாது என்றே சொல்கிறது!!
எல்லா கும்பாபிஷேகமும் ஒரே கணக்கில் எடுத்து கொள்ளக்கூடாது!!
ஆவர்தனம்ஆனாவர்தனம்புனராவர்தம்என திதி/நட்சத்திர வேறுபாடுகள் உண்டு!!
நூதன பிரதிஷ்டை என்பது முற்றிலும் புது ஆலயமாக ஆலயமே இல்லாத இடத்தில் உருவாக்கப்படுவது!!
ஜூர்ணதாரண பிரதிஷ்டை என்பது பழைய கோயில்களைஅஷ்டமங்கல பிரசன்னம்பார்ப்பதாலோ ஆலய கோபுரம் அல்லது சில பழுது சார்ந்த வேலையாக [ரீசார்ஜ் செய்வது போல] இருந்தால் அந்த கோயில்கள் கும்பாபிஷேகம் செய்விக்கலாம்.. குறைபாடுகளை கொண்ட ஆலயங்கள் தாரளமாக கும்பாபிஷேகம் செய்விக்கலாம்..
12 ஆண்டுக்கு ஒரு முறை செய்யப்படும் கும்பாபிஷேகம் தாராளமாக செய்யலாம்..ஆனால் எட்டாம் இடமும் சுத்தம் வேண்டும் அதை மறந்து விடாதீர்கள்..
லக்னத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் எப்போதும்ஸ்திர லக்னமும்உபய லக்னமும்கும்பாபிஷேகம் செய்விக்க வேண்டும்>> சிலர் தவறாக சர லக்னம் எடுப்பது சரியானதில்லை!!
ஆனால்சர லக்னம்பால ஆலயம் செய்விக்க எடுத்து கொள்ளலாம் பால ஆலயம் செய்விக்கசரலக்னம்என்பது மிக உத்தமம் ””
சர்ராசி விர்ஜயேஎனகாலவீதி படலம்சொல்கிறது..பின் விதி தொடர்ந்து வருகிறது அதில் தான் சூட்சுமம்குருவும் சர்ராசியில்இருக்க வேண்டும் எனும் விதிமுறை..
மாகாபாத்ரபதயோ விநா” – கும்பாபிஷேகம் மற்றும் விவாகம் மாசி மாதம் சிறப்பில்லை என்கிறது ஆகமவிதி!!
ஆனால் இப்போதெல்லாம் செய்கிறார்கள் ஆனால் யாருடைய தூண்டுதலில் செய்விக்கப்படுகிறது என்று  தெரியவில்லை!!
உத்ராயணத்தில்மாசியைதவிர மற்ற ஐந்து மாதங்கள் எடுத்து கொள்ளலாம்தட்சிணாயனத்தில்ஆவணி- ஐப்பசி- கார்த்திகைஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும்..]
ஜூர்ணதார்ண கும்பாஷேக விஷயத்தில்அஸ்ட பந்தன மருந்துதேவதைகளுக்குசாற்றியேதீர வேண்டும் எனும் நிர்பந்தம் இருக்கும் ஆலயத்தில் இன்றே பணியை ஆரம்பித்து நாளை காலையே செய்விக்கலாம் இதைஅர்த்தரித பிரதிஷ்டைஎன்று சொல்வார்கள்..இதற்குராகு காலம் எம கண்டம் போன்றவைகள் தவிர்த்து செய்தால் போதுமானது
அம்பாள் போன்ற பெண் கடவுளுக்கு செய்விக்கும்போது ஆயாதிபெளஷியாந்தம்என சொல்வார்கள்..கிராம தேவதைகள் காளி-துர்க்கை-போன்ற பெண்கடவுளுக்கு ஆடி மாதம் கூட கணக்கில் எடுக்கப்படுகிறது!!
இதர விஷேசங்கள் ஆடி மாதம் கூடாது!
தைமாதமும் ஆடிமாதமும் வெள்ளிக்கிழமை என்பது மிக சிறப்பு மிக்கது!!
சித்திரை மாத சித்திரை நட்சத்திரம்வைகாசி மாத விசாகம்ஆனி மாத ஜேஷ்டா [கேட்டை] அல்லது மூலம்ஆடி மாத பூராடம்/ உத்திராடம்ஆவணி மாத திருவோணம்புரட்டாசியில் [பாத்ரபத நட்சத்திரம்] பூரட்டாதி /உத்திரட்டாதிஐப்பசி அசுவிணிகார்த்திகை கிருத்திகைதனுசு மாத திருவாதிரைதை பூசம்மாசி மகம்பங்குனி உத்ரம் என அடிப்படையாக பெளர்ணமி திதியை பிரதானமாக அனுசரித்தாலும் சவ்வியமாக வரும் முதல்நாள் அல்லது அடுத்தநாள் அதே நட்சத்திரம் தொடரும் அதை எல்லாம் அந்தந்த ஊருதீர்த்தவாரிஅனுசரிக்க வேண்டும்..கடலோர ஆலயங்களில் பத்து நாட்கள் கூட விழா எடுக்கபடுகிறது..
27 நட்சத்திரம் 30 நாட்களுக்கு பகிர்ந்து வரும்போது ஒரு மாதத்தில் ஒரே நட்சத்திரம் இருமுறை வரும் ..தீர்த்தவாரி எடுக்க எதை கணக்கில் எடுப்பது எனும் குழப்பம் வருவது இயற்கையே!!
அப்படி சர்ச்சைகள் வரும்போது எல்லாம் முதலில் வரும் நட்சத்திரம் விட்டு விட்டு பின்னால் வருவதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்..
பொதுவாக மாத ஆரம்பத்தில் சில வருஷங்களில் வருவதால் தான் இதுபோன்ற சர்ச்சைகள் வரும் .ஜோதிடர்கள் ஆகிய நீங்கள் எல்லாம்காலவிதி படலம்அவசியம் அறிந்து வைத்து இருக்க வேண்டும்.கால நேரமும் குறைவாக இருக்கிறது.. என்க்கு பின்னால் மக்களின்லோக-சுப சுகங்களைபற்றி எல்லாம் ஏனைய ஜோதிட பெருமக்கள் இனி பேசுவார்கள் நன்றி!!